Header Image

 

அத்தியாயம் 2

சொந்த வேர்கள் என்னைப் புரியாமல் தூக்கி எறிந்தபோது, ஓர் அன்னையைப் போல் என்னை அரவணைத்தது இந்தச் சென்னை மாநகரம். இரக்கமற்றவள் என்று என்னைப் பழிக்கும் உறவுகளுக்குத் தெரியாது, என் கண்ணீரைத் துடைத்த இந்தச் சாலைகளே என் நிரந்தர முகவரியென்று! -நியதி பால்கனியின் இரும்புக் கிரில்களைத் தாண்டி நுழைந்த வேப்பமரக் கிளையில் இரவின் பனி ஈரமாய்ச் சொட்டிக்கொண்டிருக்க, ஓரமாய் இருக்கும் வாஷ்பேஸினில் முகம் கழுவிக்கொண்டிருந்தாள் அவள். வேப்பமரக் கிளையில் அமர்ந்து காகம் ஒன்று கரைய, முகத்தில் இருக்கும் தண்ணீரை … Continue reading “அத்தியாயம் 2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 14.1

மெதுவாக நடந்து கடற்கரையோரமாக வந்தனர் ராகவும், அவந்திகாவும். கடற்கரை மணலில் கால் புதைய நடக்கும் சுகத்தை அனுபவித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்தாள். ராகவ் போனில் அந்த டாக்குமெண்டை டிஜிட்டல் சிக்னேஷருக்காக அனுப்பிவிட்டதைத் தனது செகரட்டரியிடம் தெரிவித்துவிட்டு அந்த விஷயத்தில் கவனம் செலுத்துமாறு கூறிப் போனை வைத்துவிட்டான். அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த அவந்திகாவிடம் ஒரு கண்ணை வைத்தபடி வருணுக்குக் கால் செய்தான். இருவரும் பிசினஸ் விஷயங்களைப் பேசி முடித்துவிட்டுத் தங்களுடைய டிரிப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். வருண் உஷா … Continue reading “அத்தியாயம் 14.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 13

அன்று மாலை அவர்களின் ரிசப்ஷன்…. மூன்று மணி வாக்கில் பியூட்டிஷியன்ஸ் வந்து உஷாவையும் அவந்திகாவையும் தயார்படுத்த ஆரம்பித்தனர். அவந்திகாவோ “இவ்ளோ ஹெவி மேக் அப் என்னால போட்டுக்க முடியாது., இந்த லெஹங்கா வெயிட் என்னோட வெயிட்ட விட ஓவரா இருக்கு. இதப் போட்டா நான் கீழ விழுந்து புதையல்தான் எடுக்கணும். இவ்ளோ ஜுவல்ஸ் என்னால போட்டுக்க முடியாது” என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் மறுப்பு சொல்ல அவளை மட்டும் சமாளித்துத் தயார்படுத்தவே 3 மணி நேரம் பிடித்தது. இருவரும் … Continue reading “அத்தியாயம் 13”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

“என் மௌனத்தைத் திமிரென்றும், விலகலைக் கல்நெஞ்சமென்றும் நினைத்துக்கொள்; என்னைச் சுற்றியுள்ளவர்களின் விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என் அன்புக்குரியவர்களின் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும், இந்த உலகத்தையே தீயிட்டுக் கொளுத்தவும் நான் தயங்கமாட்டேன்!” –நிலவன் அம்பாசமுத்திரம் – சேரன்மகாதேவி நெடுஞ்சாலையில் பரந்து விரிந்து கிடந்தது அந்த முப்பத்திரண்டு ஏக்கர் பரப்பளவிலான விவசாயப் பண்ணை. மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்னணியில் விரிந்து கிடந்த அந்த விவசாயப் பண்ணை சகதியோ, வரப்புகளோ, தேங்கி நிற்கும் தண்ணீரோ இல்லாத … Continue reading “அத்தியாயம் 1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 12

காலை எழுந்த ராதிகா புது மருமகளை வீட்டிற்கு வரவேற்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்க வீடே பரபரப்பாக இருந்தது. நேரம் கழித்து எழுந்த ராகவுக்கோ அம்மாவின் முகத்தில் விழிக்க யோசனையாக இருந்தது. “இது எல்லாத்துக்கும் அந்த ஜான்சி ராணிதான் காரணம். அவ மட்டும் இன்னைக்கு வரட்டும்” என்று மனதிற்குள்ளேயே கறுவிக்கொண்டான். இவ்வாறு நேரம் சென்றுகொண்டேயிருக்க உஷாவும் வருணும் உஷாவின் பிறந்த வீட்டிலிருந்து அங்கே வந்துவிட்டார்கள். அவர்களுடன் உஷாவின் குடும்பத்தினரும், அவந்திகாவின் குடும்பத்தினரும் வர ராகவ் இவர்களைச் சமாளிக்கும் வழி … Continue reading “அத்தியாயம் 12”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 5

காலையில் கண் விழித்த அவந்திகாவிற்குத் தான் மெத்தையில் படுத்திருப்பது அப்போதுதான் நினைவிற்கு வந்தது. சுற்றி முற்றி ராகவ் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்தவளுக்கு எதுவும் கிடைக்காது போகவே ‘அப்பாடா! இந்த மைதா மாவு நைட் இந்த ரூமுக்கு வரவே இல்ல போல. அப்போ எங்கதான் போயிருப்பான்? கண்டிப்பா இந்த வீட்டு மனுஷங்க கூட பேசிட்டிருக்க சான்ஸே இல்ல. கேட்டா ஸ்டேட்டஸ் கிளாஸ்னு எனக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிருவான்” என்று தனக்குத் தானே பேசியபடி சென்று … Continue reading “அத்தியாயம் 5”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 4

வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்து கொண்டிருந்த அவந்திகா ராகவைக் கவனிக்கத் தவறவில்லை. காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் மூலமாக யாருடனோ பேசிக்கொண்டு வந்தவனின் உரையாடல் பெரும்பாலும் பஞ்சாபியிலேயே இருந்ததால் அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் அவனின் பேச்சில் அவ்வப்போது வந்து சென்ற வருண் பய்யா, பாபிஜி முதலிய வார்த்தைகளை வைத்து அவன் திருமணம் சம்பந்தமாக பேசிக்கொண்டு வருகிறான் என்பதைப் புரிந்துகொண்டாள். திடீரென்று அவள் புறம் திரும்பியவன் இன்னும் எவ்வளவு தூரம்? என்று சைகையில் கேட்க அவள் அரை கிலோ … Continue reading “அத்தியாயம் 4”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 2

அன்று மாலை. சந்தன்பூர் அரண்மனையில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதற்காகப் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருக்க, அவந்திகா அவளது லெஹங்காவின் பிளவுஸின் பின்பகுதியில் கயிறை முடிச்சிட முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள். அந்நேரம் பார்த்து “ஹனிபி! ரெடி ஆயாச்சா” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் ரித்திமா. “யா ரித்து பேபி! கொஞ்சம் வந்து இந்த நாட் போட்டு விடு… என்னால போடவே முடியலடி!” என்று அந்தக் கயிறைக் கையில் பிடித்து நிற்க முடியாமல் நடனம் ஆடிக்கொண்டிருந்தாள் அவந்திகா. “திரும்பு கொஞ்சம்” என்று சொல்லி அவளுக்கு … Continue reading “அத்தியாயம் 2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

காலையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது சந்தன்பூரின் ராஜகுடும்பத்து மாளிகை. அந்த மாளிகையின் இளவரசியான பிரதியுஷா சிங்கின் திருமணத்திற்கான அழகான பதற்றம் தான் அது. அன்று அவளது நிச்சயதார்த்தம் இந்தியாவின் மிகப் பெரிய பிஸினஸ்மேன் குணால் கபூரின் மகனான வருண் கபூருடன் நடக்கப்போவதற்கான இனிமையான முன்னுரை தான் அந்த பரபரப்பு. மாளிகையின் மேல்மாடத்தில் நின்று கொண்டிருந்தாள் பிரதியூஷா. ஐந்தரையடி உயரத்தில் ராஜகுடும்பத்தின் கம்பீரம் எள்ளளவும் குறையாமல் அதே நேரம் எளிமையின் மறுவுருவாக இருப்பவள். ஒரு முறை பார்த்தவர்களை மீண்டும் பார்க்க … Continue reading “அத்தியாயம் 1”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 4

அன்று செங்கோட்டைக்கு ஆதவனின் அனுகிரகம் சற்று தாமதமாக கிடைத்ததன் விளைவு புஷ்பம்மா காய்ச்சி வைத்திருந்த அரிசி வடகத்திற்கான கூழினை மட்டப்பாவில் துணி விரித்து வட்ட வடிவில் ஊற்றி முடித்திருந்தனர் அவரும் குட்டிமாவும். அரிசிமாவை கூழ் போல காய்ச்சி அதில் சீரகமிட்டு வட்ட வடிவில் இடப்படும் அந்த வடகம் என்றால் குட்டிமாவிற்கு உயிர். இளம்பிராயத்தில் பள்ளி தேர்வு விடுமுறை காலங்களில் செங்கோட்டைக்கு வரும் சமயங்களில் ஆச்சியுடன் அம்மா, பெரியம்மாக்கள் மற்றும் சித்தி என அனைவரும் சேர்ந்து கூழ் வடகம் … Continue reading “கழிமுகம் 4”

 

Share your Reaction

Loading spinner