வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்து கொண்டிருந்த அவந்திகா ராகவைக் கவனிக்கத் தவறவில்லை. காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் மூலமாக யாருடனோ பேசிக்கொண்டு வந்தவனின் உரையாடல் பெரும்பாலும் பஞ்சாபியிலேயே இருந்ததால் அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் அவனின் பேச்சில் அவ்வப்போது வந்து சென்ற வருண் பய்யா, பாபிஜி முதலிய வார்த்தைகளை வைத்து அவன் திருமணம் சம்பந்தமாக பேசிக்கொண்டு வருகிறான் என்பதைப் புரிந்துகொண்டாள். திடீரென்று அவள் புறம் திரும்பியவன் இன்னும் எவ்வளவு தூரம்? என்று சைகையில் கேட்க அவள் அரை கிலோ … Continue reading “அத்தியாயம் 4”
Share your Reaction


