அன்பு 4

விருப்பமற்ற உறவுகளிடமிருந்து விலகி நிற்பது அவர்களுக்கு நம் மீதும், நமக்கு அவர்கள் மீதும் இருக்கும் வெறுப்பெனும் கசப்பைக் குறைக்கும். ஒருவரின் அருகாமை உங்களுக்கு நல்ல ஞாபகங்களை, இனிய தருணங்களை நினைவூட்டவில்லை என்றால் அந்த இடத்தில் உங்களுக்கும் அந்நபருக்கும் இடையே விலகல் எனும் மெல்லியக் கோடு அத்தியாவசியம் ஆகிறது. ஆனால் இது உறவுகளிடையே இருக்கும் வெறுப்பைப் போக்குவதற்கான முழுமுதற் தீர்வாக அமையுமா என்றால் சந்தேகமே!                                                               -ஆரபியின் சிந்தனை சிதறல்கள்  ஆரபி தனது மடிக்கணினியின் தொடுதிரையில் பங்குவர்த்தக                          சார்ட்களை […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 3

அமைதியாய் ஓடும் நதி அணையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அதனால் யாருக்கும் துன்பம் நேராது. எப்போது அது பெருவெள்ளமாக மாறி அணையை உடைத்து வெளியேறுகிறதோ அப்போது உண்டாகும் சேதங்கள் மிகவும் மோசமாக இருக்கும். அதை போல கோபமும்  நம்கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்வரை யாருக்கும் எந்த சேதமும் உண்டாகாது. எப்போது அது கட்டுப்பாட்டை உடைத்து கரை தாண்டுகிறதோ அப்போது நம்மோடு சேர்ந்து நமக்கு நெருங்கியவர்களும் பாதிக்கப்படுவார்கள்.                                               -அன்பனின் சிந்தனை சிதறல்கள் மனோ ஃப்ரெஷ் ஜூஸ் பார் அண்ட் […]

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 9.2

மறுநாள் மாலையில் மெஹந்தி, சங்கீத் என்று கொண்டாட்டத்தின் வர்ணங்களை அள்ளிப்பூசிக்கொண்டது ஜெயவிலாசம். டி.ஜே இசையோடு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடை சங்கீத் நிகழ்வுக்காகத் தயாராகியிருக்க, நீளநீளமாய் மெஹந்தி கோன்கள் அடுக்கப்பட்ட தட்டுகள் மலர் அலங்காரத்தோடு வைக்கப்பட்டிருந்தன. அந்த அலங்காரப்பந்தலுக்குக் கீழே ஒரு பூந்தோட்டமே அமர்ந்திருப்பது போல, இளம் பச்சை நிற லெஹங்காவில் வானதி ஜொலித்துக்கொண்டிருந்தாள். அவளது கரங்களில் மெஹந்தி பூக்கள் பூக்கத் தொடங்கின. மெஹந்தி வைத்துக்கொண்டிருந்த பெண் அவளது உள்ளங்கையில் ரகசியமாக ‘அருள்’ என்ற பெயரைச் செதுக்க, அதைச் […]

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 9.1

சுடரோ நிலவோ சுமக்கத் துணிந்தேன்! தடமோ திசையோ தயங்கி நின்றேன்! நிழலோ நிஜமோ நிழலில் தவிக்க அழகிய பிழையில் அலைகின்றேன் தனியே! -அட்சரனின் வேதா தனக்காக ஒதுக்கப்பட்ட அறையின் பெரிய சாளரம் அருகே நின்று கையிலிருக்கும் ஐபேடில் வேதவதி ஹெல்வட்டாசுக்கு அனுப்பி வைத்திருந்த மேனுஸ்கிரிப்டை வாசித்துக் கொண்டிருந்தான் அட்சரன். எல்லாம் வானதியால்தான். வேதவதி மேனுஸ்கிரிப்டை அனுப்பியதுமே “நீ கொஞ்சம் வாசிச்சுப் பாரு அச்சு. அப்பதான் நான் ஏன் வேதாவோட எழுத்து மேல இவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கேன்னு உனக்குப் […]

 

Share your Reaction

Loading spinner