எங்கிருந்து வந்தது அந்நேரத்துக் கோபம்? இந்தக் கேள்வியை நான் என்னிடம் கேட்காத நாளே இல்லை. நேசிப்பவர்களின் கோபமும் உதாசீனமும் தற்காலிகமானது என்ற பெரிய உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வராத காலம் அது. கூடவே என்னை இரண்டாம்பட்சமாகப் பார்க்கிறாரோ என்ற கோபமும் உச்சாணிக்கொம்பில் ஏறி நின்று ஆட்டிவைத்துக்கொண்டிருந்த நேரம் அது. என்னை ஒருவர் வேண்டாமெனச் சொல்லும் முன்னர் நான் அந்த வார்த்தையைச் சொல்லிவிடவேண்டும் என்ற வெறி நிரம்பியிருந்த சமயம் அது. இப்போதும் நான் செய்த செயல்கள் தவறென எண்ணி […]
‘புகைப்படம் எடுக்கும் நேரங்களில் மனிதர்கள் இனிய தருணங்களைத் தவற விடுகிறார்கள்’ என எங்கோ படித்த ஞாபகம். என்னைக் கேட்டால் புகைப்படங்களே இனிய தருணங்களை எனக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டும் அற்புதவிளக்குகளாக மாறியிருக்கின்றன என்பேன். ஏனெனில் நாம் யாருமே துக்கமானத் தருணங்களைப் புகைப்படங்களில் சேமிப்பதில்லையே! அந்தளவுக்கு நாகரிகம் முற்றிவிடவில்லை என்று நான் நிம்மதி பெருமூச்சு விட்ட தருணங்கள் அனேகம்! எளிதாகச் சொல்லிவிடலாம் வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்களின் கலவை என்று. ஆனால் அதை நடைமுறையில் அனுபவிக்கையில் உண்டாகும் வேதனையைத் […]
ஒரு புகைப்படக்கருவியில் படமெடுக்கும் போது அதற்கு அடிப்படையான மூன்று மோட்கள் போர்ட்ரெய்ட் மோட், லேண்ட்ஸ்கேப் மோட் மற்றும் மேக்ரோ மோட். லேண்ட்ஸ்கேப் மோடில் புகைப்படம் எடுக்க குறைந்த வெளிச்சமே போதுமானது. மேக்ரோ மோடானது சிறிய பொருட்களை நுண்ணிப்பாக படமெடுக்க உதவும். பொதுவாக புல்லின் பனித்துளி, ஆபரணத்தின் ஒரு பகுதி இவையெல்லாம் உதாரணமாகும். -Jim Miotke in his book ‘Better Photo Basics’ “இங்க பாருடா ஹேமா” என்று ஹேமலதாவை அழைத்தார் மயூரியின் அன்னை சாவித்திரி. […]
கனவுகளையும் கற்பனைகளையும் மட்டுமே சுவாசித்து வாழ்ந்த என் நாட்களைத் திரும்பிப் பார்க்கிறேன். ஜர்னல் ரைட்டிங்கின் போது வண்ணப் பேனாக்களாலும், அழகான ஸ்டிக்கர்களாலும் அலங்கரிப்படும் ஜர்னலின் பக்கங்களைப் போல அத்துணை அழகாய், நேர்த்தியாய் அந்நாட்கள் நகர்ந்திருக்கின்றன என்பதை மானசீகமாக அசை போடுவதில் கூட எத்துணை சுகம்! அந்நாட்களின் நினைவு கொடுக்கும் ஆசுவாசத்திற்கு அடிமையாகித் தவிக்கிறேன். இயந்திர வாழ்க்கையிலிருந்து என்னைப் பிரித்தெடுத்துத் தலை கோதும் அந்நாட்களின் நினைவுகள் பழங்கதையாகிவிட்டாலும் எனக்குப் பொக்கிஷமாய் மாறிவிட்டன. -வான்மதி “நோ ப்ராப்ளம் சார். […]
கடவுளின் அவதாரங்களாக கொண்டாடப்படும் பல சாமியார்கள் பக்தர்களுக்கு ஆன்மீக வழிக்காட்டி, அவர்கள் குடும்பத்தின் நலம்விரும்பி, வணிகத்தில் ஆலோசகர் என பல அவதாரங்களை எடுக்கும் பட்சத்தில் Dependency syndrome என்ற சார்புத்தன்மையை பக்தர்கள் அவர்கள் மீது வளர்த்துக்கொள்கின்றனர். அதன் விளைவு தங்களது முழு நம்பிக்கையையும் அவர்கள் மீது வைக்க ஆரம்பிக்கின்றனர். நவீன சமுதாயத்தின் வேகமான வாழ்க்கைமுறையைக் காரணம் காட்டி அதிலிருந்து மனநிம்மதியைத் தரும் ஆலோசகராகவும் அந்தச் சாமியார்கள் மாறிப்போகின்றனர். அதன் விளைவு பக்தர்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்பு […]
பொதுவாக மக்கள் புகைப்படம் எடுத்து முக்கியமான தருணங்களை ரசிப்பதை தவறவிடுகின்றனர் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் புகைப்படமானது அந்த அழகான தருணத்தை இன்னும் பல வருடங்கள் கழித்தும் நினைவூட்டும் என்பதை மறந்துவிடுகின்றனர். அத்துடன் புகைப்படம் எடுப்பதற்கு தொழில்நுட்ப அறிவும், விலையுயர்ந்த புகைப்படக்கருவியும், புகைப்படவியலில் பட்டப்படிப்பும் கட்டாயம் தேவை என்ற கருத்தும் நிலவுகிறது. என்ன தான் விலையுயர்ந்த புகைப்படக்கருவிகள் துல்லியமான நேர்த்தியான புகைப்படங்களைக் கொடுத்தாலும் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞனுக்கு ரசனை தான் அடிப்படை தகுதியாகும். பீனிக்ஸ் சேனல், […]