Header Image

 

நேசம் 25

மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த அந்த வீட்டினுள் கார்கள் வரிசையாக நுழைந்தன. முதல் காரிலிருந்து இறங்கினான் அன்றைய நிகழ்வின் கதாநாயகனான வருண். பொன்னிற ஷெர்வானியில் கம்பீரமாய் காதலியைக் கரம்பிடிக்கும் மகிழ்ச்சி முகத்தில் ஜொலிக்க சகோதரர்களுடன் வந்து நின்றவனைத் தொடர்ந்து வந்தனர் அவனது குடும்பத்தினர். பிரியாவும் குணாலும் மகனை மணக்கோலத்தில் கண்ட நெகிழ்ச்சியுடன் நிற்க, சுமித்ராவின் விழிகளில் பேரனின் திருமணத்தைக் காணப்போகும் ஆர்வம் சுடர் விட்டிருந்து. வருணின் தந்தை மற்றும் சித்தப்பாக்களுக்குக் காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டது என்ற … Continue reading “நேசம் 25”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 21

“அவன் என் சுவாசத்தைத் திருடும் கள்வன் அல்ல; என் மூச்சுக்காற்றையே தனக்கானதாகச் சாசனம் எழுதிக்கொண்ட அரக்கன். தப்பிக்க முடியாத அந்த முரட்டு முத்தத்தில் நான் இறந்தேனா, இல்லை புதிதாய்ப் பிறந்தேனா என்று இன்றும் எனக்குத் தெரியவில்லை.” -வெண்பா நேத்ரன் வந்துபோன பிறகு வெண்பாவின் நடவடிக்கைகளில் பெருமளவில் மாற்றம். ஏற்கெனவே வீட்டில் தந்தை இருந்தால் அமைதியாய் இருப்பவள் இப்போது இன்னும் அமைதியாய்த் தனது அறைக்குள் முடங்கிக்கொண்டாள். துர்காவுக்குத் தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கு நடைபெறுவதற்கான நாளை அங்கயற்கண்ணியும், மனோன்மணியும் … Continue reading “ஸ்வரம் 21”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 24

பிரதியுஷாவின் திருமணநாள் அருகில் வந்துவிட்டது. இருவீட்டினரும் பரபரப்பாக அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த சமயம் இளம்பெண்கள் அனைவரும் மெஹந்தி போடும் நிகழ்வை எதிர்நோக்கியிருந்தனர். பிரதியுஷாவின் வீட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முந்தைய நாள் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ததாலோ என்னவோ ரித்திமாவும் அவந்திகாவும் அசந்து உறங்கிவிட்டனர். அவர்கள் துயிலெழுந்த வேளையில் அவர்களின் குடும்பத்தினர் மெஹந்திக்காகத் தயாராகி இருந்தனர். இரு பெண்களையும் வரச் சொல்லிவிட்டு அவர்கள் பிரதியுஷாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். திருமணத்துக்காக கல்யாணிதேவி ஏற்பாடு செய்திருந்த பூஜை ஆரம்பிக்கவும் அவர்கள் செல்லவும் … Continue reading “நேசம் 24”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 23

ராகவ் அவந்திகாவைத் தோளோடு அணைத்தபடி டிவியைப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அவன் கையில் நறுக்கென்று கிள்ளவும் “ஐயோ! ஏன் இப்போ கிள்ளுன அவந்திகா?” என்று வலியில் முகம் சுருக்கியபடி திரும்பியவன் அவந்திகாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டான். இவளுக்கு என்னவாயிற்று என்ற ரீதியில் பார்த்தவனை முறைத்தவாறு சோபாவிலிருந்து எழுந்தவள் “இங்கே பாரு! நீ என்னை விட்டுக் கொஞ்சம் தள்ளியே இரு… இல்லைனா உன் உயிருக்கு நான் உத்திரவாதம் கிடையாது” என்று விரல் நீட்டி எச்சரிக்க … Continue reading “நேசம் 23”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 22

அன்றைக்கு அவந்திகாவிடம் பேசிச் சமாதானம் செய்த ராகவ் வீட்டுக்குத் திரும்பியதும் செய்த முதல் வேலை வீணாவிடம் தியாவைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்தது தான். அவனுக்கும் வீணாவின் மேல் பெரிதாகப் பாசம் என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் வயதில் பெரியவர் என்ற மரியாதையில் தான் அவர் சொன்னதற்காக அவரது அண்ணன் மகளை மணக்கச் சம்மதித்தான். இரு குடும்பத்தினரும் சிறிது காலம் கழித்து நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கையில் தியாவின் பழக்கவழக்கங்கள் பல ராகவிற்குப் பிடிக்காமல் போனது. முக்கியமாக இருபத்து … Continue reading “நேசம் 22”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 21

விஹான் டெலிகாம் மதியநேர வெயிலின் வெம்மையைத் தீர்க்க இலவசமாகக் குளிர்காற்றை வழங்கிக் கொண்டிருந்தது ஏசியின் வாயிலாக. வரவேற்பு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தாள் அவந்திகா. “மேம்! எம்.டி இப்போ மீட்டிங்ல இருக்கார்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பிளீஸ்” என்று வரவேற்பு பெண் அழாதக் குறையாகக் கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவந்திகாவிடம். அவளோ அதைக் காதில் போட்டுக்கொள்வதைப் போல தெரியவில்லை. அவள் இங்கே வந்து ஒருமணி நேரத்தைக் கடந்துவிட்டது. அவள் இழுத்துப் பிடித்துவைத்திருந்த பொறுமையும் காற்றோடு கரைந்துவிட்டது. இதற்கு மேல் பொறுமை காப்பதற்கு … Continue reading “நேசம் 21”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 20

“அவனிடம் காதலின் மென்மை இல்லை, பசியெடுத்த காட்டுத்தீயின் மூர்க்கம் மட்டுமே இருந்தது. அவனது பிடிக்குள் சிக்கிய பின், அதில் எரிந்து சாம்பலாவதைத் தவிர எனக்கான வேறு தேர்வுகள் அங்கு மீதமிருக்கவில்லை.” -வெண்பா ராஜவேலுவோடு அமர்ந்திருந்தான் நேத்ரன். கூடவே மார்த்தாண்டனும் புகழேந்தியும். நால்வரின் முகங்களிலும் பெரியதொரு ஆசுவாசத்தின் அடையாளம். நேத்ரன் ஒரு பொறுப்புக்கு வந்ததும் அவன் சந்தித்த முதல் பிரச்சனையைச் சாதுரியமாகச் சமாளித்த தகவல் கட்சித் தலைமைக்குப் போயிருக்க அங்கிருந்து அவனுக்குப் பாராட்டு மழை. அது ஒன்றே ராஜவேலுவை … Continue reading “ஸ்வரம் 20”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 19

அந்தப் பரந்து விரிந்து ஹாலில் நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. அதன் நடுநாயகமாக ஒரு மேஜையில் பல சேனல்களின் ஒலிவாங்கிகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருக்க அதன் பின்னே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர் ராகவும் அவந்திகாவும். அவர்களை பேட்டியெடுக்க வந்திருந்த நிருபர்களுக்காகத் தான் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நாற்காலியில் அமர்ந்திருந்த நிருபர்களின் கவனம் முழுவதும் ராகவ் மற்றும் அவந்திகாவின் மீதே நிலைபெற்றிருந்தது. அவர்கள் இருவரின் முகங்களையே எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பது என்று சலித்துப் போன நிருபர்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தனர். … Continue reading “நேசம் 19”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 18

ராகவ் சில நிமிடங்கள் கையைக் கட்டிக்கொண்டு பொறுமையுடன் வேடிக்கை பார்த்தவன் இனியும் காத்திருக்க விருப்பமின்றி அவந்திகாவின் அருகே சென்று நாற்காலியில் அமர்ந்திருந்தவளைக் கையில் அள்ளிக்கொள்ள அவந்திகா இதைச் சற்றும் எதிர்பாராதவள் “என்னடா பண்ணுற நீ? லீவ் மீ… ஐ செட் லீவ் மீ இடியட்” என்று அவனது பிடியிலிருந்து திமிறி விலக இருந்தவளை அவன் விட்டால் தானே! “ஒழுங்கா நான் சொன்னப்பவே கிளம்பியிருக்கலாம்.. என் கிட்ட வீணா சண்டை போட்டு உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணி, டூ … Continue reading “நேசம் 18”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 19

“அவனது அதிகாரத்தின் கீழ் இந்த ஒட்டுமொத்த சாம்ராஜ்ஜியமும் இருக்கலாம்; ஆனால், யாருக்கும் பணியாத அவனது மிடுக்கு என் ஒற்றைப் பார்வைக்காக ஏங்கி நிற்கும்போது, இந்த உலகத்தின் ஆகப்பெரிய பேரரசி நான் தான் என்ற கர்வம் என்னைத் தழுவிக்கொள்கிறது.” – வெண்பா தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் பரபரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தது. சென்னை விமானத்திலிருந்து வந்து இறங்கிய நேத்ரனை வரவேற்க, தூத்துக்குடி மாவட்ட ‘தமிழ்நாடு முன்னேற்றக் கழக’ நிர்வாகிகளும், அவனது ஆதரவாளர்களும் வெளியே காத்து நின்றனர். முகத்தில் எந்தச் … Continue reading “ஸ்வரம் 19”

 

Share your Reaction

Loading spinner