பூங்கொடி 32

“எப்பவுமே நீங்க ரொம்ப நல்லவங்க இரக்கமுள்ளவங்கனு சுத்தி இருக்கிறவங்க கிட்ட சொல்லிக்காதிங்க… உங்களோட அன்பும் இரக்கமும் ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உங்களுக்கே பலவீனமா மாறிடும்… உங்களைக் கட்டுப்படுத்தணும்னு நினைக்கிறவங்க முதல்ல உங்களோட பலவீனத்தைப் புரிஞ்சிக்கிட்டு அதை வச்சு காய் நகர்த்துவாங்க… நம்மளோட மோசமான குணங்கள் மட்டும் தான் பலவீனமா அமையணும்னு இல்ல… நம்ம நல்ல குணங்களும் சில நேரங்கள்ல நம்மளை பலவீனமாக்கிடும்… நீங்க நியாயம் தர்மம்னு யோசிக்கிற ஆளா இருப்பிங்க, ஆனா உங்க எதிராளி … Continue reading “பூங்கொடி 32”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 31

“உங்களுக்குப் பிடிக்காதவங்களை விட பிடிச்சவங்க கிட்ட கொஞ்சம் கவனமா இருங்க… பிகாஸ், பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் நம்மளை அது பாதிக்காது… ரொம்ப ஈசியா அவங்களோட ஆக்சனுக்கு நம்மளால ரியாக்ட் பண்ண முடியும்… ஆனா நமக்குப் பிடிச்சவங்க கொஞ்சம் முன்ன பின்ன நடந்தாலும் நம்ம ஆழமா காயப்பட்டுப்போயிடுவோம்… அந்த காயம் உண்டாக்குற வேதனையால சில நேரம் நம்மளோட மனுசத்தன்மை கூட மரிச்சுப் போயிடும்… ஒருத்தரை நீங்க நேசிக்க ஆரம்பிச்சிட்டிங்கனாலே உங்களைக் காயப்படுத்துறதுக்கான எல்லா ரைட்சையும் நீங்க அவங்களுக்குக் குடுத்துட்டிங்கனு … Continue reading “பூங்கொடி 31”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 30

“அப்பா அடிக்கடி ஒன்னு சொல்லுவார், மனுசங்க மேல நம்பிக்கை வைக்கிறப்ப அது கல்லுல பொறிச்ச எழுத்து மாதிரி காலத்துக்கும் நிலைச்சிருக்கணுமாம்…  அவர் சித்தி மேல வச்ச நம்பிக்கை அப்பிடிப்பட்டது தான்… அவங்க ரெண்டு பேரையும் பாத்து வளந்ததால நானும் ஒருத்தரை நம்புனா ஆழமா நம்புறதுக்குப் பழகுனேன்… சாகர் மேல நான் வச்ச நம்பிக்கையும் அப்பிடிப்பட்டது தான்… அதே நம்பிக்கைய அவரும் என் மேல வைக்கணும்னு ஆசைப்பட்டேன்… அவர் என்னை நம்புனதா நானே கற்பனையும் பண்ணிக்கிட்டேன்… எல்லா கற்பனையும் … Continue reading “பூங்கொடி 30”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 35.2 (Final)

அன்றைய தினத்துக்குப் பிறகு வேதவதியும் அட்சரனும் கவனமாகவே இருந்தார்கள். இனி இணைந்திருந்தால் தங்களுக்குள் தகிக்கும் காதலுக்கு முத்தமும் அணைப்பும் மட்டும் போதாதெனப் புரிந்துவிட்டது. அதற்கேற்றாற்போல பெரியவர்களும் திருமணத்துக்கு நாள் குறித்தார்கள். எளிமையாய் வடபழனி முருகன் கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு வரவேற்பை மட்டும் கொஞ்சம் பெரிதாய் நடத்தலாமென்று ஏற்பாடு. திருமணத்திற்கான புடவை, மேக்கப் ஆர்ட்டிஸ்ட், வரவேற்பு உடை என அனைத்திலும் வேதவதிக்கும் அட்சரனுக்கும் அவர்களது தோழமைகள் உதவியாய் நின்றார்கள். யாழினியும் அவளது ஆச்சியும் கஜேந்திரன் – கனகவல்லியோடு வந்து … Continue reading “அட்சரம் 35.2 (Final)”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 35.1 (Final)

மாலை சூடிய மாசற்றக் காதல்! மாங்கல்ய பந்தத்தில் இணைய பூக்கள் சொரியும் புதுமணக் கோலம்! நதியும் கடலும் நயமாய்ச் சேர சந்தம் பாடும் யட்சனின் நேசம்! ஓருயிர்ப்புள்ளியில் ஒன்றாய்  பிணைய இல்லறம் இனிக்குதே வனமோகினிக்கு! -அட்சரனின் வேதா நுங்கம்பாக்கத்திலிருந்த அந்த டியூப்ளக்ஸ் வீட்டுக்கு அன்றைய தினம் காலையில் புத்துயிர் கிடைத்திருந்தது எனலாம். கோபத்தோடும் மனத்தாங்கலோடும் வீட்டை விட்டுக் கிளம்பிய மருமகளின் வருகையே அதற்கு காரணம். காலை பதினோரு மணிக்குச் சதானந்தனோடு வீடு வந்து சேர்ந்தவளை ராஜேஸ்வரி கண்ணீரோடு … Continue reading “அட்சரம் 35.1 (Final)”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 34.2

அட்சரன் தனது அன்னைக்கு வீடியோ கால் செய்தான். “ம்மா! இங்க பாருங்க. இதுதான் திருமலைக்கோவில்.” மலையையும் உச்சியில் இருக்கும் கோவிலையும் படிகளையும் காட்டினான் அவரிடம். “சம்பந்தி கிட்ட குடு அச்சு” ராஜேஸ்வரி சொல்லவும், மொபைல் கஜேந்திரன் கனகவல்லியிடம் தாவியது. நலம் விசாரிப்பு, இலகுவான பேச்சில் சம்பந்திகள் கலந்துகொள்ள, இறுதியாக மொபைல் வந்தது வேதவதியின் கரங்களுக்கு. “வேதா! இந்தப் புடவை ரொம்ப நல்லா இருக்குடா உனக்கு.” “தேங்க்ஸ் அத்தை.” “எதுவும் பிரச்சனை இல்லையே?” வேதவதி அட்சரனைப் பார்க்க, அவன் … Continue reading “அட்சரம் 34.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 34.1

மௌனமொழியாய் சம்மதம் தர மகிழ்ச்சித் தீவினில் வசந்தம் வர மண்ணைத் தொட்ட மழையின் துளியாய்! மனதைத் தொட்டது ஏகாந்த அலையாய்! உதிராப்பூவின் உள்ளுறை வாசம் உயிரில் கலந்தவளின் உன்னத நேசம் விடியலை ஏற்கும் விரிந்த வானாய்! தலைவனை ஏற்றாள் நெஞ்சத்தில் தானாய்! -அட்சரனின் வேதா மறுநாள் காலையில் வேதவதி செங்கோட்டை நூலகத்துக்குக் கிளம்பினாள். அவளது புத்தகத்தை அங்கே கொடுக்கவேண்டும் என்பது முன்னரே யோசித்ததுதான். அட்சரன் காரில் அழைத்துப்போவதாகச் சொன்னதும் மறுக்க வாயெடுத்தவள், தந்தையும் தாயும் வற்புறுத்தவும் கிளம்பினாள் … Continue reading “அட்சரம் 34.1”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 28

“ஓவர்-ரியாக்ட், எனக்குப் பிடிக்காத வார்த்தை… ஒருத்தர் அனுபவிக்கிற பிரச்சனையோட தீவிரத்தைப் புரிஞ்சிக்காம நம்மள்ல நிறைய பேர் பாதிக்கப்பட்டவங்களோட உணர்வுகளை ஓவர்-ரியாக்சன்னு ஒதுக்கித் தள்ளிடுறோம்… வெளிவர முடியாத பிரச்சனைக்குள்ள சிக்கி தவிக்கிறப்ப ஃபீலிங்சை மெச்சூரா ஹேண்டில் பண்ணுறதுக்குத் தோணாது… அந்த சிச்சுவேசன்ல அழணும்னு தோணுச்சுனா அழுவோம், சண்டை போடணும்னு தோணுச்சுனா சண்டை போடுவோம்… சாதாரணமான சூழல்ல நிதானமா நடந்துக்கிறவங்க எல்லாருமே பிரச்சனைனு வர்றப்ப உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிக்கத் தான் செய்யுவாங்க…  நமக்கு அப்பிடி ஒரு பிரச்சனை வரல, அந்த சூழ்நிலைல … Continue reading “பூங்கொடி 28”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 33

காலைப்பனிக்குள் காயும் வெயிலாய்! காற்று அசைக்கும் கிளையின் இலையாய்! அரும்புக்குள் தேனாய் தத்தளிக்கும் மனம்! மொழிகளைத் தவிர்க்கும் மௌன வேட்கையாய்! உதடுகள் மறுக்க உணர்வுகள் பூவாய்! உள்ளும் ஒளியாய் பூத்தது காதலும்தானே! -அட்சரனின் வேதா காலையில் சோம்பல் முறித்தபடி எழுந்த அட்சரனின் பார்வையில் விழுந்தாள், அவனை முறைத்தபடி அருகில் அமர்ந்திருந்த வேதவதி. “குட்மானிங் வேதா!” எழுந்து அமர்ந்தவன் அவளை அணைக்க வரவும், நறுக்கென அவனது இடுப்பில் கிள்ளிவைத்தாள் கோபத்தோடு. “அம்மாஆஆ!” என அலறியபடி விலகியவனிடம், “எதுக்கு இங்க … Continue reading “அட்சரம் 33”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 31

தலைக்கனம் வீழ்ந்தது தரைதனில் இன்று! தவறை உணர்ந்தான் தன்னிலை வென்று! ஆணவப்பாறை அன்பினில் உருக ஆயிரம் பிழைகள் கரைந்து மறைய வார்த்தை முட்களைத் தூக்கி எறிய கௌரவம் கொன்று காதலை மீட்க கண்ணீர்த்துளியில் வேதனை தீர்க்க மன்னிப்பெனும் மாபெரும் வரம் கிடைக்குமா இனி அவனது வாழ்வில்? -அட்சரனின் வேதா  அட்சரன் அலுவலக அறைக்குள் அமைதியிழந்து குட்டி போட்ட பூனையைப் போல நடந்துகொண்டிருப்பதைக் கவனித்த இலக்கியா சஞ்சயிடம் கூறிவிட்டாள். “வேதா இன்னைக்கு ஊருக்குப் போயிட்டானு நதி கால் பண்ணுனப்ப … Continue reading “அட்சரம் 31”

 

Share your Reaction

Loading spinner