அட்சரம் 1.1

மைவிழிப் பார்வையில் மையல்கள் பூக்க கைவளை ஓசையிடக் கதைகள் கோர்க்க சின்னஞ்சிறு புன்னகை சிந்தும் கதிரே! வண்ணத் தமிழால் வரிப்பேன் உன்னையே! –அட்சரனின் வேதா சென்னையின் இதயப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் காலை நான்கே முக்கால் மணிக்கே அந்த டியூப்ளக்ஸ் வீடு சுறுசுறுப்பாகியிருந்தது. வீட்டின் தலைவியான ராஜேஸ்வரி சமையலறையில் காபி போட்டுக்கொண்டிருக்க, அதன் நறுமணத்தில் கண் விழித்துவிட்டார் அவரது கணவரான சதானந்தன். சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் இயங்கி வரும் ‘ராஜி சூப்பர் மார்க்கெட்’டின் உரிமையாளரான அவர், ஏழு மணிக்கு […]

 

Share your Reaction

Loading spinner

அலை 25

உனைக் கண்ட நாள் முதலாய் எனை ஆள்வது உன் நினைவே! உன் ஸ்பரிசம் தீண்டிய உடலோ வெண்பஞ்சாய் மிதந்திடுதே! உன் வாய்மொழி கேட்கும் செவியோ தேன் குரலை ரசிக்கிறதே! என்ன மாயம் தான் செய்தாயோ என்னவளே! ரத்தினவேல் பாண்டியன் மகளைக் கண்ட அடுத்த நொடி, இத்தனை நாள் தேடிய புதையலைக் கண்முன் கண்டவரைப் போல ஓடோடிச் சென்று நெஞ்சார அணைத்துக்கொண்டார். பிறந்ததிலிருந்து அவளைப் பிரிந்திடாத மனிதர். பள்ளி விடுதியில் தங்கியிருந்த சமயத்தில் கூட வாரம் ஒருமுறை வந்து […]

 

Share your Reaction

Loading spinner

அலை 24.2

மதுரவாணியோ இதைக் கவனியாதவளாய் தனுஜாவின் இறைஞ்சும் விழிகளின் நினைவிலேயே இருக்க, மதுசூதனன் ஒரு கையால் ஸ்டீயரிங் வீலைப் பிடித்தபடி மற்றொரு கரத்தால் அவள் கன்னத்தைத் தட்டவும் திடுக்கிட்டுத் திரும்பினாள். அவளது முகவடிவை வட்டமிட்டுக்காட்டி, “ஏன் இவ்வளோ சோகமா வர்ற? கொஞ்சம் சிரியேன்! எனக்குத் தெரிஞ்சு சிரிக்கிறதுக்கு டாக்ஸ் எதுவும் கட்ட வேண்டாம்” என்று கேலியாயச் சொல்ல, “அது… இன்னைக்குத் தனுஜாவோட ரூம்ல….” என்று பேச ஆரம்பித்தவளின் இதழில் ஆட்காட்டி விரலை வைத்து ‘அமைதி’ என்று சைகை செய்தவன், […]

 

Share your Reaction

Loading spinner

அலை 24.1

காணும் யாவற்றிலும் உன் பிம்பம்! வீசும் காற்றுதனில் உன் ஸ்பரிசம்! விழி மூடும் தருணத்தில் உன் நினைவு! என்ன மாயம் தான் செய்தாயோ என்னவனே! ஏ.ஆர்.திருமண மஹால்… கதிரவனின் பொற்கதிர்களால் குளித்த மாலைவேளை மங்கி, இப்போது மெல்லிய கருநிற வண்ணம் பூசிய வானத்தின் அழகோடு அலங்கார விளக்குகளும் சேர்ந்துகொண்டு அந்த மண்டபத்தைச் சொர்க்கலோகமாய் மாற்றிக்காட்டிக் கொண்டிருந்தன. இரு பெரும் நகை மாளிகை அதிபர்களின் புத்திரச் செல்வங்களின் நிச்சயதார்த்தம் அல்லவா! எங்கு நோக்கினும் செல்வ வளம் தெறிக்கும் தோற்றமும், […]

 

Share your Reaction

Loading spinner

அலை 23

உனைக் கண்டதும் துள்ளும் மனந்தனை கரையிட்டு மறைத்தவளால் மலரும் வதனத்தைத் திரையிட்டு மறைக்க இயலவில்லை என் மாயவனே! மதுரவாணி அன்றைக்குச் சீக்கிரமே விழித்துவிட்டாள். இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கியவள், அதிகாலையிலேயே விழித்து வீட்டின் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள். பெரிதாக ஒரு வேலையும் இல்லையென்றாலும், குழந்தைகளுக்குத் தனியாக, பெரியவர்களுக்குத் தனியாக எனச் சமைப்பதே ஒரு பெரும் வேலைதானே! அதைச் செய்துவிட்டு நிமிர்ந்தவளிடம், சுவர்கடிகாரம் நேரம் காலை ஆறு மணி என அறிவித்தது. இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை. எனவே காபியோ, […]

 

Share your Reaction

Loading spinner

அலை 22

கண்ணாடியில் தெரியும் என் பிம்பமும் நாணுதே! என்னருகில் நிற்கும் உன் பிம்பம் செய்யும் மாயக் குறும்பில்! லவ்டேல்… மதுரவாணி கோப்புகளைச் சங்கவியிடம் ஒப்படைத்தவள், “அக்கா லீகல் டேர்ம்ஸ் மட்டும் ஒருதடவை செக் பண்ணுவியாம்… மத்தபடி படிச்சிட்டு சைன் பண்ணிட்டேனா நாளைக்கு மார்னிங் அவனே வந்து வாங்கிப்பானாம்,” என்று மனப்பாடம் செய்ததைப் போல ஒப்பித்துவிட்டு அகன்றாள். சங்கவி யாழினியிடம் அவற்றை நீட்டியவள், “யாழி இன்னைக்கு ரெண்டு பேரோட முகமும் சரியில்ல! நீ கவனிச்சியா?” என்று கேட்க, “ஆமா கவி! […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 30 (இறுதி)

“ஒரு பொண்ணுக்கு அவளோட ஹஸ்பண்ட் குடுக்குற பெரிய கௌரவம் அவளை அவன் எவ்ளோ மதிக்கிறான்ங்கிறதை அவளுக்குப் புரியவைக்குறது மட்டும்தான். ஆயிரம் பிரச்சினை வந்தாலும் உன் கூட இருக்குறப்ப அது எனக்கு ஒரு பொருட்டா கூட தெரியாதுனு அவங்க சொல்லுற ஒரு வார்த்தை போதும் எனக்கு. ரெண்டு குட்டி ரோஜாக்களோட ஆரம்பிச்ச எங்க தோட்டம் இன்னைக்கு நிறைய பூச்செடிகளோட ஒரு குட்டி நந்தவனமா மாறுன மாதிரி, நானும் அவரும் மட்டுமா இருந்த எங்க வாழ்க்கைல இன்னொரு குட்டி உயிர் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 19

அதிகாலை குளிர்க்காற்றில் பரவும் வேப்பம்பூவின் மணமாய் உன் காதல்! வயலுக்குள் சாய்ந்தாடி வரவேற்கும் பச்சைநிற நாற்றுகளாய் உன் காதல்! மூடியிருக்கும் கதவை இரவில் சுரண்டும் பூனையாய் உன் காதல்! உள்ளங்கையில் மணம் பரப்பும் மருதாணிச் சிவப்பாய் உன் காதல்! லவ்டேல்…. யாழினி முகத்தைத் தூக்கி வைத்தபடி அமர்ந்திருந்த சாய்சரணையும் ஆரத்யாவையும் அதட்டி உருட்டிச் சாப்பாடு ஊட்டிவிட்டவள், சங்கவியிடம் மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு மகனுடன் ஆரத்யாவையும் அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்குக் கிளம்பினாள். செல்லும் முன்னர் தங்கைகளிடம் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 28.2

அவள் கிளம்ப எத்தனிக்கையில் ஒரு பாலிதீன் கவரில் பனம்பழங்களைப் போட்டுக் கொடுத்தார் சௌந்தரவல்லி. “இதை அதிகமா சாப்பிடக்கூடாதுல. பிள்ளை மந்தமாகிடும்னு சொல்லுவாவ. அளவா சாப்பிடு” என்று அன்போடு சொல்லி அவளை வழியனுப்பிவைத்தார். ஈஸ்வரி வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது பவிதரன் அவளுக்காகக் காத்திருந்தான். சந்தோஷமிகுதியில் வேகநடை வைத்து வந்து அவனருகே திண்ணையில் அமர்ந்தவளை அவன் பார்த்த பார்வையில் அத்துணை காட்டம்! “சொல்லாம கொள்ளாம எங்க போன நீ? எழுந்திரிச்சதும் உன்னைக் காணலனு நான் பதறிட்டேன்டி” ஈஸ்வரி அசடு வழிந்தபடி […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 28.1

“முதல் தடவையா தொழில்ல வர்ற அழுத்தங்களோட பாரத்தைத் தாங்க முடியாம அந்த மனுசன் தவிக்குறதை நான் என் கண்ணால பாத்தேன். ஏதோ ஒரு விதத்துல அவர் இந்தப் பாரத்தை என் கிட்ட பகிர்ந்துக்கோங்கனு சொன்னாலும் கேக்கமாட்டார். எனக்கு ப்ரஷர் ஏறிடுமாம். இங்க சாம்ராஜ்ஜியம் ஒன்னும் சரிஞ்சிடலையே. அப்பிடியே சரிஞ்சாலும்தான் என்ன? இவரால அதை மறுபடி கட்ட முடியாதா என்ன? கொந்தளிக்குற மனசை அமைதியாக்குற சின்ன பொறுப்பைக் கூட எனக்கு இந்த மனுசன் குடுக்குறதில்ல. எனக்கு ரொம்ப வருத்தம்பா” […]

 

Share your Reaction

Loading spinner