Header Image

 

ஸ்வரம் 6

“நான் இதுவரை வாசிக்காத ஆகச்சிறந்த கவிதை நீ; ஆனாலும் என் இதயம் உன்னை எப்படியோ மனப்பாடம் செய்துவிட்டது. உன்னிடமிருந்து ஒற்றைச் சம்மதத்தைப் பெற, எனக்குப் பிடித்த ஆசிரியையிடம் விடைத்தாள் எழுதும் மாணவனாய் நீளமாய் விருப்பத்தைச் சொல்லிக் காத்திருக்கிறேன்” ஸ்டாஃப் ரூமில் அமர்ந்து வெண்பா சொன்ன அனைத்தையும் ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள் சுனந்தா. பெண் பார்க்கும் படலத்தில் நேத்ரன் பேசியதை வைத்து அவளே ஒரு ஊகத்திற்கு வந்திருந்தாள். “அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்குதுன்னு தோணுது வெண்பா. அதான் இப்பிடி சுத்தி வளைச்சு … Continue reading “ஸ்வரம் 6”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 5

வாழ்க்கை நமக்காகத் திறந்திருக்கும் இந்தக் கதவின் விளிம்பில் உறைந்து நிற்கிறேன்—உள்ளே நுழையவும் பயமாக இருக்கிறது, உன்னை விட்டு விலகிச் செல்லவும் என் மனதிற்குச் சம்மதமில்லை. குடும்பத்தினரின் செயல்பாடுகள் வெண்பாவை மட்டுமில்லை, நேத்ரனையும் யோசனையில் ஆழ்த்தின. பெண் பார்க்க வந்தது எல்லாம் சும்மா ஒரு ஃபார்மாலிட்டி என்பது அவனுக்கே தெரியும். புகழேந்திக்கு துர்காவைப் பிடித்துப்போனது, அவளுக்கும் அவனிடம் பேசத் தடையில்லாமல் போனதே திருமணத்தை நிச்சயிக்கப் போதுமானதாய்! இருப்பினும் வழக்கங்களை மாற்ற வேண்டாம் என்ற பெயரில் பெரியவர்கள் ஏற்பாடு செய்தது … Continue reading “ஸ்வரம் 5”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 4

“இந்தக் குழப்பமான உலகத்தில் நாம் ஏன் மீண்டும் மீண்டும் சந்திக்கிறோம் என உனக்குப் புரிகிறதா? எனக்கென்னவோ, இது எப்போதோ மிகச் சரியாகத் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. இவை அனைத்தும் நாம் பிறப்பதற்கு முன்பே பிரபஞ்சத்தால் எழுதித் தீர்மானிக்கப்பட்டதாகவே உனக்கும் தோன்றினால் நீயும் நானும் ஒரே மாதிரி சிந்திக்கிறோமென அர்த்தம்” “அவளைத்தானே பொண்ணு பாக்க வர்றாங்க. என்னை எதுக்கு ஷேரி கட்டச் சொன்னீங்க? ஸ்கூலுக்கு டெய்லியும் ஷேரி கட்டிட்டுப் போய் போரடிக்குது எனக்கு” கத்தரிப்பூ நிற காட்டன் சில்க்குக்குப் … Continue reading “ஸ்வரம் 4”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 3

என் ஆன்மாவின் ஒரு பகுதி எப்போதும் உன்னைத் தேடிக்கொண்டே இருக்கும். அந்தச் சத்தம் உனக்குக் கேட்கிறதா, அல்லது என்னை விலக்கி வைக்க உனக்குள் பெருஞ்சுவர் எழுப்பிவிட்டாயா? தூரத்தில் நின்று என் தவிப்பை ரசிக்கிறாயா என்ன! அன்று ஞாயிறு என்பதால் பொறுமையாக எழுந்தாள் வெண்பா. ஆனால் இல்லத்தரசிகளுக்கு வார விடுமுறை ஏது? அவளுக்கு முன்னரே எழுந்து வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள் அவளது அன்னை உமையாளும் அண்ணி ஹேமாவும். “ரொம்ப நேரம் தலையில ஹேர் பேக்கோட இருக்காதடி. அந்தக் கிழங்கை … Continue reading “ஸ்வரம் 3”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 2

“நான் கொண்டிருக்கும் கொள்கைகள் அனைத்திற்கும் முற்றிலும் எதிரானவள் நீ. ஆனாலும், விதிக்கு விசித்திரமான நகைச்சுவை உணர்வு உண்டு போலும்; உன்னை மட்டுமே என் தலையெழுத்தாக எழுதி வைத்துவிட்டது.” ராஜவிலாசம், மகாராஜநகர்… சங்கடஹர சதுர்த்தி பூஜையில் பக்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது அந்த பங்களாவுக்குள். தோட்டமும் விருட்சங்களும் சூழ்ந்த பங்களா பெயருக்கேற்ற ராஜகம்பீரத்துடன் இருந்தது அந்த மாலை நேரத்துச் சந்திரோதயத்தில்! பூஜையறையில் இருக்கும் விநாயகர் சிலைக்கு முன்னே காராமணிச் சுண்டலும் கொழுக்கட்டையும் படைக்கப்பட்டிருக்க விநாயகர் அகவலைப் பாடி முடித்தார்கள் … Continue reading “ஸ்வரம் 2”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 1

இது நம் கதையின் முதல் பக்கம் மட்டுமே. இதற்கே விடைபெறுதல் என்று பெயர் வைக்க வேண்டுமா என்ன? இன்னும் எத்தனையோ அத்தியாயங்கள் நமக்கு மீதமிருக்கின்றன. இன்றைய நாளை நம் அழகிய தொடக்கமாகக் கருதிக்கொள். நாம் வெறும் நினைவாக மாறிப்போவதற்கு இந்தப் பிரபஞ்சம் நம்மைச் சந்திக்க வைக்கவில்லை. ரங்கநல்லூர் அன்று மிகவும் பரபரப்பாக இருந்தது. அந்த ஊரின் திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் கட்சிக் கொடிகள் படபடத்து பறந்துகொண்டிருந்தன. அது ஊரின் பிரதானப் பகுதி. அருகில் இருக்கும் கிராமங்களில் … Continue reading “ஸ்வரம் 1”

 

Share your Reaction

Loading spinner