துளி 51

நான்கு வருடங்களுக்குப் பிறகு…. காலை நேரச் சூரியனின் பொன்னிறக்கதிர் திரைச்சீலையையும் தாண்டி அந்த அறையினுள் நுழைந்து நன்கு உறங்கிக் கொண்டிருந்தவனை உசுப்பத் தொடங்க புரண்டுப் படுக்க எத்தனித்தவன் தன் மார்பில் பூக்குவியலாய் உறங்கிக் கொண்டிருந்த தேவதையைக் கண்டதும் அவனது இதழ்கள் புன்னகையில் வளையத் தொடங்கின. உறக்கத்தில் களைந்த கூந்தலைச் சரி செய்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட அவள் மெதுவாக உறக்கத்திலிருந்து விழிக்கத் தொடங்கினாள். அவளது தளிர்க்கரங்களால் அவன் முகத்தைத் தடவிக் கொடுக்க அந்த கரங்களைக் கண்ணில் ஒற்றிக் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 50

அன்று காலையில் அலுவலகத்துக்குச் சீக்கிரமாகவே வந்துவிட்டான் அபிமன்யூ. அஸ்வின் கிளையண்டைச் சந்திக்க வெளியே சென்றிருக்க அவன் மட்டும் தான் அலுவலகத்தில் இருந்தான். சும்மா இருக்கப் பிடிக்காமல் ஸ்ராவணியின் நினைவுகளில் மூழ்கியிருந்தவன் ரேகிலிருந்து ஒரு ஃபைலை உருவி அதை வாசித்துக் கொண்டிருக்க புதிதாக நியமிக்கப் பட்டிருந்த ஆபிஸ் பாய் வந்து “அண்ணா உங்களைப் பார்க்க ஷ்ரவன் சுப்பிரமணியம்னு ஒருத்தர்…” என்றுச் சொல்லி முடிக்கும் முன்னரே ஏற்கெனவே அவன் ஸ்ராவணியின் நினைவில் மூழ்கியிருந்ததால் அவன் காதுக்கு ஷ்ரவன் சுப்பிரமணியம் என்ற […]

 

Share your Reaction

Loading spinner

துளி 49

தஞ்சாவூரிலிருந்துத் திரும்பிய பிறகு  மேனகாவும் அஸ்வினும் மனதளவில் மிகவும் நெருங்கிவிட்டனர். ஸ்ராவணி தன்னுடைய பெற்றோரும், அண்ணனும் இந்தியா திரும்பிய பின் மேனகாவுக்கும் அஸ்வினுக்கும் இடையே உள்ள காதலையும் அவர்களிடம் தெரிவித்து விடவேண்டும் என்ற முடிவில் இருந்தாள். அதே நேரம் சுபத்ரா பார்த்திபனைச் சென்றுச் சந்தித்து வந்தார். அவரிடம் அஸ்வின் மேனகாவை விரும்பும் விஷயத்தைச் சொல்லவும் பார்த்திபன் “அப்போ சம்பந்தி வீட்டுக்காரங்க வந்ததும் ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னாவே வச்சுக்கலாம் சுபிம்மா. நமக்கும் வேலை மிச்சம்” என்றுச் சொல்லிவிட சுபத்ரா […]

 

Share your Reaction

Loading spinner

துளி 48

அபிமன்யூ அஸ்வினை அழைத்துக் கொண்டு விமான நிலையத்துக்கு வந்துவிட ஸ்ராவணியும் கிருஷ்ணமூர்த்தியுடன் வந்துச் சேர்ந்தாள். வந்தவள் அபிமன்யூவிடம் ஏதோ சொல்லப் போக அவன் அவசரமாக “தஞ்சாவூர் அட்ரஸ் சொல்லு” என்று கேட்டபடி போனில் யாருக்கோ அழைத்தபடி கேட்க அவள் கடகடவென்று முகவரியை ஒப்பித்தாள். அதைக் காதில் வாங்கிக் கொண்டவன் போனில் “ஹலோ நான் அபிமன்யூ. உங்களால ஒரு காரியம் ஆகணுமே” என்ற பீடிகையுடன் பேச ஆரம்பிக்க ஸ்ராவணி அவன் அருகில் நின்று கொண்டிருந்த அஸ்வினைப் பார்க்க அவன் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 47

மேனகா லேப்டாப்பில் அவளது வேலை விஷயங்களை டைப் செய்து கொண்டிருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் ஸ்ராவணி தான் வந்துவிட்டாளென்று ஆவலுடன் ஹாலுக்குச் சென்றவள் ஸ்ராவணியின் அழுதுச் சிவந்த முகத்தைக் கண்டதும் ஏதோ தவறென்று மூளையில் பட அவளை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள். “என்னாச்சு வனி? ஏன் அழுற? இஸ் எனிதிங் ராங்?” என்று ஆதரவாகக் கேட்டவளைக் கண்டதும் ஸ்ராவணிக்கு துக்கத்தில் கண்ணைக் கரித்துக் கொண்டு அழுகை வர அவள் தோளில் சாய்ந்து அழுது கொண்டே […]

 

Share your Reaction

Loading spinner

துளி 46

ஸ்ராவணி அலுவலகத்தை அடைந்த போது எப்போதும் கேட்கும் அபிமன்யூ, அஸ்வினின் கேலிப்பேச்சுக்களின் சத்தமின்றி அலுவலகம் மயான அமைதியுடன் இருந்தது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள் இருவரும் ஆளுக்கொரு புறம் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததைக் கண்டதும் மனதிற்குள் “சரியான டிராமா கிங்ஸ்” என்று எண்ணிக் கொண்டாள். அதை வெளிக்காட்டாமல் தொண்டையைச் செருமவும் இருவரும் நிமிர்ந்து அங்கே நின்று கொண்டிருந்தவளைப் பார்த்ததும் முகத்தைச் சீராக்கிக் கொண்டனர். அஸ்வின் “வாங்க ரிப்போர்ட்டர் மேடம்” என்றபடி எழப் போக […]

 

Share your Reaction

Loading spinner

துளி 45

பீச் ஹவுஸின் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு ஸ்ராவணியின் கையைக் கோர்த்தபடி ரிசார்ட்டினுள் நுழைந்தான் அபிமன்யூ. நேரே மொட்டைமாடிக்கு அவளை அழைத்துச் செல்ல ஸ்ராவணியும் யோசனையுடன் அவனைத் தொடர்ந்தாள். மொட்டைமாடியை மிதித்ததும் அங்கு மின்னிய விளக்குகளின் ஒளியில் அந்த இடமே தேவலோகம் போல ஜொலிக்க அவனது கரத்தைப் பற்றியபடி நடந்தவள் அங்கே டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்த கேக்கைக் கண்டதும் “எனக்கு கேக் வெட்டவே பிடிக்காது தெரியுமா?” என்று முகம் சுருக்கிக் கூறினாள். அபிமன்யூ “பிளீஸ் வனி! எனக்காக கட் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 44

காலம் வேகமாக உருண்டோட அவர்களின் விவாகரத்து வழக்குக்கான நாளும் அருகில் வந்துவிட்டது. அதன் இறுதி ஹியரிங்கிற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில் தான் ஸ்ராவணியின் பிறந்தநாள் வந்தது. எப்போதுமே அவளது பிறந்தநாளை பெரிதாகக் கொண்டாடுவதில் அவளுக்கு விருப்பம் இருந்ததில்லை. காலையில் எழுந்து சீக்கிரம் குளித்துவிட்டுக் கோயிலுக்குச் சென்றுவந்து வீட்டில் வேதா செய்துவைத்திருக்கும் ஸ்பெஷலான இனிப்பைச் சுவைப்பது, பின்னர் மாலையில் குடும்பத்தோடு ஹோட்டலில் டின்னர், இது தான் அவளைப் பொறுத்தவரை பிறந்தநாள் கொண்டாட்டம். அந்த வருடமும் அதையே […]

 

Share your Reaction

Loading spinner

துளி 43

வரவேற்பில் அபிமன்யூ ஸ்ராவணியின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்க தனித்துவிடப் பட்ட அஸ்வின் ஒரு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மண்டபமெங்கும் அலைந்த அவனது பார்வை ஒரு ஊதா லெஹாங்காவிடம் நிலைபெற அந்தப் பெண்ணோ அவனுக்கு முதுகு காட்டியபடி அங்கே வைக்கப்பட்டிருந்த விதவிதமான உணவுவகைகளைக் கதம் செய்து கொண்டிருந்தாள். அதைக் கண்டவன் “இதுக்கு அப்புறம் இந்த உலகத்துல சாப்பாடே இல்லாம போயிடும்கிற லெவலுக்குச் சாப்பிடுதே இந்த பொண்ணு! யாரா இருக்கும்?” என்று நாற்காலியில் அமர்ந்தவாறே அவள் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 42

ஸ்ராவணியும் மேனகாவும் ஷாப்பிங் வந்திருந்தனர். மேனகா ஒவ்வொரு கடையாக அலசிக் கொண்டே செல்ல ஸ்ராவணி அவளைத் தொடர்ந்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தாள். ஒவ்வொரு உடையிலும் அவள் ஏதாவது ஒரு குறையாகச் சொல்லிக் கழிக்க ஸ்ராவணி “மேகி ஒரு ஈவினிங் போடப் போற டிரஸ்ஸுக்கு இவ்ளோ பில்டப் தேவை இல்லடி. சும்மா எதாச்சும் ஒன்னை எடு” என்க மேனகா மறுப்பாகத் தலையசைத்தாள். “நோ வனி! எதுலயும் ஒரு பெர்ஃபெக்சன் வேணும். லெஹங்கா நல்லா இருக்கும்னு நெனைக்கிறேன். பட் […]

 

Share your Reaction

Loading spinner