Header Image

 

கானல் 2

“நிறைய குழந்தைகள் சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் சமூக வலைதளக்கணக்குகள் அவர்களாலோ அவர்களின் பெற்றோராலோ கையாளப்படுகிறது. இதனால் குழந்தைகள் ட்ரெண்டாக உள்ள நடனங்கள், நகைச்சுவை உதட்டசைவு நடிப்பு போன்றவற்றை தயக்கமின்றி செய்வது வாடிக்கையாகி விட்டது. ஒரு கட்டத்தில் தங்களின் கணக்குகளைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பிரபலத்துவம் ஏற்படுவதும் தங்களது வயதுக்குப் பொருந்தாத கன்டெண்டுகளையும் அவர்கள் நடிக்க காரணமாகி விடுகிறது. சிலரது பெற்றோரே குழந்தைகளை ஊடக வெளிச்சத்தில் தள்ளுவதற்காக அவர்களை போக பொருளாகச் சித்தரிக்கும் … Continue reading “கானல் 2”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 21

மறுநாள் காலையில் வழக்கம் போல நீர்ஜாட்சிக்கு முன்னரே விழித்துவிட்ட கிருஷ்ணஜாட்சி அவள் என்ன மாதிரி மனநிலையில் இருப்பாளோ என்ற குழப்பத்துடனே காபி மற்றும் காலை உணவை  தயார் செய்ய நீரஜாட்சி நிதானமாக எட்டு மணிக்கு எழுந்து சாவகாசமாக குளித்துவிட்டு வந்தவள் கிருஷ்ணஜாட்சியின் சமையலை வாசம் பிடித்தபடி சமையலறைக்குள் வந்துவிட்டாள். “வாவ் கிருஷ்ணா உன்னோட இட்லி அண்ட் சாம்பார் வாசம் ஆளை அப்பிடியே தூக்குதே. காபி அப்புறமா குடிச்சிக்கிறேன். முதல்ல பிரேக் பாஸ்ட்” என்று சாதாரணமாகவே பேச காலையில் … Continue reading “பூங்காற்று 21”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 19

ரகுநந்தன் இரு சகோதரிகளிடம் வந்தவன் கிருஷ்ணஜாட்சியின் அருகில் அமரச் செல்ல அதை கண்டுகொண்ட நீரஜாட்சி இருவருக்கும் இடையில் சென்று நின்று கொண்டாள். ரகுநந்தனுக்கு அவளது செய்கைகள் வினோதமாகத் தெரிந்தாலும் அவளது அருகாமை மனதுக்கு இதமளிக்க அவள் புடவை தேர்வு செய்யும் அழகை ரசித்தவண்ணம் இருந்தான். நீரஜாட்சி அவளுக்கு அரக்கு நிறத்திலும் கிருஷ்ணஜாட்சிக்கு நீல நிறத்திலும் நிச்சயதார்த்தத்துக்கு ஆடைகளைத் தேர்வு செய்துவிட்டு இன்னும் நகராமல் அங்கேயே போன் நோண்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்து “நீ போய் ஜென்ட்ஸ் செக்சன்ல உனக்கு … Continue reading “பூங்காற்று 19”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 12

காலை கதிரவனின் ஒளியில் எழில் தேவதையாக நின்ற நீரஜாட்சியை விழியெடுக்காமல் பார்த்த ரகுநந்தனை அவளும் தூரத்திலிருந்தே அடையாளம் கண்டுவிட்டாள். எப்போதும் ஜீன்ஸிலேயே தலையைக் கூட வாராமல் கால்பந்துடன் ஓடிக்கொண்டிருந்தவனா இவன் என்னும் அளவுக்கு வேஷ்டி சட்டையில் பொறுப்பான ஆண்மகனாக நின்றவனைக் கண்டு அவளது மனம் துணுக்குற்றாலும், தன்னை விழுங்கும் அந்தப் பார்வையைக் கண்டதும் அவளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அவளின் இயல்பான குணம் தலைதூக்க, அவனை முறைத்தபடி அவன் அருகில் வந்து சேர்ந்தாள் அவள். அவளால் எப்போதும் அவனைத் … Continue reading “பூங்காற்று 12”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 8

ஒருவாறு அனைத்துக் கலவரங்களும் அடங்கி, மாலையில் சேஷன் கிருஷ்ணஜாட்சியின் கைப்பட நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் ஸ்ரீநிவாசவிலாசத்திலிருந்துப் புறப்பட்டு விட்டார். பட்டாபிராமன் கும்பகோணத்திலிருக்கும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்து கிருஷ்ணஜாட்சியின் பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கொடுக்கப்படும் என்பதை விசாரிக்கச் சொல்லிவிட்டு, அக்கடாவென்று தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்துவிட்டார். இன்று ஒரு நாளில் மட்டும் தன் கணவருக்குத் தான் எத்தனை மனவேதனை என்ற வருத்தத்துடன் அவரருகில் அமர்ந்தார் சீதாலெட்சுமி. “ஏண்ணா! ரொம்ப களைப்பா தெரியறேளே? முடியலையா?” என்று ஆதரவாகக் கேட்க, … Continue reading “பூங்காற்று 8”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 5 (இறுதி)

“நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு… உங்களுக்கு எப்போ ஆச்சிய பாக்கணும்னு தோணுதோ அப்போ வாங்க… இந்தத் தடவை சின்னாவும் குட்டிமாவும் எதேச்சையா வந்தாங்கடா… என்னமோ நாங்க ப்ளான் பண்ணி கெட் டுகெதர் அரேஞ்ச் பண்ணுன மாதிரி பேசாத முன்னா” தங்களை மட்டும் அழைக்காமல் ஆச்சி வீட்டில் ஜாலியாக நாட்களைக் கழிப்பதாக குறைபட்ட மூத்தமகன் முகுந்தனிடமும் மருமகள் கார்த்திகாவிடமும் சமாதானப்புறாவைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் சந்திரகலா. முகுந்தன் அவரது மாமனாரின் பெயர். சாகேதராமனோ அவரது தந்தையின் நாமம். பெரியவர்களின் … Continue reading “கழிமுகம் 5 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 6

ரகுநந்தன் அன்று நீரஜாட்சியிடம் தான் பேசிய விதம் அதிகப்படி என்பதை உணர்ந்து கொண்டவன், “அது என்னவோ குழந்தைத்தனமா நடந்திண்டா நானும் இப்பிடியா அவளண்ட பேசி வைக்கணும்? நந்து, நோக்கு ஏன்டா இவ்வளவு கோவம் வர்றது? உன்னை விட மூணு வயசு சின்னப் பொண்ணு கிட்ட இப்பிடி பேசிருக்கப்படாது தான்” என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான். மறுநாள் காலையில் அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டியதுதான் என்ற முடிவுடன் உறங்கியவன், காலையில் எழுந்ததும் சித்தியிடம் சென்று தான் அவளிடம் … Continue reading “பூங்காற்று 6”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 2

பட்டாபிராமன் மூத்த பேத்தியை அணைத்தபடி கண்ணீர் வடித்தவர், நிமிர்ந்து மருமகளை வெறித்தவாறே, “அன்னைக்கு உன்னோட அண்ணா மணமேடையில என் பொண்ணால அவமானப்பட்டாங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் உயிரோட இருந்தவரைக்கும் என் பொண்ணு முகத்தை நான் பார்க்கல. அவளும், அவ ஆத்துக்காரரும் ஒரு ஆக்ஸிடெண்ட்ல காலமாயிட்டான்னு நேக்கு கும்பகோணம் போனப்போ தான் தெரிய வந்தது. என் பொண்ணோட பிரதிபிம்பமா நிக்கறவாளை கோவத்துல ஒதுக்கி வைக்கற அளவுக்கு நான் ஒன்னும் கல்நெஞ்சக்காரன் இல்லடிம்மா!” என்றுச் சொல்லி விழிநீரைத் துடைத்தவர், மருமகளின் முகம் … Continue reading “பூங்காற்று 2”

 

Share your Reaction

Loading spinner

அன்பு 7

பேரிரைச்சலோடு பொங்கி கடற்கரை மணலைத் தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் ஓடிவிடும் அலைகளுக்குத் தெரிவதில்லை, அவை விட்டுச் சென்ற ஈரம் இன்னும் மணலில் ஒட்டியிருப்பது. இவ்வாறே பல நேரங்களில் மனிதர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் நேசிப்பவர்களை ஆழமாகக் காயப்படுத்திவிடுகின்றன. அவற்றுக்குத் தங்களால் காயமுற்ற மனதில் காலாகாலத்துக்கும் வேதனை ஒட்டியிருக்கும் என்பதெல்லாம் தெரியாது! உதிர்த்தவனின் நாவுக்கும்.   –அன்பனின் சிந்தனை சிதறல்கள் அன்பரசனிடம் பேசிவிட்டு வந்ததும் முதல் வேலையாக அன்னை சுடர்விழியின் மொபைலுக்கு அழைத்து விவரத்தைக் கூறினாள் ஆரபி. “நீ ஒன்னும் … Continue reading “அன்பு 7”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 28

‘நம்ம மைண்ட்ல கான்சியஸ் மைண்ட், சப்கான்சியஸ் மைண்ட்னு ரெண்டு பகுதிகள் இருக்குறதா சொல்லுவாங்க. அந்த சப்கான்சியஸ் மைண்ட் ரொம்ப பவர்ஃபுல்லானது. ஒருத்தரை நாம பாத்துப் பேசுறப்ப அவங்க பேசுற ஸ்டைல், பாடி லாங்வேஜ் இதெல்லாம் அந்த சப்கான்சியஸ் மைண்ட்ல ஸ்டோர் ஆகும். அது ஸ்டோர் பண்ணுன எல்லா விசயங்களையும் அப்பப்ப நடக்குற சம்பவங்களோட கம்பேர் பண்ணி பாக்கும். பழைய ஆபத்தான சம்பவத்தோட இப்ப நடக்குற இன்சிடெண்டை ஒப்பிட்டுப் பாத்துட்டு அது டேஞ்சர்னு சிக்னல் காட்டுறதைதான் நாம ‘மனசுகு … Continue reading “அத்தியாயம் 28”

 

Share your Reaction

Loading spinner