அட்சரம் 29.2

“நைட் ரொம்ப நேரம் முழிச்சது தலைவலிக்குது அத்தை” பொய் சொல்லிச் சமாளித்தவள் ஹெல்வட்டாஸுக்குக் கிளம்ப ஆயத்தமாகிச் சாப்பிட வந்த அட்சரன் அக்கறையாய் நெற்றி கழுத்தில் கை வைத்து உடல்நலனைச் சோதித்தபோது இறுகிப்போனாள். “உடம்பு சூடு இல்லையே! எனக்காக முழிச்சிருந்தல்ல? அதான் தலை வலிக்குது. சாரி” “இட்ஸ் ஓகே” அவனது கரத்தை விலக்கிவிட்டவள் ஏறிட்டுப் பார்க்காமல் சாப்பிட்டு முடித்தாள். கிளம்பும்போது சதானந்தனிடம் “இன்னைக்கு என்னால சூப்பர் மார்க்கெட் போக முடியுமானு தெரியல மாமா” என்க “நீ எக்ஸாம் எழுதிட்டு … Continue reading “அட்சரம் 29.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 29.1

விண்மீன் உதிரும் விசித்திர இரவில் தாபங்கள் தீர்க்கும் காதலின் தாண்டவம்! உள்ளுயிரை ஈர்க்கும் ஸ்பரிசத்தின் தேடலில் பிரியாதப் பிணைப்பில் பிறந்ததொரு மோகம்! பின்னியக் கைகளும் மயங்கிய இதயங்களும் விழுமிய உறவாய் காதலின் தழுவலாய்! -அட்சரனின் வேதா “நீ போய்த் தூங்குடா வேதா! இந்தப் பையன் பர்த்டே பார்ட்டி வச்சான்னா வீட்டுக்கு வர மிட் நைட்டுக்கு மேல ஆகிடும். நாளைக்கு உனக்கு எக்ஸாம் வேற. முழிச்சிருந்தா எப்பிடி ஒழுங்கா எழுத முடியும்?” அட்சரனுக்காகக் காத்திருந்த வேதவதியை உறங்கச் சொன்னார் … Continue reading “அட்சரம் 29.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 28.2

“நேத்துதான் உன்னைக் கையில வாங்குன மாதிரி இருந்துச்சு. இன்னைக்கு இருபத்தெட்டு வயசுனா என்னால நம்பவே முடியல அச்சு” பின்னே நின்று தொண்டையைச் செருமினார் சதானந்தன். “அடுத்த வருஷம் அவனோட புள்ளையக் கையில வாங்குன அப்புறமாச்சும் உன் மகன் வளர்ந்துட்டான்னு நம்புவியா ராஜி?” ராஜேஸ்வரி சிரிக்க அட்சரன் “உஃப்” என்று பெருமூச்சு விட்டான். “பேரப்புள்ளைக்கு ஆசைப்பட்டா ஆச்சா?” என்று முரண்டியபடி எழுந்தவனை நமட்டுச்சிரிப்போடு பார்த்தவர் “மே கடைசிலதான் வளர்பிறை முகூர்த்தம் வருது. அதுல ஒரு நாளைக் குறிப்போம் நாங்க” … Continue reading “அட்சரம் 28.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 27

விழுங்கும் பார்வையில் விழுவதே விதியாய்! பனியாய் உருகும் தழுவலில் பற்றிய தீயாய்! சிதறும் முத்தங்கள் சிப்பிக்குள் முத்தாய்! கலந்து தவிக்கும் உடல்கள் கரையும் மெழுகாய்! மின்காந்த ஈர்ப்பில் இணைகிற தாபமாய்! காதலின் கடல்தனில் காயங்கள் கூட அணிகலனாய்! -அட்சரனின் வேதா செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணை வந்துவிட்டது அன்றைய தினம். பிரியம்வதா தேர்வுக்கு விடுமுறை விடுகையில் வேதவதியோடு சேர்ந்து படிக்கும் ஐடியாவில் இருந்தாள். “உன் வீட்டுக்கு நான் வரலாம் தானே பேப்?” “அஃப்கோர்ஸ். எனக்குப் புரியாததை நீ சொல்லிக் … Continue reading “அட்சரம் 27”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 26

வேனலின் தகிப்பைத் தணிக்கும் வேங்குழல் கீதம் அவள்! பாலைவனத்தில் பாயும் ஊற்றாய் பசும் சோலையாய் அவன்! மண்ணில் விழுந்த மழைத்துளியும் கடலில் கரையும் உப்புமாய் இரண்டறக் கலந்ததுவே இதயங்கள்! -அட்சரனின் வேதா கடல் அலைகளில் காலை நனைத்துக்கொண்டிருந்தாள் வேதவதி. அவளது ஒரு கரம் பாதுகாப்புக்காய் அட்சரனின் புஜத்தைப் பற்றியிருந்தது. அவன் அருள்மொழியிடம் போனில் பேசிக்கொண்டிருந்தான். பேச்சின் முடிவில் “கொஞ்சம் நடக்கலாமா? எனக்கு உன் கிட்ட பேசணும்” என்றான் வேதவதியிடம். அவளும் அலையில் விளையாடுவதைக் கைவிட்டவளாய் அவனோடு நடக்க … Continue reading “அட்சரம் 26”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 25

விலகல் முடிந்தொரு வியப்புப் பூக்கும்!   இவன் விழியில் அவளது விம்பம்! கரைகள் உடைந்தொரு கங்கை வெள்ளம்! இரு கண்கள் வழியாய் காதலைச் சொல்லும்! சிதறும் மேகங்கள் சிநேகம் கோர்க்கும்! அவனில் கலந்தாள் அமுதச் சொல்லாய்! –அட்சரனின் வேதா “ஓகே பிருந்தா! நீங்க போயிடுவீங்களா இல்ல உங்களை டிராப் பண்ண நான் வரட்டுமா?” அட்சரன் பேசுவதை எரிச்சலோடு கேட்டபடி நின்றாள் வேதவதி. அன்றைய தினம் அவளுக்கு ஸ்கூட்டி ஓட்டக் கற்றுத் தருவதாகச் சொல்லியிருந்தான் அட்சரன். காலையில் மொத்த … Continue reading “அட்சரம் 25”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 24

பிரிவின் நடுக்கம் ஒரு மின்னலாய் பித்தாகி நின்றவள் காதலாய் இரு அலைகளின் மௌனமாய் மிதக்கும் படகுகளின் நடுக்கமாய் வேலிக்கு வெளியே வேர்கள் பின்னிக்கொள்ளும் வினோத பந்தமாய் காதலும் முளைக்குதே! -அட்சரனின் வேதா வேண்டாவெறுப்பாக அட்சரனின் அலுவலக அறையில் இருக்கும் சோஃபாவில் கைகளைக் கட்டிக்கொண்டு உர்ரென்று அமர்ந்திருந்தாள் வேதவதி. அவளது விழிகள் வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்துக்கொண்டிருந்தன அவளிடமிருந்து சற்று தொலைவில் இருக்கும் அவனது டெஸ்கில் அமர்ந்திருந்த அட்சரனையும் பிருந்தாவையும். ‘இவளுக்காக விடியாத வேளையில் சர்க்கரை கூட … Continue reading “அட்சரம் 24”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 23

வேரற்று விழப்போகும் தருணத்திலும் கிளையை உரிமையோடு பற்றத் துடிக்கும் கடைசி இலை அவள்! உதிர்ந்துவிடும் என்று தெரிந்தும் தன் இருப்பை இலைமீது நிலைநாட்டத் துடிக்கும் மூர்க்கமான காற்று அவன்! மனம் ஏதேன அறிந்தும் சரணடையத் தடுப்பது எதுவோ? -அட்சரனின் வேதா ஹோண்டா ஷோரூமில் மலங்க மலங்க விழித்தபடி நின்று கொண்டிருந்தாள் வேதவதி. ஆனால் அவளைக் காட்டிலும் ஆர்வமாய்ச் ஸ்கூட்டிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் ராஜேஸ்வரியும் சதானந்தனும். “உனக்கு எந்தக் கலர் பிடிச்சிருக்குனு சொல்லு வேதா. அதையே வாங்கிடலாம்” என்று சொல்லித்தான் … Continue reading “அட்சரம் 23”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 22.2

காலையிலேயே வீடு கலவரக்கூடமாக மாறி கூச்சல்கள் எழும்புவதைக் கேட்டபடி கண் விழித்தான் அட்சரன். ஞாயிறு என்றால் சற்று நேரம் கூடுதலாக உறங்குபவனின் காதருகே வந்து யாரோ மைக் வைத்துக் கத்துவது போலப் பரபரப்பான பேச்சுக்குரல்கள் விழ, எங்கிருந்து உறங்குவது? கடுப்போடு எழுந்து படுக்கையில் அமர்ந்தான். அந்தக் கலவரம் நடப்பது அவனது அறைக்கு அடுத்து இருக்கும் அறையில்தான். “டி வேதா! அசையாம உட்காரேன்” – கீச்சுக்குரலில் ஒரு பெண் பேசியது கேட்டது. “இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கேனே” என்றபடி … Continue reading “அட்சரம் 22.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 22.1

அந்நியப் பார்வையில் அழகியல் தெரியுதே! குளத்தில் விழுந்ததொரு குட்டிப் பெருங்கல்லாய், குலைந்தவன் நெஞ்சமிதில் குளிர்ச்சியின் சொல்லாய்! காற்றுப் புகாததொரு கானக நடுவினில், காணக் கிடைத்ததொரு காலை நிலவினில்… தடைகள் தகர்ந்தபின் தன்னையவள் காட்டவே, தலைசாய்த்தே அவனது தனிமையைத் தீட்டவே! -அட்சரனின் வேதா அட்சரனின் அறிவுறுத்தலுக்குப் பிறகு தினமும் நூறு வரிகளாவது எழுத முயன்றாள் வேதவதி. பதின்வயது குழந்தைகள் பெற்றோருக்குக் கட்டுப்படாமல் திமிறுவது போல எழுத்துமே அவளுக்கு அடங்க மறுத்தது. சில நேரங்களில் ஒரு வாக்கியம் மட்டுமே முழுமையடையும். … Continue reading “அட்சரம் 22.1”

 

Share your Reaction

Loading spinner