துளி 49

தஞ்சாவூரிலிருந்துத் திரும்பிய பிறகு  மேனகாவும் அஸ்வினும் மனதளவில் மிகவும் நெருங்கிவிட்டனர். ஸ்ராவணி தன்னுடைய பெற்றோரும், அண்ணனும் இந்தியா திரும்பிய பின் மேனகாவுக்கும் அஸ்வினுக்கும் இடையே உள்ள காதலையும் அவர்களிடம் தெரிவித்து விடவேண்டும் என்ற முடிவில் இருந்தாள். அதே நேரம் சுபத்ரா பார்த்திபனைச் சென்றுச் சந்தித்து வந்தார். அவரிடம் அஸ்வின் மேனகாவை விரும்பும் விஷயத்தைச் சொல்லவும் பார்த்திபன் “அப்போ சம்பந்தி வீட்டுக்காரங்க வந்ததும் ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னாவே வச்சுக்கலாம் சுபிம்மா. நமக்கும் வேலை மிச்சம்” என்றுச் சொல்லிவிட சுபத்ரா […]

 

Share your Reaction

Loading spinner

துளி 48

அபிமன்யூ அஸ்வினை அழைத்துக் கொண்டு விமான நிலையத்துக்கு வந்துவிட ஸ்ராவணியும் கிருஷ்ணமூர்த்தியுடன் வந்துச் சேர்ந்தாள். வந்தவள் அபிமன்யூவிடம் ஏதோ சொல்லப் போக அவன் அவசரமாக “தஞ்சாவூர் அட்ரஸ் சொல்லு” என்று கேட்டபடி போனில் யாருக்கோ அழைத்தபடி கேட்க அவள் கடகடவென்று முகவரியை ஒப்பித்தாள். அதைக் காதில் வாங்கிக் கொண்டவன் போனில் “ஹலோ நான் அபிமன்யூ. உங்களால ஒரு காரியம் ஆகணுமே” என்ற பீடிகையுடன் பேச ஆரம்பிக்க ஸ்ராவணி அவன் அருகில் நின்று கொண்டிருந்த அஸ்வினைப் பார்க்க அவன் […]

 

Share your Reaction

Loading spinner