யுத்தம் 15

“மனிதர்கள் அழுவதற்கு காரணம் அவர்களின் பலவீனம் அல்ல! அவர்களது மனவுறுதி நீண்டகாலம் அத்தகைய சோகங்களை தாங்கிவிட்டது என்பதால் தான்!”                                                                -ஜானி டெப் மவுண்ட் கல்லூரியின் கலையரங்கு… மாணவர்களுக்கும் அருள்மொழிக்குமான கலந்துரையாடலில் நேரம் போனதே தெரியவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் கேள்வி கேட்டே வளர்ந்தவர்கள்! அவர்களை எந்தவொரு விசயத்திற்கும் சம்மதிக்க வைப்பது கடினம்! அதை அன்றைய கலந்துரையாடலில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டான் அருள்மொழி. அவனை நோக்கி வைக்கப்பட்ட கேள்விகள் அப்படிப்பட்டவை! அவனது கல்லூரிப்பருவம், அரசியல்வாதியின் மகனாக இருந்தும் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 15

அபிமன்யூவும் அஸ்வினும் வீட்டை விட்டு கிளம்பிய சில மணி நேரங்களில் வாசுதேவனின் கார் பார்த்திபன் வீட்டிற்குள் நுழைந்தது. நீண்டநாட்கள் கழித்து அந்த வீட்டுக்கு வந்த வாசுதேவன் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டிருந்த தங்கையை கண்டதும் “சுபிம்மா!” என்று அன்பொழுக அழைக்க அவர் வெளிநாடு சென்று திரும்பிய அண்ணனை வீட்டுக்கு சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அவரே வீடு தேடி வந்ததை அறிந்ததும் மகிழ்ந்தார். “அண்ணா” என்றபடி எழுந்து நின்ற தங்கையை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டார் வாசுதேவன். […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 14

பசியினால் திருடுகிற ஏழைகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அரசிடமிருந்து கோடிக்கணக்காகத் திருடுபவர்கள் ஒரு நாள் கூட சிறைத் தண்டனை அனுபவித்ததில்லை.                                                                                                                           -பிடல் காஸ்ட்ரோ மவுண்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டி… கல்லூரியின் கலையரங்கமானது மாணவர்களால் நிரம்ப ஆரம்பித்தது. அன்றைய தினம் அருள்மொழி அக்கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாட இருந்தான். அதற்கான பரபரப்பு அங்கே இருக்கும் ஒவ்வொருவரிடமும் நிரம்பி வழிய பேராசிரியர்கள் மாணவர்களை கலையரங்கத்திற்கு செல்லும்படி கட்டளையிட்டுக் கொண்டிருந்தனர். இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 14

ஸ்ராவணி பக்கத்து ஃப்ளாட்டில் இருப்பவர்களை எச்சரித்துவிட்டு வந்ததும் பிரச்சனை முடிந்து விட்டதாக அனைவரும் நினைக்க ஆனால் அவர்களோ தங்களின் அடுத்தத் தாக்குதலை ஆரம்பித்தனர். அன்று இரவு நன்றாக உறங்கி கொண்டிருந்த போது கதவு தட்டப்பட ஸ்ராவணி விழித்துவிட்டாள். கண்ணை கசக்கியபடி “இந்த நேரத்துல யாரு?” என்று சொல்லிக்கொண்டே ஹாலின் விளக்கை போட்டவள் தூக்க கலக்கத்துடன் கதவை திறக்க பக்கத்து ஃப்ளாட்டிலிருந்த வினோத ஜீவன் தான் கதவை தட்டிவிட்டு நின்றுகொண்டிருந்தான். ஸ்ராவணி கடுப்புடன் “பைத்தியமா உனக்கு? எதுக்கு கதவை […]

 

Share your Reaction

Loading spinner

துளி 13

மேனகா ஸ்ராவணியை விரட்டிக் கொண்டிருக்கும் போதே போன் அடிக்க எடுத்தவள் “ஹலோ சீஃப்! எதும் இம்பார்டெண்ட் மேட்டரா? இந்த நேரத்துல கால் பண்ணிருக்கிங்க?” என்று கேட்க இவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தன்மை மாறி விஷ்ணு எதற்கு அழைத்திருப்பான் என்ற கேள்வியுடன் ஸ்ராவணியும் மேனகாவை கவனிக்க ஆரம்பித்தாள். “சீஃப் டென்சனாகுற அளவுக்கு எதுவும் இல்ல. இதுக்காகவா ஊட்டியில இருந்து அடிச்சு பிடிச்சு ஓடி வந்திங்க? கண்டிப்பா மதர் இந்தியா நாளைக்கு இதுக்கு ஒரு என்கொயரி கமிட்டிய வைப்பாங்க. நாளைக்கு […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 13

“அரசியலானது எப்போதுமே வெற்றிடத்தை விரும்புவதில்லை. அங்கே உண்டாகும் வெற்றிடமானது நிரம்பியே ஆகவேண்டும். அதை நம்பிக்கையால் நிரப்புவதற்கு எவரும் இல்லையெனில், அவ்விடமானது பயத்தைக் கொண்டு நிரப்பப்படும்”                          -எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் நவோமி க்ளெய்ன் ராமமூர்த்தி அவரது வீட்டில் அவருக்கென அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக அலுவலக அறையில் யோசனையுடன் அமர்ந்திருந்தார். அவர் முன்னே சிதறி கிடந்த செய்தித்தாள்கள் அனைத்திலும் தலைப்புச்செய்தியாகவோ, ஒரு பக்க செய்தியாகவோ அல்லது மாவட்டச்செய்தியாகவோ அருள்மொழி சிரித்துக் கொண்டிருந்தான். தமிழக அரசியலில் இத்தகைய அணுகுமுறைகள் கூட […]

 

Share your Reaction

Loading spinner

துளி 12

ஸ்ராவணி மண்டபத்திலிருந்து வீட்டுக்கு வந்தவள் சோகவடிவாக அமர்ந்திருந்த பெற்றோரை பார்த்துவிட்டு இவர்களை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் அருகில் சென்று அமர சுப்பிரமணியம் மகளின் கையைப் பிடித்து “வனிம்மா! இன்னைக்கு நடந்ததை நினைச்சு ரொம்ப கவலை படாதே. ஆண்டவன் பிறக்குறப்போவே இன்னாருக்கு இன்னார்னு எழுதி வச்சிடுவான். இன்னைக்கு நடந்ததை வச்சு பாத்தா விக்ரமும் நீயும் ஒன்னு சேரக் கூடாதுங்கிறது அந்த கடவுளே முடிவு பண்ணனுனதுனு எனக்கு தோணுது. உனக்கு ஏதும் வருத்தம் இல்லையேடா?” […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 12

“அரசியலைப் பொறுத்த வரை எந்த ஒரு நிகழ்வும் தற்செயலாக நடப்பதில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்குமாயின் அது கட்டாயமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக மட்டுமே இருக்குமென நீங்கள் அறுதியிட்டுக் கூறலாம்”                                            -ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் வானதி அருள்மொழியிடம் அளித்திருந்த கட்சிப்பிரமுகர்கள் பற்றிய அறிக்கையானது அவனுக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கி இருந்தது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து வேட்பாளர் தேர்வு நடைபெறுமாயின் கட்டாயம் அது கட்சிக்குள் அதிருப்தி அலையை உண்டாக்கும் என்று யூகித்தவன் அவள் இரண்டாம் கட்ட […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 11

“வாழ்வில் படிக்க வேண்டுமென்றால் குருவிற்கு மாணவனாய் இரு! அரசியல் படிக்க வேண்டுமென்றால் தலைவனுக்குத் தொண்டனாய் எப்போதும் இருந்து விடாதே! ஏனென்றால் தலைவன் உன்னை வைத்து அரசியல் செய்வானே தவிர அதை உனக்குக் கற்றுத் தர மாட்டான்”                                                               -சாணக்கியர் ஆஷிஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் அன்றைய தினம் சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தின கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்டுதோறும் டிசம்பர் இரண்டாம் தேதி இத்தினம் அங்கே கொண்டாடப்படுமா என்றால் அதற்கு இல்லையென்ற பதில் தான் பள்ளியின் தரப்பிலிருந்து கிடைக்கும். […]

 

Share your Reaction

Loading spinner

துளி 11

“நான் வர்றதுக்குள்ள யாருப்பா நிச்சயதார்த்தத்தை ஆரம்பிச்சது?” என்றபடி உள்ளே வந்த அபிமன்யூவை ஸ்ராவணியின் விழிகள் கூறு போட அவன் அதை கண்டுகொள்ளாதவனாய் முன் வரிசையில் ஒரு நாற்காலியை இழுத்துபோட்டு விட்டு அமர்ந்துவிட்டு அஸ்வினையும் உட்காருமாறு கண்காட்ட அவன் சங்கடத்துடன் அமர்ந்தான். “என்ன பாத்துட்டே இருக்கிங்க ஐயரே? நல்ல நேரம் முடியறதுக்கு முன்னாடி பத்திரிக்கையை வாசிங்க” என்று கட்டளையிட விக்ரமின் குடும்பத்தார் ஸ்ராவணியின் கேள்வியாய் நோக்க நிச்சயப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. அதற்கு பின் ஸ்ராவணியிடம் பட்டுச்சேலையை கொடுத்து மாற்றி வருமாறு […]

 

Share your Reaction

Loading spinner