யுத்தம் 10

To PDF Thieves and Ghostwriters: Be warned that any attempt to steal or plagiarize story plots from this site will result in immediate and rigorous legal action according to Indian Copyright Act 1957 - Nithya Mariappan

“அதிகாரம் மனிதர்களைக் கெடுப்பதில்லை. மாறாக அதிகாரமளிக்கக் கூடிய உயர்பதவிகளில் அமரும் முட்டாள்களே அந்த அதிகாரத்தைக் கெடுத்து துஷ்பிரயோகம் செய்கின்றனர்”

                                                     -ஜார்ஜ் பெர்னாட்ஷா

அருள்மொழி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த செய்தி அவனது கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியலையை உண்டாக்கியது. அவன் வெளியே வந்த தினத்தை மாவட்டம் தோறும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து கொண்டாடிய வீடியோவெல்லாம் செய்தி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி ஆளுங்கட்சியினரின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்தன.

ராமமூர்த்தி இனி கட்சித்தலைமை தனக்குத் தான் என்று நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் அருள்மொழியின் நிபந்தனை ஜாமீன் அவரது தலையில் இடியாய் வந்து இறங்கியது.

இருப்பினும் தனது அதிருப்தியை வெளிக்காட்டிக் கொள்ளாது பூங்கொத்துடன் அரசியல் ரீதியான சந்திப்பை முடித்துக் கொண்டார். மாவட்டம் வட்டம் என முக்கிய பிரமுகர்கள் வந்து அவனைச் சந்திக்க கட்சி தலைமை அலுவலகத்தில் பூங்கொத்துடன் நின்ற காட்சியைக் கடுப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார் மனிதர்.

அதே நேரம் யாழினியோ மகிழ்ச்சியுடன் இளைய சகோதரன் தலைமையில் அனைத்து முக்கிய பிரமுகர்களுடன் அடுத்தக்கட்ட கட்சிப்பணிகள் குறித்து கலந்தாலோசனையில் ஈடுபட ஆரம்பித்தாள்.

PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

ராமமூர்த்தியும் வேறு வழியின்றி பிணக்கை வெளிக்காட்டிக் கொள்ளாதவராக கலந்தாலோசனையில் அமர்ந்தார். அதில் வைக்கப்பட்ட முக்கிய வேண்டுகோளே வானதி வழிமொழிந்திருந்த அரசியல் நாகரிகம் தான்.

அதை பற்றி யாழினி பேச்செடுக்கும் போதே கட்சிப்பிரமுகர்கள் முகத்தில் விசித்திரமான பாவனை வரவும் ராமமூர்த்தி விசமமாகச் சிரித்துக் கொண்டார்.

“எதிர்கட்சிக்காரன் கூட கொஞ்சி குலாவணும்னு சொன்னா கட்சிக்காரன் எவன் இவ பேச்சைக் கேப்பான்? இத்தனை வருசம் இருந்த பனிப்போரை மறந்துட்டு பொது இடங்கள்ல சந்திச்சா சகஜமா பேசணும்னு சொல்லுறாளே இந்தப் பொண்ணு, நிஜமாவே இவ என் அண்ணனுக்குத் தான் பிறந்தாளா? அவர் சாகுற வரைக்கும் வீரபாண்டியனை எதிரியா தானே நினைச்சார்… அது சரி, கத்துக்குட்டிய நம்பி கட்சிய குடுத்தா அதுங்க நம்மள பைத்தியக்காரனாக்கி தான வேடிக்கை பாக்கும்?”

மேற்காணும் எதையும் வெளியே சொல்லும் தைரியம் இல்லாததால் தனக்கு வாய்த்த அடிமையான மனசாட்சியிடம் புலம்பித் தீர்த்தபடி அடுத்து அருள்மொழி ஆற்றவிருக்கும் உரையைக் கேட்க தயாரானார் ராமமூர்த்தி.

முதலில் கட்சிப்பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்தான் அவன். தனது பதினான்கு நாட்கள் சிறைவாசத்தில் தனக்காகப் பரிந்து ஊடகங்களிடம் அவர்கள் அளித்த பேட்டிகள், தொண்டர்களை கட்டுக்குள் வைத்திருந்தது என ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டி சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தலைமைகளை பெயர் குறிப்பிட்டு பாராட்டவும் அவர்களுக்குப் பெருமை பிடிபடவில்லை.

“உங்களோட இந்த ஆதரவு என்னைக்குமே எனக்கு வேணும்… அதே நேரம் கட்சி ஹெட் ஆபிஸ் முன்னாடி நம்ம தொண்டர்கள் மேல லத்தி சார்ஜ் பண்ணுன போலீஸ் ஆபிசர்ஸ் பத்தி இன்னைக்கு கமிஷ்னர் கிட்ட கட்சி சார்பா கம்ப்ளெய்ண்ட் குடுக்கலாம்னு இருக்கோம்… அதுக்கு முன்னாடி அவங்க விசாரணைக்கு நம்ம ஒத்துழைக்கணும்… அப்புறம் மாவட்ட வாரியா ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் மத்தில பேசுறதுக்கான ஏற்பாட்டை அந்தந்த மாவட்ட தலைமை தான் முன்னெடுத்து செய்யணும்… ஸ்டேட் கவர்மெண்ட் பத்தி அவங்களுக்கு என்ன ஐடியா இருக்குனு நான் தெரிஞ்சிக்கணும்… அப்கமிங் சி.எம் கிட்ட அவங்க என்ன எதிர்பாக்குறாங்கனு தெரிஞ்சிக்கிட்டா அதுக்கு ஏத்த மாதிரி எலக்சன் மேனிஃபெஸ்டோ ரெடி பண்ண இப்பவே ப்ரிப்பேர் ஆகிடலாம்”

PDF திருடாதீர்கள்!

📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!

 

Share your Reaction

Loading spinner