Header Image

 

பிரியம் 13

“Invisible strings are often the strongestனு சொல்லுவாங்க. கண்ணுக்குத் தெரியாத சில நேசங்களோட இழைகள் ரொம்ப அற்புதமானதுனு என் ஃப்ரெண்ட் வேதாவும் அவ கதைல ஒரு டயலாக் வச்சிருக்கா. பிரகடனப்படுத்தப்பட்ட உறவு ஒருவிதமான அழகுனா பிரகடனப்படுத்தாத நேசம் இன்னும் அழகு!” –ப்ரியம்வதா “இந்த மூவிக்கு வந்ததுக்குப் பதிலா சாப்பிட்டுட்டுத் தூங்கியிருக்கலாம். செம போர்.” என்று புலம்பிக்கொண்டே வந்தார்கள் ப்ரியம்வதாவும் சாருலதாவும். “ஓ.டி.டியில் பாத்துக்கலாம்னு சொன்னேன். நீதான் கேக்கல” எனப் புலம்பியபடியே அவர்களுக்குப் பின்னே வந்தாள் ரம்யா. … Continue reading “பிரியம் 13”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 6

“இந்த உலகத்துலயே அற்புதமான மேஜிக் ஒன்னு இருக்குனா, அது ஒருத்தரை புரிஞ்சிக்க நாம எடுக்குற முயற்சிகளும், அந்த ஒருத்தர் கிட்ட நம்மை பத்தி ஆழமான விசயங்களைச் சொல்லுற பகிர்வுகளும் மட்டும்தான். ஏன் இதை மேஜிக்னு சொல்லுறேன் தெரியுமா? எல்லாருக்காகவும் நாம இதைச் செய்ய நினைக்குறதில்ல” –ப்ரியம்வதா இரவு விளக்குகளின் வெளிச்சத்தில் போயஸ் கார்டன் பகுதி அமைதியான அழகில் உறைந்திருந்தது. தனது காரில் அங்கே வந்து சேர்ந்த சந்தீப், வாட்ச்மேன் கதவைத் திறந்துவிடவும் சாகர் நிவாசிற்குள் பிரவேசித்தான். அவருக்கு … Continue reading “பிரியம் 6”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 4

“எங்களோட டிஜிட்டல் உலகத்துல எல்லாமே வித் இன் அ செகண்ட்ல எங்க கைக்கு வந்துடும். காய்கறில ஆரம்பிச்சு ஜெராக்ஸ் பேப்பர் வரைக்கும் பத்து நிமிசத்துல என்னோட வீட்டு வாசலுக்கு ஆப்ஸ் மூலமா டெலிவரி ஆகிடும். ஆனா காதல் அப்பிடி ‘டென் மினிட்ஸ் டெலிவரி’ மாதிரி கைக்கு வந்துடுமா என்ன? நமக்குச் சரியான துணையா ஒருத்தன் வர்ற வரைக்கும் நூறு வருசம் ஆனாலும் காத்திருக்கலாம்னு ‘The Selection’ நாவல்ல கியாரா காஸ் சொல்லிருக்காங்க.” –ப்ரியம்வதா அறைக்குத் திரும்பியதும் அன்னையின் … Continue reading “பிரியம் 4”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 3

“பார்க்காமலேயே ஒருத்தரோட பிரசன்னத்தை உணர முடியுறதுதான் உண்மையான புரிதல். எவ்ளோ பெரிய கூட்டத்துல நாம இருந்தாலும் நம்மளை நேசிக்குறவங்க கண்ணுக்கு நாம மட்டும்தான் ஃபுல் ஃபோகஸ்ல தெரியணும். அவங்க கண்ணு ஆட்டோமேட்டிக்கா சுத்தியிருக்குறவங்களை ப்ளர் பண்ணிடும். ‘No Cap’, That’s an amazing feel!” –ப்ரியம்வதா “இன்னைக்கு ரெஜீனா ஆன்ட்டி எனக்கு கிளாஸ் நூடுல்ஸ் சமைச்சுத் தந்தாங்க சித்தப்பா. நீங்க என்ன சாப்பிட்டீங்க?” டேப்பின் தொடுதிரையில் வட்ட முகமும் துறுதுறு கண்களுமாக வினவிய தமையனின் ஐந்து வயது … Continue reading “பிரியம் 3”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 1

“ஏதோ ஒரு கணக்குக்காகவோ அல்லது கடமைக்காகவோ வாழ்றது காதலே இல்லை. ஒருத்தரோட ஆன்மாவும் நம்ம ஆன்மாவும் ஒரே மெட்டீரியல்ல செஞ்சதுனு தோணணும். அந்த மிரர் சோலுக்காகத்தான் நான் காத்திருக்குறேன்!” –பிரியம்வதா ஸ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர்… ‘மதுமிதா அண்ட் ஆரண்யன் வெல்கம்ஸ் யூ’ என்று அலங்கார விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பலகை ஒன்று அங்கே நிகழ்ந்து கொண்டிருந்த திருமணத்திற்கான அடையாளமாய் நின்றிருந்தது. வழக்கமான மஞ்சள் விளக்குகளுக்குப் பதிலாக, சங்கீத் என்பதால் ‘நியான் ப்ளூ’ மற்றும் ‘மெஜந்தா’ நிற … Continue reading “பிரியம் 1”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 5 (இறுதி)

“நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு… உங்களுக்கு எப்போ ஆச்சிய பாக்கணும்னு தோணுதோ அப்போ வாங்க… இந்தத் தடவை சின்னாவும் குட்டிமாவும் எதேச்சையா வந்தாங்கடா… என்னமோ நாங்க ப்ளான் பண்ணி கெட் டுகெதர் அரேஞ்ச் பண்ணுன மாதிரி பேசாத முன்னா” தங்களை மட்டும் அழைக்காமல் ஆச்சி வீட்டில் ஜாலியாக நாட்களைக் கழிப்பதாக குறைபட்ட மூத்தமகன் முகுந்தனிடமும் மருமகள் கார்த்திகாவிடமும் சமாதானப்புறாவைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் சந்திரகலா. முகுந்தன் அவரது மாமனாரின் பெயர். சாகேதராமனோ அவரது தந்தையின் நாமம். பெரியவர்களின் … Continue reading “கழிமுகம் 5 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 4

அன்று செங்கோட்டைக்கு ஆதவனின் அனுகிரகம் சற்று தாமதமாக கிடைத்ததன் விளைவு புஷ்பம்மா காய்ச்சி வைத்திருந்த அரிசி வடகத்திற்கான கூழினை மட்டப்பாவில் துணி விரித்து வட்ட வடிவில் ஊற்றி முடித்திருந்தனர் அவரும் குட்டிமாவும். அரிசிமாவை கூழ் போல காய்ச்சி அதில் சீரகமிட்டு வட்ட வடிவில் இடப்படும் அந்த வடகம் என்றால் குட்டிமாவிற்கு உயிர். இளம்பிராயத்தில் பள்ளி தேர்வு விடுமுறை காலங்களில் செங்கோட்டைக்கு வரும் சமயங்களில் ஆச்சியுடன் அம்மா, பெரியம்மாக்கள் மற்றும் சித்தி என அனைவரும் சேர்ந்து கூழ் வடகம் … Continue reading “கழிமுகம் 4”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 3

“இந்த மல்லிமொக்கு ஆரத்தை மாட்டிக்கடி… நம்ம போறது கல்யாண வீட்டுக்கு… உன்னோட ஆபிஸ் பார்ட்டிக்கு இல்ல” கையகல ஜரிகை வைத்த பட்டுப்புடவையின் முந்தானையை நீவியபடி அவள் அணிந்த ரூபி கழுத்தாரத்தை ஆட்சேபித்தபடி நின்றார் பூரணி, குட்டிமாவின் அன்னை. “ப்ச்! நீ ரொம்ப ஓவரா பண்ணுறம்மா… விட்டா என்னை அம்மன் படத்துல வர்ற ரம்யா கிருஷ்ணன் மாதிரி நடமாடும் நகைக்கடையா மாத்திடுவ போல” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் அவர் சொன்ன மல்லிமொக்கு ஆரத்தை அணிந்து கொண்டாள் குட்டிமா. … Continue reading “கழிமுகம் 3”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 2

“நீ பார்த்த விழிகள்! நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா? கேட்காத வரமா?” காதில் கீதமிசைத்த மொபைலை போர்வைக்குவியலுக்குள் பொதிந்து கிடந்த தனது தலையை உயர்த்தி பார்த்தான் சின்னா. தொடுதிரையில் சாந்தப்புன்னகை தவழும் அன்னையின் புகைப்படம் ஒளிர்ந்து பச்சை மற்றும் சிகப்பு வண்ண தொலைபேசி அடையாளங்களை நர்த்தனமாட விட்டிருக்க உடனே போர்வையை எறிந்துவிட்டு மொபைலைக் காதுக்குக் கொடுத்தான் அவன். “சொல்லுங்கம்மா” பேசும் போதே கைமறைவில் கொட்டாவி வந்துவிட்டது. “என்ன சொல்லுங்கம்மா? இன்னையோட குட்டிமா செங்கோட்டைக்குப் போய் மூனு … Continue reading “கழிமுகம் 2”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 1

சலசலத்து ஓடும் குண்டாற்றின் நீரோட்டத்திற்கு எதிராக புஷ்பம்மாள் துணியை அலசுவதை வேடிக்கை பார்த்தபடி படித்துறையில் அமர்ந்து கால்களை நீரில் அலைய விட்டுக் கொண்டிருந்தாள் அவள். நீரின் ஜில்லிப்பு கால்களினூடே உடலுக்குள் பரவி அந்தக் காலைப்பொழுதின் குளுமையில் இன்னும் இருபது சதவிகிதத்தை இலவச இணைப்பாக அளித்ததைப் போல உணர்ந்தாள். “குட்டிமா நீ சின்னப்புள்ளையா இருக்கச்ச ஒரு தடவை இதே படிக்கட்டுல பின்னாடி பாக்க உக்காந்து விளையாடுறேனு சொல்லி தண்ணிக்குள்ள விழுந்துட்ட… அது உனக்கு ஞாபகம் இருக்குதா?” புஷ்பம்மா கேட்டதும் … Continue reading “கழிமுகம் 1”

 

Share your Reaction

Loading spinner