அன்பு 20

இந்த உலகம் நம்மை எவ்வளவு எளிதில் ‘ஜட்ஜ்’ செய்துவிடும் தெரியுமா? நீ எப்படி இதைச் செய்யலாம், நீ அன்று செய்த காரியத்தின் விளைவால் உன்னை என்னால் நம்ப முடியாது என்று இஷ்டத்துக்கு பழித்துப் பேசும். இந்த உலகம், சமூகம் எல்லாம் வேறு யாரோ அல்ல. நீங்களும் நானும் நம்மை போல பிற மனிதர்களும் தான். அடுத்தவரின் சூழலை அறியாமல் பேசி காயப்படுத்துவது, அவர்கள் அப்படிதான் என்று முத்திரை குத்துவதும் நமக்கு எவ்வளவு எளிதான காரியமாக இருக்கிறது! எந்த … Continue reading “அன்பு 20”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 15

மஞ்சமும் கூடமும் மயக்கம் தரவே, கஞ்சத்தனம் ஏனோ அவனின் சிரிப்பில்! பஞ்சணை வீட்டின் பகட்டை ரசிக்க, நஞ்சென முறைத்தே நச்சரிக்கிறானே! -அட்சரனின் வேதா ராஜேஸ்வரியை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். வந்ததிலிருந்து வீட்டில் கனத்த மௌனம் நிலவியது. இந்த மௌனத்திற்கான பிள்ளையார்சுழி மருத்துவமனைக்குச் சதானந்தன் பதறியடித்து வந்த நொடியில் போடப்பட்டது. வந்தவர் மகனிடம் தப்பித்தவறிக்கூட என்ன ஏதென்று விசாரிக்கவில்லை. நேரே வேதவதியிடம்தான் போனார். அவளும் நடந்ததில் ஒரு வரியைக் கூட மறக்காமல் புத்திசாலி மாணவி வகுப்பறையில் ஆசிரியரின் கேள்விக்கு … Continue reading “அட்சரம் 15”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 14.2

நக்கலாகச் சிரித்தபடி மாடிப்படியேறியவனின் செவிகளில் “நீ எங்கயும் போகக்கூடாது. இது உன் வீடு. அவன் செயினைக் கழட்டிட்டா எல்லாம் முடிஞ்சுதா? அது என்ன மோதிரம், வளையல் மாதிரி ஒரு நகைனு நினைச்சுக்கிட்டானா?” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி மைந்தனின் கோபத்தை இன்னும் அதிகமாக்கினார். அட்சரன் கோபத்தோடு அவனது அறைக்குப் போய்விட, வேதவதியிடம் அவளது உடைமைகளை அடுக்கி வைத்துவிட்டாளா என விசாரித்தார். “நான் பேக்கை எடுத்தப்ப அவங்க வந்துட்டாங்க” “சரி! நீ போய் ட்ரஸ் எல்லாத்தையும் வார்ட்ரோப்ல எடுத்து … Continue reading “அட்சரம் 14.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 14.1

பகட்டு நகரத்தின் பளபளப்பும் ஆணவன் பார்வையின் அலட்சியமும் அந்நிய இடத்தின் மருட்சியும் மொத்தமாய் அணை போட்டதில் பேதலித்து நின்றாளே சிற்றூர்ப்பெண்! -அட்சரனின் வேதா அட்சரன் ஹெல்வட்டாசுக்குக் கிளம்ப காரை எடுக்கும்வரை அவனது பெற்றோர் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. அருள்மொழி தகவல் சொன்ன நேரத்துக்குக் கிளம்பியிருந்தால் இந்நேரம் அவர்கள் வீட்டுக்கு வந்திருப்பார்கள். ஒருவேளை இரவில் பயணம் செய்ய வேண்டாமென முடிவெடுத்து ஏதேனும் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்திருக்கலாம் என்று மூளை சொன்னபோது அதை அட்சரனுக்கு ஒத்துக்கொள்ளவே தோன்றியது. ஏனெனில் அதெல்லாம் … Continue reading “அட்சரம் 14.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 13

தேன்மழைச் சாரலில் தேகமும் நனைய, கால்நடைப் பாதையில் காலங்கள் கரைய, பச்சை மலையை பிரிந்து செல்கையில், அச்சம் கொள்ளுதடி நங்கையின் மனமே! -அட்சரனின் வேதா “வேதாவை என் மருமகளா என்னோட அழைச்சிட்டுப் போறேன். அவ இனிமே எங்க பொறுப்பு. எந்தப் பிரச்சனையும் வராம நான் பாத்துக்குறேன். இது என் மகன் மேல சத்தியம் அண்ணா.” உணர்ச்சிவசப்பட்டக் குரலில் கஜேந்திரனுக்கு வாக்கு கொடுத்தார் ராஜேஸ்வரி. அருள்மொழி – வானதியின் மறுவீட்டுச் சடங்குக்காக வந்திருந்த விருந்தினர்கள், ஊர் மக்கள் முன்னிலையில் … Continue reading “அட்சரம் 13”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 12

விரும்பாமல் ஏறிய மாங்கல்யம் நெருப்பாய் தகித்தது அவன் மனம் பயத்தில் உறைந்தது பாவையின் இதயம் அயர்ந்து அதிர்ந்து அழகிய அந்தி! -அட்சரனின் வேதா வேதவதி தனது அறைக்குள் உணர்வுகள் மரத்துப்போன நிலையில் அமர்ந்திருந்தாள். ஜெயவிலாசத்தில் நடந்தேறிய கலவரங்கள் யாவும் கனவல்ல, நிஜம் என்பதை அவளது கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. எப்போது அது கழுத்தில் விழுந்ததோ அப்போது வீட்டுக்கு ஓடிவந்தவள் தான். தனது அறைக்குள் அடைபட்டுக்கொண்டாள். ஓடிவரும்போதே அவளது முதுகுக்குப் பின்னே ஊரார் அவளை ஏளனமாகப் … Continue reading “அட்சரம் 12”

 

Share your Reaction

Loading spinner

அன்பு 8

நம்மில் பலருக்கு வாழ்க்கையின் எதார்த்தம் புரிவதில்லை. காணும் மனிதர்கள் யாவரிடத்திலும் நாம் ‘Pure soul’ வகையறா ஆட்களையோ அல்லது ‘Evil hearted’ வகையறா ஆட்களையோ எதிர்பார்க்கிறோம், தேடுகிறோம். ஆனால் இங்கே பரிசுத்தமான மனிதன் என யாருமில்லை என்ற நிதர்சனம் நமக்குப் புரிபடுவதற்குள் அனேகம் முறை வாழ்க்கை அனுபவப்பாடத்தை எடுத்திருக்கும். யாரும் இறகில்லாத தேவதைகள் / தேவதூதர்கள் போல இருப்பதில்லை. அதே நேரம் கொம்பு முளைத்த சாத்தானாக யாரைக் கெடுக்கலாம் என்று முழுநேரமும் சிந்திப்பவர்களும் இல்லை. சூழ்நிலை ஒரு … Continue reading “அன்பு 8”

 

Share your Reaction

Loading spinner

அன்பு 7

பேரிரைச்சலோடு பொங்கி கடற்கரை மணலைத் தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் ஓடிவிடும் அலைகளுக்குத் தெரிவதில்லை, அவை விட்டுச் சென்ற ஈரம் இன்னும் மணலில் ஒட்டியிருப்பது. இவ்வாறே பல நேரங்களில் மனிதர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் நேசிப்பவர்களை ஆழமாகக் காயப்படுத்திவிடுகின்றன. அவற்றுக்குத் தங்களால் காயமுற்ற மனதில் காலாகாலத்துக்கும் வேதனை ஒட்டியிருக்கும் என்பதெல்லாம் தெரியாது! உதிர்த்தவனின் நாவுக்கும்.   –அன்பனின் சிந்தனை சிதறல்கள் அன்பரசனிடம் பேசிவிட்டு வந்ததும் முதல் வேலையாக அன்னை சுடர்விழியின் மொபைலுக்கு அழைத்து விவரத்தைக் கூறினாள் ஆரபி. “நீ ஒன்னும் … Continue reading “அன்பு 7”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 11

பழிகளின் சுமை தீயாய் தொடர விடாது பரவும் உன் விழிச்சினத்தீ! உறவில்லா உரிமையில்லா  நிலையில் கோபம் மட்டும் எவ்வகையில் அறம்? -அட்சரனின் வேதா ட்ரோன் மூலம் ஒளிபரப்பான காட்சியில் தன்னுடன் இருந்தவள் வேதவதி என்று அட்சரன் சொன்னதும், அவளது கண்கள் முதலில் பீதியுடன் பார்த்தது கனவல்லியின் முகத்தைத்தான். ‘என்ன இது’ என்பது போல மனம் துடிப்பதை கனகவல்லியின் முகபாவனை காட்டிக்கொடுத்துவிட, சிலையாய் சமைந்துவிட்டாள் வேதவதி. ‘அட்சரன் என்னதான் கூட்டத்தைச் சமாளித்தாலும் எனது பெற்றோரைச் சமாளிக்க வேண்டிய கடமை … Continue reading “அட்சரம் 11”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 10

பழி சுமந்த மேகம் பதறியழுதது! விழிச்சினம்தனில் விறகாய் எறிந்தது! செய்யாப்பிழைக்குச் செந்நெருப்பானவனே! உரிமையில்லா உன் கோபம் தீயானது! -அட்சரனின் வேதா “முகூர்த்தம் முடிஞ்சதும் கிளம்பிடுவீங்களா? என்ன இது பழக்கம்? ஏன்டிமா வேதா நீயாச்சும் இருக்கச் சொல்லு உன் பேரண்ட்ஸை.” அருள்மொழி – வானதியின் திருமண முகூர்த்தம் முடிந்ததும் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்திய கையோடு கிளம்ப எத்தனித்த கனகவல்லியையும் கஜேந்திரனையும் தடுத்த கயல்விழி, வேதவதியிடம் முறையிட்டார். “அதில்லம்மா கயலு! பெரிய இடத்து ஆளுங்க வர்றாங்க. பொண்ணு மாப்பிள்ளைய … Continue reading “அட்சரம் 10”

 

Share your Reaction

Loading spinner