அலை 18

காதல் பார்வைகளை இலகுவாய்க் கடப்பவன் உன் வெட்டும் பார்வையில் மதிமயங்கி நிற்கிறேன்! விழிவீச்சில் சிலையாகி மொழி பேச மறக்கிறேன்! மதுரவாணி எதிர்பார்த்தாற்போன்று விக்ரமிடம் இருந்து அவளுக்கு மின்னஞ்சல் வந்தது. ஆனால் அது அவளுக்கு ஏமாற்றத்தை மட்டுமே சுமந்து வந்தது. மதுரவாணி ஊரிலிருந்து கிளம்பிய மறுநாளே அவளது வீட்டினருக்கு அவள் வீட்டை விட்டுச் சென்றதற்கான காரணம் தெரிந்துவிட்டது எனவும், அதற்கு தான் செய்த ஒரே ஒரு போன் கால் தான் காரணம் என்றும் தெரிவித்திருந்த விக்ரம், மதுரவாணிக்குத் தான் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 17

மலரைச் சுற்றும் தேனியின் ரீங்காரம் தாயைத் துளைத்தெடுக்கும் குழந்தையின் கேள்விக்கணை உறக்கத்தில் நாசியைத் தீண்டும் காபியின் நறுமணம் இவை போலத் தான் நீ எனக்குக் கொடுக்கும் அன்புத்தொல்லைகள்! மதுரவாணி தயக்கத்துடன் ரேவதியை ஏறிட்டவள், “உங்களுக்கு என் மேல கோவம் இருக்கும் ஆன்ட்டி… ஆனா எனக்கு வேற வழி தெரியல… அதான் வீட்டை விட்டு வந்துட்டேன்… ப்ளீஸ் ஆன்ட்டி! அப்பா அண்ணா யாருக்கும் நான் இங்க இருக்கிறது தெரிய வேண்டாம்… ப்ளீஸ்,” என்று அவரது கையைப் பற்றிக் கொள்ள, […]

 

Share your Reaction

Loading spinner

அலை 16

கட்டுப்பாடின்றி கரைபுரண்டோடும் என் பிரியத்திற்குரிய நதியவளே உனை கரையிட்டுத் தடுக்க விரும்பாது என் அகண்டக் கரங்களை விரித்து உனை ஆவலுடன் அணைக்கக் காத்திருக்கும் உன் அன்பு சாகரன் நான்!   எல்க் மலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்… குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கிணங்க, எல்க் மலை எனும் குன்றில் குறிஞ்சிக்கடவுளான முருகனின் நாற்பது அடி சிலையுடன் பச்சைப்பசேல் என்ற ரம்மியமான சூழலில் அமைந்திருந்தது அத்திருத்தலம். எல்க் எனும் மான் இனங்கள் மூலம் இம்மலைக்கு இப்பெயர் வந்தது […]

 

Share your Reaction

Loading spinner

அலை 15

செவ்விதழ் சிறைக்குள் முத்துப்பற்கள் அரணாய் காக்க அடைபட்டுக் கிடக்கும் உன் ஒற்றைப்புன்னகையைக் காணத் தவிக்கும் என் விழிகளின் இறைஞ்சல்  உன் செவிகளைத் தீண்டாதோ என் அழகியே! சங்கவியும் யாழினியும் யுவஸ்ரீயின் திருமண ஏற்பாட்டின் மலர் அலங்கார பொறுப்பை ஏற்றதிலிருந்து, அடிக்கடி அவர்கள் அது தொடர்பாகத் திருமணம் நடக்கவிருக்கும் ஸ்ரீவத்சனின் பங்களாவுக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. அதனால் பொக்கே ஷாப்பின் பொறுப்பை ஸ்ரீரஞ்சனியும் மதுரவாணியுமே பார்த்துக் கொண்டனர். இடையிடையே ஸ்ரீரஞ்சனியின் தாயார் மகள்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துக் கொள்வார். […]

 

Share your Reaction

Loading spinner

அலை 14

உன் கரம் கோர்த்தால் நிம்மதி அடையும் மனம் உன் விழி பார்த்தால் பூரிப்பில் விரியும் இதழ் உன் கண்ணசைவுக்குத் தவமிருக்கும் இதயம் இது தான் காதலா? அன்றைய தினம் ஊட்டிக்குத் திரும்பிய பிறகு கூட ஸ்ரீரஞ்சனியின் முகம் தெளியவில்லை. மதுரவாணி மற்றவர் அறியாவண்ணம் அவளைச் சமாதானம் செய்ய முயன்றாள். ஆனால் ராகினி கூடவே ஒட்டிக் கொண்டிருந்ததால், அவளால் எதுவும் பேசமுடியவில்லை. அன்றைய தினம் இரவு உணவுக்குப் பின்னர் மதுரவாணியின் அறையில் இருக்கும் பால்கனியில் நின்று, சுற்றிலும் இருளில் […]

 

Share your Reaction

Loading spinner

அலை 13

கனிவு சொட்டும் விழிகள் கனலாய் மாறி எரிய நாணத்தில் சிவக்கும் வதனம் சினத்தில் செந்நிறம் கொள்ள தேன்மதுரச் சொற்கள் சிந்தும் நாவு தேளின் கொடுக்காய் கொட்ட தீப்பிழம்பாய் குமுறும் என்னவளே! உன் கோபம் தீர்க்கும் வழியறியா உன்னவன் நான்! மதுரவாணி செவி மடலைத் தேய்த்துவிட்டுக் கொண்டாள். ஆரத்யாவின் அழுகை மனிதச்செவியால் உணரக்கூடிய டெசிபிலையும் தாண்டி ஒலிக்க, அவளுக்கு வந்த கோபத்தில் மூன்றாவது கண்ணைத் திறந்து சுற்றியிருந்தவர்களை எரிக்காத குறை தான்! ஆரத்யாவின் அழுகையைப் பார்த்த சாய்சரணும் தானும் […]

 

Share your Reaction

Loading spinner