Header Image

 

பூங்காற்று 20

 நிச்சயதார்த்த நாளின் ஆரம்பமே ஹர்சவர்தனுக்குச் சோதனையாக தான் ஆரம்பித்திருந்தது. முடிந்தவரை கிருஷ்ணஜாட்சியை விட்டு விலகியிருக்க வேண்டும் என்ற உறுதியில் அவன் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்டான் தான். ஆனால் நிச்சயதார்த்தம் ஏற்பாடுகளைச் செய்வதற்கு ரகுநந்தனும் நீரஜாட்சியும் சென்றுவிட்டதால் அவனது அன்னை மூச்சுக்கு முன்னூறு முறை கிருஷ்ணஜாட்சியை அழைத்து வைக்க அந்த வீட்டில் அவளது பிரசன்னமே அவனது உறுதியை சிறிது சிறிதாக நிலை குலைத்துக் கொண்டிருந்தது. ஒருவழியாக மாலை வரை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டவன் மண்டபத்துக்கு வந்ததும் தான் … Continue reading “பூங்காற்று 20”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 18

அன்று வீட்டுக்குத் திரும்பிய ரகுநந்தனுக்கு அவன் தந்தையிடமிருந்து கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனிக்கு வருமாறு அழைப்பு வர நீரஜாட்சியை வீட்டில் இறக்கிவிட்டு கம்பெனியை நோக்கிச் சென்றான். அண்ணன் நிச்சயதார்த்தம் ஒரு புறம் இருந்தாலும் அவனது இலட்சியமான அந்த கம்பெனியும் அவனது மனதிலிருந்து அகலவில்லை. அங்கே சென்றதும் கம்பெனி செகரட்டரி, ஆடிட்டர் மற்றும் சட்ட ஆலோசகர் அனைவருக்கும் மகனை அறிமுகப்படுத்தி வைத்த வேங்கடநாதன் இனி கம்பெனியின் பொறுப்பை அவன் தான் பார்த்துக் கொள்ளப் போகிறான் என்பதையும் அவர்களிடம் தெரிவிக்க அவர்கள் அவனுக்கு … Continue reading “பூங்காற்று 18”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 16

பத்மாவதியிடம் தான் அவர்கள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்வதாகச் சொல்லிவிட்டு வந்தாலும் நீரஜாட்சிக்கு இப்போதும் அங்கே செல்வதில் தயக்கமே. தேவை இல்லாத விஷயத்துக்கு மாமி பயப்படுகிறாரோ என்று எண்ணியவள் இன்னொரு முறை அவரிடம் சென்று பேசிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் கிருஷ்ணஜாட்சியிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கிச் சென்றாள். விஜயலெட்சுமி இரவாகியும் இன்னும் கிளம்பாமல் பத்மாவதியுடனே சுற்றிக் கொண்டிருந்தவர் நீரஜாட்சியைக் கண்டதும் “பத்மா குழந்தே உன்னைத் தான் பார்க்க வந்திருக்கா போலிருக்கு. நேக்கும் நாழியறதுடி. நான் ஆத்துக்கு கிளம்பறேன்” என்றுச் … Continue reading “பூங்காற்று 16”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 15

வீட்டுக்குள் நுழையும் போதே வாயெல்லாம் பல்லாக நுழைந்த விஜயலெட்சுமியை வழக்கம் போல உற்சாகத்துடன் வரவேற்றார் பத்மாவதி. விஜயலெட்சுமியும் பத்மாவதிக்கு முப்பத்திரண்டு பற்களையும் காட்டிச் சிரித்தவர் அவரது தங்கையும் இளைய நாத்தனாருமான மைதிலியிடம் மட்டும் அதில் பாதி பற்களைக் காட்டி ஒரு அடக்கமான புன்னகையை வீசினார். அவருக்கு என்னவோ பத்மாவதியைப் போல மைதிலியிடம் பிடித்தம் இல்லை. மைதிலியும் அவரது அண்ணன் மனைவியின் குணம் தனக்கு ஒத்துப் போகாது என்பதால் அவரிடம் ஒரு அளவுக்கு மேல் உரிமை எடுத்துக் கொள்வதில்லை. … Continue reading “பூங்காற்று 15”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 14

நீரஜாட்சியை அமர்த்திக் கொண்டு கற்பனையில் மிதந்தபடி சென்றவனின் பைக் என்னவோ சாலையில் தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதன் சொந்தக்காரன் தான் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தான். பைக்கை ஓட்டியபடியே “ஏன் நீரு கன்சாலிடேட்டட் மார்க் ஷீட், புரொவிஷனல் சர்டிஃபிகேட் வாங்க ஏன் இவ்ளோ ஆர்வமா போற? எப்பிடியும் மன்த் ஃபுல்லா டிஸ்ட்ரிபியூட் பண்ணுவாங்களே? மெதுவா வாங்கிக்க கூடாதா?”என்று வாயை விட அவன் பின்னே கடமையே என்று அமர்ந்து வந்த நீரஜாட்சி “எவ்ளோ சீக்கிரம் அதை கையில வாங்குறேனோ … Continue reading “பூங்காற்று 14”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 13

நீரஜாட்சி ரகுநந்தன் வெளியேறியதும் கதவை அறைந்துச் சாத்திவிட்டு வந்தவள், ஹாலின் வாயிலில் நின்று கொண்டிருந்த சீதாலெட்சுமியைக் கண்டதும் அவரிடம் வந்து, “என்னாச்சு சித்தம்மா, நான் ரொம்ப சத்தமா பேசி உன் தூக்கத்தைக் கெடுத்துட்டேனா?” என்று அக்கறையுடன் கேட்க, அவளின் கூந்தலை வருடிக் கொடுத்தபடி, “இல்லடி ராஜாத்தி! உன்னை ரொம்ப சின்னப் பொண்ணுனு நெனைச்சிண்டிருந்தேன். ஆனா உன்னால இவ்ளோ விஷயத்தைப் பேச முடியும்கிறதை நான் இன்னைக்கு தான் பார்க்கிறேன். நோக்கு இந்த தாத்தா பாட்டி மேல ஏதும் கோவம் … Continue reading “பூங்காற்று 13”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 9

கிருஷ்ணஜாட்சியின் வாழ்க்கை சீராகப் பராமரிக்கப்படும் இயந்திரம் பழுதின்றி ஓடுவது போல எந்தவிதத் தடையுமின்றி ஒழுங்கானப் பாதையில் சென்று கொண்டிருந்தது. அவளது நான்கு மாத பயிற்சி நல்ல முறையில் முடிய, அவளது தோழி கரோலின் ஒரு மாத சிறப்புப் பயிற்சியிலும் கிருஷ்ணஜாட்சியைக் கலந்துகொள்ளுமாறு கூற, அவளும் சந்தோஷமாகவே அதையும் முடித்தாள். இதற்கு இடையில் மாமாவின் ஹோட்டலிலும் அனைத்து ஊழியர்களிடமும் அன்போடு பழகுவதாகட்டும், தலைமை செஃபிடம் பணிந்து நின்று அவரது கட்டளைப்படி வேலையை முடிப்பதாகட்டும், அவளுக்கு நிகர் அவளே என்று … Continue reading “பூங்காற்று 9”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 5 (இறுதி)

“நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு… உங்களுக்கு எப்போ ஆச்சிய பாக்கணும்னு தோணுதோ அப்போ வாங்க… இந்தத் தடவை சின்னாவும் குட்டிமாவும் எதேச்சையா வந்தாங்கடா… என்னமோ நாங்க ப்ளான் பண்ணி கெட் டுகெதர் அரேஞ்ச் பண்ணுன மாதிரி பேசாத முன்னா” தங்களை மட்டும் அழைக்காமல் ஆச்சி வீட்டில் ஜாலியாக நாட்களைக் கழிப்பதாக குறைபட்ட மூத்தமகன் முகுந்தனிடமும் மருமகள் கார்த்திகாவிடமும் சமாதானப்புறாவைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் சந்திரகலா. முகுந்தன் அவரது மாமனாரின் பெயர். சாகேதராமனோ அவரது தந்தையின் நாமம். பெரியவர்களின் … Continue reading “கழிமுகம் 5 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 4

அன்று செங்கோட்டைக்கு ஆதவனின் அனுகிரகம் சற்று தாமதமாக கிடைத்ததன் விளைவு புஷ்பம்மா காய்ச்சி வைத்திருந்த அரிசி வடகத்திற்கான கூழினை மட்டப்பாவில் துணி விரித்து வட்ட வடிவில் ஊற்றி முடித்திருந்தனர் அவரும் குட்டிமாவும். அரிசிமாவை கூழ் போல காய்ச்சி அதில் சீரகமிட்டு வட்ட வடிவில் இடப்படும் அந்த வடகம் என்றால் குட்டிமாவிற்கு உயிர். இளம்பிராயத்தில் பள்ளி தேர்வு விடுமுறை காலங்களில் செங்கோட்டைக்கு வரும் சமயங்களில் ஆச்சியுடன் அம்மா, பெரியம்மாக்கள் மற்றும் சித்தி என அனைவரும் சேர்ந்து கூழ் வடகம் … Continue reading “கழிமுகம் 4”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 1

சலசலத்து ஓடும் குண்டாற்றின் நீரோட்டத்திற்கு எதிராக புஷ்பம்மாள் துணியை அலசுவதை வேடிக்கை பார்த்தபடி படித்துறையில் அமர்ந்து கால்களை நீரில் அலைய விட்டுக் கொண்டிருந்தாள் அவள். நீரின் ஜில்லிப்பு கால்களினூடே உடலுக்குள் பரவி அந்தக் காலைப்பொழுதின் குளுமையில் இன்னும் இருபது சதவிகிதத்தை இலவச இணைப்பாக அளித்ததைப் போல உணர்ந்தாள். “குட்டிமா நீ சின்னப்புள்ளையா இருக்கச்ச ஒரு தடவை இதே படிக்கட்டுல பின்னாடி பாக்க உக்காந்து விளையாடுறேனு சொல்லி தண்ணிக்குள்ள விழுந்துட்ட… அது உனக்கு ஞாபகம் இருக்குதா?” புஷ்பம்மா கேட்டதும் … Continue reading “கழிமுகம் 1”

 

Share your Reaction

Loading spinner