Header Image

 

பூங்காற்று 5

நீரஜாட்சி கிரிக்கெட் மட்டை மற்றும் பந்துடன் வெளியே வந்தவள், கையில் அவற்றை வைத்துக்கொண்டு அந்தச் சிறுவர்களின் முன் அங்கும் இங்குமாக நடக்க, அவள் கையில் மின்னிய புத்தம் புது கிரிக்கெட் மட்டையைக் கண்டவர்கள் ஆர்வத்துடன், “அக்கா புது பேட்டாக்கா?” என்று கேட்க, நீரஜாட்சி அப்போதுதான் அவர்களைக் கவனித்தது போல, “இதுவா? இது என் தாத்தா நேத்து வாங்கித் தந்தாரு. எப்பிடி இருக்கு?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்க, அந்தச் சிறுவர்கள் “சூப்பரா இருக்குக்கா. எனக்கு ஒரு தடவை … Continue reading “பூங்காற்று 5”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 4

மறுநாள் விடியலின் பூபாள ராகத்தைப் பறவைகள் பாட விழித்துக் கொண்டாள் கிருஷ்ணஜாட்சி. அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் நீரஜாட்சிக்குப் போர்வையை நன்றாக மூடிவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவுட் ஹவுஸின் கதவைத் திறந்தவளின் பார்வை, துளசிமாடத்தில் விளக்கேற்றி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த பாட்டியின் மீது பட, காலை நேரத்தின் இனிமை அவரது தரிசனத்தால் இன்னும் அதிகரித்ததுப் போலத் தோன்ற, புன்னகையோடு பாட்டியை நோக்கிச் சென்றாள். “பாட்டி!” என்ற அழைப்புடன் வந்த பெரிய பேத்தியைக் கண்ட சீதாலெட்சுமி, “கிருஷ்ணா, முதல்ல … Continue reading “பூங்காற்று 4”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 3

பட்டாபிராமன் இரு பேத்திகளையும் அவுட் ஹவுஸில் கொண்டு சென்று விட்டவர், அவர்களிடம் “ரெண்டு பேரும் இருங்கடா. நான் போய் மைத்தியை உங்களுக்கு உதவிக்கு அனுப்பிவிடுறேன்” என்றுச் சொல்லிவிட்டு வீட்டை நோக்கிச் செல்ல, சீதாலெட்சுமி பேத்திகளுடன் இருந்து அவர்களது உடைமைகளை எடுத்துவைக்க உதவிக் கொண்டிருந்தார். அவர்கள் வீட்டின் அவுட் ஹவுஸ் முறைப்படி பராமரிக்கப்பட்டுச் சுத்தம் செய்யப்பட்டிருந்ததால், அவர்களுக்கு ஒதுங்க வைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. தோட்டத்துக்கு நடுவே கலைநயத்தோடு கட்டப்பட்டிருந்த அந்த அவுட் ஹவுஸ் இரண்டு படுக்கையறை, சமையலறை, … Continue reading “பூங்காற்று 3”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 1

கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கத் திடுக்கிட்டு எழுந்தாள் அந்த இளம்பெண். ஒல்லியான மேனி, சுருண்ட நீண்ட கூந்தல் உறக்கத்தால் நெற்றியில் புரள, அதை காதின் பின்புறம் ஒதுக்கியவள், தன் நீண்ட விழிகளைச் சுழற்றித் தன் அருகில் உறங்கிக்கொண்டிருக்கும் தங்கையைப் பார்த்தாள். அவளைப் போலவே ஒல்லித் தேகம்தான். ஆனால் தந்தையின் பால்நிறம், கூர்நாசியை உரித்து வைத்தபடி கழுத்தைத் தொட்டக் கூந்தலுடன், இன்னும் குழந்தைத்தனம் போகாத அந்த முகம் உறக்கத்திலும் அதில் தெரிந்த தெளிவு என அவளை ரசித்தவள், … Continue reading “பூங்காற்று 1”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 44

“மத்தவங்களோட இரக்கத்தைச் சம்பாதிச்சு அதுல வாழணும்னு சுயமரியாதை இருக்குற எந்த மனுசனும் யோசிக்க மாட்டான்… முக்கியமா என்னை மாதிரி டிபரன்ட்லி ஏபிள்ட் பீபிள் யோசிக்கமாட்டாங்க… எங்களைப் பாத்து ஐயோ பாவம்னு யாரும் பரிதாபப்படுறதை நாங்க விரும்புறதில்ல… எங்களால உங்களை மாதிரி எல்லா வேலையும் செய்யமுடியும்… நாங்க உங்க கிட்ட எதிர்பாக்குறது எல்லாமே எங்க இயலாமைய சுட்டிக்காட்டி கேலி கிண்டல் பண்ணாம சகமனுசங்களா நடத்தணும்ங்கிறதை மட்டும் தான்… ஏன்னா அப்பிடிப்பட்ட கீழ்த்தரமான மனுசங்களும் இந்த உலகத்துல இருக்காங்க… அதுக்கு … Continue reading “பூங்காற்று 44”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 100 (இறுதி)

கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் சாத்தான் வழிபாடு நடத்தும் குழுக்கள் இருப்பதாக காவல்துறையின் அறிக்கைகள் கூறுகின்றன. இதில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் என்கிறது இவ்வறிக்கை. இதில் கலந்துகொள்வதற்கான நோக்கங்கள் – அதீத சக்தி வேண்டும், பணக்காரனாகும் ஆசை, எதிரிகளை அழிக்க வேண்டும் – இவையே ஆகும். இதை எல்லாம் சாத்தான் செய்வார் என்று அவர்கள் அழுத்தமாக நம்புகின்றனர். இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களுக்கு பெரிய போதைப்பொருள் … Continue reading “அத்தியாயம் 100 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 99

கேரளாவில் பதினான்கு மாவட்டங்களில் சாத்தான் வழிபாட்டு குழுவினர் தங்களுக்கென சர்ச்களை நிர்மாணித்துள்ளதாக ராஜிவ் சிவசங்கர் கூறுகிறார். இத்தகைய சர்ச்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட வீடுகளிலும் அப்பார்ட்மெண்ட்களிலும் செயல்படுகின்றன. இவர்கள் ‘சாத்தான் சேவா’ என்ற நிகழ்வை செய்கிறார்கள். அந்நிகழ்வின் போது சாத்தான் உங்களைப் பணக்காரர் ஆக்குவார், எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பார் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயலுகிறார்கள். அதிலும் தொழில் நொடிந்த பிசினஸ்மேன்கள் தான் இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களின் இலக்கு என்கிறார் … Continue reading “அத்தியாயம் 99”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 98

குழந்தைகளுக்குப் இளஞ்சிறார்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதும் சாத்தானிஷ வழிபாட்டின் முக்கியமான சடங்காகும். 2016ல் கேரள காவல்துறையினர் சாத்தான் கல்ட் கும்பலைச் சேர்ந்த பதினோரு பேரைக் கைது செய்தார்கள். அவர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஒருவனை சாத்தான் வழிபாடு என்ற பெயரில் பல ஆண்டுகளாக வன்புணர்வு செய்து வந்தது தெரிய வந்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தக் குழுக்களின் ஊடுருவலால் போதைப்பொருள் மாஃபியாவும் பெருகியுள்ளது என்கிறார்கள் கேரள காவல்துறையினர். சாத்தானிஷத்தில் ஈடுபடுபவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை சுலபமாகப் பணமீட்டும் முறையாகத் … Continue reading “அத்தியாயம் 98”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 97

கேடல் ஜேசன் ராஜா வழக்கைத் தொடர்ந்து இண்டலிஜென்ஸ் அதிகாரிகள் கேரளாவின் சாத்தான் வழிபாட்டு கல்ட் கும்பல்கள் தங்களது வலையை விரிப்பதாக கூறி எச்சரிக்கை விடுத்தார்கள். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பது இம்மாதிரி கல்ட் கும்பல்களின் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாகும். இம்மாதிரி சாத்தானிஷ குழுக்கள் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுவார்கள். கிறிஸ்தவர்கள் திருப்பலியைப் போல ‘ப்ளாக் மாஸ்’ என்ற நிகழ்வை சாத்தானிஷ கும்பல்கள் நடத்துவார்கள். கிறிஸ்தவம் மட்டுமன்றி ஏனைய மதங்களிலும் புனிதமானதாகவும் இறையருள் நிறைந்ததாகவும் … Continue reading “அத்தியாயம் 97”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 96

2017ல் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கேடல் ஜேசன் ராஜா என்பவர் தனது பெற்றோர், சகோதரி மற்றும் உறவுக்காரப்பெண்மணியை சாத்தான் வழிபாட்டிற்காக கோடாரியால் வெட்டிக் கொலை செய்து அக்கொலையை தீவிபத்து போல சித்தரித்து அதில் தானும் மரணித்தது போல ஒரு டம்மியை வைத்து நாடகமாடிய சம்பவம் மாபெரும் அதிர்வலையை உண்டாக்கியது. அவரை இரயில் நிலையத்தில் கைது செய்து விசாரித்தபோது சாத்தான் வழிபாட்டில் ஒரு பகுதியாக ஆன்மாவை உடலில் இருந்து பிரிக்கும் சோதனையை அவர்களை வைத்து செய்ததாகக் கூறியுள்ளார். சாத்தான் … Continue reading “அத்தியாயம் 96”

 

Share your Reaction

Loading spinner