Header Image

 

கண்மணி 20

மணமகளின் தந்தை சுதர்சன் சுவாமிநாதனுக்குத் தூரத்து உறவு. அந்த முறையில் ஜெகத்ரட்சகன் சுதர்சனுக்கு அண்ணன் முறை வேண்டும். அதனால் தான் ஜெகத்ரட்சகனே நேரில் வந்திருந்தார். இல்லையெனில் மனைவியையோ மகனையோ அனுப்பி வைத்திருப்பார். ஆனால் வந்த இடத்தில் மகளையும் மருமகனையும் கண்டவருக்கு மனம் அலைபாய்ந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மணமேடையில் கண் பதித்தார். ஆனால் உள்ளமெங்கும் மகள் எப்படி இருக்கிறாளோ என்ற கவலை தான். அவளது பார்வை தன் புறம் திரும்பும் போதெல்லாம் மருமகன் ஏதோ சொல்வது கண்ணில் படவும் … Continue reading “கண்மணி 20”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 19

பவானியின் வாழ்க்கை சாந்திவனத்தில் எவ்வித குறைவுமின்றி இனிமையாய் நகர்ந்து கொண்டிருந்தது. அன்பான தோழிகள், அரவணைக்கும் தாத்தா பாட்டி, அக்கறையாய் கவனித்துக் கொள்ளும் அத்தை, மாமா மற்றும் சித்தியுடன் அவளது வாழ்க்கை ஜெகஜோதியாகச் சென்றது. அங்கே அவளுக்கு இருந்த இரு நெருடல்கள் அரிஞ்சயனும், சிவசங்கரும் மட்டும் தான். அரிஞ்சயனிடம் அவளுக்குச் சிறுவயதிலிருந்தே ஒட்டவில்லை. பெரியவளானதும் அவரது குத்தல் பேச்சுகளை அடையாளம் கண்டுகொண்டவளுக்கு அவருடன் இயல்பாகப் பேசிப் பழக தோணவில்லை. சிவசங்கரைத் தான் எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று அவளுக்குப் … Continue reading “கண்மணி 19”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 17

மறுநாள் விடியல் சாந்திவனத்துக்குப் பரபரப்புடன் தொடங்கியது. அதற்குக் காரணமானவள் பவானி தான். அவளிடம் முந்தைய நாளிரவு பேசிய அவளது தோழனின் வருகைக்காக வீட்டைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கென இருக்கும் நண்பர்கள் வானதியும் ஈஸ்வரும் மட்டுமே. அவ்வாறு இருக்கையில் அவனது வருகைக்காக அவள் பரபரப்பாக இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லையே! வானதிக்கோ அண்ணனின் திருமணத்துக்கு எடுத்த விடுப்பு முடிந்து அலுவலகம் செல்லும் பதற்றம் தொற்றிக் கொண்டது. எனவே அவளை விட்டுவிட்ட பவானி பாகீரதியைப் பிடித்துக் கொண்டாள். “பாகி இன்னைக்குப் … Continue reading “கண்மணி 17”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 15

ஜெகன் அசோசியேட்ஸ்… இளம் வழக்கறிஞர்கள் பட்டாளம் உற்சாகத்துடன் வேலையில் கண்ணாய் இருந்தனர். அவர்களில் பெண்களும் அடக்கம். ஜெகத்ரட்சகன் அவரது அலுவலக அறையில் வேலையில் மூழ்கியிருந்தார். அவரது நீண்டநாள் கிளையண்டான அமைச்சர் செழியன் இனி தன் நிறுவனத்தைத் தொடர்பு கொள்வது அரிது என்பதைப் புரிந்து கொண்டவர் தனது உதவியாளரிடம் செழியனது கோப்புகளின் மென்பிரதிகள் அனைத்தையும் அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டு மற்றவற்றை அவரது அலுவலகத்தில் ஒப்படைத்து விடும்படி கட்டளையிட்டிருந்தார். அந்த வேலை முடியும் தருவாயில் இருக்க ஜெகத்ரட்சகனின் ஜூனியர் அந்தக் … Continue reading “கண்மணி 15”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 14

அஞ்சனா விலாசம்… ஜெகத்ரட்சகன் காலையுணவை முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பத் தயாரானவர் அருண் இன்னும் ஷார்ட்சும் டீசர்ட்டுமாய் சுற்றுவதைப் பார்த்துவிட்டுப் புருவம் சுருக்கினார். “அருண் ஆபிஸ்கு கிளம்பாம இன்னும் கேசுவலா இருக்கியே? உடம்பு எதுவும் சரியில்லையாப்பா?” “இல்லப்பா… நான் இன்னைக்கு ஆபிஸ்கு லீவ்… பவாவுக்கு இன்னைக்கு மறுவீடு சடங்கு பண்ணனும்னு அம்மா சொன்னாங்க… அவங்க வீட்டுல இருந்து யாரும் வந்தா உங்களுக்குப் பிடிக்காது.. அதான் நாங்களே அங்க போய் செய்ய வேண்டிய சம்பிரதாயத்தைச் செஞ்சு முடிச்சிட்டு வந்துடுறோம்” என்று … Continue reading “கண்மணி 14”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 13

மறுநாள் விடியல் பவானிக்கு இயல்பாய் அமைந்தது. அவள் எழுந்திருக்கும் போது சிவசங்கர் அங்கில்லை. மெதுவாக எழுந்தவள் அமைதியாக சில நிமிடங்கள் படுக்கையிலேயே அமர்ந்திருந்தாள். பின்னர் எழுந்து பால்கனியை அடைந்தவள் வீட்டைச் சூழ்ந்திருந்த மரங்களையும் தோட்டத்தையும் வேடிக்கை பார்த்தபடி நின்றாள். அந்த வீட்டின் வயது தான் அந்தத் தோட்டத்துக்கும். அதனாலேயே விருட்சங்கள் வீட்டின் உயரத்தைத் தொட்டிருந்தன. வெயிலின் சூடு சிறிது கூட அந்தப் பங்களாவின் மீது படாது தடுத்துக் கொண்டிருந்த அம்மரங்களைத் தங்களது வீடுகளாய் மாற்றிக் கொண்டிருந்த பறவைகளின் … Continue reading “கண்மணி 13”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 12

சாந்திவனம்… பவானி சிவசங்கரின் அறையின் பால்கனியில் உள்ள இருக்கையில் சிலை போல அமர்ந்திருந்தாள். அந்தப் பங்களாவைச் சுற்றியிருந்த நெடிதுயர்ந்த மரங்களின் கிளைகளைத் தழுவிய காற்று அவளையும் தழுவி அவள் உள்ளத்தின் வலியைக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. மண்டபத்தில் இருந்து திரும்பியவர்களை லோகநாயகி ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல அரிஞ்சயன் அவர் பாட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட மற்றவர்கள் மனவருத்தத்துடன் அமைதியற்று இருந்தனர். அன்னபூரணி விம்மலுடன் பேச ஆரம்பிக்கவும் சுதாரித்த வானதி அவரையும் சுவாமிநாதனையும் அவர்கள் அறைக்கு … Continue reading “கண்மணி 12”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 11

சாந்திவனத்திலும் அஞ்சனாவிலாசத்திலும் திருமணத்துக்கான இனிய பரபரப்பு தொற்றிக் கொண்டது. புத்தாடைகள் நகைகள் வாங்குவது என இரு குடும்பத்தினரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவளித்தனர். வானதியும் பாகீரதியும் உற்சாகத்துடன் வெட்டிங் பிளானிங் நிறுவனம் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததோடு அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்பதை உடனிருந்து கவனித்துக் கொண்டனர். திருமணப்பத்திரிக்கையின் முதல் பிரதியை ஈசன் முன்னே வைத்து வழிப்பட்டப் பிறகு பத்திரிக்கை கொடுக்கும் வேலை ஆரம்பித்தது. சுவாமிநாதன் தங்களின் உறவினர்கள் ஒருவர் … Continue reading “கண்மணி 11”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 10

சிவசங்கர் தனது வெள்ளைச்சட்டையின் காலர் பட்டனைப் போட்டவன் என்ன தோணியதோ தெரியவில்லை, அதைக் கழற்றிவிட்டு முழுநீளச்சட்டையை முழங்கை அளவில் மடித்துக் கொண்டான். சிகையைக் கோதும் போது மோதிரவிரலை அவனறியாது நோக்கிய விழிகள் எதேச்சையாக டிரஸ்சிங் டேபிளை நோக்க மூளையோ “அடேய் மோதிரத்தை அவ கையில திணிச்சு அனுப்புனதுலாம் மறந்து போச்சா?” என்று நினைவுபடுத்த அந்நாளின் நினைவில் சில நொடிகள் சிலையாய் நின்றான்.  பின்னர் “சிவா கொஞ்சம் இங்க வாயேன்! பவாகுட்டி செலக்ட் பண்ணுன இன்விடேசன் டிசைன் உனக்குப் … Continue reading “கண்மணி 10”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 8

கே.ஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவமனை படுக்கையில் சோர்வாய் கண் மூடி சாய்ந்திருந்தார் சுவாமிநாதன். மருமகன் பேசிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் செவியில் எதிரொலித்தது. அவர் என்றுமே ஞானதேசிகனையும் ஜெகத்ரட்சகனையும் பிரித்துப் பார்த்தது கிடையாது. அன்னபூரணியும் அவ்வாறே! பழைய நினைவுகளில் கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது அவருக்கு. தமக்கையும் அவரது கணவரும் விபத்தில் அகால மரணமடைந்த போது ஐந்து வயது பாலகனாய் தன்னுடன் அழைத்து வந்த ஜெகத்ரட்சகனை மகனும் மகள்களும் இலகுவாகத் தங்களின் நட்புவட்டத்தில் இணைத்துக்கொண்டபோது இருவரும் … Continue reading “கண்மணி 8”

 

Share your Reaction

Loading spinner