அட்சரம் 14.1

பகட்டு நகரத்தின் பளபளப்பும் ஆணவன் பார்வையின் அலட்சியமும் அந்நிய இடத்தின் மருட்சியும் மொத்தமாய் அணை போட்டதில் பேதலித்து நின்றாளே சிற்றூர்ப்பெண்! -அட்சரனின் வேதா அட்சரன் ஹெல்வட்டாசுக்குக் கிளம்ப காரை எடுக்கும்வரை அவனது பெற்றோர் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. அருள்மொழி தகவல் சொன்ன நேரத்துக்குக் கிளம்பியிருந்தால் இந்நேரம் அவர்கள் வீட்டுக்கு வந்திருப்பார்கள். ஒருவேளை இரவில் பயணம் செய்ய வேண்டாமென முடிவெடுத்து ஏதேனும் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்திருக்கலாம் என்று மூளை சொன்னபோது அதை அட்சரனுக்கு ஒத்துக்கொள்ளவே தோன்றியது. ஏனெனில் அதெல்லாம் … Continue reading “அட்சரம் 14.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 13

தேன்மழைச் சாரலில் தேகமும் நனைய, கால்நடைப் பாதையில் காலங்கள் கரைய, பச்சை மலையை பிரிந்து செல்கையில், அச்சம் கொள்ளுதடி நங்கையின் மனமே! -அட்சரனின் வேதா “வேதாவை என் மருமகளா என்னோட அழைச்சிட்டுப் போறேன். அவ இனிமே எங்க பொறுப்பு. எந்தப் பிரச்சனையும் வராம நான் பாத்துக்குறேன். இது என் மகன் மேல சத்தியம் அண்ணா.” உணர்ச்சிவசப்பட்டக் குரலில் கஜேந்திரனுக்கு வாக்கு கொடுத்தார் ராஜேஸ்வரி. அருள்மொழி – வானதியின் மறுவீட்டுச் சடங்குக்காக வந்திருந்த விருந்தினர்கள், ஊர் மக்கள் முன்னிலையில் … Continue reading “அட்சரம் 13”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 12

விரும்பாமல் ஏறிய மாங்கல்யம் நெருப்பாய் தகித்தது அவன் மனம் பயத்தில் உறைந்தது பாவையின் இதயம் அயர்ந்து அதிர்ந்து அழகிய அந்தி! -அட்சரனின் வேதா வேதவதி தனது அறைக்குள் உணர்வுகள் மரத்துப்போன நிலையில் அமர்ந்திருந்தாள். ஜெயவிலாசத்தில் நடந்தேறிய கலவரங்கள் யாவும் கனவல்ல, நிஜம் என்பதை அவளது கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. எப்போது அது கழுத்தில் விழுந்ததோ அப்போது வீட்டுக்கு ஓடிவந்தவள் தான். தனது அறைக்குள் அடைபட்டுக்கொண்டாள். ஓடிவரும்போதே அவளது முதுகுக்குப் பின்னே ஊரார் அவளை ஏளனமாகப் … Continue reading “அட்சரம் 12”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 11

பழிகளின் சுமை தீயாய் தொடர விடாது பரவும் உன் விழிச்சினத்தீ! உறவில்லா உரிமையில்லா  நிலையில் கோபம் மட்டும் எவ்வகையில் அறம்? -அட்சரனின் வேதா ட்ரோன் மூலம் ஒளிபரப்பான காட்சியில் தன்னுடன் இருந்தவள் வேதவதி என்று அட்சரன் சொன்னதும், அவளது கண்கள் முதலில் பீதியுடன் பார்த்தது கனவல்லியின் முகத்தைத்தான். ‘என்ன இது’ என்பது போல மனம் துடிப்பதை கனகவல்லியின் முகபாவனை காட்டிக்கொடுத்துவிட, சிலையாய் சமைந்துவிட்டாள் வேதவதி. ‘அட்சரன் என்னதான் கூட்டத்தைச் சமாளித்தாலும் எனது பெற்றோரைச் சமாளிக்க வேண்டிய கடமை … Continue reading “அட்சரம் 11”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 10

பழி சுமந்த மேகம் பதறியழுதது! விழிச்சினம்தனில் விறகாய் எறிந்தது! செய்யாப்பிழைக்குச் செந்நெருப்பானவனே! உரிமையில்லா உன் கோபம் தீயானது! -அட்சரனின் வேதா “முகூர்த்தம் முடிஞ்சதும் கிளம்பிடுவீங்களா? என்ன இது பழக்கம்? ஏன்டிமா வேதா நீயாச்சும் இருக்கச் சொல்லு உன் பேரண்ட்ஸை.” அருள்மொழி – வானதியின் திருமண முகூர்த்தம் முடிந்ததும் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்திய கையோடு கிளம்ப எத்தனித்த கனகவல்லியையும் கஜேந்திரனையும் தடுத்த கயல்விழி, வேதவதியிடம் முறையிட்டார். “அதில்லம்மா கயலு! பெரிய இடத்து ஆளுங்க வர்றாங்க. பொண்ணு மாப்பிள்ளைய … Continue reading “அட்சரம் 10”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 9.2

மறுநாள் மாலையில் மெஹந்தி, சங்கீத் என்று கொண்டாட்டத்தின் வர்ணங்களை அள்ளிப்பூசிக்கொண்டது ஜெயவிலாசம். டி.ஜே இசையோடு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடை சங்கீத் நிகழ்வுக்காகத் தயாராகியிருக்க, நீளநீளமாய் மெஹந்தி கோன்கள் அடுக்கப்பட்ட தட்டுகள் மலர் அலங்காரத்தோடு வைக்கப்பட்டிருந்தன. அந்த அலங்காரப்பந்தலுக்குக் கீழே ஒரு பூந்தோட்டமே அமர்ந்திருப்பது போல, இளம் பச்சை நிற லெஹங்காவில் வானதி ஜொலித்துக்கொண்டிருந்தாள். அவளது கரங்களில் மெஹந்தி பூக்கள் பூக்கத் தொடங்கின. மெஹந்தி வைத்துக்கொண்டிருந்த பெண் அவளது உள்ளங்கையில் ரகசியமாக ‘அருள்’ என்ற பெயரைச் செதுக்க, அதைச் … Continue reading “அட்சரம் 9.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 9.1

சுடரோ நிலவோ சுமக்கத் துணிந்தேன்! தடமோ திசையோ தயங்கி நின்றேன்! நிழலோ நிஜமோ நிழலில் தவிக்க அழகிய பிழையில் அலைகின்றேன் தனியே! -அட்சரனின் வேதா தனக்காக ஒதுக்கப்பட்ட அறையின் பெரிய சாளரம் அருகே நின்று கையிலிருக்கும் ஐபேடில் வேதவதி ஹெல்வட்டாசுக்கு அனுப்பி வைத்திருந்த மேனுஸ்கிரிப்டை வாசித்துக் கொண்டிருந்தான் அட்சரன். எல்லாம் வானதியால்தான். வேதவதி மேனுஸ்கிரிப்டை அனுப்பியதுமே “நீ கொஞ்சம் வாசிச்சுப் பாரு அச்சு. அப்பதான் நான் ஏன் வேதாவோட எழுத்து மேல இவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கேன்னு உனக்குப் … Continue reading “அட்சரம் 9.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 7

வாசல் கடக்காத வாசனை மலரிவள் நேசம் அறியாத நேயக் கனவிவள் துளிதுளியாய் பெருகும் அன்பின் ஊற்றிவள் கரையைத் தொடாத அமைதிக் கடலிவள் துடிக்கும் இதயத்தின் ஓசையைக் கேட்டவறிவாளா? -அட்சரனின் வேதா பரிகாரப் பூஜை அது இதுவென்று எல்லாம் முடிந்த பிறகு, அருள்மொழியையும் வானதியையும் அருகருகே அமர வைத்துவிட்டார்கள். ஏன் என்று கேட்க முடியாமல் கடனே என்று அவர்கள் அமர்ந்திருக்க, சரியாக அந்நேரத்தில் இலக்கியாவும் சஞ்சயும் வந்துவிட்டார்கள். மணமக்கள் இருவருக்கும் அவர்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதால் வரவேற்புக்குக் குறைவில்லை. … Continue reading “அட்சரம் 7”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 6

நிஜத்தின் ஓரம் நின்று கற்பனை ஆழம் கடந்து மையில் வரைந்த மையல் கதைகள் மெய்யில் மெல்லினமாவது என்றோ? -அட்சரனின் வேதா அட்சரனின் கார் தேன்மலையின் மலைச்சரிவின் முகட்டிலிருக்கும் முதலமைச்சர் ஜெயசந்திரனின் விருந்தினர் மாளிகையான ஜெயவிலாசத்தின் பிரதான வாயிலருகே வரும்போதே, கமாண்டோக்கள் பாதுகாப்புக்காக ஆங்காங்கே நடமாடிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. காவல்துறை பந்தோபஸ்து அதிகமாக இருந்தது. அட்சரனின் காரைப் பரிசோதித்த காவலர் ஒருவர், அவனிடம் மாளிகைக்குள் செல்வதற்கான ஐ.டி பாஸ் இருக்கிறதா என விசாரித்தார். அருள்மொழி அவனுக்கு ஏற்கனவே அனுப்பி … Continue reading “அட்சரம் 6”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 5

கற்பனையில் ஆயிரம் காதல் கதைகள் நினைவில் அதன் சுவடறியேன் நான் எழுத்தில் இலயிக்கும் என் விரல்கள் உயிர்ப்பில் வருமெனில் உருகுமோ காதலில் -அட்சரனின் வேதா அன்று வாரவிடுமுறை. காலையில் எழுந்ததும் அன்னை தன்னிடம் குறை கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகவே வாசல் தெளித்து அழகாய்க் கம்பி கோலம் போட்டிருந்தாள் வேதவதி. கூடவே கனகவல்லியின் அன்றாட வேலையான தையல் மெஷின்களைத் துடைக்கும் வேலையையும் செய்துவிட்டாள். சரியாக அவள் காபி போடத் தயாராகுகையில் கனகவல்லி எழுந்துவிட்டார். “குட் மார்னிங்மா! காபி போடப்போறேன். … Continue reading “அட்சரம் 5”

 

Share your Reaction

Loading spinner