கற்பனையில் ஆயிரம் காதல் கதைகள் நினைவில் அதன் சுவடறியேன் நான் எழுத்தில் இலயிக்கும் என் விரல்கள் உயிர்ப்பில் வருமெனில் உருகுமோ காதலில் -அட்சரனின் வேதா அன்று வாரவிடுமுறை. காலையில் எழுந்ததும் அன்னை தன்னிடம் குறை கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகவே வாசல் தெளித்து அழகாய்க் கம்பி கோலம் போட்டிருந்தாள் வேதவதி. கூடவே கனகவல்லியின் அன்றாட வேலையான தையல் மெஷின்களைத் துடைக்கும் வேலையையும் செய்துவிட்டாள். சரியாக அவள் காபி போடத் தயாராகுகையில் கனகவல்லி எழுந்துவிட்டார். “குட் மார்னிங்மா! காபி போடப்போறேன். […]
Share your Reaction

