Header Image

 

கண்மணி 18

சாந்திவனம்… மாலை நேரம் பெரியவர்கள் அவரவர் வேலையில் ஆழ்ந்துவிட தனித்து விடப்பட்ட பாகீரதியும் பவானியும் வீட்டின் முன்பக்க வராண்டாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அன்னபூரணியும் சுவாமிநாதனும் அன்று பிரதோசம் என்பதால் கோவிலுக்குச் சென்றுவிட லோகநாயகியும் செண்பகாதேவியும் இரவுணவுக்கான வேலைகளில் ஆழ்ந்திருக்க இளம்பெண்கள் இருவரும் பொழுது போகாமல் கதை பேசிக் கொண்டிருந்தனர். “நம்ம கிச்சனுக்குப் போய் அத்தைக்கும் சித்திக்கும் குக்கிங்ல ஹெல்ப் பண்ணுவோமா பாகி?” என்ற பவானியிடம் “நோ நோ… கிச்சன் கிங்டம் அவங்களோடது… அங்க போய் நம்ம … Continue reading “கண்மணி 18”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 16

சாந்திவனம்… கரிய வானப்போர்வையில் சிதறிக் கிடந்த நட்சத்திர மூக்குத்திகளில் தனக்குப் பொருத்தமானதை தேர்ந்தெடுக்க நிலாப்பெண் தோன்றிவிட்டாள். வீட்டின் பூஜையறையில் லோகநாயகி விளக்கேற்றிவிட்டுச் சிவபுராணம் படித்துக் கொண்டிருந்தார். இது வழக்கமாய் நடப்பது தான். அதே நேரம் வேலையாட்கள் வீட்டுக்குச் சென்றுவிட தங்களுக்கு இரவுணவு தயாரிக்கும் வேலையில் ஆழ்ந்திருந்தார் செண்பகாதேவி. வானதி திருமணத்துக்கு எடுத்திருந்த விடுப்பு முடிந்ததால் மறுநாள் அலுவலகம் செல்லத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். பாகீரதியோ அவளது அறையிலிருந்த பிரெஞ்சு விண்டோவின் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டு … Continue reading “கண்மணி 16”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 9

சாந்திவனம்… வழக்கமாக மாமனார் அமரும் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் அரிஞ்சயன். வீட்டினர் அனைவரும் பவானியின் நிச்சயதார்த்த விழாவுக்குச் சென்றிருந்தனர். அவரை செண்பகாதேவி அழைத்தார். “எதுக்கு நான் அங்க வரணும்? அந்தாளு ஜெகத்ரட்சகன் என்னை அலட்சியமா பாப்பான்… தனியா போனதால இன்னைக்கு உங்கப்பா கண்ணுலயே விரலை விட்டு ஆட்டுற அளவுக்கு வளந்துட்டான்… அந்தத் திமிரைக் காட்டி நம்மளை அவமானப்படுத்துவான்… வாலண்டியரா போய் அவமானப்படணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா?” என்று அலட்சியமாய் மறுத்துவிட்டார். பவானிக்கு இவ்வளவு … Continue reading “கண்மணி 9”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 7

ஹோட்டல் டெய்சி கிராண்டே…   நகரின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஒன்று. மேல்தட்டு மக்கள் மட்டுமே வந்து செல்லக் கூடிய இடமும் கூட. ஆறடுக்குகளில் கண்ணாடியாய் மின்னிய கட்டிடமும், பரந்த வாகன தரிப்பிடமும், பிரமிக்க வைக்கும் அதன் உள்கட்டமைப்பும் காண்போரைத் திகைக்க வைக்கும். அங்கே தான் பவானி மற்றும் நவீனின் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்தது. அமைச்சர் செழியனின் தரப்பில் அரசியல் பிரமுகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அவர்களைத் திருமணத்துக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார் அவர். எனவே அவரது உறவினர்கள், நண்பர்கள் … Continue reading “கண்மணி 7”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 4

அஞ்சனா விலாசம்… அன்று வார விடுமுறை நாள் என்பதால் பவானி மிகவும் தாமதமாக தான் கண் விழித்தாள். முந்தையநாளின் சம்பவங்கள் உண்டாக்கிய சோகம் மனதில் இன்னும் மிச்சமிருந்தது. சோர்வாய் எழுந்து அமர்ந்தவளின் கரம் படுக்கையின் அருகே கிடந்த மேஜையின் அறையிலிருந்து ஒரு டைரியை எடுத்தது. அளவில் சற்று பெரியது தான். கிட்டத்தட்ட ஆறு வருடத்தின் முக்கிய நினைவுகளை உள்ளடக்கிய பொக்கிஷம் அல்லவா! அதன் பக்கங்களில் இருப்பது வெறும் எழுத்துக்கள் அல்ல! பதின்பருவத்தின் முடிவில் அவள் மனதில் சிவசங்கரின் … Continue reading “கண்மணி 4”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 3

சாந்திவனம்… எப்போதுமே உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லா இல்லம் அது. வீட்டுத்தலைவரான சுவாமிநாதனின் நேர்மைக்குணமும் அவரது சகதர்மிணி அன்னபூரணியின் அன்பும் தான் அந்தப் பெரியக் குடும்பத்தைக் கட்டிப் போட்டிருக்கும் கயிறுகள். அவரது வார்த்தைக்கு மறுபேச்சு பேசாத தவப்புதல்வன் தான் ஞானதேசிகன். தந்தையின் வழக்கறிஞர் தொழிலின் மேல் உண்டான பிரேமையால் தானும் சட்டம் படித்து தந்தையிடம் தொழில் நுணுக்கங்களைக் கற்றறிந்தவர் நகரின் பெரிய வணிகநிறுவங்களுக்கு இன்று சட்ட ஆலோசகர்! அவருக்கேற்ற அன்பான வாழ்க்கைத்துணைவியாக வாய்த்தவர் தான் லோகநாயகி. அன்பான அன்னை; … Continue reading “கண்மணி 3”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 7

நமது உலகங்களுக்கு இடையிலான வேலிகளைத் தகர்க்கும் காட்டுத்தீயாய் மாறவே என் இதயம் ஏங்குகிறது. ஆனாலும், உன் மனமெனும் அழகிய வனத்தைப் பாதுகாப்பதற்காக என்னை நானே தூரத்தில் நிறுத்திக் கொள்கிறேன். அழகான மெஜந்தா பிங்கில் கட்டங்களாய் ஓடும் ஜரிகைக்கு இடையே பூ வடிவ மோட்டிஃப்கள் உடலெங்கும் பரவிக்கிடக்க பெரிய ஆலிவ் பிரவுன் நிற பார்டரில் மலர்க்கொடிகள் ஜரிகையாய் விரிந்துகிடந்த பட்டுப்புடவையை வருங்கால மருமகளுக்கான பரிசாகத் தேர்வு செய்திருந்தார் குந்தவை. அவர் தேர்வு செய்தபோதே ஓரக்கண்ணால் மகனோடு பேசிக்கொண்டிருக்கும் வெண்பாவைப் … Continue reading “ஸ்வரம் 7”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 4

“இந்தக் குழப்பமான உலகத்தில் நாம் ஏன் மீண்டும் மீண்டும் சந்திக்கிறோம் என உனக்குப் புரிகிறதா? எனக்கென்னவோ, இது எப்போதோ மிகச் சரியாகத் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. இவை அனைத்தும் நாம் பிறப்பதற்கு முன்பே பிரபஞ்சத்தால் எழுதித் தீர்மானிக்கப்பட்டதாகவே உனக்கும் தோன்றினால் நீயும் நானும் ஒரே மாதிரி சிந்திக்கிறோமென அர்த்தம்” “அவளைத்தானே பொண்ணு பாக்க வர்றாங்க. என்னை எதுக்கு ஷேரி கட்டச் சொன்னீங்க? ஸ்கூலுக்கு டெய்லியும் ஷேரி கட்டிட்டுப் போய் போரடிக்குது எனக்கு” கத்தரிப்பூ நிற காட்டன் சில்க்குக்குப் … Continue reading “ஸ்வரம் 4”

 

Share your Reaction

Loading spinner

கானல் 9

“இன்ஸ்டாக்ராமில் வீடியோ பதிவிடுவதாகச் சொன்ன கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர் அவரது கணவரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அவரைக் கொளுத்திய கையோடு தானும் தீக்குளிக்க முயன்ற கணவர் நாற்பது சதவிகித தீக்காயங்களுடன் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்கொளுத்தப்பட்ட பெண் அஞ்சல் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவரும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் தனது கணவர் தான் தன்னை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினார் என வாக்குமூலம் அளித்துள்ளார். இத்தம்பதியினருக்கு ஆறு மாத குழந்தை … Continue reading “கானல் 9”

 

Share your Reaction

Loading spinner

கானல் 8

“செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள்கோயில் பகுதியைச் சேர்ந்த அசோக் (24), மோகன் (17), பிரகாஷ் (17) என்ற மூன்று இளைஞர்களும் தாம்பரம் செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது இரயில் பாதையில் அமர்ந்து பேசுவதையும், ரீல்ஸ் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த இரயில்பாதையில் எக்ஸ்ப்ரஸ் இரயில்கள் மட்டுமே செல்லும் என்பதால் அதிகமாக இரயில் வரத்து இருக்காது. அவ்வாறு இருக்கையில் ரீல்சுக்காக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது தாம்பரத்திலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் இரயில் வந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை. … Continue reading “கானல் 8”

 

Share your Reaction

Loading spinner