Header Image

 

வசந்தம் 7

நழுவியோடும் இதயம், பிடிவாதம் பிடிக்கும் மூளை இரண்டும் ஒருங்கிணைந்து ஒருவரை நம்பினால் மட்டுமே அந்நபரை நாம் நம்மில் பாதியாக அங்கீகரிப்போம். ஆனால் என் விஷயத்தில் மூளை ஒரு விதமாயும், இதயம் அதற்கு எதிர்ப்பதமாயும் இருக்கிறதே! -வசுமதி ஹேங்கிங் கார்டன்ஸ் ஆஃப் பாலியை இரவு விழுங்க ஆரம்பித்த நேரம். ரிசார்ட் அறையின் நீச்சல் குளக்கரையில் அழகாய் மெழுகுவர்த்திக் கூட்டங்கள் எரிந்துகொண்டிருந்தன. அங்கே நின்றபடி சுற்றியிருக்கும் கானகத்தை வெறித்துக்கொண்டிருந்தாள் வசுமதி. காலையில் நடந்த சம்பவம் கொடுத்த அதிருப்தியை இந்த அழகான … Continue reading “வசந்தம் 7”

 

Share your Reaction

Loading spinner

வசந்தம் 6

“ஏக்கங்கள் ஏமாற்றங்களாய் உருமாறுமானால் அவை நம்மைத் தின்று புஷ்டியாகி ஆதங்கங்களாய் விஸ்வரூபமெடுக்கும். அந்த ஆதங்கங்கள் நாட்பட நாட்பட வளர்ந்து நமது வாழ்வின் அஸ்திவாரத்தையே ஆட்டிவைக்கும் ஒரு நாள்” -வசுமதி சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் பிரம்மாண்டம் வசுமதிக்குப் பெரும் மலைப்பைத் தந்தது. முதல் முறையாக விமான நிலையத்தைப் பார்க்கிறாள் அல்லவா! திருநெல்வேலியின் தாமிரபரணிக் காற்றைச் சுவாசித்துப் பழகியவளுக்கு, அந்தப் பிரம்மாண்டமான குளிரூட்டப்பட்ட கட்டிடமும், எங்கும் ஒலிக்கும் ரோலர் சூட்கேஸ்களின் கடகட சத்தமும் முற்றிலும் புதிது. அவளது விழிகளில் … Continue reading “வசந்தம் 6”

 

Share your Reaction

Loading spinner

வசந்தம் 5

“மனக்கசப்புகளும் கருத்து மோதல்களும் இல்லாத வாழ்க்கையில் மனிதர்கள் நடிக்கிறார்கள் என்று அர்த்தம். வாழ்வதைக் காட்டிலும் நடிப்பதுதானே சமுதாயத்தின் பார்வைக்கு அழகாய்த் தெரிகிறது அநேக சமயங்களில்!” -வசுமதி வெல்லமும் ஏலக்காயும் போட்டுக் காய்ச்சிய பாலை டம்ளர்களில் ஊற்றிக்கொண்டிருந்தாள் வசுமதி. முந்தைய இரவில் சென்னைக்கு வந்திருந்தார்கள் அவளும் வசீகரனும். இன்னும் சிறிது நேரத்தில் அவன் அலுவலகம் கிளம்பவேண்டும். அதற்குள் பால் காய்ச்சிவிடலாம் என்று காலையிலேயே எழுந்து சிறிய பூஜையறையைத் துடைத்துச் சுத்தமாக்கி வைத்துவிட்டாள். அவன் எழுந்து குளித்ததும் பால் காய்ச்சி … Continue reading “வசந்தம் 5”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 5 (இறுதி)

“நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு… உங்களுக்கு எப்போ ஆச்சிய பாக்கணும்னு தோணுதோ அப்போ வாங்க… இந்தத் தடவை சின்னாவும் குட்டிமாவும் எதேச்சையா வந்தாங்கடா… என்னமோ நாங்க ப்ளான் பண்ணி கெட் டுகெதர் அரேஞ்ச் பண்ணுன மாதிரி பேசாத முன்னா” தங்களை மட்டும் அழைக்காமல் ஆச்சி வீட்டில் ஜாலியாக நாட்களைக் கழிப்பதாக குறைபட்ட மூத்தமகன் முகுந்தனிடமும் மருமகள் கார்த்திகாவிடமும் சமாதானப்புறாவைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் சந்திரகலா. முகுந்தன் அவரது மாமனாரின் பெயர். சாகேதராமனோ அவரது தந்தையின் நாமம். பெரியவர்களின் … Continue reading “கழிமுகம் 5 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 4

அன்று செங்கோட்டைக்கு ஆதவனின் அனுகிரகம் சற்று தாமதமாக கிடைத்ததன் விளைவு புஷ்பம்மா காய்ச்சி வைத்திருந்த அரிசி வடகத்திற்கான கூழினை மட்டப்பாவில் துணி விரித்து வட்ட வடிவில் ஊற்றி முடித்திருந்தனர் அவரும் குட்டிமாவும். அரிசிமாவை கூழ் போல காய்ச்சி அதில் சீரகமிட்டு வட்ட வடிவில் இடப்படும் அந்த வடகம் என்றால் குட்டிமாவிற்கு உயிர். இளம்பிராயத்தில் பள்ளி தேர்வு விடுமுறை காலங்களில் செங்கோட்டைக்கு வரும் சமயங்களில் ஆச்சியுடன் அம்மா, பெரியம்மாக்கள் மற்றும் சித்தி என அனைவரும் சேர்ந்து கூழ் வடகம் … Continue reading “கழிமுகம் 4”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 3

“இந்த மல்லிமொக்கு ஆரத்தை மாட்டிக்கடி… நம்ம போறது கல்யாண வீட்டுக்கு… உன்னோட ஆபிஸ் பார்ட்டிக்கு இல்ல” கையகல ஜரிகை வைத்த பட்டுப்புடவையின் முந்தானையை நீவியபடி அவள் அணிந்த ரூபி கழுத்தாரத்தை ஆட்சேபித்தபடி நின்றார் பூரணி, குட்டிமாவின் அன்னை. “ப்ச்! நீ ரொம்ப ஓவரா பண்ணுறம்மா… விட்டா என்னை அம்மன் படத்துல வர்ற ரம்யா கிருஷ்ணன் மாதிரி நடமாடும் நகைக்கடையா மாத்திடுவ போல” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் அவர் சொன்ன மல்லிமொக்கு ஆரத்தை அணிந்து கொண்டாள் குட்டிமா. … Continue reading “கழிமுகம் 3”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 2

“நீ பார்த்த விழிகள்! நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா? கேட்காத வரமா?” காதில் கீதமிசைத்த மொபைலை போர்வைக்குவியலுக்குள் பொதிந்து கிடந்த தனது தலையை உயர்த்தி பார்த்தான் சின்னா. தொடுதிரையில் சாந்தப்புன்னகை தவழும் அன்னையின் புகைப்படம் ஒளிர்ந்து பச்சை மற்றும் சிகப்பு வண்ண தொலைபேசி அடையாளங்களை நர்த்தனமாட விட்டிருக்க உடனே போர்வையை எறிந்துவிட்டு மொபைலைக் காதுக்குக் கொடுத்தான் அவன். “சொல்லுங்கம்மா” பேசும் போதே கைமறைவில் கொட்டாவி வந்துவிட்டது. “என்ன சொல்லுங்கம்மா? இன்னையோட குட்டிமா செங்கோட்டைக்குப் போய் மூனு … Continue reading “கழிமுகம் 2”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 1

சலசலத்து ஓடும் குண்டாற்றின் நீரோட்டத்திற்கு எதிராக புஷ்பம்மாள் துணியை அலசுவதை வேடிக்கை பார்த்தபடி படித்துறையில் அமர்ந்து கால்களை நீரில் அலைய விட்டுக் கொண்டிருந்தாள் அவள். நீரின் ஜில்லிப்பு கால்களினூடே உடலுக்குள் பரவி அந்தக் காலைப்பொழுதின் குளுமையில் இன்னும் இருபது சதவிகிதத்தை இலவச இணைப்பாக அளித்ததைப் போல உணர்ந்தாள். “குட்டிமா நீ சின்னப்புள்ளையா இருக்கச்ச ஒரு தடவை இதே படிக்கட்டுல பின்னாடி பாக்க உக்காந்து விளையாடுறேனு சொல்லி தண்ணிக்குள்ள விழுந்துட்ட… அது உனக்கு ஞாபகம் இருக்குதா?” புஷ்பம்மா கேட்டதும் … Continue reading “கழிமுகம் 1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 100 (இறுதி)

கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் சாத்தான் வழிபாடு நடத்தும் குழுக்கள் இருப்பதாக காவல்துறையின் அறிக்கைகள் கூறுகின்றன. இதில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் என்கிறது இவ்வறிக்கை. இதில் கலந்துகொள்வதற்கான நோக்கங்கள் – அதீத சக்தி வேண்டும், பணக்காரனாகும் ஆசை, எதிரிகளை அழிக்க வேண்டும் – இவையே ஆகும். இதை எல்லாம் சாத்தான் செய்வார் என்று அவர்கள் அழுத்தமாக நம்புகின்றனர். இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களுக்கு பெரிய போதைப்பொருள் … Continue reading “அத்தியாயம் 100 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 99

கேரளாவில் பதினான்கு மாவட்டங்களில் சாத்தான் வழிபாட்டு குழுவினர் தங்களுக்கென சர்ச்களை நிர்மாணித்துள்ளதாக ராஜிவ் சிவசங்கர் கூறுகிறார். இத்தகைய சர்ச்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட வீடுகளிலும் அப்பார்ட்மெண்ட்களிலும் செயல்படுகின்றன. இவர்கள் ‘சாத்தான் சேவா’ என்ற நிகழ்வை செய்கிறார்கள். அந்நிகழ்வின் போது சாத்தான் உங்களைப் பணக்காரர் ஆக்குவார், எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பார் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயலுகிறார்கள். அதிலும் தொழில் நொடிந்த பிசினஸ்மேன்கள் தான் இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களின் இலக்கு என்கிறார் … Continue reading “அத்தியாயம் 99”

 

Share your Reaction

Loading spinner