Header Image

 

அத்தியாயம் 3

தோட்டத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ராகவைப் பார்த்தபடியே நின்றிருந்தவள் அவன் கல்யாணி தேவியை நோக்கி வந்து ஆசீர்வாதம் வாங்கவும் ‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’ என்று மனதில் நினைத்தவள் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் உள்ளே சென்றாள். அவளுக்காகக் காத்திருந்த மைதிலியிடம் கோவிலில் நடந்த விஷயங்களைக் கூற மைதிலி, “அந்த போலேநாத் மனசுல என்ன நெனைக்குறாருனு யாருக்கும் தெரியாது. நல்லதே நடக்கும்” என்று அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டு அவருடன் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த … Continue reading “அத்தியாயம் 3”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 2

அன்று மாலை. சந்தன்பூர் அரண்மனையில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதற்காகப் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருக்க, அவந்திகா அவளது லெஹங்காவின் பிளவுஸின் பின்பகுதியில் கயிறை முடிச்சிட முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள். அந்நேரம் பார்த்து “ஹனிபி! ரெடி ஆயாச்சா” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் ரித்திமா. “யா ரித்து பேபி! கொஞ்சம் வந்து இந்த நாட் போட்டு விடு… என்னால போடவே முடியலடி!” என்று அந்தக் கயிறைக் கையில் பிடித்து நிற்க முடியாமல் நடனம் ஆடிக்கொண்டிருந்தாள் அவந்திகா. “திரும்பு கொஞ்சம்” என்று சொல்லி அவளுக்கு … Continue reading “அத்தியாயம் 2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

காலையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது சந்தன்பூரின் ராஜகுடும்பத்து மாளிகை. அந்த மாளிகையின் இளவரசியான பிரதியுஷா சிங்கின் திருமணத்திற்கான அழகான பதற்றம் தான் அது. அன்று அவளது நிச்சயதார்த்தம் இந்தியாவின் மிகப் பெரிய பிஸினஸ்மேன் குணால் கபூரின் மகனான வருண் கபூருடன் நடக்கப்போவதற்கான இனிமையான முன்னுரை தான் அந்த பரபரப்பு. மாளிகையின் மேல்மாடத்தில் நின்று கொண்டிருந்தாள் பிரதியூஷா. ஐந்தரையடி உயரத்தில் ராஜகுடும்பத்தின் கம்பீரம் எள்ளளவும் குறையாமல் அதே நேரம் எளிமையின் மறுவுருவாக இருப்பவள். ஒரு முறை பார்த்தவர்களை மீண்டும் பார்க்க … Continue reading “அத்தியாயம் 1”

 

Share your Reaction

Loading spinner

கானல் 1

“சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்ட இக்காலத்தில் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை நோக்கி படையெடுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பின் தரவுப்படி ஐந்து முதல் பதினோரு வயதுக்கு இடைப்பட்ட 66 மில்லியன் பயனர்கள் இணையத்தை இந்தியாவில் உபயோகிக்கின்றனர். இந்தியாவின் இணையப்பயனர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 12 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களே. பொதுமுடக்கத்தால் பள்ளிகள் அடைக்கப்பட்டதால் ஆன்லைன் வகுப்பிற்கு மாணவர்கள் மாறியது தான் இணையப்பயன்பாட்டைக் குழந்தைகள் மத்தியில் … Continue reading “கானல் 1”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 5 (இறுதி)

“நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு… உங்களுக்கு எப்போ ஆச்சிய பாக்கணும்னு தோணுதோ அப்போ வாங்க… இந்தத் தடவை சின்னாவும் குட்டிமாவும் எதேச்சையா வந்தாங்கடா… என்னமோ நாங்க ப்ளான் பண்ணி கெட் டுகெதர் அரேஞ்ச் பண்ணுன மாதிரி பேசாத முன்னா” தங்களை மட்டும் அழைக்காமல் ஆச்சி வீட்டில் ஜாலியாக நாட்களைக் கழிப்பதாக குறைபட்ட மூத்தமகன் முகுந்தனிடமும் மருமகள் கார்த்திகாவிடமும் சமாதானப்புறாவைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் சந்திரகலா. முகுந்தன் அவரது மாமனாரின் பெயர். சாகேதராமனோ அவரது தந்தையின் நாமம். பெரியவர்களின் … Continue reading “கழிமுகம் 5 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 4

அன்று செங்கோட்டைக்கு ஆதவனின் அனுகிரகம் சற்று தாமதமாக கிடைத்ததன் விளைவு புஷ்பம்மா காய்ச்சி வைத்திருந்த அரிசி வடகத்திற்கான கூழினை மட்டப்பாவில் துணி விரித்து வட்ட வடிவில் ஊற்றி முடித்திருந்தனர் அவரும் குட்டிமாவும். அரிசிமாவை கூழ் போல காய்ச்சி அதில் சீரகமிட்டு வட்ட வடிவில் இடப்படும் அந்த வடகம் என்றால் குட்டிமாவிற்கு உயிர். இளம்பிராயத்தில் பள்ளி தேர்வு விடுமுறை காலங்களில் செங்கோட்டைக்கு வரும் சமயங்களில் ஆச்சியுடன் அம்மா, பெரியம்மாக்கள் மற்றும் சித்தி என அனைவரும் சேர்ந்து கூழ் வடகம் … Continue reading “கழிமுகம் 4”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 3

“இந்த மல்லிமொக்கு ஆரத்தை மாட்டிக்கடி… நம்ம போறது கல்யாண வீட்டுக்கு… உன்னோட ஆபிஸ் பார்ட்டிக்கு இல்ல” கையகல ஜரிகை வைத்த பட்டுப்புடவையின் முந்தானையை நீவியபடி அவள் அணிந்த ரூபி கழுத்தாரத்தை ஆட்சேபித்தபடி நின்றார் பூரணி, குட்டிமாவின் அன்னை. “ப்ச்! நீ ரொம்ப ஓவரா பண்ணுறம்மா… விட்டா என்னை அம்மன் படத்துல வர்ற ரம்யா கிருஷ்ணன் மாதிரி நடமாடும் நகைக்கடையா மாத்திடுவ போல” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் அவர் சொன்ன மல்லிமொக்கு ஆரத்தை அணிந்து கொண்டாள் குட்டிமா. … Continue reading “கழிமுகம் 3”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 2

“நீ பார்த்த விழிகள்! நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா? கேட்காத வரமா?” காதில் கீதமிசைத்த மொபைலை போர்வைக்குவியலுக்குள் பொதிந்து கிடந்த தனது தலையை உயர்த்தி பார்த்தான் சின்னா. தொடுதிரையில் சாந்தப்புன்னகை தவழும் அன்னையின் புகைப்படம் ஒளிர்ந்து பச்சை மற்றும் சிகப்பு வண்ண தொலைபேசி அடையாளங்களை நர்த்தனமாட விட்டிருக்க உடனே போர்வையை எறிந்துவிட்டு மொபைலைக் காதுக்குக் கொடுத்தான் அவன். “சொல்லுங்கம்மா” பேசும் போதே கைமறைவில் கொட்டாவி வந்துவிட்டது. “என்ன சொல்லுங்கம்மா? இன்னையோட குட்டிமா செங்கோட்டைக்குப் போய் மூனு … Continue reading “கழிமுகம் 2”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 1

சலசலத்து ஓடும் குண்டாற்றின் நீரோட்டத்திற்கு எதிராக புஷ்பம்மாள் துணியை அலசுவதை வேடிக்கை பார்த்தபடி படித்துறையில் அமர்ந்து கால்களை நீரில் அலைய விட்டுக் கொண்டிருந்தாள் அவள். நீரின் ஜில்லிப்பு கால்களினூடே உடலுக்குள் பரவி அந்தக் காலைப்பொழுதின் குளுமையில் இன்னும் இருபது சதவிகிதத்தை இலவச இணைப்பாக அளித்ததைப் போல உணர்ந்தாள். “குட்டிமா நீ சின்னப்புள்ளையா இருக்கச்ச ஒரு தடவை இதே படிக்கட்டுல பின்னாடி பாக்க உக்காந்து விளையாடுறேனு சொல்லி தண்ணிக்குள்ள விழுந்துட்ட… அது உனக்கு ஞாபகம் இருக்குதா?” புஷ்பம்மா கேட்டதும் … Continue reading “கழிமுகம் 1”

 

Share your Reaction

Loading spinner

அன்பு 8

நம்மில் பலருக்கு வாழ்க்கையின் எதார்த்தம் புரிவதில்லை. காணும் மனிதர்கள் யாவரிடத்திலும் நாம் ‘Pure soul’ வகையறா ஆட்களையோ அல்லது ‘Evil hearted’ வகையறா ஆட்களையோ எதிர்பார்க்கிறோம், தேடுகிறோம். ஆனால் இங்கே பரிசுத்தமான மனிதன் என யாருமில்லை என்ற நிதர்சனம் நமக்குப் புரிபடுவதற்குள் அனேகம் முறை வாழ்க்கை அனுபவப்பாடத்தை எடுத்திருக்கும். யாரும் இறகில்லாத தேவதைகள் / தேவதூதர்கள் போல இருப்பதில்லை. அதே நேரம் கொம்பு முளைத்த சாத்தானாக யாரைக் கெடுக்கலாம் என்று முழுநேரமும் சிந்திப்பவர்களும் இல்லை. சூழ்நிலை ஒரு … Continue reading “அன்பு 8”

 

Share your Reaction

Loading spinner