பவனி 6

பொன்னியின் செல்வன் – இந்தப் புக் படிக்கும் போது, என் மனசுல பல கேள்விகள் ஓடிச்சு. ஆதித்த கரிகாலனுக்கு என்ன ஆகும்? நந்தினியோட திட்டம் என்ன? இதெல்லாம் நினைக்கும் போது, தூக்கம் கூட வரல. சாயங்காலம் வரைக்கும் படிச்சேன். இப்பதான் புக் முடிச்சேன். என்ன ஒரு முடிவு! என் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. ஒரு நல்ல படம் பார்த்த ஃபீல். புக் முடிஞ்சதும், கொஞ்ச நேரம் என் இடத்துல இருந்து நகர முடியல. அந்த கதை எனக்குள்ளேயே ஓடிட்டு […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 21

“பொதுவாக சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கும் வேடதாரிகள் தங்களை அமைதிப்புறாக்களாகக் காட்டிக்கொள்வர். அதே சமயம் அரசியல் மற்றும் இலக்கியவுலகத்தினரோ தங்களை கழுகுகளைப் போல காட்டிக் கொள்வது வழக்கம். ஆனால் அவர்கள் யாவரும் கழுகு வேடம் தரித்த எலிகளும் நாய்களுமே!”     -ஆண்டன் செக்காவ் (ரஷ்ய நாடகம் மற்றும் சிறுகதையாசிரியர்) கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த அந்த பங்களாவிற்கு அன்றைய தினம் உயிர்ப்பு வந்திருந்தது. காரணம் அதன் உரிமையாளரான ராமமூர்த்தி அவரது சகாக்களுடன் கட்சித்தலைமைக்குத் தெரியாமல் இரகசிய […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 22

ஒரு பழமைவாதியைக் கோபப்படுத்த வேண்டுமாயின் அவரிடம் பொய் கூறுங்கள், அதே நேரம் ஒரு சுதந்திரமான பெருந்தன்மைவாதியைக் கோபப்படுத்த வேண்டுமாயின் அவரிடம் உண்மையைக் கூறுங்கள்!                                                                                                                 -தியோடர் ரூஸ்வெல்ட் ராமமூர்த்தி எதிர்பார்த்த மாநாட்டிற்காக மதுரை ஒத்தக்கடை பகுதியில் பிரம்மாண்ட மேடையும் தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் அமர எண்பது ஏக்கர் அளவில் மைதானமும் தயாராக இருந்தது. இருபத்தெட்டாம் தேதி மாலை மூன்று மணியளவில் தொடங்கவிருக்கும் அம்மாநாட்டில் சிறப்புரை ஆற்றப்போவது ராமமூர்த்தி என நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருந்தது. அவரது பேச்சை மாநாட்டிற்கு […]

 

Share your Reaction

Loading spinner

துளி 21

கோர்ட்டிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் மேனகா ஸ்ராவணியிடம் “வனி இந்த அஸ்வின் பேச்சை அபிமன்யூ தட்ட மாட்டான்னு தெரிஞ்சிருந்தா அவனை வச்சு மூவ் பண்ணியே வீட்டை வாங்கிருக்கலாம்டி. தேவையில்லாம இந்த கல்யாணம் கலாட்டால்லாம் நடந்திருக்காதுல்ல” என்று சொல்ல ஸ்ராவணி ஸ்கூட்டியை ஓட்டியபடி அவளை முறைத்ததை கண்ணாடியில் பார்த்ததும் அமைதியானாள். வீட்டை அடைந்ததும் ஸ்ராவணி முகம் கழுவி விட்டு வந்தவள் விஷ்ணுவுக்கு போன் செய்து அலுவலக விஷயமாக ஏதோ பேச ஆரம்பித்தாள். மேனகா அவளை பெருமூச்சுடன் பார்த்தபடி மனதிற்குள்ளேயே […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 5

நூலகத்துல இருக்குற அந்த அமைதி, எனக்கு ரொம்பப் பிடிக்கும். அங்க உட்கார்ந்து படிக்கிறது, வீட்டுல படிக்கிறதைவிட ஒரு தனி அனுபவம். சுத்தி இருக்குறவங்க எல்லாரும் அவங்க அவங்க உலகத்துல மூழ்கி இருப்பாங்க. யாரும் யாரையும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. அந்த அமைதி, நம்ம சிந்தனைகளைத் தெளிவாக்க உதவும். நூலகம் வெறும் புத்தகங்கள் இருக்குற இடம் மட்டும் இல்ல. அது ஒரு அறிவுச் சுரங்கம். ஒவ்வொரு முறையும் நூலகத்துக்குப் போயிட்டு வரும்போது, ஏதோ ஒரு புது விஷயத்தைக் கத்துக்கிட்டு […]

 

Share your Reaction

Loading spinner

துளி 22

அபிமன்யூவின் எச்சரிக்கைக்கு பின் அனைவரும் அமைதி காக்க மதியழகன் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொண்டர்களை நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்த மூத்த உறுப்பினர்களை வேண்டிக் கொண்டார். நாளை தற்காலிக முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்பதை அறிவித்த பின்னர் கோஷ்டியினர் கலைந்தனர். அபிமன்யூ அவரிடம் பேசிவிட்டு மருத்துவமனைக்கு செல்வதற்காக அஸ்வினுடன் கிளம்பினான். காரில் செல்லும் போது அஸ்வினிடம் “அச்சு! மதியழகன் அங்கிளை ஏன் பேச வைக்கலானு நீ சொன்னடா? எனக்கு காரணம் புரியல” என்று விளங்காமல் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 20

“அரசியல்வாதிகளுக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றை குறிக்கோளாகக் கொண்டிருப்பர்”                                                                 -அரிஸ்டாட்டில் காவல்துறை விசாரணையில் இறந்த தாணுமாலயன் மற்றும் விஜயனின் மரணமும் அதைத் தொடர்ந்து முதலமைச்சரின் பொறுப்பற்ற பதிலும் தமிழகமெங்கும் ஆளுங்கட்சிக்கெதிரான அலைய வீசச் செய்தது. என்ன தான் அதன் பின்னர் தனது பதிலை மாற்றிக் கொண்டு வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தாலும் முதலமைச்சர் வீரபாண்டியன் மீது சாமானிய மக்களுக்கு ஒரு அதிருப்தி ஏற்பட்டுவிட்டதென்னவோ உண்மை! இது குறித்து […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 4

சின்ன வயசுல இருந்தே நூலகம்னா எனக்கு ஒரு ஈர்ப்பு. அங்கே போனா நேரம் போறதே தெரியாது. ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டி, அதுல இருக்குற விசயங்களை உள்வாங்கிக்கிட்டா, நாமளே அந்த எழுத்தாளரோட சேர்ந்து ஒரு பயணத்தை மேற்கொள்ற மாதிரி இருக்கும். சில சமயம் ஒரு பழைய புத்தகத்தை எடுப்பேன், அதோட பக்கங்கள் மஞ்சள் நிறமா மாறி, அதைப் படிச்ச பலரோட விரல் ரேகைகள் படிஞ்சிருக்கும். அதைப் பாக்குறப்ப, இந்தப் புத்தகம் எத்தனை பேருக்கு அறிவையும், ஆனந்தத்தையும் குடுத்திருக்கும்னு […]

 

Share your Reaction

Loading spinner

துளி 20

ஸ்ராவணி இனி அவளும் மேனகாவும் அந்த ஃப்ளாட்டில் தான் இருக்க போவதாக சொல்ல அபிமன்யூ இவளுக்கு என்ன பைத்தியமா என்று எண்ணியபடி அவளை பார்க்க அவள் “என்னோட வீட்டுல நான் இருக்கிறதுக்கு எனக்கு எவனோட பெர்மிசனும் தேவை இல்ல” என்று சொல்லிவிட்டு மேனகாவுடன் அவர்களின் அறைக்குள் செல்ல எழும்ப அதற்குள் அவர்களை மறித்தான் அவன். “ஹலோ கொஞ்சம் நில்லு. அது எங்க ரூம். அதுக்குள்ள போக லேடிஸ்க்கு பெர்மிசன் கிடையாது” என்று சொன்னபடி அவர்களைப் பார்க்க ஸ்ராவணி […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 19

“அரசன் ஆற்றலுடையவனாக இருப்பின் அவனது குடிமக்களும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பர். ஒருவேளை அரசன் பொறுப்பற்றவனாக இருப்பாயினாயின் அவனது குடிமக்கள் அவனைப் போலவே பொறுப்பற்றவர்களாக இருப்பதோடு உழைப்பையே மறந்துவிடுவர். அத்துடன் பொறுப்பற்ற அரசன் எதிரிகளின் கரங்களில் எளிதில் வீழ்ந்துவிடுவான். எனவே அரசன் என்பவன் எப்போதும் விழிப்புடன் இருக்க கடமைப்பட்டவன்”                                                                    -சாணக்கியர் கிஷோரிடமிருந்து பெற்ற வீடியோவை அருள்மொழி சமயோஜிதமாகப் பயன்படுத்திக் கொண்டான். இறந்தவர்களின் தாயும் மனைவியும் கதறும் வீடியோவுடன் ‘காவல்துறை அராஜகத்தால் பறி போன இரு உயிர்கள்’ என […]

 

Share your Reaction

Loading spinner