இதயம் 9

“இருபத்து நாலு வயசுக்கு அப்புறம் ஏன் அப்பா அம்மா எல்லாரும் பொண்ணுங்க சம்பாத்தியத்தை வாங்கிக்க தயங்குறாங்க? ஒரு பையனை எப்பிடி பெத்து கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வச்சு நல்ல நிலமைக்குக் கொண்டு வர்றாங்களோ அதே கஷ்டத்தைத் தானே பெண் குழந்தைங்களை வளர்க்கறப்பவும் அவங்க அனுபவிக்கிறாங்க… பையன் சம்பாத்தியத்துல வாழுறதை உரிமையா நினைக்குறவங்க பொண்ணோட சம்பாத்தியத்துல வாழுறதை ஏன் கௌரவக்குறைச்சலா நினைக்குறாங்க?”                                                                        -ஆனந்தி மறுவீட்டு விருந்தை முடித்துக்கொண்டு ஆனந்தியும் அகிலனும் வீட்டுக்கு வந்துவிட்டனர். சாந்தி அனைவருக்கும் இஞ்சி […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 7

“எனக்குப் படிப்பு எப்பவுமே மண்டையில ஏறுனதில்ல… ஏதோ பார்டர்ல பாஸ் பண்ணுவேன், அவ்ளோ தான்… அதுக்காக நான் புத்திசாலி இல்லனு நினைச்சுக்காதிங்க… படிச்சு ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துப்பட்டம் வாங்குனவங்க தான் புத்திசாலியா? யார் ஒருத்தரால எந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலையையும் அடுத்தவங்க உதவி இல்லாம சாமர்த்தியமா கடந்து வர முடியுதோ அவங்களும் புத்திசாலி தான்… ஏட்டுப்படிப்புல வாங்குற மார்க் என்னைக்குமே நம்ம ஞாபகசக்திக்கான அடையாளம் தானே தவிர அதை புத்திசாலித்தனம்னு ஒத்துக்கமாட்டேன் நான்… யார் ஒருத்தர் படிப்போட […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 6

“நம்மளை நோகடிக்கணும்னு நினைக்குறவங்க கையில எடுத்துக்குற பெரிய ஆயுதம் நம்ம நடத்தைய விமர்சிக்கிறது… ஆணோ பெண்ணோ எப்பேர்ப்பட்ட மனவுறுதி கொண்டவங்களா இருந்தாலும் அவங்களோட நடத்தைய பத்தி தவறா பேசுனா உடைஞ்சிடுவாங்க… இது மனுசங்களோட இயல்பு… நம்ம எப்பிடி இருந்தாலும்  நோகடிக்கணும்னு நினைக்குறவங்க மாறமாட்டாங்கனு புரிஞ்சிக்கிற மெச்சூரிட்டி வர்ற வரைக்கும் இந்தக் கவலை ஒவ்வொருத்தருக்கும் இருக்கும்… அந்த மெச்சூரிட்டி மட்டும் வந்துட்டா யார் என்ன சொன்னா என்ன, எனக்கு நான் உண்மையா இருக்குறேன்ங்கிற தன்னம்பிக்கை தானா வரும்” -அகிலன் […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 5

“கோபம் இருக்குற இடத்துல குணம் இருக்கும்னு சொல்லுவாங்க… குணம் இருக்குதோ இல்லையோ அவங்களுக்குள்ள மறைக்கப்பட்ட ஆதங்கம், வேதனை இதுல்லாம் மூட்டை மூட்டையா கொட்டிக் கிடக்கும்… சூழ்நிலைய காரணம் காட்டி அதை வெளிப்படுத்தாம உள்ளுக்குள்ள பூட்டி வச்சு வச்சு ஒரு கட்டத்துல வெடிச்சுச் சிதறுறதை தான் கோபம்னு பொதுப்படையா சொல்லி வச்சிருக்குறோம்… அதே நேரம் எல்லா கோவமும் நியாயமானது கிடையாது… ஆதங்கத்தோட வெளிப்பாடா வர்ற கோவத்துக்கும், வன்மத்தோட வெளிப்பாடா வர்ற கோவத்துக்கும் வித்தியாசம் இருக்கு”                                                                        -ஆனந்தி காலையில் […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 2

“கிட்டாதாயின் வெட்டென மற – கொன்றைவேந்தன்ல ஔவையார் ஈசியா சொல்லிட்டுப் போயிட்டாங்க… ஆனா விரும்புன ஒருத்தரை மறக்குறது எவ்ளோ சிரமம் தெரியுமா? அவங்களை மறக்குறதுக்கான அவகாசம் கூட குடுக்காம அந்த இடத்துல இன்னொருத்தரை வைக்குறது அதை விட சிரமம்… அந்த இன்னொருத்தர் வாழ்க்கை முழுசும் துணையா வரப்போறவங்களா இருந்துட்டாங்கனா அந்தச் சிரமத்தை நம்மளோட சேர்ந்து அவங்களும் அனுபவிக்கணும்”                                                                        -அகிலன் நடந்த திருமணத்தின் சந்தோசத்தை உணரவிடாமல் வீட்டில் அசாத்திய மௌனம் நிலவியது. சாந்தியும் மங்கையும் தங்களுக்குள் கிசுகிசுப்பாகப் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 51

நான்கு வருடங்களுக்குப் பிறகு…. காலை நேரச் சூரியனின் பொன்னிறக்கதிர் திரைச்சீலையையும் தாண்டி அந்த அறையினுள் நுழைந்து நன்கு உறங்கிக் கொண்டிருந்தவனை உசுப்பத் தொடங்க புரண்டுப் படுக்க எத்தனித்தவன் தன் மார்பில் பூக்குவியலாய் உறங்கிக் கொண்டிருந்த தேவதையைக் கண்டதும் அவனது இதழ்கள் புன்னகையில் வளையத் தொடங்கின. உறக்கத்தில் களைந்த கூந்தலைச் சரி செய்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட அவள் மெதுவாக உறக்கத்திலிருந்து விழிக்கத் தொடங்கினாள். அவளது தளிர்க்கரங்களால் அவன் முகத்தைத் தடவிக் கொடுக்க அந்த கரங்களைக் கண்ணில் ஒற்றிக் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 50

அன்று காலையில் அலுவலகத்துக்குச் சீக்கிரமாகவே வந்துவிட்டான் அபிமன்யூ. அஸ்வின் கிளையண்டைச் சந்திக்க வெளியே சென்றிருக்க அவன் மட்டும் தான் அலுவலகத்தில் இருந்தான். சும்மா இருக்கப் பிடிக்காமல் ஸ்ராவணியின் நினைவுகளில் மூழ்கியிருந்தவன் ரேகிலிருந்து ஒரு ஃபைலை உருவி அதை வாசித்துக் கொண்டிருக்க புதிதாக நியமிக்கப் பட்டிருந்த ஆபிஸ் பாய் வந்து “அண்ணா உங்களைப் பார்க்க ஷ்ரவன் சுப்பிரமணியம்னு ஒருத்தர்…” என்றுச் சொல்லி முடிக்கும் முன்னரே ஏற்கெனவே அவன் ஸ்ராவணியின் நினைவில் மூழ்கியிருந்ததால் அவன் காதுக்கு ஷ்ரவன் சுப்பிரமணியம் என்ற […]

 

Share your Reaction

Loading spinner

துளி 48

அபிமன்யூ அஸ்வினை அழைத்துக் கொண்டு விமான நிலையத்துக்கு வந்துவிட ஸ்ராவணியும் கிருஷ்ணமூர்த்தியுடன் வந்துச் சேர்ந்தாள். வந்தவள் அபிமன்யூவிடம் ஏதோ சொல்லப் போக அவன் அவசரமாக “தஞ்சாவூர் அட்ரஸ் சொல்லு” என்று கேட்டபடி போனில் யாருக்கோ அழைத்தபடி கேட்க அவள் கடகடவென்று முகவரியை ஒப்பித்தாள். அதைக் காதில் வாங்கிக் கொண்டவன் போனில் “ஹலோ நான் அபிமன்யூ. உங்களால ஒரு காரியம் ஆகணுமே” என்ற பீடிகையுடன் பேச ஆரம்பிக்க ஸ்ராவணி அவன் அருகில் நின்று கொண்டிருந்த அஸ்வினைப் பார்க்க அவன் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 47

மேனகா லேப்டாப்பில் அவளது வேலை விஷயங்களை டைப் செய்து கொண்டிருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் ஸ்ராவணி தான் வந்துவிட்டாளென்று ஆவலுடன் ஹாலுக்குச் சென்றவள் ஸ்ராவணியின் அழுதுச் சிவந்த முகத்தைக் கண்டதும் ஏதோ தவறென்று மூளையில் பட அவளை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள். “என்னாச்சு வனி? ஏன் அழுற? இஸ் எனிதிங் ராங்?” என்று ஆதரவாகக் கேட்டவளைக் கண்டதும் ஸ்ராவணிக்கு துக்கத்தில் கண்ணைக் கரித்துக் கொண்டு அழுகை வர அவள் தோளில் சாய்ந்து அழுது கொண்டே […]

 

Share your Reaction

Loading spinner

துளி 46

ஸ்ராவணி அலுவலகத்தை அடைந்த போது எப்போதும் கேட்கும் அபிமன்யூ, அஸ்வினின் கேலிப்பேச்சுக்களின் சத்தமின்றி அலுவலகம் மயான அமைதியுடன் இருந்தது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள் இருவரும் ஆளுக்கொரு புறம் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததைக் கண்டதும் மனதிற்குள் “சரியான டிராமா கிங்ஸ்” என்று எண்ணிக் கொண்டாள். அதை வெளிக்காட்டாமல் தொண்டையைச் செருமவும் இருவரும் நிமிர்ந்து அங்கே நின்று கொண்டிருந்தவளைப் பார்த்ததும் முகத்தைச் சீராக்கிக் கொண்டனர். அஸ்வின் “வாங்க ரிப்போர்ட்டர் மேடம்” என்றபடி எழப் போக […]

 

Share your Reaction

Loading spinner