அட்சரம் 9.2

மறுநாள் மாலையில் மெஹந்தி, சங்கீத் என்று கொண்டாட்டத்தின் வர்ணங்களை அள்ளிப்பூசிக்கொண்டது ஜெயவிலாசம். டி.ஜே இசையோடு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடை சங்கீத் நிகழ்வுக்காகத் தயாராகியிருக்க, நீளநீளமாய் மெஹந்தி கோன்கள் அடுக்கப்பட்ட தட்டுகள் மலர் அலங்காரத்தோடு வைக்கப்பட்டிருந்தன. அந்த அலங்காரப்பந்தலுக்குக் கீழே ஒரு பூந்தோட்டமே அமர்ந்திருப்பது போல, இளம் பச்சை நிற லெஹங்காவில் வானதி ஜொலித்துக்கொண்டிருந்தாள். அவளது கரங்களில் மெஹந்தி பூக்கள் பூக்கத் தொடங்கின. மெஹந்தி வைத்துக்கொண்டிருந்த பெண் அவளது உள்ளங்கையில் ரகசியமாக ‘அருள்’ என்ற பெயரைச் செதுக்க, அதைச் … Continue reading “அட்சரம் 9.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 9.1

சுடரோ நிலவோ சுமக்கத் துணிந்தேன்! தடமோ திசையோ தயங்கி நின்றேன்! நிழலோ நிஜமோ நிழலில் தவிக்க அழகிய பிழையில் அலைகின்றேன் தனியே! -அட்சரனின் வேதா தனக்காக ஒதுக்கப்பட்ட அறையின் பெரிய சாளரம் அருகே நின்று கையிலிருக்கும் ஐபேடில் வேதவதி ஹெல்வட்டாசுக்கு அனுப்பி வைத்திருந்த மேனுஸ்கிரிப்டை வாசித்துக் கொண்டிருந்தான் அட்சரன். எல்லாம் வானதியால்தான். வேதவதி மேனுஸ்கிரிப்டை அனுப்பியதுமே “நீ கொஞ்சம் வாசிச்சுப் பாரு அச்சு. அப்பதான் நான் ஏன் வேதாவோட எழுத்து மேல இவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கேன்னு உனக்குப் … Continue reading “அட்சரம் 9.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 8

நதியோ கடலோ நனையத் துடித்தேன்! விதியோ மதியோ விழுந்து தவித்தேன்! புரியாத புதிரில் புலன்கள் மயங்க இருவிழித் திரைகளில் குழப்பமும் அழகே! -அட்சரனின் வேதா அழுத முகமாய் வீட்டுக்கு ஓடி வந்த மகளிடம், ஜிமிக்கி தொலைந்தால் போகட்டும் விடு என ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார் கனகவல்லி. அவரது இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தார்கள் என்றால், தங்கம் விற்கும் விலைக்கு இப்படியா தொலைத்துவிட்டு வருவாய் என்று சொல்லி இன்னும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பார்கள். ஆனால், கனகவல்லிக்கு மகளைத் திட்ட மனமில்லை. விலை … Continue reading “அட்சரம் 8”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 7

வாசல் கடக்காத வாசனை மலரிவள் நேசம் அறியாத நேயக் கனவிவள் துளிதுளியாய் பெருகும் அன்பின் ஊற்றிவள் கரையைத் தொடாத அமைதிக் கடலிவள் துடிக்கும் இதயத்தின் ஓசையைக் கேட்டவறிவாளா? -அட்சரனின் வேதா பரிகாரப் பூஜை அது இதுவென்று எல்லாம் முடிந்த பிறகு, அருள்மொழியையும் வானதியையும் அருகருகே அமர வைத்துவிட்டார்கள். ஏன் என்று கேட்க முடியாமல் கடனே என்று அவர்கள் அமர்ந்திருக்க, சரியாக அந்நேரத்தில் இலக்கியாவும் சஞ்சயும் வந்துவிட்டார்கள். மணமக்கள் இருவருக்கும் அவர்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதால் வரவேற்புக்குக் குறைவில்லை. … Continue reading “அட்சரம் 7”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 6

நிஜத்தின் ஓரம் நின்று கற்பனை ஆழம் கடந்து மையில் வரைந்த மையல் கதைகள் மெய்யில் மெல்லினமாவது என்றோ? -அட்சரனின் வேதா அட்சரனின் கார் தேன்மலையின் மலைச்சரிவின் முகட்டிலிருக்கும் முதலமைச்சர் ஜெயசந்திரனின் விருந்தினர் மாளிகையான ஜெயவிலாசத்தின் பிரதான வாயிலருகே வரும்போதே, கமாண்டோக்கள் பாதுகாப்புக்காக ஆங்காங்கே நடமாடிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. காவல்துறை பந்தோபஸ்து அதிகமாக இருந்தது. அட்சரனின் காரைப் பரிசோதித்த காவலர் ஒருவர், அவனிடம் மாளிகைக்குள் செல்வதற்கான ஐ.டி பாஸ் இருக்கிறதா என விசாரித்தார். அருள்மொழி அவனுக்கு ஏற்கனவே அனுப்பி … Continue reading “அட்சரம் 6”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 5

கற்பனையில் ஆயிரம் காதல் கதைகள் நினைவில் அதன் சுவடறியேன் நான் எழுத்தில் இலயிக்கும் என் விரல்கள் உயிர்ப்பில் வருமெனில் உருகுமோ காதலில் -அட்சரனின் வேதா அன்று வாரவிடுமுறை. காலையில் எழுந்ததும் அன்னை தன்னிடம் குறை கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகவே வாசல் தெளித்து அழகாய்க் கம்பி கோலம் போட்டிருந்தாள் வேதவதி. கூடவே கனகவல்லியின் அன்றாட வேலையான தையல் மெஷின்களைத் துடைக்கும் வேலையையும் செய்துவிட்டாள். சரியாக அவள் காபி போடத் தயாராகுகையில் கனகவல்லி எழுந்துவிட்டார். “குட் மார்னிங்மா! காபி போடப்போறேன். … Continue reading “அட்சரம் 5”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 4

காகிதப் பூக்களில் காதல் வளர்த்தேன் தூரிகைத் துளிகளில் துணையைத் தேடினேன், வாசிக்கக் கிடைக்கா வரமாம் காதல்! வரம் கிடைக்க தவம் பிரதானமாம்! யாரை நோக்கி தவமிருப்பது நான்? -அட்சரனின் வேதா அட்சரனின் கறுப்பு ரேஞ்ச் ரோவர் கொச்சியின் ஃபோர்ட் கொச்சி என்ற பகுதிக்குள் நுழைந்தது. மழைக்காலம் முடிந்திருந்தாலும் வீசிய காற்றில் ஒருவித ஈரப்பதம் இருந்தது. அந்தப் பகுதியிலிருக்கும் பழங்காலத்துப் போர்த்துக்கீசியக் கட்டிடங்களும், நவீன கட்டிடக்கலையின் சான்றாய் நிற்கும் கலைக்கூடங்களும் அவனுக்கு ஒருவித மோனநிலையை உருவாக்கின. அவன் தேடி … Continue reading “அட்சரம் 4”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 3

வேண்டாம் என நீ வேரறுத்த போதும், மீண்டும் முளைத்தேன் மீட்சி கொண்டே! துளிர்த்த பின்னே துணை எதற்கு? தனித்து வளருவதே தவம் எனக்கு! –அட்சரனின் வேதா “அப்படி என்ன சொல்லி வச்ச அச்சு? ஒரே அழுகை அந்தப் பொண்ணு. பாக்கவே பாவமா இருந்துச்சுடா. முகமெல்லாம் சிவந்து போச்சு.” ஸ்ரீமயாவின் கதை நிராகரிக்கப்பட்ட பிறகு நடந்த அனைத்தையும் அட்சரனிடம் சொல்லிவிட்டு, ஆதங்கமாய் வினவினார் ராஜேஸ்வரி. அட்சரன் அசட்டையாய்த் தோள்களைக் குலுக்கினான். “அவ எழுதுனது என்னவோ அதைத்தான் சொன்னேன். அந்தப் … Continue reading “அட்சரம் 3”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 2.2

வேண்டுமென்றே அவளைப் பயமுறுத்த நமட்டுச் சிரிப்போடு கேட்டாள் ஒரு பெண். “அட! நீ வேற வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டியா ரோஜா?” என்று அந்தப் பெண்ணை அடக்கிய கனகவல்லி, “யாழினி வீட்டுல உக்காந்து டைப் பண்ணு. மத்த இடத்துக்குப் போனா இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வா” என மகளை அனுப்பிவைத்தார். அதென்ன யட்சன் கதை என்று யோசித்தவளாய் யாழினியின் வீட்டுக்கு நடை போட்டாள் வேதவதி. தையல் வகுப்பு இப்போது ஆரம்பித்தால் மதிய உணவுக்கான நேரம் வரை தொடரும். … Continue reading “அட்சரம் 2.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 2.1

உயிரே அடங்கும் உன் குரலில் பேச்சிழந்ததே இந்தப் பெண்மை! விதையற்று விழுந்தேன் மண்ணில் என் எழுத்துகள் தோற்றம் கணமிதுவோ? -அட்சரனின் வேதா “இன்னைக்குக் காலேஜ் லீவு. கொஞ்சம் எனக்கு ஒத்தாசையா வீட்டுவேலை செஞ்சா, நான் டெய்லரிங் கிளாசுக்கு வர்ற பிள்ளைங்களுக்குச் சீக்கிரமா கிளாஸை முடிச்சிடுவேன். ஆனா உங்க செல்ல மகாராணி இன்னைக்கும் பின்வாசல் திண்ணைல உக்காந்து டொக்கு டொக்குனு அந்த லேப்டாப்பைத் தட்டிக்கிட்டிருக்கா. நாலு மனுஷ மக்காகிட்ட பேசுனா தானே தைரியம் வரும்? எப்பவும் லேப்டாப்பே கதினு … Continue reading “அட்சரம் 2.1”

 

Share your Reaction

Loading spinner