Header Image

 

கண்மணி 10

சிவசங்கர் தனது வெள்ளைச்சட்டையின் காலர் பட்டனைப் போட்டவன் என்ன தோணியதோ தெரியவில்லை, அதைக் கழற்றிவிட்டு முழுநீளச்சட்டையை முழங்கை அளவில் மடித்துக் கொண்டான். சிகையைக் கோதும் போது மோதிரவிரலை அவனறியாது நோக்கிய விழிகள் எதேச்சையாக டிரஸ்சிங் டேபிளை நோக்க மூளையோ “அடேய் மோதிரத்தை அவ கையில திணிச்சு அனுப்புனதுலாம் மறந்து போச்சா?” என்று நினைவுபடுத்த அந்நாளின் நினைவில் சில நொடிகள் சிலையாய் நின்றான்.  பின்னர் “சிவா கொஞ்சம் இங்க வாயேன்! பவாகுட்டி செலக்ட் பண்ணுன இன்விடேசன் டிசைன் உனக்குப் … Continue reading “கண்மணி 10”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 8

கே.ஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவமனை படுக்கையில் சோர்வாய் கண் மூடி சாய்ந்திருந்தார் சுவாமிநாதன். மருமகன் பேசிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் செவியில் எதிரொலித்தது. அவர் என்றுமே ஞானதேசிகனையும் ஜெகத்ரட்சகனையும் பிரித்துப் பார்த்தது கிடையாது. அன்னபூரணியும் அவ்வாறே! பழைய நினைவுகளில் கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது அவருக்கு. தமக்கையும் அவரது கணவரும் விபத்தில் அகால மரணமடைந்த போது ஐந்து வயது பாலகனாய் தன்னுடன் அழைத்து வந்த ஜெகத்ரட்சகனை மகனும் மகள்களும் இலகுவாகத் தங்களின் நட்புவட்டத்தில் இணைத்துக்கொண்டபோது இருவரும் … Continue reading “கண்மணி 8”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 6

பவானி சிவசங்கரின் மனதிலுள்ளதை அறிய விரும்பி மனம் புண்பட்டுத் திரும்பிய தினத்தன்று இரவில் அவள் தந்தை சொன்னபடி நவீனை மணக்கச் சம்மதம் தெரிவித்துவிட்டாள். ஜெகத்ரட்சகனுக்குத் தன் மகள் தனது பேச்சைத் தட்டமாட்டாள் என்ற எண்ணம் மீண்டும் ஒரு முறை வலுப்பட அஞ்சனாதேவியும் அருணும் பவானிக்கு அமையப் போகும் நல்வாழ்வை எண்ணி மகிழ்ந்தனர். அதன் பின்னர் அனைத்துமே வேகமாக நடந்தது. ஒரு நல்ல நாளில் அமைச்சர் செழியனும் அவரது மனைவி கயல்விழியும் பவானியைப் பார்த்துவிட்டுப் பூ வைத்துச் சென்றனர். … Continue reading “கண்மணி 6”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 5

ஜெகத்ரட்சகன் அமைச்சர் செழியன் வீட்டுச் சம்பந்தம் மகளுக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவருக்கும் செழியனுக்குமான பழக்கம் தொழில்ரீதியான நட்பையும் தாண்டி இன்று இருவரும் சம்பந்திகள் ஆகிவிட்ட பூரிப்பு அவர் முகத்தில் தெள்ளத்தெளிவாய் தெரிந்தது. அஞ்சனாதேவியும் மகளுக்கு அமையப் போகிற ராஜவாழ்க்கையை எண்ணி மகிழ்ந்திருக்க அருண் மட்டும் நவீனைப் பற்றி யாருமறியாது விசாரிக்க ஆரம்பித்தான். விசாரித்த வரையில் அவனைப் பற்றி யாரும் குறைவாகச் சொல்லாத நிலையில் அவனுக்கும் இச்சம்பந்தத்தில் சம்மதமே! ஆனால் இதையெல்லாம் நினைத்து யார் மகிழ … Continue reading “கண்மணி 5”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 2

மாநகரத்தின் இயந்திரத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற உணர்வுடன் அழகான மலர்வனமும் நெடிதுயர்ந்த மரங்களும் சூழ்ந்த அமைதியான சூழலில் கம்பீரமாய் நின்றிருந்தது ‘அஞ்சனாவிலாசம்’ என்ற பங்களா. வீட்டுக்கு அரணாய் நிற்கும் காம்பவுண்ட் சுவர்களும் அந்த அரணின் நடுவே இரும்பினாலான கேட்டும் அந்த வீட்டுக்குக் கோட்டை போன்ற உருவமைப்பைத் தந்தது என்றால் அது மிகையாகாது. வீட்டைச் சுற்றிலும் உள்ள நெடிய மரங்களில் தஞ்சமடைந்திருந்த பறவைகளின் கீச் கீச் என்ற ஒலியுடன் அந்த வீட்டின் மகாராணியும் இல்லத்தரசியுமான அஞ்சனாதேவியின் குரலில் கணீரென்ற கானம் … Continue reading “கண்மணி 2”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 6

“நான் இதுவரை வாசிக்காத ஆகச்சிறந்த கவிதை நீ; ஆனாலும் என் இதயம் உன்னை எப்படியோ மனப்பாடம் செய்துவிட்டது. உன்னிடமிருந்து ஒற்றைச் சம்மதத்தைப் பெற, எனக்குப் பிடித்த ஆசிரியையிடம் விடைத்தாள் எழுதும் மாணவனாய் நீளமாய் விருப்பத்தைச் சொல்லிக் காத்திருக்கிறேன்” ஸ்டாஃப் ரூமில் அமர்ந்து வெண்பா சொன்ன அனைத்தையும் ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள் சுனந்தா. பெண் பார்க்கும் படலத்தில் நேத்ரன் பேசியதை வைத்து அவளே ஒரு ஊகத்திற்கு வந்திருந்தாள். “அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்குதுன்னு தோணுது வெண்பா. அதான் இப்பிடி சுத்தி வளைச்சு … Continue reading “ஸ்வரம் 6”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 5

வாழ்க்கை நமக்காகத் திறந்திருக்கும் இந்தக் கதவின் விளிம்பில் உறைந்து நிற்கிறேன்—உள்ளே நுழையவும் பயமாக இருக்கிறது, உன்னை விட்டு விலகிச் செல்லவும் என் மனதிற்குச் சம்மதமில்லை. குடும்பத்தினரின் செயல்பாடுகள் வெண்பாவை மட்டுமில்லை, நேத்ரனையும் யோசனையில் ஆழ்த்தின. பெண் பார்க்க வந்தது எல்லாம் சும்மா ஒரு ஃபார்மாலிட்டி என்பது அவனுக்கே தெரியும். புகழேந்திக்கு துர்காவைப் பிடித்துப்போனது, அவளுக்கும் அவனிடம் பேசத் தடையில்லாமல் போனதே திருமணத்தை நிச்சயிக்கப் போதுமானதாய்! இருப்பினும் வழக்கங்களை மாற்ற வேண்டாம் என்ற பெயரில் பெரியவர்கள் ஏற்பாடு செய்தது … Continue reading “ஸ்வரம் 5”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 3

என் ஆன்மாவின் ஒரு பகுதி எப்போதும் உன்னைத் தேடிக்கொண்டே இருக்கும். அந்தச் சத்தம் உனக்குக் கேட்கிறதா, அல்லது என்னை விலக்கி வைக்க உனக்குள் பெருஞ்சுவர் எழுப்பிவிட்டாயா? தூரத்தில் நின்று என் தவிப்பை ரசிக்கிறாயா என்ன! அன்று ஞாயிறு என்பதால் பொறுமையாக எழுந்தாள் வெண்பா. ஆனால் இல்லத்தரசிகளுக்கு வார விடுமுறை ஏது? அவளுக்கு முன்னரே எழுந்து வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள் அவளது அன்னை உமையாளும் அண்ணி ஹேமாவும். “ரொம்ப நேரம் தலையில ஹேர் பேக்கோட இருக்காதடி. அந்தக் கிழங்கை … Continue reading “ஸ்வரம் 3”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 2

“நான் கொண்டிருக்கும் கொள்கைகள் அனைத்திற்கும் முற்றிலும் எதிரானவள் நீ. ஆனாலும், விதிக்கு விசித்திரமான நகைச்சுவை உணர்வு உண்டு போலும்; உன்னை மட்டுமே என் தலையெழுத்தாக எழுதி வைத்துவிட்டது.” ராஜவிலாசம், மகாராஜநகர்… சங்கடஹர சதுர்த்தி பூஜையில் பக்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது அந்த பங்களாவுக்குள். தோட்டமும் விருட்சங்களும் சூழ்ந்த பங்களா பெயருக்கேற்ற ராஜகம்பீரத்துடன் இருந்தது அந்த மாலை நேரத்துச் சந்திரோதயத்தில்! பூஜையறையில் இருக்கும் விநாயகர் சிலைக்கு முன்னே காராமணிச் சுண்டலும் கொழுக்கட்டையும் படைக்கப்பட்டிருக்க விநாயகர் அகவலைப் பாடி முடித்தார்கள் … Continue reading “ஸ்வரம் 2”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 1

இது நம் கதையின் முதல் பக்கம் மட்டுமே. இதற்கே விடைபெறுதல் என்று பெயர் வைக்க வேண்டுமா என்ன? இன்னும் எத்தனையோ அத்தியாயங்கள் நமக்கு மீதமிருக்கின்றன. இன்றைய நாளை நம் அழகிய தொடக்கமாகக் கருதிக்கொள். நாம் வெறும் நினைவாக மாறிப்போவதற்கு இந்தப் பிரபஞ்சம் நம்மைச் சந்திக்க வைக்கவில்லை. ரங்கநல்லூர் அன்று மிகவும் பரபரப்பாக இருந்தது. அந்த ஊரின் திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் கட்சிக் கொடிகள் படபடத்து பறந்துகொண்டிருந்தன. அது ஊரின் பிரதானப் பகுதி. அருகில் இருக்கும் கிராமங்களில் … Continue reading “ஸ்வரம் 1”

 

Share your Reaction

Loading spinner