மறுநாள் காலை அலுவலகத்திற்கு ராகவ் சீக்கிரமாகவே கிஷோரை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். குணாலும், மோகனும் மகனுடனே சென்றுவிட்டனர். அவந்திகாவும் தன்னுடைய அலுவலகத்துக்குச் செல்லத் தயாரானாள். கிளம்புகையில் தாதி “அவந்திகா! டிரைவரைக் கார் எடுக்கச் சொல்லிக் கார்லயே ஆபிஸ் போ. இது என்னோட ஆர்டர்” என்று கட்டளையிட அவந்திகா “பட் தாதி நான் பஸ்லயே போய்ப்பேன். அதுதான் ஜாலியா இருக்கும்” என்று கண்ணை மூடி ரசனையுடன் கூறினாள். அவளைப் பார்த்துச் சிரித்த தாதி சிரிப்பை அடக்கியபடியே முறைத்துவிட்டு “வீட்டுப் பெரிய … Continue reading “அத்தியாயம் 16”
Share your Reaction


