சமூகவிரோத நடத்தை கோளாறுகளில் மிகவும் தீவிரமானது சைக்கோபதி எனப்படும் மனப்பிறழ்வுக்குறைபாடு. இதற்கு சிகிச்சை முறைகள் இருந்தாலும் அந்தச் சிகிச்சையை முழுவதுமாக செய்து முடிப்பதற்கு ஏகப்பட்ட தடைகள் உள்ளன. சைக்கோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குச் சரியாக உடன்படமாட்டார்கள். தங்களது குறைபாட்டைப் பற்றிய எவ்வித கவலையுமின்றி சிகிச்சையே தேவையில்லை என்ற மனப்பாங்குடன் வாழ்பவர்கள் அதிகம். அவர்களுக்குப் புரிந்துணர்வு குறைவு என்பதால் தங்களது சைக்கோபதியின் தீவிரம், அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றி எல்லாம் எடுத்துக் கூறினாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. தங்களது […]
Share your Reaction

