ஸ்ராவணி அன்று அலுவலகத்துக்கு வேகவேகமாகத் தயாராகிக் கொண்டிருந்தாள். கழுத்துப் பக்கம் மடங்கியிருந்த டாப்பை இழுத்து நேராக்கியவள் கண்ணாடியில் கழுத்து வெறுமையாக இருப்பதைக் கண்டு திகைத்தாள். படுக்கையைப் புரட்டிப் பார்த்துப் போர்வையை உதறினாள். ஆனால் செயினைதான் காணவில்லை. இவள் செய்த அதகளத்தை பார்த்தபடி உள்ளே வந்த மேனகா “என்னாச்சு வனி? ஏன்டி இப்பிடி கலைச்சு போடுற?” என்று கேட்க ஸ்ராவணி பதற்றத்துடன் “என் செயினைக் காணும் மேகி. அதான் தூங்கறப்போ கழண்டு விழுந்துடுச்சானு பார்க்கிறேன்” என்றாள் தலையணைகளை உதறிப் […]
Share your Reaction