Header Image

 

பூங்காற்று 23.1

நீராஜாட்சி கிருஷ்ணஜாட்சியுடன் தோட்டத்தில் கால் பதித்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தது ரகுநந்தனின்  கார். காரிலிருந்து பட்டாபிராமனின் தோளைப் பிடித்து அவரை இறக்கி விட்டவன் அவர்களுடன் வந்த கரோலினிடம் அவரை அழைத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டு “மெதுவா நடங்க தாத்தா” என்றபடி பார்வையை வீட்டை நோக்கித் திருப்பவும் அங்கே கையில் சூட்கேசுடன் நின்று கொண்டிருந்த சகோதரிகளையும் கண்டு அதிர்ந்தான். இந்த திருமணம் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பது அவன் அறிந்தது தான். ஆனால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு என்னவாயிற்று … Continue reading “பூங்காற்று 23.1”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 22

பத்மாவதி நடந்த எதையும் நம்ப இயலாதவராய் இடிந்து போய் நின்றவர் மீண்டும் ஒரு முறை மணமேடையில் மகனுடன் நின்றிருந்த கிருஷ்ணஜாட்சியை நோக்க அவள் கழுத்திலிருந்த மாங்கல்யம் அவரைப் பார்த்துச் சிரித்தபடி நடந்தது அனைத்தும் உண்மையே என்று அவர் முகத்தில் அறைந்தது. அவரின் மனக்கண்ணில் அரை மணி நேரத்துக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் நிழலாடத் தொடங்கின. பட்டாபிராமன் பேத்தியின் பேரனின் கையையும் சேர்த்து வைத்து கண்ணீர் உகுக்க கூட்டத்தினர் இன்னும் சளசளத்துக் கொண்டு தான் இருந்தனர். வேங்கடநாதன் பேரன் … Continue reading “பூங்காற்று 22”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 17

ஹர்சவர்தனுடன் காரில் ஏறிய கிருஷ்ணஜாட்சி ஹோட்டலை அடையும் வரை அவனுடன் எதுவும் பேசவில்லை. காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு அவனுடன் இறங்கி நடந்து வரும் போது அவன் கீழே கவனிக்காமல் சென்றதில் கல் தடுக்கி விழப் போக அவனை விழாமல் கைப்பற்றி தடுத்தவள் “ஹர்சா பார்த்து நடக்க மாட்டிங்களா?” என்று அக்கறையுடன் கூற ஹர்சவர்தன் அவனது பெயரே அன்று அழகாக மாறிவிட்டது போல தோன்றியது. கிருஷ்ணஜாட்சியை புருவம் உயர்த்தி நோக்கியபடி “கிருஷ்ணா நீ என் பேரை சொல்லி கூப்பிட்டியா?” … Continue reading “பூங்காற்று 17”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 16

பத்மாவதியிடம் தான் அவர்கள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்வதாகச் சொல்லிவிட்டு வந்தாலும் நீரஜாட்சிக்கு இப்போதும் அங்கே செல்வதில் தயக்கமே. தேவை இல்லாத விஷயத்துக்கு மாமி பயப்படுகிறாரோ என்று எண்ணியவள் இன்னொரு முறை அவரிடம் சென்று பேசிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் கிருஷ்ணஜாட்சியிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கிச் சென்றாள். விஜயலெட்சுமி இரவாகியும் இன்னும் கிளம்பாமல் பத்மாவதியுடனே சுற்றிக் கொண்டிருந்தவர் நீரஜாட்சியைக் கண்டதும் “பத்மா குழந்தே உன்னைத் தான் பார்க்க வந்திருக்கா போலிருக்கு. நேக்கும் நாழியறதுடி. நான் ஆத்துக்கு கிளம்பறேன்” என்றுச் … Continue reading “பூங்காற்று 16”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 15

வீட்டுக்குள் நுழையும் போதே வாயெல்லாம் பல்லாக நுழைந்த விஜயலெட்சுமியை வழக்கம் போல உற்சாகத்துடன் வரவேற்றார் பத்மாவதி. விஜயலெட்சுமியும் பத்மாவதிக்கு முப்பத்திரண்டு பற்களையும் காட்டிச் சிரித்தவர் அவரது தங்கையும் இளைய நாத்தனாருமான மைதிலியிடம் மட்டும் அதில் பாதி பற்களைக் காட்டி ஒரு அடக்கமான புன்னகையை வீசினார். அவருக்கு என்னவோ பத்மாவதியைப் போல மைதிலியிடம் பிடித்தம் இல்லை. மைதிலியும் அவரது அண்ணன் மனைவியின் குணம் தனக்கு ஒத்துப் போகாது என்பதால் அவரிடம் ஒரு அளவுக்கு மேல் உரிமை எடுத்துக் கொள்வதில்லை. … Continue reading “பூங்காற்று 15”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 14

நீரஜாட்சியை அமர்த்திக் கொண்டு கற்பனையில் மிதந்தபடி சென்றவனின் பைக் என்னவோ சாலையில் தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதன் சொந்தக்காரன் தான் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தான். பைக்கை ஓட்டியபடியே “ஏன் நீரு கன்சாலிடேட்டட் மார்க் ஷீட், புரொவிஷனல் சர்டிஃபிகேட் வாங்க ஏன் இவ்ளோ ஆர்வமா போற? எப்பிடியும் மன்த் ஃபுல்லா டிஸ்ட்ரிபியூட் பண்ணுவாங்களே? மெதுவா வாங்கிக்க கூடாதா?”என்று வாயை விட அவன் பின்னே கடமையே என்று அமர்ந்து வந்த நீரஜாட்சி “எவ்ளோ சீக்கிரம் அதை கையில வாங்குறேனோ … Continue reading “பூங்காற்று 14”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 13

நீரஜாட்சி ரகுநந்தன் வெளியேறியதும் கதவை அறைந்துச் சாத்திவிட்டு வந்தவள், ஹாலின் வாயிலில் நின்று கொண்டிருந்த சீதாலெட்சுமியைக் கண்டதும் அவரிடம் வந்து, “என்னாச்சு சித்தம்மா, நான் ரொம்ப சத்தமா பேசி உன் தூக்கத்தைக் கெடுத்துட்டேனா?” என்று அக்கறையுடன் கேட்க, அவளின் கூந்தலை வருடிக் கொடுத்தபடி, “இல்லடி ராஜாத்தி! உன்னை ரொம்ப சின்னப் பொண்ணுனு நெனைச்சிண்டிருந்தேன். ஆனா உன்னால இவ்ளோ விஷயத்தைப் பேச முடியும்கிறதை நான் இன்னைக்கு தான் பார்க்கிறேன். நோக்கு இந்த தாத்தா பாட்டி மேல ஏதும் கோவம் … Continue reading “பூங்காற்று 13”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 11

ரகுநந்தன் வெளிநாடு சென்று படிக்கப் பெற்றோரிடம் அனுமதி பெறும் முன் ஹர்சவர்தனுக்கு நாக்கு வெளியே வந்துவிட்டது. வேங்கடநாதனோ, கோதண்டராமனோ இதற்குப் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவன் சிறிது காலம் வீட்டை விட்டுப் பிரிந்திருந்தால்தான் அவனுக்கும் கால்பந்து, பைக்கைத் தவிர வெளியுலகமும் இருக்கிறது என்பது புரியவரும் என்பது வேங்கடநாதனின் கருத்து. அதனால் அவர் அவன் வெளிநாடு செல்வதற்குச் சுலபமாக அனுமதி கொடுத்துவிட்டார். அதற்கு முன் தந்தையிடம் கலந்தாலோசித்து விட்டுத்தான் முடிவெடுத்தார். ஆனால் பத்மாவதி ஒரேயடியாக … Continue reading “பூங்காற்று 11”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 10

நீரஜாட்சியின் பொதுத்தேர்வு முடிந்தநிலையில் மைத்ரேயியின் திருமணப் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருந்தது. சேஷனின் தூரத்து உறவினர் ஒருவரின் பேரனுக்கு மைத்ரேயியைப் பார்க்கலாம் என்றப் பேச்சு வர வீடே அன்று பரபரப்பாக இருந்தது. மாப்பிள்ளை வருமானவரித்துறையில் அதிகாரியாக வேலை பார்ப்பதால் அவருக்கு வசதியாக ஞாயிறு அன்று பெண் பார்க்க வருமாறு கூறியிருக்க கிருஷ்ணஜாட்சியும் அன்று வீட்டில் இருந்து அவளது இளைய மாமிக்கு வேலையில் உதவிக் கொண்டிருந்தாள். நீரஜாட்சி வழக்கம் போல பட்டாபிராமனிடம் “பட்டு ட்வெண்டி ஃபோர்லாம் கல்யாணத்துக்கான ஏஜா? மைத்திக்காவை ஏன் … Continue reading “பூங்காற்று 10”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 9

கிருஷ்ணஜாட்சியின் வாழ்க்கை சீராகப் பராமரிக்கப்படும் இயந்திரம் பழுதின்றி ஓடுவது போல எந்தவிதத் தடையுமின்றி ஒழுங்கானப் பாதையில் சென்று கொண்டிருந்தது. அவளது நான்கு மாத பயிற்சி நல்ல முறையில் முடிய, அவளது தோழி கரோலின் ஒரு மாத சிறப்புப் பயிற்சியிலும் கிருஷ்ணஜாட்சியைக் கலந்துகொள்ளுமாறு கூற, அவளும் சந்தோஷமாகவே அதையும் முடித்தாள். இதற்கு இடையில் மாமாவின் ஹோட்டலிலும் அனைத்து ஊழியர்களிடமும் அன்போடு பழகுவதாகட்டும், தலைமை செஃபிடம் பணிந்து நின்று அவரது கட்டளைப்படி வேலையை முடிப்பதாகட்டும், அவளுக்கு நிகர் அவளே என்று … Continue reading “பூங்காற்று 9”

 

Share your Reaction

Loading spinner