பூங்கொடி 1.1

“நம்மளை சுத்தி இருக்குற மக்கள் ரொம்ப வினோதமானவங்க… உங்க கிட்ட ஜெயிக்கிறதுக்கான வழி இருக்குனு சொல்லிப் பாருங்க, உங்களைக் கவனிக்கமாட்டாங்க. உங்க கனவை அடையுறதுக்கான திறமை இருக்குனு சொல்லுங்க, அலட்சியப்படுத்துவாங்க. உங்க கனவுக்கான முதல் படியில ஏற முயற்சி பண்ணுங்க, அப்ப உங்களை மதிக்காம மட்டம் தட்டுவாங்க. ஆனா ஒரு தடவை, ஒரே ஒரு தடவை நீங்க ஜெயிச்சுக் காட்டுங்க, உங்க காலடியில வந்து விழுவாங்க… உங்களை மாதிரி ஒருத்தர் இல்லனு கோவில் கட்டி கும்பிடாத குறையா … Continue reading “பூங்கொடி 1.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 22.2

காலையிலேயே வீடு கலவரக்கூடமாக மாறி கூச்சல்கள் எழும்புவதைக் கேட்டபடி கண் விழித்தான் அட்சரன். ஞாயிறு என்றால் சற்று நேரம் கூடுதலாக உறங்குபவனின் காதருகே வந்து யாரோ மைக் வைத்துக் கத்துவது போலப் பரபரப்பான பேச்சுக்குரல்கள் விழ, எங்கிருந்து உறங்குவது? கடுப்போடு எழுந்து படுக்கையில் அமர்ந்தான். அந்தக் கலவரம் நடப்பது அவனது அறைக்கு அடுத்து இருக்கும் அறையில்தான். “டி வேதா! அசையாம உட்காரேன்” – கீச்சுக்குரலில் ஒரு பெண் பேசியது கேட்டது. “இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கேனே” என்றபடி … Continue reading “அட்சரம் 22.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 22.1

அந்நியப் பார்வையில் அழகியல் தெரியுதே! குளத்தில் விழுந்ததொரு குட்டிப் பெருங்கல்லாய், குலைந்தவன் நெஞ்சமிதில் குளிர்ச்சியின் சொல்லாய்! காற்றுப் புகாததொரு கானக நடுவினில், காணக் கிடைத்ததொரு காலை நிலவினில்… தடைகள் தகர்ந்தபின் தன்னையவள் காட்டவே, தலைசாய்த்தே அவனது தனிமையைத் தீட்டவே! -அட்சரனின் வேதா அட்சரனின் அறிவுறுத்தலுக்குப் பிறகு தினமும் நூறு வரிகளாவது எழுத முயன்றாள் வேதவதி. பதின்வயது குழந்தைகள் பெற்றோருக்குக் கட்டுப்படாமல் திமிறுவது போல எழுத்துமே அவளுக்கு அடங்க மறுத்தது. சில நேரங்களில் ஒரு வாக்கியம் மட்டுமே முழுமையடையும். … Continue reading “அட்சரம் 22.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 21

இனி இழப்பதற்கு ஏதுமில்லை இனியவை பகிர நிறைய இருக்கிறது! பயங்கள் துறந்த பாஷையிது கடலில் கலக்கும் இரு நதிகள் கரையைத் தழுவும் கடைசி நொடிகள்! அர்த்தங்கள் ததும்பும் எளிய பேச்சில் அழகியல் ஆயிரம் வசிக்கிறது மூச்சில்! -அட்சரனின் வேதா “இப்பதான் சாப்பிட்டு முடிச்சோம் ஆன்ட்டி. வேதாவோட அவியல் ருசி இன்னும் நாக்குலயே நிக்குது” வேதவதியின் அறையில் அமர்ந்து அவளது மொபைலில் கனகவல்லியிடம் வீடியோ காலில் உரையாடிக்கொண்டிருந்தாள் வானதி. அவளும் அருள்மொழியும் விருந்துக்காக வருவதை அறிந்து வானதியின் நலன் … Continue reading “அட்சரம் 21”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 18

பழிகள் உரைக்காப் பக்குவமும் பிரிவின் வழிகளுக்கு வரையறையும் கசப்புகள் அகற்றும் கால அவகாசமும் நிதானமாய் அறிந்தனர் தமது நிசப்தம்தனில்! -அட்சரனின் வேதா இலக்கியாவுக்கு அத்துணை கோபம்! சஞ்சய் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் வீட்டுக்குக் கிளம்பினாள் அவள். “அவன் கோவத்துல கத்துறது புதுசாடி? அதுக்குப் போய் மூஞ்சைத் தூக்கிட்டுக் கிளம்புற” என்று அவளைத் தடுக்கப் பார்த்தான். “வழி விடு சஞ்சய்! இருக்குற கடுப்புல உன்னைக் கடிச்சிடுவேன் பாத்துக்க” மிரட்டியவளைக் கண்டு அவன் அஞ்சுவானா என்ன? “அது புருசன் பொண்டாட்டி … Continue reading “அட்சரம் 18”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 16

மையுலக மாயத்தில் மயங்கியவள் மெய்யுலக வீதியில் மெல்லடி பதித்தாள்! காகிதப் படகைக் கரையில் விடுத்து நிஜத்தின் நதியில் நீந்தப் பழகினாள்! -அட்சரனின் வேதா “பிருந்தாவோட கதைல நீ சொன்ன சேஞ்சஸ் எல்லாத்தையும் பாத்துட்டேன் அச்சு. இன்னும் ஒன் வீக் டைம் வேணும் எடிட் பண்ணுறதுக்கு” இலக்கியா சொல்லவும் சரியெனத் தலையசைத்தான். “கவிநேசன் புக் வேலை எல்லாம் முடிஞ்சுதா? அவரோட புக்குக்கு சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்குக்கான வேலைய சஞ்சய் எந்த லெவல்ல பண்ணிருக்கான்?” “கவிநேசன் புக்கோட ஒர்க் ஃபைனல் … Continue reading “அட்சரம் 16”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 14.2

நக்கலாகச் சிரித்தபடி மாடிப்படியேறியவனின் செவிகளில் “நீ எங்கயும் போகக்கூடாது. இது உன் வீடு. அவன் செயினைக் கழட்டிட்டா எல்லாம் முடிஞ்சுதா? அது என்ன மோதிரம், வளையல் மாதிரி ஒரு நகைனு நினைச்சுக்கிட்டானா?” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி மைந்தனின் கோபத்தை இன்னும் அதிகமாக்கினார். அட்சரன் கோபத்தோடு அவனது அறைக்குப் போய்விட, வேதவதியிடம் அவளது உடைமைகளை அடுக்கி வைத்துவிட்டாளா என விசாரித்தார். “நான் பேக்கை எடுத்தப்ப அவங்க வந்துட்டாங்க” “சரி! நீ போய் ட்ரஸ் எல்லாத்தையும் வார்ட்ரோப்ல எடுத்து … Continue reading “அட்சரம் 14.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 14.1

பகட்டு நகரத்தின் பளபளப்பும் ஆணவன் பார்வையின் அலட்சியமும் அந்நிய இடத்தின் மருட்சியும் மொத்தமாய் அணை போட்டதில் பேதலித்து நின்றாளே சிற்றூர்ப்பெண்! -அட்சரனின் வேதா அட்சரன் ஹெல்வட்டாசுக்குக் கிளம்ப காரை எடுக்கும்வரை அவனது பெற்றோர் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. அருள்மொழி தகவல் சொன்ன நேரத்துக்குக் கிளம்பியிருந்தால் இந்நேரம் அவர்கள் வீட்டுக்கு வந்திருப்பார்கள். ஒருவேளை இரவில் பயணம் செய்ய வேண்டாமென முடிவெடுத்து ஏதேனும் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்திருக்கலாம் என்று மூளை சொன்னபோது அதை அட்சரனுக்கு ஒத்துக்கொள்ளவே தோன்றியது. ஏனெனில் அதெல்லாம் … Continue reading “அட்சரம் 14.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 12

விரும்பாமல் ஏறிய மாங்கல்யம் நெருப்பாய் தகித்தது அவன் மனம் பயத்தில் உறைந்தது பாவையின் இதயம் அயர்ந்து அதிர்ந்து அழகிய அந்தி! -அட்சரனின் வேதா வேதவதி தனது அறைக்குள் உணர்வுகள் மரத்துப்போன நிலையில் அமர்ந்திருந்தாள். ஜெயவிலாசத்தில் நடந்தேறிய கலவரங்கள் யாவும் கனவல்ல, நிஜம் என்பதை அவளது கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. எப்போது அது கழுத்தில் விழுந்ததோ அப்போது வீட்டுக்கு ஓடிவந்தவள் தான். தனது அறைக்குள் அடைபட்டுக்கொண்டாள். ஓடிவரும்போதே அவளது முதுகுக்குப் பின்னே ஊரார் அவளை ஏளனமாகப் … Continue reading “அட்சரம் 12”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 11

பழிகளின் சுமை தீயாய் தொடர விடாது பரவும் உன் விழிச்சினத்தீ! உறவில்லா உரிமையில்லா  நிலையில் கோபம் மட்டும் எவ்வகையில் அறம்? -அட்சரனின் வேதா ட்ரோன் மூலம் ஒளிபரப்பான காட்சியில் தன்னுடன் இருந்தவள் வேதவதி என்று அட்சரன் சொன்னதும், அவளது கண்கள் முதலில் பீதியுடன் பார்த்தது கனவல்லியின் முகத்தைத்தான். ‘என்ன இது’ என்பது போல மனம் துடிப்பதை கனகவல்லியின் முகபாவனை காட்டிக்கொடுத்துவிட, சிலையாய் சமைந்துவிட்டாள் வேதவதி. ‘அட்சரன் என்னதான் கூட்டத்தைச் சமாளித்தாலும் எனது பெற்றோரைச் சமாளிக்க வேண்டிய கடமை … Continue reading “அட்சரம் 11”

 

Share your Reaction

Loading spinner