அட்சரம் 3

வேண்டாம் என நீ வேரறுத்த போதும், மீண்டும் முளைத்தேன் மீட்சி கொண்டே! துளிர்த்த பின்னே துணை எதற்கு? தனித்து வளருவதே தவம் எனக்கு! –அட்சரனின் வேதா “அப்படி என்ன சொல்லி வச்ச அச்சு? ஒரே அழுகை அந்தப் பொண்ணு. பாக்கவே பாவமா இருந்துச்சுடா. முகமெல்லாம் சிவந்து போச்சு.” ஸ்ரீமயாவின் கதை நிராகரிக்கப்பட்ட பிறகு நடந்த அனைத்தையும் அட்சரனிடம் சொல்லிவிட்டு, ஆதங்கமாய் வினவினார் ராஜேஸ்வரி. அட்சரன் அசட்டையாய்த் தோள்களைக் குலுக்கினான். “அவ எழுதுனது என்னவோ அதைத்தான் சொன்னேன். அந்தப் … Continue reading “அட்சரம் 3”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 2.2

வேண்டுமென்றே அவளைப் பயமுறுத்த நமட்டுச் சிரிப்போடு கேட்டாள் ஒரு பெண். “அட! நீ வேற வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டியா ரோஜா?” என்று அந்தப் பெண்ணை அடக்கிய கனகவல்லி, “யாழினி வீட்டுல உக்காந்து டைப் பண்ணு. மத்த இடத்துக்குப் போனா இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வா” என மகளை அனுப்பிவைத்தார். அதென்ன யட்சன் கதை என்று யோசித்தவளாய் யாழினியின் வீட்டுக்கு நடை போட்டாள் வேதவதி. தையல் வகுப்பு இப்போது ஆரம்பித்தால் மதிய உணவுக்கான நேரம் வரை தொடரும். … Continue reading “அட்சரம் 2.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 2.1

உயிரே அடங்கும் உன் குரலில் பேச்சிழந்ததே இந்தப் பெண்மை! விதையற்று விழுந்தேன் மண்ணில் என் எழுத்துகள் தோற்றம் கணமிதுவோ? -அட்சரனின் வேதா “இன்னைக்குக் காலேஜ் லீவு. கொஞ்சம் எனக்கு ஒத்தாசையா வீட்டுவேலை செஞ்சா, நான் டெய்லரிங் கிளாசுக்கு வர்ற பிள்ளைங்களுக்குச் சீக்கிரமா கிளாஸை முடிச்சிடுவேன். ஆனா உங்க செல்ல மகாராணி இன்னைக்கும் பின்வாசல் திண்ணைல உக்காந்து டொக்கு டொக்குனு அந்த லேப்டாப்பைத் தட்டிக்கிட்டிருக்கா. நாலு மனுஷ மக்காகிட்ட பேசுனா தானே தைரியம் வரும்? எப்பவும் லேப்டாப்பே கதினு … Continue reading “அட்சரம் 2.1”

 

Share your Reaction

Loading spinner

எபிலாக்

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு… என்.எஸ்.என் நிவாசம், குலவணிகர்புரம்… “இன்னும் பெரிய சர்க்கிள் போடுங்கம்மா,” மலர்விழியிடம் தனது உள்ளங்கையில் இருக்கும் மருதாணியால் போடப்பட்ட வட்டத்தை இன்னும் பெரிதாக்குமாறு கேட்டான் கதிர்காமன். “போதும்டா குட்டி. இதுக்கு மேல பெருசா போட்டா உள்ளங்கை முழுக்க ரெட்டிஷ் ஆகிடும்,” மகனிடம் அவனைப் போலவே மழலையில் மிழற்றியபடி மருதாணி வட்டத்தைப் போட்டு முடித்தாள் மலர்விழி. “ஐ! உங்க கை ஆரஞ்ச் கலர் ஆகிடுச்சு!” குழந்தை ஆச்சரியமாய்ப் பார்த்துக் குதூகலமாய் சொல்லும்போதே, “உங்கம்மாவுக்குப் பித்த உடம்புடா குட்டி. … Continue reading “எபிலாக்”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 1.2

“ஹாய்டா அச்சு! சீக்கிரமே வந்துட்ட?” “ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க வர்றேன்.” “காலைல ஏர்போர்ட்ல என்னடா வேலை உனக்கு?” என்றபடி அலுவலக அறைக்குள் இருந்து குரல் கொடுத்தாள் இலக்கியா. “அருள் வந்திருக்கான்.” அவன் பதில் சொன்னதும் இருவரும் அவனிடம் வந்துவிட்டார்கள். “என்னடா சொல்லுற? எப்ப வந்தான்? உன்கிட்ட மட்டும் சொன்னானா? அப்ப நாங்கல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் யாரோதானே?” இருவரும் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுக்கவும், அமைதியாயப் பார்த்துவிட்டு சோஃபாவில் சரிந்தான் அட்சரன். “அவன் ஏதோ பிளான் வச்சிருக்குறதா … Continue reading “அட்சரம் 1.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 1.1

மைவிழிப் பார்வையில் மையல்கள் பூக்க கைவளை ஓசையிடக் கதைகள் கோர்க்க சின்னஞ்சிறு புன்னகை சிந்தும் கதிரே! வண்ணத் தமிழால் வரிப்பேன் உன்னையே! –அட்சரனின் வேதா சென்னையின் இதயப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் காலை நான்கே முக்கால் மணிக்கே அந்த டியூப்ளக்ஸ் வீடு சுறுசுறுப்பாகியிருந்தது. வீட்டின் தலைவியான ராஜேஸ்வரி சமையலறையில் காபி போட்டுக்கொண்டிருக்க, அதன் நறுமணத்தில் கண் விழித்துவிட்டார் அவரது கணவரான சதானந்தன். சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் இயங்கி வரும் ‘ராஜி சூப்பர் மார்க்கெட்’டின் உரிமையாளரான அவர், ஏழு மணிக்கு … Continue reading “அட்சரம் 1.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 100 (இறுதி)

கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் சாத்தான் வழிபாடு நடத்தும் குழுக்கள் இருப்பதாக காவல்துறையின் அறிக்கைகள் கூறுகின்றன. இதில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் என்கிறது இவ்வறிக்கை. இதில் கலந்துகொள்வதற்கான நோக்கங்கள் – அதீத சக்தி வேண்டும், பணக்காரனாகும் ஆசை, எதிரிகளை அழிக்க வேண்டும் – இவையே ஆகும். இதை எல்லாம் சாத்தான் செய்வார் என்று அவர்கள் அழுத்தமாக நம்புகின்றனர். இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களுக்கு பெரிய போதைப்பொருள் … Continue reading “அத்தியாயம் 100 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 99

கேரளாவில் பதினான்கு மாவட்டங்களில் சாத்தான் வழிபாட்டு குழுவினர் தங்களுக்கென சர்ச்களை நிர்மாணித்துள்ளதாக ராஜிவ் சிவசங்கர் கூறுகிறார். இத்தகைய சர்ச்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட வீடுகளிலும் அப்பார்ட்மெண்ட்களிலும் செயல்படுகின்றன. இவர்கள் ‘சாத்தான் சேவா’ என்ற நிகழ்வை செய்கிறார்கள். அந்நிகழ்வின் போது சாத்தான் உங்களைப் பணக்காரர் ஆக்குவார், எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பார் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயலுகிறார்கள். அதிலும் தொழில் நொடிந்த பிசினஸ்மேன்கள் தான் இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களின் இலக்கு என்கிறார் … Continue reading “அத்தியாயம் 99”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 98

குழந்தைகளுக்குப் இளஞ்சிறார்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதும் சாத்தானிஷ வழிபாட்டின் முக்கியமான சடங்காகும். 2016ல் கேரள காவல்துறையினர் சாத்தான் கல்ட் கும்பலைச் சேர்ந்த பதினோரு பேரைக் கைது செய்தார்கள். அவர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஒருவனை சாத்தான் வழிபாடு என்ற பெயரில் பல ஆண்டுகளாக வன்புணர்வு செய்து வந்தது தெரிய வந்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தக் குழுக்களின் ஊடுருவலால் போதைப்பொருள் மாஃபியாவும் பெருகியுள்ளது என்கிறார்கள் கேரள காவல்துறையினர். சாத்தானிஷத்தில் ஈடுபடுபவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை சுலபமாகப் பணமீட்டும் முறையாகத் … Continue reading “அத்தியாயம் 98”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 97

கேடல் ஜேசன் ராஜா வழக்கைத் தொடர்ந்து இண்டலிஜென்ஸ் அதிகாரிகள் கேரளாவின் சாத்தான் வழிபாட்டு கல்ட் கும்பல்கள் தங்களது வலையை விரிப்பதாக கூறி எச்சரிக்கை விடுத்தார்கள். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பது இம்மாதிரி கல்ட் கும்பல்களின் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாகும். இம்மாதிரி சாத்தானிஷ குழுக்கள் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுவார்கள். கிறிஸ்தவர்கள் திருப்பலியைப் போல ‘ப்ளாக் மாஸ்’ என்ற நிகழ்வை சாத்தானிஷ கும்பல்கள் நடத்துவார்கள். கிறிஸ்தவம் மட்டுமன்றி ஏனைய மதங்களிலும் புனிதமானதாகவும் இறையருள் நிறைந்ததாகவும் … Continue reading “அத்தியாயம் 97”

 

Share your Reaction

Loading spinner