மழை 19

எந்த நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று கேமராவைப் பிடித்திருக்கும் கையின் நடுக்கம். சிலர் கேமராவின் ஷட்டரை அழுத்தும் போது கேமராவையே நகர்த்திவிடுவர்.  இதைத் தவிர்க்க ஆள்காட்டிவிரல் ஷட்டர் மீது இருந்தால் கட்டைவிரலால்கேமராவின் எதிர்பக்கத்தைப் பிடித்துக்கொண்டு இந்த இரு விரல்களுக்குமான இடைவெளி குறுகிடுமாறு செய்து ஷட்டரை இயக்கவேண்டும். மற்றொரு வழி கேமராவை உங்கள் உடலோடு ஒட்டினாற்போல வைத்துக்கொள்ளல். இரண்டாவதை விட முதல் வழி நல்லது.                 -புகைப்பட அனுபவங்கள் புத்தகத்தில் கல்பட்டு நடராஜன் “நல்லா ஃபோர்சா பஞ்ச் பண்ணு […]

அத்தியாயம் 6

கோபமாகவோ, காதலாகவோ தினமும் ஒரு முறை கூட உன்னைப் பற்றி யோசிக்காமல் என் நாட்கள் முடிவதில்லை. தவிர்க்க நினைத்தாலோ தவித்துப் போகிறது என் மனம். வெளிப்பார்வைக்கு அகம்பவக்காரன் என்ற முகமூடியை அணிந்துகொண்ட ஒவ்வொரு ஆணும் மனைவியைப் பிரிந்தால் இப்படித்தான் யோசிப்பானோ என்னவோ! ஆனால் பாருங்கள்! ஆணாகிப் போன ஒரே காரணத்தால் அழக் கூட இந்தச் சமூகம் எங்களை விடுவதில்லை. எனது ஆற்றாமை, இயலாமை, வேதனையைக் கொட்ட கண்ணீர் என்ற வடிகாலைக் கூட என்னால் தேட முடியாது! எவ்வளவு […]

மழை 17

சாதாரணமாக படங்கள் எல்லாமே நீள்சதுர வடிவில் தான் இருக்கும். படங்களில் மையப்புள்ளிகள் (Focal Points) என்று ஒன்று உண்டு. பார்ப்பவரின் கண்கள் அந்தப் புள்ளிகள் இருக்குமிடத்திற்கு தான் அதிகமாக இழுத்துச் செல்லப்படும். ஒரு நீள் சதுரத்தில் மேலிருந்து கீழாகவும், இடவலமாகவும் இரண்டு இரண்டு கோடுகள் கிழித்து சமபாகங்களாக வெட்டும்போது அந்த நான்கு கோடுகளும் சந்திக்கும் இடங்களான A,B,C,D இவை தான் மையப்புள்ளிகள். நீங்கள் எடுக்கும் படங்களில் எந்தவொரு பொருளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறீர்களோ அதை இந்த […]

மழை 16

அரசியல் (Politics) என்பது ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. அரசியல் என்பதனுள், அரசு, அரசாட்சி, அரசை ஆளும் அரசன், நாடு, நாட்டில் வாழும் மக்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் போன்ற உட்கூறுகள் பொதிந்திருக்கின்றன. நீதி இலக்கியங்களுள் திருக்குறள் அரசியல் பற்றி பேசும்பொழுது, மொழி, இனம், மதம், நாடு போன்றவற்றைச் சாராமல் உலகப்பொதுமறையாய் எல்லோருக்கும் பொருந்துவனவாய் பேசுகிறது. அரசு என்பதன் பொருளை அறியமுற்படும்பொழுது பல்வேறு கருத்துக்களும் அகராதிகள் தரும் விளக்கங்களும் அரசியல் […]

அத்தியாயம் 5

எங்கோ வீசும் தென்றல் என் மேனியைத் தீண்டுகையில் சிலிர்த்தெழும் தேகத்தில் அவன் ஸ்பரிசத்துக்கான ஏக்கம் என்னுள் எழுகிறது. வீட்டின் பின்வாயில் தோட்டத்தில் நான் வைக்கும் சாதத்தை உண்டு முடித்து என்னை உரசிவிட்டுப் போகும் பூனையின் ஸ்பரிசத்தில் கழுத்து வளைவில் வாகாய்ப் பொருந்தி என்னை குறுகுறுக்க வைக்கும் அவனது தாடை முடியின் குறுகுறுப்பு பற்றிய நினைவு கிளர்வதை என்னால் தடுக்கவே முடிவதில்லை. எங்கோ ஒரு ஜோடி கை கோர்த்து, சினேகமாய்ச் சிரித்து நடந்து போவதைப் பார்த்துவிட்டால் உன் புஜத்தில் […]

மழை 15

“வெற்றுக்கால்களும் எளிமையுமாக உலகவாழ்க்கை எனும் லௌகீக வாழ்க்கையை வெறுத்து இமயமலைச்சாரலில் தியானம் செய்யும் சாதுக்களின் காலம் மலையேறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபலங்களாகவும், புகழ் வெளிச்சத்தில் உலா வருபவர்களாகவும், அரசியலையும் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களையும் கட்டுப்படுத்துபவர்களாகவும் சாமியார்கள் உருமாறிவிட்டனர். துறவறமும் லௌகீக வாழ்க்கையும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது. அத்துடன் அன்பை மட்டும் போதிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இந்தச் சாமியார்களின் பணப்பசியானது மனிதகுலத்திற்கு அமைதியைத் தராது; சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வை மட்டுமே உருவாக்கும். இங்கே நம்பிக்கைக்குப் பதில் […]

மழை 14

புகைப்படக்கருவியில் மூன்று விசயங்கள் முக்கியமானவை. அவை அபஷர் (aperture), ஷட்டர் ஸ்பீட் (shutter speed) மற்றும் ஐ.எஸ்.ஓ. அபஷர் என்பது நமது புகைப்படக்கருவியின் லென்சிற்குள் வெளிச்சம் பாய்வதற்கான வட்டமான வழியாகும். இந்த வழியில் வெளிச்சம் எவ்வளவு நேரம் பாயவேண்டும் என்பதை தீர்மானிப்பது தான் ஷட்டர் ஸ்பீட். ஐ.எஸ்.ஓ என்பது ஒரு புகைப்படத்தின் பிரகாசத்தைக் குறிக்கும். ஜஸ்டிஷ் டுடே… தனது கேபினில் அமர்ந்து சமீபத்தில் முடித்த வேலையைப் பற்றிய குறிப்புகளை தட்டச்சு செய்து கொண்டிருந்தாள் யசோதரா. இன்னும் சில […]

மழை 13

“இந்தியமக்கள் விசித்திரங்களை நம்பி அதன் பின்னே ஓடுபவர்கள். அதனாலேயே காவியுடைகளை நம்பி அவர்கள் பின்னே செல்கின்றனர். அவர்களைத் தங்களது ரட்சகராக கருதுகின்றனர். இதன் முடிவில் குருட்டு நம்பிக்கை அனைத்தையும் அழித்துவிடுகிறது”                                        -பிரதீப் சிங், சமூகவியலாளர் சவி வில்லா… இரவுணவுக்குப் பின்னர் சர்வருத்ரானந்தாவுடன் பேச அமர்ந்திருந்தனர் மாதவனும் சித்தார்த்தும். ரவீந்திரன் பணிவு காட்டி இன்னும் இருக்கையில் அமராது நின்று கொண்டிருக்கவும் மாதவன் அவரை அமருமாறு பணித்தான். அவர் இன்னும் யோசனையுடன் ருத்ராஜியைப் பார்க்க “உக்காருங்க ரவீந்திரன்… நீங்க தானே […]

அத்தியாயம் 3

எங்கிருந்து வந்தது அந்நேரத்துக் கோபம்? இந்தக் கேள்வியை நான் என்னிடம் கேட்காத நாளே இல்லை. நேசிப்பவர்களின் கோபமும் உதாசீனமும் தற்காலிகமானது என்ற பெரிய உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வராத காலம் அது. கூடவே என்னை இரண்டாம்பட்சமாகப் பார்க்கிறாரோ என்ற கோபமும் உச்சாணிக்கொம்பில் ஏறி நின்று ஆட்டிவைத்துக்கொண்டிருந்த நேரம் அது. என்னை ஒருவர் வேண்டாமெனச் சொல்லும் முன்னர் நான் அந்த வார்த்தையைச் சொல்லிவிடவேண்டும் என்ற வெறி நிரம்பியிருந்த சமயம் அது. இப்போதும் நான் செய்த செயல்கள் தவறென எண்ணி […]

அத்தியாயம் 2

‘புகைப்படம் எடுக்கும் நேரங்களில் மனிதர்கள் இனிய தருணங்களைத் தவற விடுகிறார்கள்’ என எங்கோ படித்த ஞாபகம். என்னைக் கேட்டால் புகைப்படங்களே இனிய தருணங்களை எனக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டும் அற்புதவிளக்குகளாக மாறியிருக்கின்றன என்பேன். ஏனெனில் நாம் யாருமே துக்கமானத் தருணங்களைப் புகைப்படங்களில் சேமிப்பதில்லையே! அந்தளவுக்கு நாகரிகம் முற்றிவிடவில்லை என்று நான் நிம்மதி பெருமூச்சு விட்ட தருணங்கள் அனேகம்! எளிதாகச் சொல்லிவிடலாம் வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்களின் கலவை என்று. ஆனால் அதை நடைமுறையில் அனுபவிக்கையில் உண்டாகும் வேதனையைத் […]