அத்தியாயம் 31

கடந்து போன பத்தாண்டுகளில், சைக்கோபதி உருவாவதற்கான சில காரணங்கள் பற்றிய நரம்புயிரியல் விளக்கங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாக தேவையற்ற தூண்டுதல்கள், பொறுப்பற்றத்தன்மை, விரோதம் மற்றும் முரட்டுத்தனம் இவையெல்லாம் நரம்பியல் இரசாயனங்களான மோனோமைன் ஆக்சிடஸ் (MAO), செரொடனின், 5-ஹைட்ராக்சிண்டோலேக்டிக் ஆசிட், ட்ரியைடோதைரனின், ஃப்ரீ தைராக்சின், டெஸ்டோஸ்டிரோன், கார்டிசோல், அட்ரினோகார்டிகோட்ராஃபிக் ஹார்மொண் மற்றும் ஹைப்போதலாமிக் – பிட்யூட்டரி – அட்ரினல் மற்றும் ஹைப்போதலாமிக் – பிட்யூட்டரி – கொனாடல் அச்சுகளில் உருவாகும் ஹார்மோன்கள் போன்றவற்றின் அசாதாரணமான சுரப்பு அளவுகளால் உண்டாகும் பிரச்சனைகள் … Continue reading “அத்தியாயம் 31”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 30

வன்முறையான சைக்கோபாத்கள் தங்களது மூர்க்கத்தனத்தை தங்கள் மீதே காட்டிக்கொள்ளும் அபாயமும் உள்ளது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சைக்கோபாத்கள் மனோதத்துவ சிகிச்சைக்குப் பிறகு தங்களது குணாதிசயம் கொடுத்த குற்றவுணர்ச்சியின் காரணமாக மிகவும் மோசமான முறையில் தற்கொலை செய்து இறந்துள்ளார்கள். அவர்கள் தங்களது உயிருக்கு மதிப்பே இல்லையென கருதுவதும், இனி வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறோமென ஒடுங்கிப்போவதுமே இத்தகைய கொடூரமான தற்கொலைகளுக்குக் காரணமாக அமைகிறது. -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens சாந்திவனம்… நவநீதம் … Continue reading “அத்தியாயம் 30”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 29

தனிமையால் கொலை செய்வது நமக்கு வேண்டுமானால் நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் டாமர் மற்றும் நீல்சன் இருவரும் தங்களது தனிமையையும் சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட தன்மையையும் சகிக்க முடியாத வேதனை என்கிறார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு சாடிஸ்டான உலகத்தை உருவாக்கிக்கொண்டு தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களான நிராகரிப்பு, வன்கொடுமை, அவமானம், அலட்சியம் மற்றும் உணர்வுரீதியான பாதிப்புகளுக்குப் பழி தீர்க்கத் தொடங்கினார்கள். டாமரும் நீல்சனும் கொலை செய்வது தங்களுக்குச் சந்தோசத்தைத் தருவதில்லை என்கின்றனர். அவர்களிடம் சிக்கியவர்களை வதைப்பதும், தங்களது கட்டுப்பாட்டுக்குள் … Continue reading “அத்தியாயம் 29”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 26

சைக்கோபாத்கள் அதிகபட்ச வெளிப்புறத் தூண்டுதலால் முட்டாள்தனமான சாகச மனநிலையில் இருப்பார்கள். காரணம் அவர்களின் இயல்புக்கு மீறிய எதிர்பார்ப்புகள் மற்றும் பிறருடன் நடக்கும் மோதல்கள். இந்த முட்டாள்தனமான சாகச மனநிலையைக் கட்டுப்படுத்த முடியாத தங்களது இயலாமையை எண்ணி அவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் தங்களது இயல்பிலிருந்து மாற விரும்பினாலும், பயமுணராத்தன்மை, அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் திறன் இல்லாமை, எதிர்மறை மனநிலை, விரக்தி, மனச்சோர்வு இதெல்லாம் அவர்களை மாறவிடுவதில்லை. -From ‘The hidden suffering of the psychopath’ article of … Continue reading “அத்தியாயம் 26”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 25

சைக்கோபாத்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அதில் குழப்பமான குடும்ப வாழ்க்கை, பெற்றோர்களின் வழிகாட்டுதல் போதுமான அளவில் இல்லாமை, போதைக்கு ஆளான பெற்றோரின் கொடுமை மற்றும் சமூக விரோதப்போக்கு, மோசமான உறவுகள், விவாகரத்து, வளர்ச்சிக்குப் பாதகமான சூழல் போன்றவை கட்டாயம் இடம்பெறும். இத்தகைய நபர்கள் தங்களது மனரீதியான குறைபாட்டால் தங்களை ஒரு சிறைக்கைதியைப் போல உணரலாம். அதனால் தங்களையும் சாதாரணமாக வாழும் மற்ற நபர்களையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. அவர்களுக்கு இருக்கும் எவையெல்லாம் தனக்கு மறுக்கப்படுகிறது என்பதை … Continue reading “அத்தியாயம் 25”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 24

சைக்கோபாத்கள் பலவிதமான காரணங்களால் உணர்வுரீதியான வேதனைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கும் தன்னை அன்பு செலுத்தவும் அக்கறை காட்டவும் நபர்கள் வேண்டுமென்ற ஆழமான ஆசை இருக்கும். அந்த ஆசை நிறைவேறாமல் போவதே அவர்களின் மனப்பிறழ்வுக்குறைபாடு தீவிரமாகக் காரணமாக அமைகிறது. எது எப்படியோ, இம்மாதிரியான கொடுமையான மனப்பாங்கு கொண்ட சைக்கோபாத்களுடன் சுமூகமான உறவைப் பேணுவது யாருக்கும் கடினமே. இத்தகைய சைக்கோபாத்கள் அவ்வபோது தங்களது குணங்களால் மற்றவர்கள், குறிப்பாக நேசிப்பவர்கள் காயமடைவதைப் பற்றி யோசித்து வருத்தத்துக்கு ஆளாவார்கள். பெரும்பாலான சைக்கோபாத்களின் வாழ்க்கையில் நிலையான … Continue reading “அத்தியாயம் 24”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 23

மனப்பிறழ்வுக்குறைபாடு அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறைபாடு ஆகும். ஆனால் இக்குறைபாட்டைக் கண்டறிய மருத்துவ சோதனைகளான இரத்தச் சோதனை, மூளை ஸ்கேன், மரபியல் பரிசோதனை போன்று எந்தச் சோதனையும் கிடையாது. அவர்களை சில குணாதிசயங்களை வைத்து கண்டுகொள்ளலாம். பெரும்பாலும் அவர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும், அதீத கவர்ச்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் தங்களது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறுவார்கள். யாரிடமும் அன்பு பாராட்டத் தெரியாமல் அடுத்தவர்களை தங்களது பேச்சு சாதுரியத்தால் ஏமாற்றும் குணம் கொண்டவர்கள். சுயக்கட்டுப்பாடு இல்லாமல் விளைவுகளைப் பற்றிய … Continue reading “அத்தியாயம் 23”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 22

மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு மரபியல் மற்றும் சூழல் காரணங்களும் ஒருவிதத்தில் பொறுப்பாகும். ஆனால் இவை நேரடி காரணிகள் அல்ல. அதாவது சிலவிதமான நரம்பியல் கட்டமைப்புகளை கொண்ட மூளை வடிவமைப்பு மனப்பிறழ்வுக்குறைபாட்டை ஒரு மனிதனுக்குள் உண்டாக்கும். மனித மூளையில் தற்காப்பு மற்றும் பயத்தை உணர்வதற்காக இருக்கும் பகுதி ‘அமிக்டலா’. இதுவே ஒரு சூழலில் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கும் பகுதியாகும். சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அமிக்டலா பகுதி மற்ற குழந்தைகளின் அமிக்டலாவை விட கொஞ்சம் மாறுபட்ட அமைப்போடு காணப்படும். … Continue reading “அத்தியாயம் 22”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 21

சைக்கோபதி எனும் மனப்பிறழ்வுக்குறைபாடு மரபுரீதியான காரணிகளால் ஏற்படுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சைக்கோபதி ஜீன் என்று தனிப்பட்ட வகையில் எந்த மரபணுவும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை. ஆனால் குடும்ப உறவுகளில் மரபுரீதியான மனப்பிறழ்வுக்குறைபாடு வருவது உண்டு என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெற்றோருக்கு மனப்பிறழ்வுக்குறைபாடு இல்லையென்ற சூழலில் முந்தைய தலைமுறையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளுக்குச் சைக்கோபதி வருவதற்கான மரபணுக்கூறுகள் அவர்களுக்குள் இருக்கும். ஒரே ஒரு மரபணுவால் மட்டுமே இது சாத்தியமில்லை. நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இம்மாதிரியான மரபணுக்கூறுகள் கூட்டாக … Continue reading “அத்தியாயம் 21”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 20

மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்த முடியாது என்பது ஒரு கட்டுக்கதை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சை அவர்களின் குடும்பங்களிலிருந்தே ஆரம்பிக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் அனுசரணையும் அன்பும் அவர்களைப் பண்படுத்தும். மருத்துவ சிகிச்சையானது மெதுவாகவே முன்னேற்றத்தை உண்டாக்கும். மற்ற ஆளுமை குறைபாடுகளைப் போலவே மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்துவதும் சவால் நிறைந்த காரியமே. ஏனெனில் அந்தக் குறைபாட்டின் தீவிரம், அதற்கான காரணங்கள், குறைபாட்டுக்கான பயனுள்ள சிகிச்சை முறைகள் பற்றி இதுவரை போதுமான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்படாததால் சிகிச்சைக்கான வழிமுறைகளும் போதுமானதாக இல்லை. -From psychopathy.org … Continue reading “அத்தியாயம் 20”

 

Share your Reaction

Loading spinner