அத்தியாயம் 31

கடந்து போன பத்தாண்டுகளில், சைக்கோபதி உருவாவதற்கான சில காரணங்கள் பற்றிய நரம்புயிரியல் விளக்கங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாக தேவையற்ற தூண்டுதல்கள், பொறுப்பற்றத்தன்மை, விரோதம் மற்றும் முரட்டுத்தனம் இவையெல்லாம் நரம்பியல் இரசாயனங்களான மோனோமைன் ஆக்சிடஸ் (MAO), செரொடனின், 5-ஹைட்ராக்சிண்டோலேக்டிக் ஆசிட், ட்ரியைடோதைரனின், ஃப்ரீ தைராக்சின், டெஸ்டோஸ்டிரோன், கார்டிசோல், அட்ரினோகார்டிகோட்ராஃபிக் ஹார்மொண் மற்றும் ஹைப்போதலாமிக் – பிட்யூட்டரி – அட்ரினல் மற்றும் ஹைப்போதலாமிக் – பிட்யூட்டரி – கொனாடல் அச்சுகளில் உருவாகும் ஹார்மோன்கள் போன்றவற்றின் அசாதாரணமான சுரப்பு அளவுகளால் உண்டாகும் பிரச்சனைகள் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 30

வன்முறையான சைக்கோபாத்கள் தங்களது மூர்க்கத்தனத்தை தங்கள் மீதே காட்டிக்கொள்ளும் அபாயமும் உள்ளது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சைக்கோபாத்கள் மனோதத்துவ சிகிச்சைக்குப் பிறகு தங்களது குணாதிசயம் கொடுத்த குற்றவுணர்ச்சியின் காரணமாக மிகவும் மோசமான முறையில் தற்கொலை செய்து இறந்துள்ளார்கள். அவர்கள் தங்களது உயிருக்கு மதிப்பே இல்லையென கருதுவதும், இனி வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறோமென ஒடுங்கிப்போவதுமே இத்தகைய கொடூரமான தற்கொலைகளுக்குக் காரணமாக அமைகிறது. -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens சாந்திவனம்… நவநீதம் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 29

தனிமையால் கொலை செய்வது நமக்கு வேண்டுமானால் நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் டாமர் மற்றும் நீல்சன் இருவரும் தங்களது தனிமையையும் சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட தன்மையையும் சகிக்க முடியாத வேதனை என்கிறார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு சாடிஸ்டான உலகத்தை உருவாக்கிக்கொண்டு தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களான நிராகரிப்பு, வன்கொடுமை, அவமானம், அலட்சியம் மற்றும் உணர்வுரீதியான பாதிப்புகளுக்குப் பழி தீர்க்கத் தொடங்கினார்கள். டாமரும் நீல்சனும் கொலை செய்வது தங்களுக்குச் சந்தோசத்தைத் தருவதில்லை என்கின்றனர். அவர்களிடம் சிக்கியவர்களை வதைப்பதும், தங்களது கட்டுப்பாட்டுக்குள் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 28

டாமர் மற்றும் நீல்சன் இருவரும் தங்களது தனிமையைப் போக்கிக்கொள்ள துணை வேண்டுமென்பதற்காக தொடர் கொலைகளைச் செய்ததாகக் கூறியிருந்தார்கள். இருவருக்கும் நண்பர்கள் மற்றும் பழகியவர்கள் என யாருமில்லை. அவர்களுக்கும் சமுதாயத்துக்கும் உள்ள தொடர்பே ஓரினச்சேர்க்கை பார்களில் இருக்கும் அற்ப சொற்ப தருணங்கள் மட்டுமே. நீல்சன் கொலை செய்த பிறகு இறந்த உடல்களோடு பேசிக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பானாம். டாமர் கொலை செய்தவர்களின் உடலைச் சாப்பிடுவதன் மூலம் அவர்கள் தன்னுடன் இருப்பதாக நம்பியிருக்கிறான். இதன் மூலமாக அவர்கள் அவனோடு பிரிக்க முடியாதபடி […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 27

சமுதாயத்தில் ஒதுக்கப்படுவது, தனக்கென யாருமில்லாத தனிமையோடு உணர்வுரீதியான வேதனையும் சேர்ந்து ஒரு சைக்கோபாத்தை குற்றங்களைச் செய்யத் தூண்டுகின்றன. இந்த உலகமே அவர்களுக்கு எதிராக இருப்பதாக நம்புகிறார்கள் அவர்கள். கூடவே தங்களின் வினோத ஆசைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் தங்களுக்கு இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள். சைக்கோபாத் சீரியல் கொலைகாரர்களான ஜெஃப்ரி டாமர் மற்றும் டெனிஸ் நில்சன் கூற்றுப்படி அவர்களைப் போன்ற சைக்கோபாத் கொலைகாரர்கள் அடிக்கடி உலகத்துடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொள்வதாகவும் அதன் மூலம் அவர்களின் சைக்கோபாத் குணம் இன்னும் தூண்டப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 25

சைக்கோபாத்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அதில் குழப்பமான குடும்ப வாழ்க்கை, பெற்றோர்களின் வழிகாட்டுதல் போதுமான அளவில் இல்லாமை, போதைக்கு ஆளான பெற்றோரின் கொடுமை மற்றும் சமூக விரோதப்போக்கு, மோசமான உறவுகள், விவாகரத்து, வளர்ச்சிக்குப் பாதகமான சூழல் போன்றவை கட்டாயம் இடம்பெறும். இத்தகைய நபர்கள் தங்களது மனரீதியான குறைபாட்டால் தங்களை ஒரு சிறைக்கைதியைப் போல உணரலாம். அதனால் தங்களையும் சாதாரணமாக வாழும் மற்ற நபர்களையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. அவர்களுக்கு இருக்கும் எவையெல்லாம் தனக்கு மறுக்கப்படுகிறது என்பதை […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 24

சைக்கோபாத்கள் பலவிதமான காரணங்களால் உணர்வுரீதியான வேதனைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கும் தன்னை அன்பு செலுத்தவும் அக்கறை காட்டவும் நபர்கள் வேண்டுமென்ற ஆழமான ஆசை இருக்கும். அந்த ஆசை நிறைவேறாமல் போவதே அவர்களின் மனப்பிறழ்வுக்குறைபாடு தீவிரமாகக் காரணமாக அமைகிறது. எது எப்படியோ, இம்மாதிரியான கொடுமையான மனப்பாங்கு கொண்ட சைக்கோபாத்களுடன் சுமூகமான உறவைப் பேணுவது யாருக்கும் கடினமே. இத்தகைய சைக்கோபாத்கள் அவ்வபோது தங்களது குணங்களால் மற்றவர்கள், குறிப்பாக நேசிப்பவர்கள் காயமடைவதைப் பற்றி யோசித்து வருத்தத்துக்கு ஆளாவார்கள். பெரும்பாலான சைக்கோபாத்களின் வாழ்க்கையில் நிலையான […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 23

மனப்பிறழ்வுக்குறைபாடு அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறைபாடு ஆகும். ஆனால் இக்குறைபாட்டைக் கண்டறிய மருத்துவ சோதனைகளான இரத்தச் சோதனை, மூளை ஸ்கேன், மரபியல் பரிசோதனை போன்று எந்தச் சோதனையும் கிடையாது. அவர்களை சில குணாதிசயங்களை வைத்து கண்டுகொள்ளலாம். பெரும்பாலும் அவர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும், அதீத கவர்ச்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் தங்களது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறுவார்கள். யாரிடமும் அன்பு பாராட்டத் தெரியாமல் அடுத்தவர்களை தங்களது பேச்சு சாதுரியத்தால் ஏமாற்றும் குணம் கொண்டவர்கள். சுயக்கட்டுப்பாடு இல்லாமல் விளைவுகளைப் பற்றிய […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 20

மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்த முடியாது என்பது ஒரு கட்டுக்கதை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சை அவர்களின் குடும்பங்களிலிருந்தே ஆரம்பிக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் அனுசரணையும் அன்பும் அவர்களைப் பண்படுத்தும். மருத்துவ சிகிச்சையானது மெதுவாகவே முன்னேற்றத்தை உண்டாக்கும். மற்ற ஆளுமை குறைபாடுகளைப் போலவே மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்துவதும் சவால் நிறைந்த காரியமே. ஏனெனில் அந்தக் குறைபாட்டின் தீவிரம், அதற்கான காரணங்கள், குறைபாட்டுக்கான பயனுள்ள சிகிச்சை முறைகள் பற்றி இதுவரை போதுமான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்படாததால் சிகிச்சைக்கான வழிமுறைகளும் போதுமானதாக இல்லை. -From psychopathy.org […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 19

மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக விரோத நடத்தை மற்றும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. இருப்பினும், மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுபவர்களாக மாறுவதில்லை. அதே போல உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுவோர் அனைவருக்கும் மனப்பிறழ்வுக்குறைபாடு இருப்பதுமில்லை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சவால்கள் இருக்கும். சில நேரங்களில் மனப்பிறழ்வுக்குறைபாடு வன்முறையாக வெளிப்படுவதில்லை. திருடுதல், ஏமாற்றுதல் போன்ற சமூக விரோத செயல்களாகவும் மனப்பிறழ்வுக்குறைபாடு வெளிப்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவை எல்லாம் வயது மற்று பாலினத்தைப் பொறுத்து மாறுபடுகின்றனவாம். […]

 

Share your Reaction

Loading spinner