Header Image

 

கண்மணி 2

மாநகரத்தின் இயந்திரத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற உணர்வுடன் அழகான மலர்வனமும் நெடிதுயர்ந்த மரங்களும் சூழ்ந்த அமைதியான சூழலில் கம்பீரமாய் நின்றிருந்தது ‘அஞ்சனாவிலாசம்’ என்ற பங்களா. வீட்டுக்கு அரணாய் நிற்கும் காம்பவுண்ட் சுவர்களும் அந்த அரணின் நடுவே இரும்பினாலான கேட்டும் அந்த வீட்டுக்குக் கோட்டை போன்ற உருவமைப்பைத் தந்தது என்றால் அது மிகையாகாது. வீட்டைச் சுற்றிலும் உள்ள நெடிய மரங்களில் தஞ்சமடைந்திருந்த பறவைகளின் கீச் கீச் என்ற ஒலியுடன் அந்த வீட்டின் மகாராணியும் இல்லத்தரசியுமான அஞ்சனாதேவியின் குரலில் கணீரென்ற கானம் … Continue reading “கண்மணி 2”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 1

கதிரவனின் பொற்கதிர்களின் ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது அந்தச் சிவாலயத்தின் ராஜகோபுரம். அன்றைய தினம் அழற்கதிரவன் கொஞ்சம் கருணை காட்டியதால் வெயிலின் கடுமை சற்று குறைந்திருந்தது. அந்தச் சிவாலயத்தில் உலகாளும் ஈசனுக்கும் உமையவளுக்கும் அபிசேகம் நடந்து கொண்டிருக்க கருவறைக்கு வெளியே பக்தர்கள் கூட்டத்துடன் நின்றாலும் தன் உயரத்தால் தனித்துத் தெரிந்த அந்த எழுபது வயது முதியவர் கரம் கூப்பி விழி மூடி உருக்கத்துடன் ஈசனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். வயோதிகத்திலும் கம்பீரம் மின்னும் முகத்தில் திருநீற்றுப்பட்டை ஜொலிக்க, கழுத்தில் ருத்திரனின் … Continue reading “கண்மணி 1”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 7

நமது உலகங்களுக்கு இடையிலான வேலிகளைத் தகர்க்கும் காட்டுத்தீயாய் மாறவே என் இதயம் ஏங்குகிறது. ஆனாலும், உன் மனமெனும் அழகிய வனத்தைப் பாதுகாப்பதற்காக என்னை நானே தூரத்தில் நிறுத்திக் கொள்கிறேன். அழகான மெஜந்தா பிங்கில் கட்டங்களாய் ஓடும் ஜரிகைக்கு இடையே பூ வடிவ மோட்டிஃப்கள் உடலெங்கும் பரவிக்கிடக்க பெரிய ஆலிவ் பிரவுன் நிற பார்டரில் மலர்க்கொடிகள் ஜரிகையாய் விரிந்துகிடந்த பட்டுப்புடவையை வருங்கால மருமகளுக்கான பரிசாகத் தேர்வு செய்திருந்தார் குந்தவை. அவர் தேர்வு செய்தபோதே ஓரக்கண்ணால் மகனோடு பேசிக்கொண்டிருக்கும் வெண்பாவைப் … Continue reading “ஸ்வரம் 7”

 

Share your Reaction

Loading spinner