எங்கிருந்து வந்தது அந்நேரத்துக் கோபம்? இந்தக் கேள்வியை நான் என்னிடம் கேட்காத நாளே இல்லை. நேசிப்பவர்களின் கோபமும் உதாசீனமும் தற்காலிகமானது என்ற பெரிய உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வராத காலம் அது. கூடவே என்னை இரண்டாம்பட்சமாகப் பார்க்கிறாரோ என்ற கோபமும் உச்சாணிக்கொம்பில் ஏறி நின்று ஆட்டிவைத்துக்கொண்டிருந்த நேரம் அது. என்னை ஒருவர் வேண்டாமெனச் சொல்லும் முன்னர் நான் அந்த வார்த்தையைச் சொல்லிவிடவேண்டும் என்ற வெறி நிரம்பியிருந்த சமயம் அது. இப்போதும் நான் செய்த செயல்கள் தவறென எண்ணி […]
புகைப்படம் எடுப்பதில் ஸ்போர்ட்ஸ் மோட் நகரும் பொருட்களைப் படமெடுக்க உதவும். நகரும் பொருளொன்றின் நகர்வை படமெடுக்க உதவுகிறது இந்த ஸ்போர்ட்ஸ் மோட். இந்த முறையில் படமெடுக்க கேமரா ஷட்டர் மூடும் வேகம் முக்கியமானது. அதாவது அந்த கேமரா எவ்வளவு வேகமாக அந்த நகரும் பொருளை படம்பிடிக்கிறதோ அந்த அளவுக்கு அந்தப் பொருளின் புகைப்படம் தெளிவாக வரும். -Jim Miotke in his book ‘Better Photo Basics’ லோட்டஸ் ரெசிடென்சி… வழக்கமான பரபரப்பின்றி இலகுவாக கல்லூரிக்குக் […]
‘புகைப்படம் எடுக்கும் நேரங்களில் மனிதர்கள் இனிய தருணங்களைத் தவற விடுகிறார்கள்’ என எங்கோ படித்த ஞாபகம். என்னைக் கேட்டால் புகைப்படங்களே இனிய தருணங்களை எனக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டும் அற்புதவிளக்குகளாக மாறியிருக்கின்றன என்பேன். ஏனெனில் நாம் யாருமே துக்கமானத் தருணங்களைப் புகைப்படங்களில் சேமிப்பதில்லையே! அந்தளவுக்கு நாகரிகம் முற்றிவிடவில்லை என்று நான் நிம்மதி பெருமூச்சு விட்ட தருணங்கள் அனேகம்! எளிதாகச் சொல்லிவிடலாம் வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்களின் கலவை என்று. ஆனால் அதை நடைமுறையில் அனுபவிக்கையில் உண்டாகும் வேதனையைத் […]
ஒரு புகைப்படக்கருவியில் படமெடுக்கும் போது அதற்கு அடிப்படையான மூன்று மோட்கள் போர்ட்ரெய்ட் மோட், லேண்ட்ஸ்கேப் மோட் மற்றும் மேக்ரோ மோட். லேண்ட்ஸ்கேப் மோடில் புகைப்படம் எடுக்க குறைந்த வெளிச்சமே போதுமானது. மேக்ரோ மோடானது சிறிய பொருட்களை நுண்ணிப்பாக படமெடுக்க உதவும். பொதுவாக புல்லின் பனித்துளி, ஆபரணத்தின் ஒரு பகுதி இவையெல்லாம் உதாரணமாகும். -Jim Miotke in his book ‘Better Photo Basics’ “இங்க பாருடா ஹேமா” என்று ஹேமலதாவை அழைத்தார் மயூரியின் அன்னை சாவித்திரி. […]
கடவுளின் அவதாரங்களாக கொண்டாடப்படும் பல சாமியார்கள் பக்தர்களுக்கு ஆன்மீக வழிக்காட்டி, அவர்கள் குடும்பத்தின் நலம்விரும்பி, வணிகத்தில் ஆலோசகர் என பல அவதாரங்களை எடுக்கும் பட்சத்தில் Dependency syndrome என்ற சார்புத்தன்மையை பக்தர்கள் அவர்கள் மீது வளர்த்துக்கொள்கின்றனர். அதன் விளைவு தங்களது முழு நம்பிக்கையையும் அவர்கள் மீது வைக்க ஆரம்பிக்கின்றனர். நவீன சமுதாயத்தின் வேகமான வாழ்க்கைமுறையைக் காரணம் காட்டி அதிலிருந்து மனநிம்மதியைத் தரும் ஆலோசகராகவும் அந்தச் சாமியார்கள் மாறிப்போகின்றனர். அதன் விளைவு பக்தர்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்பு […]
பொதுவாக மக்கள் புகைப்படம் எடுத்து முக்கியமான தருணங்களை ரசிப்பதை தவறவிடுகின்றனர் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் புகைப்படமானது அந்த அழகான தருணத்தை இன்னும் பல வருடங்கள் கழித்தும் நினைவூட்டும் என்பதை மறந்துவிடுகின்றனர். அத்துடன் புகைப்படம் எடுப்பதற்கு தொழில்நுட்ப அறிவும், விலையுயர்ந்த புகைப்படக்கருவியும், புகைப்படவியலில் பட்டப்படிப்பும் கட்டாயம் தேவை என்ற கருத்தும் நிலவுகிறது. என்ன தான் விலையுயர்ந்த புகைப்படக்கருவிகள் துல்லியமான நேர்த்தியான புகைப்படங்களைக் கொடுத்தாலும் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞனுக்கு ரசனை தான் அடிப்படை தகுதியாகும். பீனிக்ஸ் சேனல், […]
யோகாவை உலகநாடுகள் கவனிக்கத் துவங்கிய பிறகே இந்தியாவில் அதற்கான ஆர்வம் அதிகரிக்கத் துவங்கியது. அதன் விளைவு இன்று புற்றீசல் போல பெருகிய யோகா மையங்கள். யோகா குரு என்ற போர்வையில் பாதகங்களை விளைவிக்கும் குற்றவாளிகள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தங்களது தினசரி வாழ்வில் உண்டாகும் கவலைகள், அலுவலகப்பணியினால் உண்டாகும் மன அழுத்தம் இதிலிருந்து மீள நினைக்கும் இளைய தலைமுறையினரும், ஓய்வுக்காலத்தை அமைதியாகக் கழிக்க விரும்பும் வயோதிகர்களும் இம்மாதியான போலி யோகா குருக்களிடம் கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்துவிடுகின்றனர். உலகவாழ்வின் […]
“Fish eye lens என்பது பனோரமிக் மற்றும் அரைக்கோள புகைப்படங்களை பரந்த கோணத்தில் படம் பிடிக்க உதவுகின்றன. தட்டையான 180 டிகிரி கோணத்தில் படமெடுக்கக் கூடிய Fish Eye Lens அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைகழக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” -பெட்டர் போட்டோகிராபி பத்திக்கை, ஆகஸ்ட் 2020 ஹோட்டல் கோல்டன் கிரவுன் பார்ட்டி ஹால்… ஜஸ்டிஷ் டுடேவின் ஊழியர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் குழுமியிருந்த அந்த பார்ட்டி ஹால் ஜேஜேவென இருந்தது. யசோதரா […]
யோகா என்பது வெறும் ஆசனங்களை மட்டும் கொண்டதல்ல. பதஞ்சலியின் கூற்றுப்படி அது யமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம் மற்றும் சமாதி என எட்டு பகுதிகளை உள்ளடக்கியது. நம்மிடம் யோகா பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அரைகுறையாக தெரிந்ததை வைத்து அநேகர் யோகக்கலையை அணுகுகிறார்கள். கூடவே யோகாவை மதம் சார்ந்து பார்ப்பவர்களும் அதிகம். யோகா என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக சித்தர்களும் யோகிகளும் பல்லாண்டுகளுக்கு முன்னரே சூத்திர வடிவில் எழுதி வைத்தது. அதற்கு […]
“மனிதர்கள் தமது அனுபவங்களைக் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்படும் ஒலிகளை தான் நாம் மொழி என்கிறோம். அதே போல தொடர்பாடலுக்காகப் பயன்படுத்தப்படும் மற்றொரு ஊடகம் தான் புகைப்படம். எப்படி மொழிக்கென தனி இலக்கணம் உள்ளதோ அதே போல புகைப்படக்கலைக்கும் தனியே இலக்கணம் உள்ளது. இன்று புகைப்படக்கலை ஒரு சிறப்புக்கலையாக வளர்ச்சி பெற்றுள்ளது. வாழ்வில் நாம் சந்திக்கும் முக்கிய தருணங்களை ஆவணப்படுத்துவதில் புகைப்படங்களின் பங்கு அளப்பரியது” “கொஞ்சம் ஆடாம இரேன் மய்யூ… இப்போ […]