அலை 11

கடற்கரை மணலில் எழுதிய பெயர்களாய் அலை வந்ததும் அழியக் கூடியவை அல்ல கல்வெட்டில் பதிக்கப்பட்ட எழுத்துகளாய் காலம் கடந்தும் நிற்கும் உன் நினைவுகள்  நதியூர்… ரத்தினவேல் பாண்டியனின் வீட்டில் எப்போதும் போல அவரது ஏவலாட்களின் அரவம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டின் இளவரசி காணாமல் போய் வெகுநாட்களாகி விட்டது. இன்னும் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க இயலாது அவர்கள் திரும்பி வரும்போதெல்லாம் அழகம்மையின் ஏச்சுப்பேச்சையும் வாங்கிக் கட்டிக் கொண்டனர். சரவணனும் கார்த்திக்கேயனும் அவ்வப்போது அழகம்மைக்குப் பதிலடி கொடுத்தாலும், தன் பேத்தி […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 27

“வார்த்தைகள் குடுக்காத சிலிர்ப்பையும் இதத்தையும் அவளோட கைவிரல் உரசுன அந்த ஒரு நொடி குடுக்குது எனக்கு. எங்களுக்குள்ள மௌனச்சுவர் எழுறப்ப எல்லாம் இந்தச் சின்ன கெஸ்டர் தான் அதைச் சில்லு சில்லா உடைக்கும். ஒரு யுகப்பெருங்கோபத்தைத் தணிக்குறதுக்கு இந்தச் சின்ன தீண்டல் போதுமானது. இமயமலை அளவுக்கு இருக்குற ஈகோவ கூட நொறுக்கித் தள்ளிடும் அந்த ஸ்பரிசம்” –பவிதரன் மேரு பில்டர்ஸ் அலுவலகத்தில் தனது அலுவலக அறையில் பதற்றமாய் ஜூம் மூலம் வீடியோ அழைப்பில் தனது நண்பன் சாஜனுடன் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 10

இருளின் அழகென்பது வெண்மதியும் விண்மீனும் மட்டுமல்ல மின்மினிப்பூச்சிகளும் அதில் அடக்கம்..   மயூரா டவர்ஸ்… கோயம்புத்தூரின் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடி கட்டிடம். வங்கிகள், அலுவலகங்களின் கிளைகளைக் கொண்ட ஆபிஸ் கட்டிடம். அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு மதுரவாணியுடன் இறங்கினான் மதுசூதனன். சற்று முன்னர் பெய்த சாரல் மழையால் கட்டிடத்தின் நீலநிற ஆர்கிடெக்சரல் கண்ணாடியில் துளிதுளியாய் மழைத்துளி உருண்டோடி கீழே சொட்டிக் கொண்டிருக்க, அந்தக் கட்டிடத்தின் முன்னே அழகுக்காக வளர்க்கப்பட்டிருந்த ஈச்ச மரத்தின் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 9

என் வாழ்க்கை எனும் குறிப்பேட்டின் முதல் தவறு நீ! திருத்தும் முன்னரே மை மறைந்து போன மாயமென்ன!   ஹில்டாப் வெட்டிங் அண்ட் ஈவெண்ட் பிளானர்ஸ்… மதுசூதனனின் அலுவலக அறையில் அவனது இருக்கைக்கு எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தனுஜா. அவள் அமர்ந்திருந்த தொனியும் பேச்சும் மதுசூதனனுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அவள் சொன்னதன் பொருள் இது தான். அவள் அவனை நம்ப வேண்டுமென்றால் அவனிடம் உரிமை எடுத்துப் பேசிய அந்தப் பெண்ணே தன்னிடம் வந்து சொன்னால் மட்டுமே […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 26.2

வழக்கமாய் ஒரே தட்டில் சாப்பாட்டை முடித்துக்கொள்வார்கள் இருவரும். அவன் இன்றைய தினம் மதியவுணவை அரைகுறையாகச் சாப்பிடுவது போல இரவுணவையும் தவிர்ப்பானோ என்று யோசித்தே தனித்தட்டில் அவனுக்கான சப்பாத்திகளை எடுத்து வந்து ஊட்டியும் விட்டிருந்தாள் அவனது மனைவி. அவன் ஒருவழியாக பாதி வேலையை முடித்தபோது வாடிக்கையாளரிடமிருந்து மொபைல் அழைப்பு. “நீங்க புதன்கிழமை ப்ளூ பிரிண்டைக் குடுத்திங்கனா போதும். பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுனு சொல்லுவாவ. அன்னைக்கு ப்ளூ பிரிண்டை வாங்குனா நல்லதுனு என் வீட்டம்மா சொன்னா.” “சரி சார்! […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 26.1

“எவ்ளோ பெரிய சண்டையையும் முடிச்சு வைக்குறதுக்கு ஒரு கப் டீ, செஞ்ச தப்பை உணர்ந்த மனசு, இதமா ஒரு ஸ்பரிசம் இந்த மூனும் போதும். சண்டை போட்டுட்டோம்னு ஒருத்தர் விலகி நின்னா இன்னொருத்தர் இழுத்துப் பிடிக்கணும். அந்த இன்னொருத்தர் எல்லா நேரத்துலயும் கணவனா மட்டும்தான் இருக்கணும், மனைவியா மட்டும்தான் இருக்கணும்னு அவசியமில்ல. சில நேரம் கணவன் இருக்கலாம். சில நேரம் மனைவியா இருக்கலாம். அந்த இழுத்துப் பிடிக்குற பொறுப்பை ஒருத்தர் தலையில மட்டும் சுமத்துறது தப்பு. அதை […]

 

Share your Reaction

Loading spinner

அலை 8

மனம் எனும் வெள்ளைக் காகிதத்தில் அழியா மையால் எழுதப்பட்ட எழுத்துகளாய் உன் நினைவுகள்.. அழிக்க முற்பட்டுத் தோற்றுப் போகிறேன் நான்!   மதுசூதனன் அன்னையின் மடியில் தலை சாய்த்துப் படுத்திருந்தவன், அன்றைய தினம் நடந்த அனைத்தையும் அவரிடம் கொட்டிவிட்டான். மைதிலி மகனது சிகையைக் கோதிக் கொடுத்தவர், பெருமூச்சுவிட்டபடி அமைதியாக அவனது அறையில் கிடந்த சோபாவில் அமர்ந்திருந்தார். அவரது மகனைப் பற்றி அவர் நன்கு அறிவார். அன்னையான தன்னையும், வைஷாலியையும் தவிர்த்து வேறு எந்தப் பெண்ணையும் தனது கரத்தைக் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 7

மனம் எனும் வெள்ளைக் காகிதத்தில் அழியா மையால் எழுதப்பட்ட எழுத்துகளாய் உன் நினைவுகள்.. அழிக்க முற்பட்டுத் தோற்றுப் போகிறேன் நான்!   திருநெல்வேலி… ரேவதி தனக்கும் மகனுக்குமாய் இரவுக்குத் தோசை வார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தவர், அதற்குக் கொத்தமல்லி சட்னி அரைத்துத் தாளித்துக் கொண்டிருந்த நேரம் ஸ்ரீதரின் ஜீப் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. பின்னர் ஜீப்பின் கதவைத் திறந்து மூடும் சத்தமும், அதைத் தொடர்ந்து ஷூ அணிந்த கால்களின் சத்தமும் கேட்க, சமையலறையிலிருந்து வெளியே வந்தவர் […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 25.2

“என்ன விசயம்?” ஈஸ்வரி வினவவும் தனது அடுத்த திட்டம் பற்றி அவளிடம் விவரித்தான் ஆர்வமாய். உம் கூட கொட்டாமல் அதைக் கேட்டு முடித்தவள் “இதெல்லாம் எதுக்கு என் கிட்ட சொல்லுறிங்க? எனக்கும் உங்க வேலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? நான் தான் சொன்னேனே, இனி எந்த விதத்துலயும் நான் உங்களுக்குத் துணையா நிக்கமாட்டேன்னு. மறந்து போச்சா?” என்று கேட்டு அவனைத் திகைக்க வைத்தாள். பவிதரனின் முகத்தில் கலக்கம். “உன் கிட்ட சொல்லாம வேற யாரு கிட்ட சொல்லுறதுடி?” […]

 

Share your Reaction

Loading spinner

அகம் 25.1

“உளி தன்னை அடிக்கடி அடிக்குறதால பாறைக்கு அது மேல செம கோவமாம். கோவம் ஒரு பக்கம் இருந்தாலும் உளி தன்னைச் சிலையா செதுக்குறதுக்கு வடிவம் குடுக்க இசையுமாம் அந்தப் பாறை. அதே மாதிரிதான் உனக்குத் துணையா நிக்கப் போறதில்லனு சொல்லிக்கிட்டே என்னோட புதுத் தொழிலுக்குச் சின்ன சின்ன உதவிய செஞ்சிட்டிருக்கா ஈஸ்வரி. அவளோட கோவத்துக்கும், அவ செயலுக்கும் சம்பந்தமேயில்ல. உதடு தான் கடுகடுனு வார்த்தைய விடுதே தவிர மனசு முழுக்க பாசம் நிறைஞ்சிருக்கு என் சண்டைக்காரிக்கு” –பவிதரன் […]

 

Share your Reaction

Loading spinner