பூங்கொடி 1.2

இவளா? எங்கே போனாள் என்ன ஆனாள் என்றே தெரியாமல் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தியவள் இப்படியா நான்காண்டுகள் கழித்து கண் முன்னே வந்து நிற்பாள்? அடுத்து அவரது பார்வையில் சிக்கியவன் அவளருகே நின்று கொண்டிருந்த வாலிபன். வேகமாக அவர்களிடமிருந்து பார்வையைத் திருப்பிக்கொண்டார் நர்மதா. குற்றவுணர்ச்சியும் வேதனையும் மனதுக்குள் மண்டியது. ஆனால் அவரது மைந்தனுக்கு அப்படி எந்த உணர்வும் வரவில்லை. அவளைப் பார்த்துவிட்டு சாதாரணமாக மீண்டும் அனுமன் சிலையைப் பார்க்கத் துவங்கினான். நர்மதாவுக்கு அது தான் ஆச்சரியத்தைக் கொடுத்தது. கண்கள் … Continue reading “பூங்கொடி 1.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 22.2

காலையிலேயே வீடு கலவரக்கூடமாக மாறி கூச்சல்கள் எழும்புவதைக் கேட்டபடி கண் விழித்தான் அட்சரன். ஞாயிறு என்றால் சற்று நேரம் கூடுதலாக உறங்குபவனின் காதருகே வந்து யாரோ மைக் வைத்துக் கத்துவது போலப் பரபரப்பான பேச்சுக்குரல்கள் விழ, எங்கிருந்து உறங்குவது? கடுப்போடு எழுந்து படுக்கையில் அமர்ந்தான். அந்தக் கலவரம் நடப்பது அவனது அறைக்கு அடுத்து இருக்கும் அறையில்தான். “டி வேதா! அசையாம உட்காரேன்” – கீச்சுக்குரலில் ஒரு பெண் பேசியது கேட்டது. “இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கேனே” என்றபடி … Continue reading “அட்சரம் 22.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 21

இனி இழப்பதற்கு ஏதுமில்லை இனியவை பகிர நிறைய இருக்கிறது! பயங்கள் துறந்த பாஷையிது கடலில் கலக்கும் இரு நதிகள் கரையைத் தழுவும் கடைசி நொடிகள்! அர்த்தங்கள் ததும்பும் எளிய பேச்சில் அழகியல் ஆயிரம் வசிக்கிறது மூச்சில்! -அட்சரனின் வேதா “இப்பதான் சாப்பிட்டு முடிச்சோம் ஆன்ட்டி. வேதாவோட அவியல் ருசி இன்னும் நாக்குலயே நிக்குது” வேதவதியின் அறையில் அமர்ந்து அவளது மொபைலில் கனகவல்லியிடம் வீடியோ காலில் உரையாடிக்கொண்டிருந்தாள் வானதி. அவளும் அருள்மொழியும் விருந்துக்காக வருவதை அறிந்து வானதியின் நலன் … Continue reading “அட்சரம் 21”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 20

உதிரப்போகும் நேரத்தில் நறுமணத்தோடு கிளையிடம் மலர் விடைபெற தனது வாசனையை நினைவாக விட்டுச் செல்ல பிரிவின் தருணத்தில் வாசனை அடர்த்தியாக இதுவொரு விசித்திரமான வசந்தகாலம்! -அட்சரனின் வேதா “என்ன அச்சு? நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேனே? உண்மையா?” காலையில் வந்ததும் வராததுமாக இலக்கியா விசாரித்தாள். “அப்பிடி என்ன கேள்விப்பட்ட நீ?” என்றபடி சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஹெல்வட்டாஸின் சார்பில் சமர்ப்பிக்கப்படக் கூடிய கேட்டலாக் ஒன்றைத் தயார் செய்துகொண்டிருந்தான் அட்சரன். “நீயும் வேதாவும் பேட்ச் அப் ஆகிட்டீங்களாமே?” ராகமாக … Continue reading “அட்சரம் 20”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 19

வார்த்தைகளால் காயங்களை நெய்தவர்கள் உறவுக்கயிற்றின் இறுக்கம் தளர்ந்ததும் இயல்பாகினர் மௌனத்தின் மெல்லிய இழைகளால்! தனித்தீவுகளாக மாறப்போகும் உற்சாகத்தில்! -அட்சரனின் வேதா வானதி வந்த தினத்தில் அட்சரன் வேதவதியோடு பேசி ஒரு முடிவை எடுத்திருந்தான். அதில் அவளுக்கும் சம்மதம் என்றதும் கொஞ்சமாய் மனக்கிலேசம் அடங்கியது அவனுக்கு. உறவுச்சிக்கல்களை மில்லினியல்கள் கையாண்ட விதத்துக்கும், ஜென் ஜி தலைமுறையினர் கையாளும் விதத்துக்கும் வித்தியாசமுள்ளது. காதலிலோ உறவிலோ பிரிவு வந்தாலோ மனக்கசப்பு வந்தாலோ விரோதம் பாவிப்பதும், வெறுப்போடு பிரிவதும் மில்லினியல்கள் காலத்தோடு முடிந்து … Continue reading “அட்சரம் 19”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 18

பழிகள் உரைக்காப் பக்குவமும் பிரிவின் வழிகளுக்கு வரையறையும் கசப்புகள் அகற்றும் கால அவகாசமும் நிதானமாய் அறிந்தனர் தமது நிசப்தம்தனில்! -அட்சரனின் வேதா இலக்கியாவுக்கு அத்துணை கோபம்! சஞ்சய் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் வீட்டுக்குக் கிளம்பினாள் அவள். “அவன் கோவத்துல கத்துறது புதுசாடி? அதுக்குப் போய் மூஞ்சைத் தூக்கிட்டுக் கிளம்புற” என்று அவளைத் தடுக்கப் பார்த்தான். “வழி விடு சஞ்சய்! இருக்குற கடுப்புல உன்னைக் கடிச்சிடுவேன் பாத்துக்க” மிரட்டியவளைக் கண்டு அவன் அஞ்சுவானா என்ன? “அது புருசன் பொண்டாட்டி … Continue reading “அட்சரம் 18”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 17.2

சதானந்தன் எப்படி கேப் புக் செய்யவேண்டுமெனச் சொல்லிக் கொடுத்தார் அவளுக்கு. “பைக் டாக்சியும் இருக்கு இதுல. உனக்குக் கார், ஆட்டோ, பைக் எது வசதியோ அதுல போகலாம். இப்ப நீயே புக் பண்ணு பாப்போம்” வேதவதியின் மனம் படபடவென அடித்துக்கொண்டது. எப்படியோ திருமூர்த்தி நகரிலிருந்து ஆழ்வார்ப்பேட்டைக்கு ரைட் ஒன்றை புக் செய்தாள். “பணம் எப்பவுமே லொகேசனுக்குப் போய் இறங்குனதுக்கு அப்புறமா பே பண்ணும்மா.” சிறிது நேரத்தில் ஆட்டோ வரவும் ஓ.டி.பி-யைச் சொல்லிவிட்டு ஏறினாள். “பத்திரமா போயிட்டு வாம்மா” … Continue reading “அட்சரம் 17.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 16

மையுலக மாயத்தில் மயங்கியவள் மெய்யுலக வீதியில் மெல்லடி பதித்தாள்! காகிதப் படகைக் கரையில் விடுத்து நிஜத்தின் நதியில் நீந்தப் பழகினாள்! -அட்சரனின் வேதா “பிருந்தாவோட கதைல நீ சொன்ன சேஞ்சஸ் எல்லாத்தையும் பாத்துட்டேன் அச்சு. இன்னும் ஒன் வீக் டைம் வேணும் எடிட் பண்ணுறதுக்கு” இலக்கியா சொல்லவும் சரியெனத் தலையசைத்தான். “கவிநேசன் புக் வேலை எல்லாம் முடிஞ்சுதா? அவரோட புக்குக்கு சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்குக்கான வேலைய சஞ்சய் எந்த லெவல்ல பண்ணிருக்கான்?” “கவிநேசன் புக்கோட ஒர்க் ஃபைனல் … Continue reading “அட்சரம் 16”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 14.2

நக்கலாகச் சிரித்தபடி மாடிப்படியேறியவனின் செவிகளில் “நீ எங்கயும் போகக்கூடாது. இது உன் வீடு. அவன் செயினைக் கழட்டிட்டா எல்லாம் முடிஞ்சுதா? அது என்ன மோதிரம், வளையல் மாதிரி ஒரு நகைனு நினைச்சுக்கிட்டானா?” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி மைந்தனின் கோபத்தை இன்னும் அதிகமாக்கினார். அட்சரன் கோபத்தோடு அவனது அறைக்குப் போய்விட, வேதவதியிடம் அவளது உடைமைகளை அடுக்கி வைத்துவிட்டாளா என விசாரித்தார். “நான் பேக்கை எடுத்தப்ப அவங்க வந்துட்டாங்க” “சரி! நீ போய் ட்ரஸ் எல்லாத்தையும் வார்ட்ரோப்ல எடுத்து … Continue reading “அட்சரம் 14.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 14.1

பகட்டு நகரத்தின் பளபளப்பும் ஆணவன் பார்வையின் அலட்சியமும் அந்நிய இடத்தின் மருட்சியும் மொத்தமாய் அணை போட்டதில் பேதலித்து நின்றாளே சிற்றூர்ப்பெண்! -அட்சரனின் வேதா அட்சரன் ஹெல்வட்டாசுக்குக் கிளம்ப காரை எடுக்கும்வரை அவனது பெற்றோர் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. அருள்மொழி தகவல் சொன்ன நேரத்துக்குக் கிளம்பியிருந்தால் இந்நேரம் அவர்கள் வீட்டுக்கு வந்திருப்பார்கள். ஒருவேளை இரவில் பயணம் செய்ய வேண்டாமென முடிவெடுத்து ஏதேனும் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்திருக்கலாம் என்று மூளை சொன்னபோது அதை அட்சரனுக்கு ஒத்துக்கொள்ளவே தோன்றியது. ஏனெனில் அதெல்லாம் … Continue reading “அட்சரம் 14.1”

 

Share your Reaction

Loading spinner