Header Image

 

ஸ்வரம் 12

என் கண்கள் தவிக்கும் அலைகள் என்றால், அவற்றை ஈர்க்கும் முழுநிலவு நீ. மீறவே முடியாத இந்த வசீகர ஈர்ப்பை யாரிடமிருந்து கடனாகப் பெற்றாய்? -நேத்ரன் நாட்கள் சிறகு கட்டிப் பறந்தன. வெண்பாவின் விரல்கள் வெளிர் நீல நிற நூலோடு சேர்ந்து, நேத்ரனின் நினைவுகளையும் சேர்த்து அழகாகப் பின்னிக்கொண்டிருந்தன. அவளது ஓய்வு நேரங்களில் உருவான அந்த அழகான கார்டிகன் ஆகாஷின் அளவிற்குக் கச்சிதமாக முற்றுப்பெற்றிருந்தது. இடையிடையே நேத்ரனிடம் என நினைத்தாலும், தேர்தல் காய்ச்சல் அவனை முழுமையாகச் சுருட்டிப் போட்டிருந்தது. … Continue reading “ஸ்வரம் 12”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 20

மணமகளின் தந்தை சுதர்சன் சுவாமிநாதனுக்குத் தூரத்து உறவு. அந்த முறையில் ஜெகத்ரட்சகன் சுதர்சனுக்கு அண்ணன் முறை வேண்டும். அதனால் தான் ஜெகத்ரட்சகனே நேரில் வந்திருந்தார். இல்லையெனில் மனைவியையோ மகனையோ அனுப்பி வைத்திருப்பார். ஆனால் வந்த இடத்தில் மகளையும் மருமகனையும் கண்டவருக்கு மனம் அலைபாய்ந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மணமேடையில் கண் பதித்தார். ஆனால் உள்ளமெங்கும் மகள் எப்படி இருக்கிறாளோ என்ற கவலை தான். அவளது பார்வை தன் புறம் திரும்பும் போதெல்லாம் மருமகன் ஏதோ சொல்வது கண்ணில் படவும் … Continue reading “கண்மணி 20”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 17

மறுநாள் விடியல் சாந்திவனத்துக்குப் பரபரப்புடன் தொடங்கியது. அதற்குக் காரணமானவள் பவானி தான். அவளிடம் முந்தைய நாளிரவு பேசிய அவளது தோழனின் வருகைக்காக வீட்டைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கென இருக்கும் நண்பர்கள் வானதியும் ஈஸ்வரும் மட்டுமே. அவ்வாறு இருக்கையில் அவனது வருகைக்காக அவள் பரபரப்பாக இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லையே! வானதிக்கோ அண்ணனின் திருமணத்துக்கு எடுத்த விடுப்பு முடிந்து அலுவலகம் செல்லும் பதற்றம் தொற்றிக் கொண்டது. எனவே அவளை விட்டுவிட்ட பவானி பாகீரதியைப் பிடித்துக் கொண்டாள். “பாகி இன்னைக்குப் … Continue reading “கண்மணி 17”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 15

ஜெகன் அசோசியேட்ஸ்… இளம் வழக்கறிஞர்கள் பட்டாளம் உற்சாகத்துடன் வேலையில் கண்ணாய் இருந்தனர். அவர்களில் பெண்களும் அடக்கம். ஜெகத்ரட்சகன் அவரது அலுவலக அறையில் வேலையில் மூழ்கியிருந்தார். அவரது நீண்டநாள் கிளையண்டான அமைச்சர் செழியன் இனி தன் நிறுவனத்தைத் தொடர்பு கொள்வது அரிது என்பதைப் புரிந்து கொண்டவர் தனது உதவியாளரிடம் செழியனது கோப்புகளின் மென்பிரதிகள் அனைத்தையும் அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டு மற்றவற்றை அவரது அலுவலகத்தில் ஒப்படைத்து விடும்படி கட்டளையிட்டிருந்தார். அந்த வேலை முடியும் தருவாயில் இருக்க ஜெகத்ரட்சகனின் ஜூனியர் அந்தக் … Continue reading “கண்மணி 15”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 14

அஞ்சனா விலாசம்… ஜெகத்ரட்சகன் காலையுணவை முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பத் தயாரானவர் அருண் இன்னும் ஷார்ட்சும் டீசர்ட்டுமாய் சுற்றுவதைப் பார்த்துவிட்டுப் புருவம் சுருக்கினார். “அருண் ஆபிஸ்கு கிளம்பாம இன்னும் கேசுவலா இருக்கியே? உடம்பு எதுவும் சரியில்லையாப்பா?” “இல்லப்பா… நான் இன்னைக்கு ஆபிஸ்கு லீவ்… பவாவுக்கு இன்னைக்கு மறுவீடு சடங்கு பண்ணனும்னு அம்மா சொன்னாங்க… அவங்க வீட்டுல இருந்து யாரும் வந்தா உங்களுக்குப் பிடிக்காது.. அதான் நாங்களே அங்க போய் செய்ய வேண்டிய சம்பிரதாயத்தைச் செஞ்சு முடிச்சிட்டு வந்துடுறோம்” என்று … Continue reading “கண்மணி 14”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 13

மறுநாள் விடியல் பவானிக்கு இயல்பாய் அமைந்தது. அவள் எழுந்திருக்கும் போது சிவசங்கர் அங்கில்லை. மெதுவாக எழுந்தவள் அமைதியாக சில நிமிடங்கள் படுக்கையிலேயே அமர்ந்திருந்தாள். பின்னர் எழுந்து பால்கனியை அடைந்தவள் வீட்டைச் சூழ்ந்திருந்த மரங்களையும் தோட்டத்தையும் வேடிக்கை பார்த்தபடி நின்றாள். அந்த வீட்டின் வயது தான் அந்தத் தோட்டத்துக்கும். அதனாலேயே விருட்சங்கள் வீட்டின் உயரத்தைத் தொட்டிருந்தன. வெயிலின் சூடு சிறிது கூட அந்தப் பங்களாவின் மீது படாது தடுத்துக் கொண்டிருந்த அம்மரங்களைத் தங்களது வீடுகளாய் மாற்றிக் கொண்டிருந்த பறவைகளின் … Continue reading “கண்மணி 13”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 11

சாந்திவனத்திலும் அஞ்சனாவிலாசத்திலும் திருமணத்துக்கான இனிய பரபரப்பு தொற்றிக் கொண்டது. புத்தாடைகள் நகைகள் வாங்குவது என இரு குடும்பத்தினரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவளித்தனர். வானதியும் பாகீரதியும் உற்சாகத்துடன் வெட்டிங் பிளானிங் நிறுவனம் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததோடு அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்பதை உடனிருந்து கவனித்துக் கொண்டனர். திருமணப்பத்திரிக்கையின் முதல் பிரதியை ஈசன் முன்னே வைத்து வழிப்பட்டப் பிறகு பத்திரிக்கை கொடுக்கும் வேலை ஆரம்பித்தது. சுவாமிநாதன் தங்களின் உறவினர்கள் ஒருவர் … Continue reading “கண்மணி 11”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 8

கே.ஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவமனை படுக்கையில் சோர்வாய் கண் மூடி சாய்ந்திருந்தார் சுவாமிநாதன். மருமகன் பேசிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் செவியில் எதிரொலித்தது. அவர் என்றுமே ஞானதேசிகனையும் ஜெகத்ரட்சகனையும் பிரித்துப் பார்த்தது கிடையாது. அன்னபூரணியும் அவ்வாறே! பழைய நினைவுகளில் கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது அவருக்கு. தமக்கையும் அவரது கணவரும் விபத்தில் அகால மரணமடைந்த போது ஐந்து வயது பாலகனாய் தன்னுடன் அழைத்து வந்த ஜெகத்ரட்சகனை மகனும் மகள்களும் இலகுவாகத் தங்களின் நட்புவட்டத்தில் இணைத்துக்கொண்டபோது இருவரும் … Continue reading “கண்மணி 8”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 9

என் அதிகாரத்தை நான் ஆயுதமாகப் பயன்படுத்தவில்லை, அவளை மயக்கும் மெல்லிசையாகவே ஒலிக்கவிட்டேன்; அவளது வெட்கம் கலந்த மறுப்புகளையெல்லாம் மூழ்கடித்து அவளை முழுமையாக எனக்காய் அடிபணிய வைக்க! நேத்ரன் நிச்சயதார்த்தத்திலிருந்து கிளம்பியது எதனால் எனப் புரியாமல் மறுநாள் பள்ளிக்குச் சேர்ந்தாள் வெண்பா. காலை அவளது வகுப்பு மாணவர்களைப் பெற்றோர் கொண்டு வந்துவிடும் இடத்தில் அவள் நிற்கவேண்டும். அங்கிருந்து வகுப்பறைக்கு அழைத்துச் செல்லவேண்டும். நேரே ஸ்டாஃப் ரூமுக்குச் சென்றவள் அவளது ஹேண்ட்பேக்கிலிருந்து கைக்குட்டையை எடுத்தபோது பேனா ஒன்று கீழே விழுந்து … Continue reading “ஸ்வரம் 9”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 6

பவானி சிவசங்கரின் மனதிலுள்ளதை அறிய விரும்பி மனம் புண்பட்டுத் திரும்பிய தினத்தன்று இரவில் அவள் தந்தை சொன்னபடி நவீனை மணக்கச் சம்மதம் தெரிவித்துவிட்டாள். ஜெகத்ரட்சகனுக்குத் தன் மகள் தனது பேச்சைத் தட்டமாட்டாள் என்ற எண்ணம் மீண்டும் ஒரு முறை வலுப்பட அஞ்சனாதேவியும் அருணும் பவானிக்கு அமையப் போகும் நல்வாழ்வை எண்ணி மகிழ்ந்தனர். அதன் பின்னர் அனைத்துமே வேகமாக நடந்தது. ஒரு நல்ல நாளில் அமைச்சர் செழியனும் அவரது மனைவி கயல்விழியும் பவானியைப் பார்த்துவிட்டுப் பூ வைத்துச் சென்றனர். … Continue reading “கண்மணி 6”

 

Share your Reaction

Loading spinner