பொதுவாக மக்கள் புகைப்படம் எடுத்து முக்கியமான தருணங்களை ரசிப்பதை தவறவிடுகின்றனர் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் புகைப்படமானது அந்த அழகான தருணத்தை இன்னும் பல வருடங்கள் கழித்தும் நினைவூட்டும் என்பதை மறந்துவிடுகின்றனர். அத்துடன் புகைப்படம் எடுப்பதற்கு தொழில்நுட்ப அறிவும், விலையுயர்ந்த புகைப்படக்கருவியும், புகைப்படவியலில் பட்டப்படிப்பும் கட்டாயம் தேவை என்ற கருத்தும் நிலவுகிறது. என்ன தான் விலையுயர்ந்த புகைப்படக்கருவிகள் துல்லியமான நேர்த்தியான புகைப்படங்களைக் கொடுத்தாலும் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞனுக்கு ரசனை தான் அடிப்படை தகுதியாகும். பீனிக்ஸ் சேனல், […]
யோகாவை உலகநாடுகள் கவனிக்கத் துவங்கிய பிறகே இந்தியாவில் அதற்கான ஆர்வம் அதிகரிக்கத் துவங்கியது. அதன் விளைவு இன்று புற்றீசல் போல பெருகிய யோகா மையங்கள். யோகா குரு என்ற போர்வையில் பாதகங்களை விளைவிக்கும் குற்றவாளிகள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தங்களது தினசரி வாழ்வில் உண்டாகும் கவலைகள், அலுவலகப்பணியினால் உண்டாகும் மன அழுத்தம் இதிலிருந்து மீள நினைக்கும் இளைய தலைமுறையினரும், ஓய்வுக்காலத்தை அமைதியாகக் கழிக்க விரும்பும் வயோதிகர்களும் இம்மாதியான போலி யோகா குருக்களிடம் கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்துவிடுகின்றனர். உலகவாழ்வின் […]
“Fish eye lens என்பது பனோரமிக் மற்றும் அரைக்கோள புகைப்படங்களை பரந்த கோணத்தில் படம் பிடிக்க உதவுகின்றன. தட்டையான 180 டிகிரி கோணத்தில் படமெடுக்கக் கூடிய Fish Eye Lens அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைகழக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” -பெட்டர் போட்டோகிராபி பத்திக்கை, ஆகஸ்ட் 2020 ஹோட்டல் கோல்டன் கிரவுன் பார்ட்டி ஹால்… ஜஸ்டிஷ் டுடேவின் ஊழியர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் குழுமியிருந்த அந்த பார்ட்டி ஹால் ஜேஜேவென இருந்தது. யசோதரா […]
யோகா என்பது வெறும் ஆசனங்களை மட்டும் கொண்டதல்ல. பதஞ்சலியின் கூற்றுப்படி அது யமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம் மற்றும் சமாதி என எட்டு பகுதிகளை உள்ளடக்கியது. நம்மிடம் யோகா பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அரைகுறையாக தெரிந்ததை வைத்து அநேகர் யோகக்கலையை அணுகுகிறார்கள். கூடவே யோகாவை மதம் சார்ந்து பார்ப்பவர்களும் அதிகம். யோகா என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக சித்தர்களும் யோகிகளும் பல்லாண்டுகளுக்கு முன்னரே சூத்திர வடிவில் எழுதி வைத்தது. அதற்கு […]
“மனிதர்கள் தமது அனுபவங்களைக் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்படும் ஒலிகளை தான் நாம் மொழி என்கிறோம். அதே போல தொடர்பாடலுக்காகப் பயன்படுத்தப்படும் மற்றொரு ஊடகம் தான் புகைப்படம். எப்படி மொழிக்கென தனி இலக்கணம் உள்ளதோ அதே போல புகைப்படக்கலைக்கும் தனியே இலக்கணம் உள்ளது. இன்று புகைப்படக்கலை ஒரு சிறப்புக்கலையாக வளர்ச்சி பெற்றுள்ளது. வாழ்வில் நாம் சந்திக்கும் முக்கிய தருணங்களை ஆவணப்படுத்துவதில் புகைப்படங்களின் பங்கு அளப்பரியது” “கொஞ்சம் ஆடாம இரேன் மய்யூ… இப்போ […]
லைட்பெயிண்டிங் என்பது போட்டோகிராப்பியில் புகைப்படம் எடுக்கும் ஒரு முறை. லாங் எக்ஸ்போசர் செட்டிங்கில் ஷட்டரை திறந்து வைத்து நம் விருப்பப்படி டார்ச், மொபைல் டிஸ்பிளே இப்படி லைட்களை வைத்து பெயிண்ட் செய்வது போல் செய்து புகைப்படங்கள் எடுக்கலாம். இதில் நிறைய அட்வான்ஸ் லெவல்கள் உள்ளன. அதில் முக்கியமானது பிக்சல் ஸ்டிக் லைட்டுகளை வைத்து புகைப்படம் எடுக்கும் முறை. -சரவணவேல், புகைப்பட கலைஞர் முக்தி யோகா மையம், வளசரவாக்கம்… குல்மொஹர் மரங்கள் குடைபிடிக்க இரண்டு மாடிகளுடன் நின்றிருந்தது […]
யோகா என்பது உடலையும் மனதையும் கட்டுக்குள் வைக்க பாரம்பரியமாக தொடர்ந்து வரும் ஒரு ஒழுக்கநெறியாகும். யோகாவை முறைப்படுத்தி அதற்கென சூத்திரங்களை வடிவமைத்த சிறப்பு பதஞ்சலி முனிவரையே சாரும். இவரை நவீன யோகாவின் தந்தை என்பர். அதே நேரம் இந்தியாவின் தலை சிறந்த யோக குருவான திருமலை கிருஷ்ணமாச்சாரியும் நவீன யோகாவின் தந்தை எனப்படுகிறார். முதல் பாகத்தின் சம்பவங்கள் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து… லோட்டஸ் ரெசிடென்ஸி… காலை வேளையின் மெல்லிய பரபரப்பு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் […]