அத்தியாயம் 22

மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு மரபியல் மற்றும் சூழல் காரணங்களும் ஒருவிதத்தில் பொறுப்பாகும். ஆனால் இவை நேரடி காரணிகள் அல்ல. அதாவது சிலவிதமான நரம்பியல் கட்டமைப்புகளை கொண்ட மூளை வடிவமைப்பு மனப்பிறழ்வுக்குறைபாட்டை ஒரு மனிதனுக்குள் உண்டாக்கும். மனித மூளையில் தற்காப்பு மற்றும் பயத்தை உணர்வதற்காக இருக்கும் பகுதி ‘அமிக்டலா’. இதுவே ஒரு சூழலில் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கும் பகுதியாகும். சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அமிக்டலா பகுதி மற்ற குழந்தைகளின் அமிக்டலாவை விட கொஞ்சம் மாறுபட்ட அமைப்போடு காணப்படும். … Continue reading “அத்தியாயம் 22”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 21

சைக்கோபதி எனும் மனப்பிறழ்வுக்குறைபாடு மரபுரீதியான காரணிகளால் ஏற்படுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சைக்கோபதி ஜீன் என்று தனிப்பட்ட வகையில் எந்த மரபணுவும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை. ஆனால் குடும்ப உறவுகளில் மரபுரீதியான மனப்பிறழ்வுக்குறைபாடு வருவது உண்டு என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெற்றோருக்கு மனப்பிறழ்வுக்குறைபாடு இல்லையென்ற சூழலில் முந்தைய தலைமுறையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளுக்குச் சைக்கோபதி வருவதற்கான மரபணுக்கூறுகள் அவர்களுக்குள் இருக்கும். ஒரே ஒரு மரபணுவால் மட்டுமே இது சாத்தியமில்லை. நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இம்மாதிரியான மரபணுக்கூறுகள் கூட்டாக … Continue reading “அத்தியாயம் 21”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 20

மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்த முடியாது என்பது ஒரு கட்டுக்கதை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சை அவர்களின் குடும்பங்களிலிருந்தே ஆரம்பிக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் அனுசரணையும் அன்பும் அவர்களைப் பண்படுத்தும். மருத்துவ சிகிச்சையானது மெதுவாகவே முன்னேற்றத்தை உண்டாக்கும். மற்ற ஆளுமை குறைபாடுகளைப் போலவே மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்துவதும் சவால் நிறைந்த காரியமே. ஏனெனில் அந்தக் குறைபாட்டின் தீவிரம், அதற்கான காரணங்கள், குறைபாட்டுக்கான பயனுள்ள சிகிச்சை முறைகள் பற்றி இதுவரை போதுமான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்படாததால் சிகிச்சைக்கான வழிமுறைகளும் போதுமானதாக இல்லை. -From psychopathy.org … Continue reading “அத்தியாயம் 20”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 19

மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக விரோத நடத்தை மற்றும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. இருப்பினும், மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுபவர்களாக மாறுவதில்லை. அதே போல உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுவோர் அனைவருக்கும் மனப்பிறழ்வுக்குறைபாடு இருப்பதுமில்லை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சவால்கள் இருக்கும். சில நேரங்களில் மனப்பிறழ்வுக்குறைபாடு வன்முறையாக வெளிப்படுவதில்லை. திருடுதல், ஏமாற்றுதல் போன்ற சமூக விரோத செயல்களாகவும் மனப்பிறழ்வுக்குறைபாடு வெளிப்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவை எல்லாம் வயது மற்று பாலினத்தைப் பொறுத்து மாறுபடுகின்றனவாம். … Continue reading “அத்தியாயம் 19”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 18

கலாச்சார இனக்குழு வேறுபாடின்றி எல்லா இடங்களிலும் மனப்பிறழ்வுக்குறைபாடு கொண்டோர் வாழ்கின்றனர். தோராயமாக 1 சதவிகித ஆண்களும், 0.3 முதல் 0.7 சதவிகித பெண்களும் இக்குறைபாட்டால் பாதிக்கப்படலாமென ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. ஹேரின் செக்லிஸ்டின் படி மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அனைவரும் சைக்கோபாத்கள் அல்ல. சிலருக்கு வெறும் அறிகுறிகள் மட்டும் இருக்கலாம். மனப்பிறழ்வுக்குறைபாட்டோடு தொடர்புடைய ஆரம்பகால அறிகுறியான ‘அமைதியான, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத குணாதிசயத்தைக் குழந்தை பருவத்தில் ஒருவர் கொண்டிருக்கலாம். அதற்காக அவர் வளர்ந்ததும் சைக்கோபாத் ஆகிவிடுவார் என்று அர்த்தமில்லை. அப்படி … Continue reading “அத்தியாயம் 18”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 17

சைக்கோபதி ஒரு ஸ்பெக்ட்ரம் வகை குறைபாடு ஆகும். இதை ஹேர் சைக்கோபதி செக்லிஸ்டின் மூலம் கண்டறிய முடியும். இரக்கமின்மை, பொய் கூறுதல் மற்றும் மனக்கிளர்ச்சி அடிப்படையில் மூன்று அளவைகள் அடிப்படையில் இந்த செக்லிஸ்டை பயன்படுத்தி மதிப்பெண்கள் போடப்படும். அளவை 1 – சற்றும் பொருந்தாத குணம் (0) அளவை 2 – ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பொருந்தும் (1) அளவை 3 – முற்றிலும் பொருந்தும் குணம் (2) இந்தச் செக்லிஸ்டில் முப்பது மதிப்பெண்கள் ஒருவர் எடுத்தார் … Continue reading “அத்தியாயம் 17”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 16

“பதினெட்டாம் நூற்றாண்டில் மூன்று விதமான மனநோய்களைப் பற்றி மருத்துவ உலகம் அதிகம் பேசியிருக்கிறது. மனச்சோர்வு எனப்படும் டிப்ரசன், சைகோசிஸ், டெல்யூசன் போன்றவையே. ஆனால் மனப்பிறழ்வுக்குறைபாடு என்பதோ நரம்பியல் சார்ந்த மனநலக்கோளாறாகும். உணர்ச்சிகளைக் கையாளுவதில் பற்றாக்குறை, இரக்கமின்மை மற்றும் மோசமான நடத்தைகள் போன்றவை இதன் அறிகுறிகளாகும். சைகோபாத்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக, ஏன் கவர்ச்சியாகக் கூட இருப்பார்கள். அவர்களை ஊன்றி கவனிக்கும்போது தான் மனசாட்சியற்று செயல்படுவதைக் கண்டுகொள்ள முடியும். அவர்களின் சமூக விரோத இயல்பானது பெரும்பாலும் குற்றச்செயல்களில் போய் முடிவடையும். … Continue reading “அத்தியாயம் 16”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 15

தொண்ணூறுகளில் ஆட்டிசம் ஆராய்ச்சி சமூகத்தினர் தங்களை சமுதாயம் இழிவாக நடத்தக்கூடாதென்பதற்காக எடுத்த தெளிவான முயற்சிகள் என்னைக் கவர்ந்தன. தங்களைப் பற்றிய உண்மைகள், தங்களது ஆட்டிசம் குறைப்பாட்டைப் பற்றிய தெளிவான செய்திகளை அவர்கள் பகிர்ந்துகொள்ள தவறவில்லை. இதைப் போன்ற தைரியமான முன்னெடுப்புகளை செய்யாத வரை உளப்பிறழ்வுக்குறைபாட்டால்பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டமே என்கிறார் மார்ஷ். அதாவது உளப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் தோழமைகளும் அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் உதவிகளையும் சரியான நேரத்தில் பெறமுடியாது. இது அனைவரையுமே பாதிக்கும் என்கிறார் அவர். -An article from … Continue reading “அத்தியாயம் 15”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 14

உளப்பிறழ்வுக்கான காரணங்கள் என்னவென இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும் வளர்ந்து வரும் ‘நியூரோ இமேஜிங்’ ஆராய்ச்சியானது மனித மூளையிலுள்ள நரம்பியல் அசாதாரணங்களையும் அதன் அறிகுறிகளையும் அடையாளம் கண்டுள்ளது. உதாரணமாகஉளப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஆண்களின் மூளைக்குப் பயம் என்ற உணர்வை உணரும் தன்மை குறைவு என்கிறது அந்த ஆராய்ச்சி. இதே அறிகுறி சில பெண்களுக்கும் இருக்கலாமென அந்த ஆராய்ச்சி கூறுகிறது. மூளையிலுள்ள உணர்வுகளைக் கையாளக்கூடிய பகுதியான அமிக்டலாவின் நரம்பியல் சுற்றுகளில் ஏற்படும் சில வேறுபாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் சில … Continue reading “அத்தியாயம் 14”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 13

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் கெவின் டட்டன் தன்னுடைய ‘The wisdom of Psychopaths: What Saints, Spies and Serial Killers can teach us about success’ என்ற புத்தகத்தில் உளப்பிறழ்வுக்குறைபாட்டின் நேர்மறையான பண்புகள் சிலவற்றை பற்றி குறிப்பிட்டுள்ளார். உளப்பிறழ்வு என்பது காய்ச்சல் தலைவலி போல முழுமையான ஒரு நோய் அல்ல. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அளவில் பாதிப்பை உண்டாக்கும். சிலர் அதனால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுத் தீவிரநிலையை அடைவார்கள். சிலருக்கோ அறிகுறியோடு முடிந்துவிடும் … Continue reading “அத்தியாயம் 13”

 

Share your Reaction

Loading spinner