அட்சரம் 24

பிரிவின் நடுக்கம் ஒரு மின்னலாய் பித்தாகி நின்றவள் காதலாய் இரு அலைகளின் மௌனமாய் மிதக்கும் படகுகளின் நடுக்கமாய் வேலிக்கு வெளியே வேர்கள் பின்னிக்கொள்ளும் வினோத பந்தமாய் காதலும் முளைக்குதே! -அட்சரனின் வேதா வேண்டாவெறுப்பாக அட்சரனின் அலுவலக அறையில் இருக்கும் சோஃபாவில் கைகளைக் கட்டிக்கொண்டு உர்ரென்று அமர்ந்திருந்தாள் வேதவதி. அவளது விழிகள் வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்துக்கொண்டிருந்தன அவளிடமிருந்து சற்று தொலைவில் இருக்கும் அவனது டெஸ்கில் அமர்ந்திருந்த அட்சரனையும் பிருந்தாவையும். ‘இவளுக்காக விடியாத வேளையில் சர்க்கரை கூட … Continue reading “அட்சரம் 24”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 4

“இன்னைக்கு அப்பா கூட பைக்ல ட்ராவல் பண்ணுனப்ப சிக்னல்ல பைக் நின்னுச்சு… ரோட்ல இருந்து சில அடி டிஸ்டன்ஸ்ல ப்ளூ கலர் ப்ளாஸ்டிக் கவரை வச்சு டெண்ட் போட்டு அதுல சிலர் குடும்பமா வாழுறதை பாத்தேன்… அது மழைநேரம் வேற… டெண்ட்குள்ள சொட்டு சொட்டா விழுந்த மழைத்தண்ணி தரைய நனைச்சிடாம நெளிஞ்சு போன அலுமினிய பாத்திரம் ஒன்னை வச்சு அது பக்கத்துலயே உக்காந்திருந்தா சின்னப்பொண்ணு ஒருத்தி… தண்ணி பாத்திரத்துல விழுறதை பாக்கிறப்ப நல்லவேளை தரை நனையலனு சின்னதா … Continue reading “பூங்கொடி 4”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 3

“இது விளம்பர உலகம். பிசினஸ்ல நீங்க ஜெயிக்கணும்னா உங்க ப்ராடக்டை குவாலிட்டியா குடுக்குறிங்களோ இல்லையோ, உங்க ப்ராடக்டை பத்தி பேசுறதுக்கு ஒரு கூட்டத்தை ரெடி பண்ணி வைக்குறது முக்கியம். ஒன்னுமே இல்லாத மட்டமான ப்ராடக்டை கூட ஆஹா ஓஹோனு வர்ற விளம்பரங்களை நம்பி வாங்குறவங்க இருக்காங்க. எப்பிடி விளம்பரம் முக்கியமோ அதே மாதிரி விமர்சனமும் முக்கியம். அந்த விமர்சனம் நம்ம ப்ராடக்டோட சேல்ஸை பாதிக்காதபடி பாத்துக்க வேண்டிய சாமர்த்தியம் இருக்கணும். பாசிட்டிவான விமர்சனம் ஒருவகையில நமக்கு விளம்பரம் … Continue reading “பூங்கொடி 3”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 23

வேரற்று விழப்போகும் தருணத்திலும் கிளையை உரிமையோடு பற்றத் துடிக்கும் கடைசி இலை அவள்! உதிர்ந்துவிடும் என்று தெரிந்தும் தன் இருப்பை இலைமீது நிலைநாட்டத் துடிக்கும் மூர்க்கமான காற்று அவன்! மனம் ஏதேன அறிந்தும் சரணடையத் தடுப்பது எதுவோ? -அட்சரனின் வேதா ஹோண்டா ஷோரூமில் மலங்க மலங்க விழித்தபடி நின்று கொண்டிருந்தாள் வேதவதி. ஆனால் அவளைக் காட்டிலும் ஆர்வமாய்ச் ஸ்கூட்டிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் ராஜேஸ்வரியும் சதானந்தனும். “உனக்கு எந்தக் கலர் பிடிச்சிருக்குனு சொல்லு வேதா. அதையே வாங்கிடலாம்” என்று சொல்லித்தான் … Continue reading “அட்சரம் 23”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 1.2

இவளா? எங்கே போனாள் என்ன ஆனாள் என்றே தெரியாமல் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தியவள் இப்படியா நான்காண்டுகள் கழித்து கண் முன்னே வந்து நிற்பாள்? அடுத்து அவரது பார்வையில் சிக்கியவன் அவளருகே நின்று கொண்டிருந்த வாலிபன். வேகமாக அவர்களிடமிருந்து பார்வையைத் திருப்பிக்கொண்டார் நர்மதா. குற்றவுணர்ச்சியும் வேதனையும் மனதுக்குள் மண்டியது. ஆனால் அவரது மைந்தனுக்கு அப்படி எந்த உணர்வும் வரவில்லை. அவளைப் பார்த்துவிட்டு சாதாரணமாக மீண்டும் அனுமன் சிலையைப் பார்க்கத் துவங்கினான். நர்மதாவுக்கு அது தான் ஆச்சரியத்தைக் கொடுத்தது. கண்கள் … Continue reading “பூங்கொடி 1.2”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 1.1

“நம்மளை சுத்தி இருக்குற மக்கள் ரொம்ப வினோதமானவங்க… உங்க கிட்ட ஜெயிக்கிறதுக்கான வழி இருக்குனு சொல்லிப் பாருங்க, உங்களைக் கவனிக்கமாட்டாங்க. உங்க கனவை அடையுறதுக்கான திறமை இருக்குனு சொல்லுங்க, அலட்சியப்படுத்துவாங்க. உங்க கனவுக்கான முதல் படியில ஏற முயற்சி பண்ணுங்க, அப்ப உங்களை மதிக்காம மட்டம் தட்டுவாங்க. ஆனா ஒரு தடவை, ஒரே ஒரு தடவை நீங்க ஜெயிச்சுக் காட்டுங்க, உங்க காலடியில வந்து விழுவாங்க… உங்களை மாதிரி ஒருத்தர் இல்லனு கோவில் கட்டி கும்பிடாத குறையா … Continue reading “பூங்கொடி 1.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 22.2

காலையிலேயே வீடு கலவரக்கூடமாக மாறி கூச்சல்கள் எழும்புவதைக் கேட்டபடி கண் விழித்தான் அட்சரன். ஞாயிறு என்றால் சற்று நேரம் கூடுதலாக உறங்குபவனின் காதருகே வந்து யாரோ மைக் வைத்துக் கத்துவது போலப் பரபரப்பான பேச்சுக்குரல்கள் விழ, எங்கிருந்து உறங்குவது? கடுப்போடு எழுந்து படுக்கையில் அமர்ந்தான். அந்தக் கலவரம் நடப்பது அவனது அறைக்கு அடுத்து இருக்கும் அறையில்தான். “டி வேதா! அசையாம உட்காரேன்” – கீச்சுக்குரலில் ஒரு பெண் பேசியது கேட்டது. “இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கேனே” என்றபடி … Continue reading “அட்சரம் 22.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 22.1

அந்நியப் பார்வையில் அழகியல் தெரியுதே! குளத்தில் விழுந்ததொரு குட்டிப் பெருங்கல்லாய், குலைந்தவன் நெஞ்சமிதில் குளிர்ச்சியின் சொல்லாய்! காற்றுப் புகாததொரு கானக நடுவினில், காணக் கிடைத்ததொரு காலை நிலவினில்… தடைகள் தகர்ந்தபின் தன்னையவள் காட்டவே, தலைசாய்த்தே அவனது தனிமையைத் தீட்டவே! -அட்சரனின் வேதா அட்சரனின் அறிவுறுத்தலுக்குப் பிறகு தினமும் நூறு வரிகளாவது எழுத முயன்றாள் வேதவதி. பதின்வயது குழந்தைகள் பெற்றோருக்குக் கட்டுப்படாமல் திமிறுவது போல எழுத்துமே அவளுக்கு அடங்க மறுத்தது. சில நேரங்களில் ஒரு வாக்கியம் மட்டுமே முழுமையடையும். … Continue reading “அட்சரம் 22.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 21

இனி இழப்பதற்கு ஏதுமில்லை இனியவை பகிர நிறைய இருக்கிறது! பயங்கள் துறந்த பாஷையிது கடலில் கலக்கும் இரு நதிகள் கரையைத் தழுவும் கடைசி நொடிகள்! அர்த்தங்கள் ததும்பும் எளிய பேச்சில் அழகியல் ஆயிரம் வசிக்கிறது மூச்சில்! -அட்சரனின் வேதா “இப்பதான் சாப்பிட்டு முடிச்சோம் ஆன்ட்டி. வேதாவோட அவியல் ருசி இன்னும் நாக்குலயே நிக்குது” வேதவதியின் அறையில் அமர்ந்து அவளது மொபைலில் கனகவல்லியிடம் வீடியோ காலில் உரையாடிக்கொண்டிருந்தாள் வானதி. அவளும் அருள்மொழியும் விருந்துக்காக வருவதை அறிந்து வானதியின் நலன் … Continue reading “அட்சரம் 21”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 19

வார்த்தைகளால் காயங்களை நெய்தவர்கள் உறவுக்கயிற்றின் இறுக்கம் தளர்ந்ததும் இயல்பாகினர் மௌனத்தின் மெல்லிய இழைகளால்! தனித்தீவுகளாக மாறப்போகும் உற்சாகத்தில்! -அட்சரனின் வேதா வானதி வந்த தினத்தில் அட்சரன் வேதவதியோடு பேசி ஒரு முடிவை எடுத்திருந்தான். அதில் அவளுக்கும் சம்மதம் என்றதும் கொஞ்சமாய் மனக்கிலேசம் அடங்கியது அவனுக்கு. உறவுச்சிக்கல்களை மில்லினியல்கள் கையாண்ட விதத்துக்கும், ஜென் ஜி தலைமுறையினர் கையாளும் விதத்துக்கும் வித்தியாசமுள்ளது. காதலிலோ உறவிலோ பிரிவு வந்தாலோ மனக்கசப்பு வந்தாலோ விரோதம் பாவிப்பதும், வெறுப்போடு பிரிவதும் மில்லினியல்கள் காலத்தோடு முடிந்து … Continue reading “அட்சரம் 19”

 

Share your Reaction

Loading spinner