அன்பு 18

ஒரே ஒரு பெண்பிள்ளையை மட்டும் பெற்ற பெற்றோருக்கு மகளா நீங்கள்? அப்படிப்பட்டவர்களால் ஆரபி என்னிடம் பகிர்ந்துகொண்ட உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும். நான் திருமணமாகிச் சென்ற பிறகு பெற்றோரை வயோதிகத்தில் யார் கவனித்துக்கொள்வார்கள்? தள்ளாமையில் என் தந்தையால் உழைக்க முடியாத சூழல் வந்துவிட்டால் அவர்கள் அன்றாட வாழ்க்கையை எப்படி கழிப்பார்கள்? என் குடும்பத்துக்கு எனது சம்பளத்தைக் கொடுத்து உதவினால் புகுந்த வீட்டார் என்ன நினைப்பார்கள்? அவர்களது மகனின் சம்பாத்தியத்தைப் பதுக்கி பிறந்தவீட்டுக்குக் கொடுத்ததாகச் சொல்லி அசிங்கப்படுத்துவார்களா? இத்தகைய […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 17

இமைகள் கண்களுக்குப் பாதுகாப்பே தவிர பாரமில்லை. ஒரு நொடி நம் கண்ணுக்குள் கூரிய ஆயுதமொன்று ஊடுருவி காயமுண்டாக்க வருகையில் அனிச்சையாய் இரு இமைகளும் மூடி கருவிழியைக் காக்கும். இது போலதான் பெற்றோரின் கண்டிப்பும். அது பிள்ளைகளை வருங்கால தவறுகளிலிருந்து காக்கும் பாதுகாப்பு உத்தியே தவிர நேரம் போகாமல் எந்த பெற்றோரும் பிள்ளைகளைத் திட்டித் தீர்ப்பதில்லை. அதீதமாகக் காட்டப்படும் எந்த உணர்வும் ஒரு கட்டத்தில் வெறுத்துவிடும், எப்போதும் இமைகள் கண்களை மூடியே இருந்தால் நம்மால் உலகைக் காண முடியுமா […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 16

ஒரு சிறுவனுக்கு அதிகமாகக் கோபம் வருமாம். அவனது தந்தை அவனை எப்படியாவது பொறுமையைக் கற்றுக்கொடுக்க விரும்பினார். அவனிடம் சில ஆணிகளைக் கொடுத்து ஒரு மரக்கட்டையைக் காட்டினார். எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை அவனிடம் கொடுத்து அந்தக் கட்டையில் அடிக்கச் சொன்னார்.  அப்படி அடித்தால் கோபம் குறையும் என்றார். அவனும் கோபம் வரும் போதெல்லாம் அதைத் தொடர்ந்து செய்தான். ஒரு நாள் ஆணி எல்லாம் தீர்ந்து போனதும் இப்போது என்ன செய்யவென தந்தையிடம் கேட்க அவரோ […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 15

நேசித்தவர்களின் வெறுப்பான வார்த்தைகள் கொடுக்கும் வேதனையும் மன அழுத்தமும் அனேகமுறை நம்மை மரணத்தின் வாயிலுக்கு இட்டுச் சென்றுவிடும். அளவற்ற அன்பை உங்கள் மீது கொட்டுபவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள். ஏனெனில் அவர்களின் அன்பை விட கோடி மடங்கு வீரியமாக இருக்கும் அவர்கள் நம்மிடம் காட்டும் வெறுப்பு. உரிமையுள்ள இடத்தில் தானே கோபத்தைக் காட்ட முடியுமென உண்மை தெரிந்த பிற்பாடு அவர்கள் வாதிடலாம். அவர்கள் மீதுள்ள அன்பின் ஆழத்தால் நீங்களும் அவர்களை மன்னிக்கலாம். ஆனால் ஒருபோதும் இந்த அன்பு […]

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 14.2

நக்கலாகச் சிரித்தபடி மாடிப்படியேறியவனின் செவிகளில் “நீ எங்கயும் போகக்கூடாது. இது உன் வீடு. அவன் செயினைக் கழட்டிட்டா எல்லாம் முடிஞ்சுதா? அது என்ன மோதிரம், வளையல் மாதிரி ஒரு நகைனு நினைச்சுக்கிட்டானா?” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி மைந்தனின் கோபத்தை இன்னும் அதிகமாக்கினார். அட்சரன் கோபத்தோடு அவனது அறைக்குப் போய்விட, வேதவதியிடம் அவளது உடைமைகளை அடுக்கி வைத்துவிட்டாளா என விசாரித்தார். “நான் பேக்கை எடுத்தப்ப அவங்க வந்துட்டாங்க” “சரி! நீ போய் ட்ரஸ் எல்லாத்தையும் வார்ட்ரோப்ல எடுத்து […]

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 14.1

பகட்டு நகரத்தின் பளபளப்பும் ஆணவன் பார்வையின் அலட்சியமும் அந்நிய இடத்தின் மருட்சியும் மொத்தமாய் அணை போட்டதில் பேதலித்து நின்றாளே சிற்றூர்ப்பெண்! -அட்சரனின் வேதா அட்சரன் ஹெல்வட்டாசுக்குக் கிளம்ப காரை எடுக்கும்வரை அவனது பெற்றோர் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. அருள்மொழி தகவல் சொன்ன நேரத்துக்குக் கிளம்பியிருந்தால் இந்நேரம் அவர்கள் வீட்டுக்கு வந்திருப்பார்கள். ஒருவேளை இரவில் பயணம் செய்ய வேண்டாமென முடிவெடுத்து ஏதேனும் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்திருக்கலாம் என்று மூளை சொன்னபோது அதை அட்சரனுக்கு ஒத்துக்கொள்ளவே தோன்றியது. ஏனெனில் அதெல்லாம் […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 14

பொய் – நான் அதிகமாக வெறுக்கும் சொல். நேசிப்பவர்களிடையே வரவே கூடாத சொல் அது. எந்த இடத்தில் உண்மையான அன்பும் பாசமும் இருக்குமோ அங்கே பொய்க்கு இடமில்லை. அன்பான இதயங்களிடையே கசப்பான உண்மைகள் பகிரப்படவேண்டுமே தவிர இனிப்பான பொய்களை வைத்து அவற்றைப் பிணைக்க முடியாது. அப்படி பிணைக்க நினைப்பது மாபெரும் பிசகு. அந்தப் பிசகுக்கான விலையைப் பொய் சொன்னவர் மட்டுமில்லை, அவரை நேசிப்பவரும் சேர்ந்தே அனுபவிக்கவேண்டும்.  பொய்யின் இரட்டைப்பிறவியே உண்மையை மறைத்தல். இரண்டுக்கும் உருவ ஒற்றுமையில் மயிரிழை […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 13

வானவில்லில் ஏழு வண்ணங்கள் இருக்குமென்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் மழைநேரத்தில் நம் வீட்டு மொட்டைமாடியில் நின்று பார்க்கும்போது அந்த வானவில்லில் மூன்று வண்ணங்கள் மட்டுமே இருப்பது போல தோன்றும். அப்படி என்றால் அறிவியல் சொன்னது பொய் என்று அர்த்தமா என்ன? நம் பார்வைத்திறன் வானவில்லில் இருக்கும் ஏழு வண்ணங்களையும் துல்லியமாகக் காணுமளவுக்கு இல்லை எனலாம். அல்லது துல்லியமாகப் பார்க்கக்கூடிய தொலைவில் அந்த வானவில் தோன்றியிருக்கவில்லை எனலாம். இவையே உண்மை. இப்படி தான் சில நேரங்களில் உண்மையைக் […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 12

எந்தச் சூழலிலும் நம்மை நம்பும் உறவு வாய்ப்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்!  நம்பிக்கை என்பது திணிக்கப்படும் உணர்வல்ல! அது இயற்கையாக உருவாகும் அற்புதமான உணர்வு. அவ்வளவு எளிதில் அந்த உணர்வு யார்மீதும் வந்துவிடாது. சில நேரங்களில் அவ்வுணர்வை ஜெயிக்க நாம் போராட வேண்டியதிருக்கும். சில நேரங்களில் நமது செயல்பாடுகளை வைத்தே நம்மீது நம்பிக்கை பிறந்துவிடும். நம்பிக்கையைப் பெறுவது என்பது கிட்டத்தட்ட ஆழ்குழாய் கிணறு தோண்டுவது போல. நீர்வளம் கொண்ட இடத்தில் தோண்டினால் சிரமமில்லாமல் தண்ணீர் வருவது போல […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 11

அது என்னவோ சிலரது வாழ்வில் மட்டும் அனைத்துச் சந்தோசமான தருணங்கள் அனைத்திலும் விதி அவர்களை அழவைத்து வேடிக்கை பார்க்கும். சந்தோசத்தின் தித்திப்போடு வருத்தத்தின் கசப்பையும் அவர்களை விழுங்க வைத்து வேடிக்கை பார்க்கும் பாழும் விதியின் கணக்கு என்னவென பாவப்பட்ட அந்த நபருக்குத் தெரியாது. பாகற்காயைத் தின்றவர்களின் நாக்குத் துளி இனிப்புக்காக ஏங்குமே, அப்படி தான் தனக்கான நல்லதுக்காக அவர்களின் மனம் ஏங்கும். சில ஏக்கங்கள் உடனே நிறைவேறுவதில்லை. அதற்குரிய காலம் வரும்போது தான் நிறைவேறும். அவ்வாறே என் […]

 

Share your Reaction

Loading spinner