அத்தியாயம் 65

மனநல மருத்துவர்கள் பீட்டா – ப்ளாக்கர்களை குறுகிய கால ஆன்சைட்டி அறிகுறிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். இத்தனைக்கும் பீட்டா – ப்ளாக்கர்கள் அதற்கான மருந்துகளே இல்லை என்றாலும் அவை குறைந்த பக்க விளைவை உண்டாக்குவதாலும், ஆன்சைட்டியின் தீவிரம் குறைவு என்பதாலும், சில சூழல்களில் ஆன்சைட்டியால் உண்டாகும் அடிப்படை உடலியல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த அவற்றை பயன்படுத்துகின்றனர். உதாரணமாக சிலருக்கு சில போபியாக்கள் உண்டு. அந்த போபியா அவர்களைத் தாக்கும்போது காரணமின்றி ஏற்படும் அளவுக்கதிகமான பயத்தால் உண்டாகும் அதிவேக இதயத்துடிப்பு, ட்ராமா […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 64

ஆன்டி – ஆன்சைட்டிக்கான மருந்துகள் ஆன்சைட்டியின் அறிகுறிகளான பேனிக் அட்டாக், அதீத பயம் மற்றும் கவலையைப் போக்க உதவும். மன அழுத்தத்தைக் குணமாக்க நிறைய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில ஆன்சைட்டியையும் குணப்படுத்தும். பேனிக் டிஸ்சார்டர் மற்றும் சோசியல் ஆன்சைட்டி டிஸ்சார்டருக்குச் சிகிச்சையளிக்கையில் மருத்துவர்கள் SSRI மற்றும் இதர ஆன்டி டிப்ரசண்டுகளை வைத்தே சிகிச்சையை ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் மற்ற மருந்துகளோடு ஒப்பிடுகையில் அவற்றிற்கு பக்கவிளைவு குறைவு. பென்ஸோடயாப்சைன்கள் ஆன்டி ஆன்சைட்டிக்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளாகும். குறுகிய கால ஆன்ஸைட்டி […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 63

ஆன்டி-டிப்ரசண்டுகள் உடலில் செயல்பட ஆரம்பிக்க நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அந்த நான்கு முதல் எட்டு வாரங்களில் தூக்கம், பசியுணர்வு, உற்சாகம் மற்றும் கவனம் போன்றவை இயல்புக்கு வர ஆரம்பிக்கும். ஒரு மருந்துக்கு செயல்படுவதற்கான கால அவகாசத்தைக் கொடுப்பது என்பது அது நமக்குச் சரியான மருந்தா என்று தீர்மானிப்பதை விட முக்கியமானது. இந்த ஆன்டி-டிப்ரசண்டுகள் பொதுவான பக்க விளைவுகளான வயிற்று உபாதை, தலைவலி மற்றும் பாலியல் உணர்வுகள் மரத்துப் போதல் போன்றவற்றை உருவாக்கும். இந்த […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 62

மனப்பிறழ்வு குறைபாட்டுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் முக்கியமானவை ‘ஆன்டி-டிப்ரசண்டுகள்’ எனப்படும் மருந்துவகைகள். இவை மன அழுத்தத்தைச் சரி செய்வதற்காக கொடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் மனநல நிபுணர்கள், ஆன்சைட்டி, வலி மற்றும் தூக்கமின்மையைக் குணப்படுத்தவும் இந்த ‘ஆன்டி-டிப்ரசண்டுகளை’ நோயாளிகளுக்குக் கொடுப்பதுண்டு. SSRI, SNRI, NDRI இந்த மருந்துகள் பொதுவாக மன அழுத்தம் மற்றும் ஆன்சைட்டி போன்ற குறைபாடுகளுக்குப் பெருவாரியான மனநல மருத்துவர்களால் தற்காலத்தில் கொடுக்கப்படுகின்றன. முன்பு கொடுக்கப்பட்ட மருந்துகளை விட இவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவு. முந்தைய ஆன்டி-டிப்ரசண்டுகளான ட்ரைசைக்ளிக்ஸ் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 61

மனரீதியான பிரச்சனைகளைக் குணமாக்குவதில் மருந்துகளின் பங்கு முக்கியமானது. சைக்கோதெரபி மற்றும் மூளைத்தூண்டுதல் தெரபியோடு சேர்த்து மருந்துகளும் சைக்கோபதிக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் நோயாளிகளிடம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதோடு எந்த மருந்து அவர்களுக்கு ஏற்றது என உடலில் செலுத்தி அதன் விளைவைப் பரிசோதித்த பின்னர் தான் அந்த மருந்து அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே மனரீதியான பிரச்சனைகளுக்குத் தன்னிச்சையாக மருந்து எடுத்துக்கொள்வது தவறு. அதற்கென உள்ள மருத்துவ நிபுணர் அல்லது மனவியல் நிபுணரிடம் சென்று பரிசோதித்து, சம்பந்தப்பட்ட […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 60

Humanistic therapy என்பது மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் எந்தளவுக்கு சூழலை நல்லவிதமாகக் கையாள முடிகிறதென்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. இதில் அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்றவை குறித்து நோயாளிகளுக்குக் கவுன்சலிங் அளிக்கப்படும். மானுட தத்துவ அறிஞர்களான ஜேன் பால் சார்ட்டர், மார்ட்டர் பபர் மற்றும் சோரன் கியர்கெகார்ட் இந்த வகை தெரபியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்கள். ஹியூமானிஸ்டிக் தெரபி மூன்று வகைப்படும். Client Centered therapy, Gestalt therapy, Existential therapy ஆகியவையே […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 59

‘Cognitive therapy என்பது நோயாளிகள் என்ன செய்கிறார்கள் என்பதை விட அவர்கள் என்ன மாதிரி சிந்திக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தும் தெரபி ஆகும். தவறான சிந்தனைகள் தான் தவறான செயல்களுக்கு வழிவகுக்குமென இந்த தெரபிஷ்ட்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனவே அவர்களது சிந்தனையை நேர்வழிப்படுத்துவதன் மூலம் அவர்களது உணர்வுகளையும் செயல்களையும் நேர்வழிப்படுத்தமுடியும் என்பதே இந்த தெரபியின் சாராம்சம். இந்த தெரபியை உருவாக்கியதில் ஆல்பர்ட் எல்லிஸ் மற்றும் ஆரோன் பெக் என்ற இருவரின் பங்கு அளப்பரியது. -American Psychological assoiciation […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 58

பிஹேவியர் தெரபி என்பது ஒரு சைக்கோபாத்தின் சாதாரண மற்றும் அசாதாரண நடத்தைகளைப் பற்றி அறிந்துகொண்டு அவற்றை சரிசெய்யும் தெரபியாகும். இந்த தெரபி முறையில் இவான் பவ்லோவ் என்பவரின் பங்கு அதிகம். நோயாளி விரும்பத்தக்க சூழல்களை உருவாக்கிக்கொடுத்து அதன் மூலம் அவர்களை சரிபடுத்த முயற்சிப்பார்கள். அடுத்த முறை அவர்களுக்குப் பிடிக்காத அல்லது விரும்பத்தகாத சூழலை உருவாக்கி, அதன் மூலம் அவர்கள் எந்தளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை மதிப்பிடுவார்கள். அடுத்த முறையை ‘Operant conditioning’ என்பார்கள். அந்த முறை […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 57

சைக்கோ அனாலிசிஸ் மற்றும் சைக்கோடைனமைட் தெரபி – இவை இரண்டும் சைக்கோதெரபி முறைகளாகும். இவை இரண்டுமே பிரச்சனைக்குரிய குணாதிசயங்கள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை மாற்றியமைக்கக்கூடிய சிகிச்சை முறைகளாகும். அதிலும் சைக்கோ-அனாலிட்டிக்கல் சம்பந்தப்பட்ட தெரபிகள் தெரபிஷ்டுக்கும் நோயாளிக்குமிடையே நல்லதொரு நட்பை உருவாக்கும். அதன் மூலம் நோயாளியின் பாதிப்பு எவ்வளவு தீவிரம் என்பதை தெரபிஷ்ட் தெரிந்துகொள்ள முடியும். அதோடு நோயாளிகள் தெரபிஷ்டுடன் எப்படி பழகுகிறார்கள் என்பதை வைத்து தங்களது குணநலன்களைப் புரிந்து கொள்வார்கள். சைக்கோ அனாலிசிஸ் சிக்மண்ட் ஃப்ராடுடன் சேர்த்து […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 56

சைக்கோபதிக்கான சிகிச்சை சிக்கலானது மற்றும் பன்முகத்தன்மை கொண்டதும் கூட. அதில் சைக்கோதெரபி, நடத்தை பற்றிய பயிற்சிகள், மருந்துகள் போன்றவை அடங்கும். குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்கு ‘ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபி’ எனப்படும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரபி கொடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் அக்குழந்தையின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட இந்த தெரபி உதவியாக இருக்கும். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கே தெரபிஸ்ட் நேரடியாகப் போய் சில தெரபிகளை அளிப்பார். ஆனால் அதன் பலன் மற்ற சிகிச்சைகளோடு ஒப்பிடும்போது […]

 

Share your Reaction

Loading spinner