Header Image

 

கானல் 7

“இருபது வயதான கல்லூரி மாணவர் பிரேம் குமார் என்பவர் ஆபாசப்புகைப்படங்களை வைத்து ஓராண்டு காலமாக மிரட்டி ரூபாய் 1.5 இலட்சம் வரை பறித்ததால் தங்களது இன்ஸ்டாகிராம் தோழன் மூலமாக பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது. மொபைலில் பேசி பழக்கமான பிறகு தங்களை தகாத முறையில் படம் பிடித்து அதை காட்டி அவர்களை பிரேம்குமார் மிரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் அந்த இரு பள்ளி மாணவிகளும் தங்களது இன்ஸ்டாகிராம் நண்பன் உதவியால் … Continue reading “கானல் 7”

 

Share your Reaction

Loading spinner

கானல் 6

“கண்காணிப்பற்ற சமூக வலைதளம் மற்றும் இணைய பயன்பாடு குழந்தைகளை மனரீதியாகப் பாதிக்கிறது என்கிறார் NIMHANS மனோஜ் குமார் சர்மா. தங்களது சமீபத்திய ஆய்வுகளை வைத்து பல தருணங்களில் சமூக வலைதள பயன்பாட்டால் குழந்தைகளிடம் நம்பிக்கையின்மை மற்றும் விரக்தியை ஏற்படுத்துகிறது என்கிறார். காரணம் தங்களைப் போல பதிவேற்றும் மற்ற குழந்தைகளின் வீடியோக்களுக்கு இருக்கும் பார்வைகள், லைக்குள் மற்றும் கமெண்ட்களை வைத்து தங்களின் தகுதியை குறைத்து மதிப்பிட்டு மனவுளைச்சலுக்கு உள்ளாகின்றனர் என்கிறார் அவர்”                                  -சாரதா, தி நியூஸ் மினிட் … Continue reading “கானல் 6”

 

Share your Reaction

Loading spinner

கானல் 5

“டிஜிட்டல் அறிவு வளர்ந்திருப்பதால் குழந்தைகள் தங்களது வயதுக்கு தகாத வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதற்கான பின்விளைவுகள் பெற்றோரையே பாதிக்கிறது. கல்வி சம்பந்தப்பட்ட அல்லது பொழுதுபோக்கு வீடியோக்களை அவர்கள் பதிவேற்றினால் கூட தங்களிடம் ஒப்புதல் பெற்றுவிட்டு பதிவேற்றினார்களா என கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோருக்குத் தான் உள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவேற்றப்படும் போது குழந்தைகள் கேலிக்குள்ளாகலாம். அதனால் குழந்தைகள் பெற்றோர் கட்டாயமாக்க வேண்டும். சில நேரங்களில் பெற்றோர் தங்களது நிறைவேறாத கனவுகளை குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்கின்றனர், இன்னும் … Continue reading “கானல் 5”

 

Share your Reaction

Loading spinner

கானல் 4

“சில நேரங்களில் பெரியவர்கள் மீது குழந்தைகளை பாலியல் ரீதியாக காட்சிப்படுத்தியதற்கான வழக்குகள் பதியப்படுகின்றன. ஜூலை 2021ல் டெல்லி பெண்கள் ஆணையம் ஓரு பெண் மீது அவரது சிறுவயது மகனுடன் நடனமாடிய வீடியோவை பதிவேற்றம் செய்ததற்காக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. காரணம் அந்தப் பாடலின் வரிகள் ஒரு ஆண் பெண் மீது கொண்ட வேட்கையை விவரித்த விதமும், அதற்கு அந்தக் குழந்தை தன்னை வேட்கை கொண்ட ஆணாக சித்தரித்து நடனமாடிய … Continue reading “கானல் 4”

 

Share your Reaction

Loading spinner

கானல் 3

“குழந்தைகள் படங்களிலும் ஓ.டி.டி தளங்களிலும் காணும் யாவற்றையும் பாவித்துக் காட்ட ஆசைப்படுவது இயல்பு தான். படங்களில் வரும் வசனங்கள், நடன அசைவுகளை தாங்களும் செய்து காட்ட குழந்தைகள் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் அவை வயதுக்குப் பொருந்தாத ஆபாசமான கன்டெண்டுகளாக மாறும் போது தான் பெற்றோரின் கண்டிப்பு அவசியமாகிறது. அதோடு இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் குழந்தைகளை மிகை பாலினமயமாக்குவது இயல்பாக நடந்தேறுகிறது என்கிறார் NIMHANS மனோஜ் குமார் சர்மா”                                  -சாரதா, தி நியூஸ் மினிட் – 25 … Continue reading “கானல் 3”

 

Share your Reaction

Loading spinner

கானல் 2

“நிறைய குழந்தைகள் சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் சமூக வலைதளக்கணக்குகள் அவர்களாலோ அவர்களின் பெற்றோராலோ கையாளப்படுகிறது. இதனால் குழந்தைகள் ட்ரெண்டாக உள்ள நடனங்கள், நகைச்சுவை உதட்டசைவு நடிப்பு போன்றவற்றை தயக்கமின்றி செய்வது வாடிக்கையாகி விட்டது. ஒரு கட்டத்தில் தங்களின் கணக்குகளைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பிரபலத்துவம் ஏற்படுவதும் தங்களது வயதுக்குப் பொருந்தாத கன்டெண்டுகளையும் அவர்கள் நடிக்க காரணமாகி விடுகிறது. சிலரது பெற்றோரே குழந்தைகளை ஊடக வெளிச்சத்தில் தள்ளுவதற்காக அவர்களை போக பொருளாகச் சித்தரிக்கும் … Continue reading “கானல் 2”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 5 (இறுதி)

“நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு… உங்களுக்கு எப்போ ஆச்சிய பாக்கணும்னு தோணுதோ அப்போ வாங்க… இந்தத் தடவை சின்னாவும் குட்டிமாவும் எதேச்சையா வந்தாங்கடா… என்னமோ நாங்க ப்ளான் பண்ணி கெட் டுகெதர் அரேஞ்ச் பண்ணுன மாதிரி பேசாத முன்னா” தங்களை மட்டும் அழைக்காமல் ஆச்சி வீட்டில் ஜாலியாக நாட்களைக் கழிப்பதாக குறைபட்ட மூத்தமகன் முகுந்தனிடமும் மருமகள் கார்த்திகாவிடமும் சமாதானப்புறாவைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் சந்திரகலா. முகுந்தன் அவரது மாமனாரின் பெயர். சாகேதராமனோ அவரது தந்தையின் நாமம். பெரியவர்களின் … Continue reading “கழிமுகம் 5 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

அன்பு 7

பேரிரைச்சலோடு பொங்கி கடற்கரை மணலைத் தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் ஓடிவிடும் அலைகளுக்குத் தெரிவதில்லை, அவை விட்டுச் சென்ற ஈரம் இன்னும் மணலில் ஒட்டியிருப்பது. இவ்வாறே பல நேரங்களில் மனிதர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் நேசிப்பவர்களை ஆழமாகக் காயப்படுத்திவிடுகின்றன. அவற்றுக்குத் தங்களால் காயமுற்ற மனதில் காலாகாலத்துக்கும் வேதனை ஒட்டியிருக்கும் என்பதெல்லாம் தெரியாது! உதிர்த்தவனின் நாவுக்கும்.   –அன்பனின் சிந்தனை சிதறல்கள் அன்பரசனிடம் பேசிவிட்டு வந்ததும் முதல் வேலையாக அன்னை சுடர்விழியின் மொபைலுக்கு அழைத்து விவரத்தைக் கூறினாள் ஆரபி. “நீ ஒன்னும் … Continue reading “அன்பு 7”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 28

‘நம்ம மைண்ட்ல கான்சியஸ் மைண்ட், சப்கான்சியஸ் மைண்ட்னு ரெண்டு பகுதிகள் இருக்குறதா சொல்லுவாங்க. அந்த சப்கான்சியஸ் மைண்ட் ரொம்ப பவர்ஃபுல்லானது. ஒருத்தரை நாம பாத்துப் பேசுறப்ப அவங்க பேசுற ஸ்டைல், பாடி லாங்வேஜ் இதெல்லாம் அந்த சப்கான்சியஸ் மைண்ட்ல ஸ்டோர் ஆகும். அது ஸ்டோர் பண்ணுன எல்லா விசயங்களையும் அப்பப்ப நடக்குற சம்பவங்களோட கம்பேர் பண்ணி பாக்கும். பழைய ஆபத்தான சம்பவத்தோட இப்ப நடக்குற இன்சிடெண்டை ஒப்பிட்டுப் பாத்துட்டு அது டேஞ்சர்னு சிக்னல் காட்டுறதைதான் நாம ‘மனசுகு … Continue reading “அத்தியாயம் 28”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 54

Secondary psychopath எனப்படும் சோசியோபாத்கள் வெகு சுலபத்தில் வன்முறைக்கான தூண்டுதல்களால் பாதிக்கப்படுவார்கள். உதாரணத்திற்கு நீங்கள் சொல்லும் ஏதோ ஒரு வார்த்தை, உங்களின் ஏதோ ஒரு செயல் அவர்களின் கோபத்தைத் தூண்டிவிட்டால் யோசிக்காமல் உங்களைத் தாக்கத் துணிவார்கள். அவர்களுக்கு மனக்கட்டுப்பாடு என்பது கிஞ்சித்தும் இருக்காது. அந்தத் தூண்டுதல் அவர்கள் பட்ட காயம், கசப்பான அனுபவம், வன்கொடுமை, உதாசீனம், குடும்ப உறுப்பினர்களின் இறப்போடு ஏதோ ஒருவகையில் தொடர்புடையதாக இருக்கும். சாதாரண மனிதர்கள் அச்சமயத்தில் பெரிதாக எதிர்வினையாற்ற மாட்டார்கள். ஆனால் சோசியோபாத்களோ … Continue reading “அத்தியாயம் 54”

 

Share your Reaction

Loading spinner