யுத்தம் 27

“இரண்டு விசயங்களுக்கு முடிவே கிடையாது. ஒன்று இந்த பிரபஞ்சம்; மற்றொன்று மனித குலத்தின் மடமை”                                                           -ஆல்பர்ட் ஐன்ஸ்டின் குனியமுத்தூர்… தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை தெற்கு பகுதிக்கான மாவட்டச்செயலாளர் தங்கவேலுவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் கட்சியின் நம்பகமான நான்கு பிரமுகர்கள், பாதுகாவலாய் சில ஆட்கள் மற்றும் உதவியாளன் சங்கருடன் அமர்ந்திருந்தான் அருள்மொழி. முந்தைய தினம் மாலையில் தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தான். எலும்புமுறிவு குணமாகி ஆர்ம் ஸ்லிங்கை கழற்றியிருந்தான். சென்னைக்குக் கிளம்பலாம் என்ற யாழினியிடம் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 27

ஸ்ராவணி சிறிது நேரம் சிலையாய் சமைந்தவள் கோயில் மணி சத்தத்தில் திடுக்கிட்டவளாய் பார்க்க அவள் முன்னே அவளின் கையை பிடித்தபடி நின்ற அபிமன்யூவை கண்டதும் மனதிற்குள் திகைத்தவளாய் “ஹலோ!” என்க அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. இது சரி வராது என்று எண்ணியபடி அவனது தோளில் கை வைத்து “என்னாச்சு எம்.எல்.ஏ சார்?” என்றது தான் தாமதம் அவளின் தொடுகையில் தன்னிலை அடைந்தான் அவன். அவள் கண்களால் கையை சுட்டிக்காட்ட சட்டென்று அவளின் கையை விடுவித்தான். ஸ்ராவணி […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 26

“அடிப்படையில் மனிதர்கள் இரு வகையினர் தான். முதல் வகையினர் பெரிய காரியங்களைச் சாதிப்பவர்கள்! இரண்டாவது வகையினர் பெரிய காரியங்களைச் சாதித்தவர்களைப் போல காட்டிக் கொள்பவர்கள்! குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்த முதல் வகையினர் எண்ணிக்கையில் மிகவும் குறைவு!                                                            -மார்க் ட்வைன் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நீலாம்பூர்… மருத்துவர் குழு அருள்மொழியின் உடல்நலம் குறித்து யாழினியிடம் விளக்கிக் கொண்டிருந்தது. அதில் தலைமை மருத்துவரான அனந்தசயனனை மனதிற்குள் திட்டித் தீர்த்தபடியே யாழினிக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார் ராமமூர்த்தி. […]

 

Share your Reaction

Loading spinner

துளி 26

ஸ்ராவணி சொடக்கிட்டதும் திடுக்கிட்டு விழித்தான் அபிமன்யூ. அவளோ இவனுக்கு என்னவாயிற்று என்று எண்ணிக் கொண்டே எழும்ப அவனும் கூடவே சேர்ந்து எழுந்தான். கையில் வைத்திருந்த போனை ஸ்ராவணியிடம் நீட்ட அவள் வாங்க கையை நீட்டும் போது அவளது கையை பிடித்து சரியாக மோதிர விரலில் இருந்த மோதிரத்தை கழற்றிக் கொள்ள இவை அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட ஸ்ராவணியின் நிலை தான் பரிதாபமாக இருந்தது. ஏற்கெனவே அந்த மோதிரம் விரலுக்கு சற்று பெரிதாக இருப்பதால் அடிக்கடி […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 25

“நீங்கள் ஒரு பேராசைக்காரனை பணத்தால் வெல்லலாம்; ஒரு தற்பெருமை பேசும் நபரை அவரிடம் தாழ்ந்து போவது போல பாவனை செய்து வெல்லலாம்; ஒரு முட்டாளை அவனது பேச்சுக்கு உடன்படுவது போல நடித்து வெல்லலாம்; ஆனால் ஒரு புத்திசாலியை அவனிடம் உண்மையைப் பேசுவதன் மூலமாக மட்டுமே வெற்றி கொள்ள முடியும்”                                                               -சாணக்கியர் வதம்பச்சேரி கிராமம், கோயம்புத்தூர்… கிராமத்திலிருந்த நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தான் அருள்மொழி. கூடவே ஐ.பி.சி உறுப்பினர்களும், தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 25

மூவரும் டாக்சியிலிருந்து இறங்கி பப்பை நோக்கி நடைபோட்டனர். மேனகா ஜீன்ஸின் பாக்கெட்டில் கைகளை வைத்து கொண்டு சுற்றி முற்றி வேடிக்கை பார்த்தபடி நடக்க நான்ஸி உற்சாகமாக முன்னேறினாள். ஸ்ராவணி யாருக்கு வந்த வாழ்வோ என்று இருவரையும் பின் தொடர்ந்தாள். வழக்கம் போல பப்பின் பவுண்சர்கள் வழிமறிக்க நான்ஸி கெஸ்ட் லிஸ்டில் தன்னுடைய பெயர் இருப்பதாக கூற அவர்கள் அனுமதித்ததும் மூவரும் உள்ளே சென்றனர். மேனகாவுக்கு ஏற்கெனவே வந்த இடம் என்பதால் சென்ற முறை போலவே ஒரு இருக்கையை […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 24

“சரியானது அல்லது முக்கியமானது என நீங்கள் கருதும் ஒன்றை அடைய உங்களைத் தகுதிபடுத்திக்கொள்வது என்பது கடினமான காரியம் தான். ஆனால் அந்தத் தயார்படுத்திக் கொள்ளும் யுக்தியே சுயமரியாதை, சுயதிருப்தி மற்றும் பெருமையை உங்களுக்குப் பெற்றுத் தரும்”                                                             -மார்கரேட் தாட்சர் ரீஜென்ஸி ஹோட்டல், மதுரை.. அங்கிருந்து மேலூருக்குச் சென்று கொண்டிருந்தது ஒரு டாக்ஸி. அதனுள் அமர்ந்திருந்தவர்கள் நிதர்சனாவும் வானதியும் தான். மதுரை மண் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர். நிறைய சந்தோசமான தருணங்களோடு மறக்க முடியாத சோகங்களையும் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 23

“நீங்கள் அனைவராலும் விரும்பப்படவேண்டுமென நினைத்தால், எந்நேரத்திலும் எதையும் சமரசம் (compromise) செய்ய நீங்கள் தயாராக இருப்பீர்கள், அப்போது உங்களால் எதையும் சாதிக்க முடியாது”                                                        -மார்கரேட் தாட்சர் ராமமூர்த்தி தனக்காக கூட்டிய மதுரை மாநாடு அவருக்குப் பதிலாக அருள்மொழிக்கே கட்சித்தொண்டர்களிடையே நற்பெயரையும் செல்வாக்கையும் உருவாக்கிக் கொடுத்தது. அந்த மாநாட்டில் எவ்வித அலட்டலுமின்றி தொண்டர்கள் மத்தியில் அவனாற்றிய உரைக்குப் பிறகு அவன் எள் என்றால் எண்ணெய்யாக நிற்குமளவுக்கு கட்சியின் இளைஞரணியினர் தயாராக இருந்தனர். கூடவே புதிய கட்சி உறுப்பினர்களுக்கு […]

 

Share your Reaction

Loading spinner

துளி 24

அன்று ஞாயிறு என்பதால் பொறுமையாக எழலாம் என்று தூக்கத்தை தொடர்ந்த ஸ்ராவணியை உறக்கத்திலிருந்து எழுப்பியது அவளது போன் ரிங்டோன். அவள் காதை கைகளால் மூடியவள் அதை மீறியும் சத்தம் கேட்க வெறுப்புடன் போனை எடுத்து “ஹலோ உனக்குலாம் தூக்கமே வராதாடா அண்ணா? வினி கிட்ட சொல்லி உனக்கு ரெண்டு மிதி குடுக்க சொல்லுறேன்” என்றாள் தூக்கம் கலைந்த கடுப்பில். மறுமுனையில் சத்தமாக நகைத்த ஸ்ரவன் “ஓ! சாரிடா வனி. பட் என்ன பண்ணுறது? கொஞ்சம் முக்கியமான விஷயம். […]

 

Share your Reaction

Loading spinner

துளி 21

கோர்ட்டிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் மேனகா ஸ்ராவணியிடம் “வனி இந்த அஸ்வின் பேச்சை அபிமன்யூ தட்ட மாட்டான்னு தெரிஞ்சிருந்தா அவனை வச்சு மூவ் பண்ணியே வீட்டை வாங்கிருக்கலாம்டி. தேவையில்லாம இந்த கல்யாணம் கலாட்டால்லாம் நடந்திருக்காதுல்ல” என்று சொல்ல ஸ்ராவணி ஸ்கூட்டியை ஓட்டியபடி அவளை முறைத்ததை கண்ணாடியில் பார்த்ததும் அமைதியானாள். வீட்டை அடைந்ததும் ஸ்ராவணி முகம் கழுவி விட்டு வந்தவள் விஷ்ணுவுக்கு போன் செய்து அலுவலக விஷயமாக ஏதோ பேச ஆரம்பித்தாள். மேனகா அவளை பெருமூச்சுடன் பார்த்தபடி மனதிற்குள்ளேயே […]

 

Share your Reaction

Loading spinner