அன்பு 8

நம்மில் பலருக்கு வாழ்க்கையின் எதார்த்தம் புரிவதில்லை. காணும் மனிதர்கள் யாவரிடத்திலும் நாம் ‘Pure soul’ வகையறா ஆட்களையோ அல்லது ‘Evil hearted’ வகையறா ஆட்களையோ எதிர்பார்க்கிறோம், தேடுகிறோம். ஆனால் இங்கே பரிசுத்தமான மனிதன் என யாருமில்லை என்ற நிதர்சனம் நமக்குப் புரிபடுவதற்குள் அனேகம் முறை வாழ்க்கை அனுபவப்பாடத்தை எடுத்திருக்கும். யாரும் இறகில்லாத தேவதைகள் / தேவதூதர்கள் போல இருப்பதில்லை. அதே நேரம் கொம்பு முளைத்த சாத்தானாக யாரைக் கெடுக்கலாம் என்று முழுநேரமும் சிந்திப்பவர்களும் இல்லை. சூழ்நிலை ஒரு […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 7

பேரிரைச்சலோடு பொங்கி கடற்கரை மணலைத் தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் ஓடிவிடும் அலைகளுக்குத் தெரிவதில்லை, அவை விட்டுச் சென்ற ஈரம் இன்னும் மணலில் ஒட்டியிருப்பது. இவ்வாறே பல நேரங்களில் மனிதர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் நேசிப்பவர்களை ஆழமாகக் காயப்படுத்திவிடுகின்றன. அவற்றுக்குத் தங்களால் காயமுற்ற மனதில் காலாகாலத்துக்கும் வேதனை ஒட்டியிருக்கும் என்பதெல்லாம் தெரியாது! உதிர்த்தவனின் நாவுக்கும்.   –அன்பனின் சிந்தனை சிதறல்கள் அன்பரசனிடம் பேசிவிட்டு வந்ததும் முதல் வேலையாக அன்னை சுடர்விழியின் மொபைலுக்கு அழைத்து விவரத்தைக் கூறினாள் ஆரபி. “நீ ஒன்னும் […]

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 11

பழிகளின் சுமை தீயாய் தொடர விடாது பரவும் உன் விழிச்சினத்தீ! உறவில்லா உரிமையில்லா  நிலையில் கோபம் மட்டும் எவ்வகையில் அறம்? -அட்சரனின் வேதா ட்ரோன் மூலம் ஒளிபரப்பான காட்சியில் தன்னுடன் இருந்தவள் வேதவதி என்று அட்சரன் சொன்னதும், அவளது கண்கள் முதலில் பீதியுடன் பார்த்தது கனவல்லியின் முகத்தைத்தான். ‘என்ன இது’ என்பது போல மனம் துடிப்பதை கனகவல்லியின் முகபாவனை காட்டிக்கொடுத்துவிட, சிலையாய் சமைந்துவிட்டாள் வேதவதி. ‘அட்சரன் என்னதான் கூட்டத்தைச் சமாளித்தாலும் எனது பெற்றோரைச் சமாளிக்க வேண்டிய கடமை […]

 

Share your Reaction

Loading spinner