Header Image

 

அத்தியாயம் 4

வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்து கொண்டிருந்த அவந்திகா ராகவைக் கவனிக்கத் தவறவில்லை. காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் மூலமாக யாருடனோ பேசிக்கொண்டு வந்தவனின் உரையாடல் பெரும்பாலும் பஞ்சாபியிலேயே இருந்ததால் அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் அவனின் பேச்சில் அவ்வப்போது வந்து சென்ற வருண் பய்யா, பாபிஜி முதலிய வார்த்தைகளை வைத்து அவன் திருமணம் சம்பந்தமாக பேசிக்கொண்டு வருகிறான் என்பதைப் புரிந்துகொண்டாள். திடீரென்று அவள் புறம் திரும்பியவன் இன்னும் எவ்வளவு தூரம்? என்று சைகையில் கேட்க அவள் அரை கிலோ … Continue reading “அத்தியாயம் 4”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 3

தோட்டத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ராகவைப் பார்த்தபடியே நின்றிருந்தவள் அவன் கல்யாணி தேவியை நோக்கி வந்து ஆசீர்வாதம் வாங்கவும் ‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’ என்று மனதில் நினைத்தவள் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் உள்ளே சென்றாள். அவளுக்காகக் காத்திருந்த மைதிலியிடம் கோவிலில் நடந்த விஷயங்களைக் கூற மைதிலி, “அந்த போலேநாத் மனசுல என்ன நெனைக்குறாருனு யாருக்கும் தெரியாது. நல்லதே நடக்கும்” என்று அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டு அவருடன் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த … Continue reading “அத்தியாயம் 3”

 

Share your Reaction

Loading spinner