துளி 41

மழை சென்னைக்கு நல்லது செய்ததோ இல்லையோ அபிமன்யூவின் காதலுக்கு ஒரு பெரிய நல்லதைச் செய்துவிட்டுப் போனது. அன்றைய நிகழ்வுக்குப் பிறகு சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிட கிச்சனில் நின்று கொண்டிருந்த ஸ்ராவணி அவனை விலக்கிவிட்டு முதல் காரியமாக போனை சார்ஜில் போட்டுவிட்டு வந்தாள். ஏனெனில் மழையை நினைத்து வேதாவும், வினிதாவும் ஏற்கெனவே பதறிப்போய் இருப்பர் என்பதால் சீக்கிரம் சார்ஜ் ஏறினால் அவர்களுக்கு போன் செய்து விவரத்தைக் கூறிவிடலாம் என்பது அவளின் எண்ணம். போனை சார்ஜில் போட்டவள் மேனகாவிடம் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 40

அபிமன்யூ அவளது கையைப் பிடிக்கவுமே திரும்பிய ஸ்ராவணி அவன் கூறியதைக் கேட்டுவிட்டு “முதல்ல என் கையை விடுடா” என்க அவன் முடியாது என்று மறுப்பாய் தலையசைத்தான். தலையசைத்தபடியே அவளது இடையை தனது கரங்களால் வளைக்க வாயிலில் அஸ்வினுடன் நின்று கொண்டிருந்த மேனகா அஸ்வினிடம் “டேய் உன் ஃப்ரெண்ட் என்னடா பண்ணுறான்? இவனை..” என்றபடி உள்ளே செல்ல எத்தனிக்க அஸ்வின் பதறிப்போய் அவளது கையைப் பிடித்து அங்கிருந்து இழுத்துச் சென்றுவிட்டான். அவளை ஹாலுக்கு அழைத்துவந்தவன் “உனக்கென்ன பைத்தியமா? அவங்க […]

 

Share your Reaction

Loading spinner

துளி 39

அபிமன்யூவின் கை ஸ்ராவணியின் கூந்தலைச் சரி செய்ய உயர அவள் அவனை முறைத்தவாறே புருவம் உயர்த்தி “என்ன?” என்று கேட்க அந்த ஒரு கேள்வியும், முறைப்புமே உயர்ந்த அவனது கைகளை தானாக இறங்க வைக்க அஸ்வினின் தொண்டை செருமல் அவனை அந்த ஃபிளாட் வாயிலுக்கு மீண்டும் இழுத்துவந்தது. அவன் கைகளைக் கட்டிக் கொள்ள அஸ்வின் ஸ்ராவணியிடம் “ரிப்போர்ட்டர் மேடம் எங்க கார் ரிப்பேர் ஆயிடுச்சு. நைட் ஃபுல்லா கார்ல இருந்துட்டு மார்னிங் சர்வீஸ் விடலாம்னு நெனைச்சோம். பட் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 38

இரண்டு நாட்கள் அபிமன்யூவிடமிருந்து ஒரு போன் காலும் இல்லாததால் ஸ்ராவணி இனி அவன் தன்னைத் தேடி வர மாட்டான் என்ற நம்பிக்கையுடன் வழக்கம் போல தன்னுடைய வாழ்க்கையை வாழத் தொடங்கினாள். அவளது கவனம், நேரம் முழுவதையும் அவளது வேலையே எடுத்துக் கொள்ள அவளால் அதை மீறி வேறு எதையும் சிந்திக்க இயலவில்லை. ஆனால் மேனகாவுக்கு மட்டும் அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை அளவுக்கு அதிகமாக இருந்தது. அதனால் அதைச் சொல்லி ஸ்ராவணியை கேலி செய்ய அவளோ […]

 

Share your Reaction

Loading spinner

துளி 37

ஸ்ராவணியும் மேனகாவும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு ஸ்ராவணி களைப்பாக இருப்பதாகக் கூறிவிட்டு உறங்கச் செல்ல மேனகா அவரகளது உடைமைகளை எடுத்துவைக்கத் தொடங்கினாள். அவள் லக்கேஜை எடுத்து வைக்கும் போதே உள்ளே வந்த பூர்வியும் மானஸ்வியும் ஸ்ராவணி உறங்குவதைப் பார்த்துவிட்டு மேனகாவிடம் அவள் உடல்நலம் குறித்து விசாரிக்க மேனகா சாதாரண காய்ச்சல் தான் என்று கூற இருவரும் அவளிடம் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தனர். மேனகா மருத்துவமனையில் நடந்த விஷயங்களை அவர்களிடம் சொல்ல பூர்வி அனைத்தையும் கேட்டுவிட்டு பெருமூச்சுடன் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 36

மருத்துவர் ஸ்ராவணியைப் பரிசோதித்துவிட்டு “உங்களுக்கு இந்த சில் கிளைமேட் ஒத்துக்கல. அதான் ஹை ஃபீவர். மெடிசின்ஸ் எழுதி தர்றேன். ஒரு இன்ஜெக்ஸனும் போடணும்” என்றபடி சிரிஞ்சை எடுக்க மேனகாவின் கண்கள் அதைக் கண்டதும் பீதியடைந்தன. ஸ்ராவணியின் காதில் “வனி உனக்குப் பயமாவே இல்லயா?” என்று கேட்க அவளை முறைத்த ஸ்ராவணி “நீ இங்கே இருந்தா நீயும் டென்சன் ஆகி என்னையும் டென்சன் ஆக்குவ. வெளியே போய் வெயிட் பண்ணு. நான் வர்றேன்” என்று சொல்ல அவள் விட்டால் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 35

ஸ்ராவணி மேனகாவுடன் வீட்டுக்கு வந்தவள் “வனி ஏன் சைலண்டா இருக்க?” என்றபடி அவளுடன் பேசிக் கொண்டே வந்த மேனகாவைக் கவனிக்காமல் அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கிச் சென்றாள். மேனகா அவளை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டுப் பின்தொடர்ந்து சென்று அங்கே அறையில் அமர்ந்திருந்தவளின் நெற்றியில் கை வைத்துப் பார்க்க உடல் நலத்தில் ஒரு குறைபாடும் இல்லை என்பதை அறிந்து கொண்டாள். “வனி என்ன தான் ஆச்சுடி?” என்று அவளை உலுக்கிச் சுயநினைவுக்குக் கொண்டு வர ஸ்ராவணி “ஒன்னும் இல்ல மேகி. […]

 

Share your Reaction

Loading spinner

துளி 34

ஸ்ராவணியிடமிருந்து மேனகாவைப் பிரித்து அழைத்துச் சென்ற அஸ்வின் அவனது காரில் அவளை அமர்த்திவிட்டு அவனும் கூடவேச் சேர்ந்து அமர்ந்து கொண்டான். மேனகா உம்மென்று அமர்ந்திருக்கவும் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் “ஹலோ நான் ஒன்னும் உன்னை கிட்நாப் பண்ணிக் கூட்டிட்டு வரல. நீ அங்கே இருந்தா அவங்க ஃப்ரீயா பேசிக்க முடியாதேனு தான் கூட்டிட்டு வந்தேன். சோ கொஞ்சம் இந்த சோகமான ரியாக்சனை மாத்து” என்றான் கிண்டலாக. மேனகா “நான் கூட நீ மறுபடியும் திட்ட தான் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 33

ஸ்ராவணி காரிலிருந்துப் போனை எடுத்துவிட்டு வந்தவள் மீண்டும் பார்ட்டி ஹாலுக்குள் நுழையும் போது அவளின் பார்வையில் பட்ட அபிமன்யூவையும் அஸ்வினையும் கண்ட போது தான் அவர்கள் எப்படி இந்த பார்ட்டிக்கு வர முடியும் என்ற கேள்வியே அவள் மூளையில் உதித்தது. அவர்களை நோக்கிச் சென்றவள் “இந்த பார்ட்டிக்கு நீங்க எப்பிடி வந்திங்க? இன்விடேசன் இருக்கா?” என்று கையைக் கட்டிக்கொண்டு கேட்க அபிமன்யூ சாதாரணமாக “நாங்க மிஸ்டர் சிவபிரகாஷ் இன்வைட் பண்ணுனதால வந்தோம். உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல ரிப்போர்ட்டர் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 32

அபிமன்யூ அஸ்வினிடம் வந்தவன் “அச்சு! எனக்கென்னமோ இன்னைக்கு எல்லா பிராப்ளமும் சரியாயிடும்னு தோணுதுடா. இன்னைக்கு ஈவினிங் ஹோட்டல் ராயல் பார்க்ல நடக்குற பார்ட்டிக்கு நம்ம போகப் போறோம்” என்று சொல்லியபடி காரில் அமர அவனைத் தொடர்ந்து அமர்ந்த அஸ்வின் “அங்கே ஏன் நம்ம போகணும் அபி?” என்று குழப்பமாய் கேட்டபடி அபிமன்யூவை பார்த்தான். அவன் காரை ஓட்டியபடியே “வனியோட பாஸ் விஷ்ணுபிரகாஷோட டாட்டருக்கு அங்கே இன்னைக்கு ஈவினிங் பர்த் டே பார்ட்டி நடக்கப்போகுது. அதுல நம்ம கலந்துக்கப் […]

 

Share your Reaction

Loading spinner